loader
அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா!

அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து  பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 2 அமைச்சர்கள் 8 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செல்லூர் ராஜூ மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!

0 Comments

leave a reply

Recent News