(மோகன் ராமசாமி)
கோலாலம்பூர் ஜூலை-18
இன்று மாலை 5.30 மணியளவில் பெய்த ராட்சதக் காற்றுடன் கூடிய திடீர் மழையால், பத்துமூடா பி.பி.ஆர் குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் எற்பட்டதோடு, மரம் சரிந்து விழுந்து சில வாகனங்களும் சேதம் அடைந்தன.
இந்தக் குடியிருப்புப் பகுதியில் பலத்த மழை பெய்தால் வெள்ளம் ஏற்படுவதோடு, கார்களுக்குள் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்படுவதாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் வேதனையோடு கூறுகின்றனர்.
இங்குக் கால்வாய் பிரச்னை இருப்பதால், சற்றுக் கனமழை பெய்தால் வெள்ளம் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்!
0 Comments