கோலாலம்பூர் ஜூலை-16
தேசிய கூட்டணி அமைச்சரவையில் இன்னும் 5 அமைச்சர்கள் தங்களின் சொத்து மதிப்பு விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை. ஆனால் 97 விழுக்காட்டினர் தங்களது சொத்து மதிப்பை வழங்கிவிட்டதாக பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
அந்த 5 பேர் யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இந்த விவகாரத்தை தான் கவனத்தில் கொண்டு அமைச்சரவையில் உள்ள அங்கத்தினர்கள் தங்களின் சொத்து மதிப்பு விவரங்களை விரைந்து வழங்குவதை உறுதி செய்வேன்.
சொத்து மதிப்பை வெளியிட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.
இன்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் இவ்வாறு பதில் அளித்தார்!
0 Comments