loader
பள்ளியில் மயங்கி விழுந்து மாணவர்  மரணம்!

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவர் மரணம்!

கோலாலம்பூர் ஜூலை16-

பள்ளியில் திடீர் என்று மயங்கி விழுந்ததாகக் கூறப்படும்  அமீரூடீன் நாயம் (வயது 15) என்ற மாணவர், பின்னர்  மருத்துவமனையில்  மரணமடைந்தார்.

தலைநகர் பண்டார் துன் ரசாக் இடைநிலைப்பள்ளியில்  படிவம் மூன்றில் பயிலும் மாணவரான அமீருடீன், நேற்று காலை புதன்கிழமை பள்ளிக்கு வரும்போது அவரது வெப்பநிலை சீராக இருந்ததாகவும், காய்ச்சல் மற்றும் சோர்வுக்கான எந்த ஒரு அறிகுறியும்  தெரியவில்லை  எனவும் கூறப்படுகிறது.

பள்ளி அறையில் திடீர் என்று மயங்கி விழுந்த  அமீருடனை, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

இதனிடையே இச்சம்பவத்தை செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர்  முகமட் மொக்ஸையின் உறுதிசெய்ததோடு,  அமீரூடனின் இறப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முழு விவரம் தெரியவரும் என்றும், தற்போது  இச்சம்பவம் அதிர்ச்சி மரணமாகப் பதிவு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News