கோலாலம்பூர்: தொழிலதிபர் கெப்போங் ராஜு என்கிற ஆர்.ஆறுமுகம் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ ஃபாட்சில் அகமட் தெரிவித்தார்.
கடத்தல் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 10- ஆம் தேதி காலை 10.30 மணியளவில் ஜாலான் பெர்சியாரான் பெர்டானா, ஸ்ரீ டாமான்சாராவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியில் இருந்த போது கும்பல் ஒன்றினால் அந்த தொழில் அதிபர் கடத்தப்பட்டார்.
பின்னர், ஜூன் 27 அன்று காலை 9 மணியளவில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆறுமுகம் என்று அடையாளம் காணப்பட்ட அந்தத் தொழிலதிபர், பிணைப் பணத்திற்காகக் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர்களில் ஒருவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே ஆறுமுகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது என்றும் டத்தோ ஃபாட்சில் அகமட் தெரிவித்தார்!
0 Comments