புத்ராஜெயா 18 -- கொரோனா பெருந்தொற்றைக் கையாள்வதில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவிற்கும், சுகாதார அமைச்சுக்கும் உலக அளவிலான சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
சுகாதார அமைச்சை அங்கீகரிக்கும் வகையில், THE BRANDLAUREATE AWARD-டின் CERTIFICATE OF RECOGNITION AND APPRECIATION என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது.
டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், 2020-ஆம் ஆண்டுக்கான OUTSTANDING BRAND LEADERSHIP விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த விருது, மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் சிறந்த சேவையை வழங்கும் சுகாதார அமைச்சு மற்றும் இதர நிறுவனங்களின் ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் புலப்படுத்துவதாக டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
வழிகாட்டியைத் துல்லியமாக ஆராய்வது, ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, இதர அமைச்சுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளுதல் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துதல் போன்ற கொவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்!
0 Comments