loader
கொரோனா: இன்று 18 புதிய சம்பவங்கள்!

கொரோனா: இன்று 18 புதிய சம்பவங்கள்!

புத்ரா ஜெயா ஜுலை 17: கொரோனா தொடர்பில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18 புதிய கோவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கோவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,755-ஆக உயர்ந்துள்ளது.

இந்த 18 சம்பவங்களில் பத்து பேர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள் ஆவர். உள்நாட்டில் எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை  குணமடைந்தோரின் எண்ணிக்கை 8541பேர் ஆகும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இரட்டை இலக்கு எண் பதிவாகி உள்ளதாகவும், மேலும் புதிதாக நான்கு தொற்றுக் குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News