கொரோனா கிருமித்தொற்று தொடர்பில் நாட்டில் இன்று 2 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் டத்தோ டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இதன் மூலம் நாட்டில் 8,639 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 16 வது நாளாக எந்த மரணச் சம்பவமும் நிகழவில்லை.
இதுவரை நாட்டில் கோவிட் 19 தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆகும்.
அதே வேளையில் 8,354 பேர் இந்நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!
0 Comments