புத்ராஜெயா: இன்று ஐந்து புதிய கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதுவரை நாட்டில் இந்நோய்த் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,734-ஆக அதிகரித்திருக்கிறது.
இன்று பதிவான ஐந்து சம்பவங்களில் நான்கு சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகவும். மற்ற ஒன்று வெளிநாட்டில் இருந்து வந்தவர் சம்பந்தப்பட்டதாகும் என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மலேசியாவில் வேலைக்காக அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டினர் ஒருவருக்கு நோய்த்தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில்நோர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மரணச் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. இதுவரை இந்நோய்த்தொற்றினால் நாட்டில் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 122 ஆகும்!
0 Comments