பெட்டாலிங் ஜெயா: போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக ஆண் மருத்துவர் மற்றும் ஒரு பெண் மருந்தாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பையில் இருந்து 70 கிராம் கஞ்சாவைப் போலீசார் மீட்டனர்.
மருத்துவமனையில் பணிபுரியும் 28 வயது மருத்துவரும், 26 வயதான மருந்தாளர் ஒருவரும் இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் எசானி கூறினார்.
கடந்த மூன்று மாதங்களாக பெட்டாலிங் ஜெயாவில் சந்தேக நபர்கள் போதைப்பொருள் தொடர்புடையவர்கள் என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக அவர்களைத் தடுத்து வைக்கவும், போதைப்பொருள் விநியோகத்தில் அவர்கள் எந்த அளவிற்கு ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறியவும் ஏழு நாள் ரிமாண்ட் உத்தரவைப் பெற்றுள்ளோம் என்றார் அவர்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டப் பிரிவு 39 ஏ இன் கீழ் இருவரும் விசாரிக்கப்படுகிறார்கள்!
0 Comments