கோலாலம்பூர் ஜூலை -16
முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோ காலிட் சமாட்டிற்கு கட்டொழுங்கு பிரச்னை உள்ளது என முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் சாடியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுத்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் டத்தோ ஸ்ரீ காலிட் சமாட் குரல் எழுப்ப, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அச்சமயம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை சபாநாயகர் டத்தோ அசஹார் ஹாரூண், காலிட் சமாட்டை நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாடாளுமன்ற அவைக்குப் பிறகு, மக்களவை சபாநாயகரை மரியாதை நிமித்தமாக அவரது அலுவலகத்தில் சந்தித்த டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் பதிவு செய்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை சபாநாயகரைப் பாராட்டியதோடு, இவர்தான் காலிட் சமாட்டிற்குச் சரியான ஆள் எனவும், காலிட் சமாட்டிற்கு கட்டொழுங்கு பிரச்னை உள்ளதால், அவரை அடக்க இப்படிப்பட்ட மக்களவைத் தலைவரால்தான் முடியும் என்றும் கிண்டல் அடித்துள்ளார்.
சமீபகாலமாக டத்தோ ஸ்ரீ நஜீப்பிற்கும், டத்தோ காலிட் சமாட்டிற்கும் சமூக வலைத்தளத்தில் கருத்து மோதல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டத்தோ ஸ்ரீ நஜீப்பின் இந்தக் கருத்து அந்தக் கருத்து மோதலின் தொடர்ச்சியாகும்!
0 Comments