loader
சமூக இடைவெளி இல்லை! 48 பேர் கைது!

சமூக இடைவெளி இல்லை! 48 பேர் கைது!

புத்ரா ஜெயா: பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறி சமூக இடைவெளியைப் பேணாமல் அதிகமானோர் ஒன்று கூடிய குற்றத்திற்காக, அரச மலேசிய போலீஸ் படை, 48 பேரை கைது செய்திருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், 43 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சருமான டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்திருக்கிறார்.

பி.டி.ஆர்.எம் தலைமையிலான கண்காணிப்பு நடவடிக்கை பணிக்குழு நேற்று 62 ஆயிரத்து 733 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

இதனிடையே, ஆயிரத்து 121 தரை போக்குவரத்து முனையங்கள், 229 நீர் போக்குவரத்து முனையங்கள் உட்பட 89 வான் போக்குவரத்து முனையங்களிலும் சோதனையிடப்பட்டது.

பி.டி.ஆர்.எம் நாடு முழுவதிலும் மேற்கொண்ட சாலை தடுப்பு நடவடிக்கைகளில் 40 ஆயிரத்து 151 வாகனங்கள் சோதனையிடப்பட்டதோடு, குடிநுழைவுக் குற்றத்திற்காக 5 வெளிநாட்டினர் கைதுச் செய்யப்பட்டதாகவும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News