முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் தொடர்புடைய நான்கு தலைவர்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளது பி.கே.ஆர்.
பி.கே.ஆர் மகளிர் தலைவர் ஹனிசா தல்ஹா, பினாங்கு மகளிர் தலைவர் நூர் ஜரீனா ஜகாரியா, பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் அபிப் பஹார்டின் (செபெராங் ஜெயா) மற்றும் சுல்கிப்லி இப்ராஹிம் (சுங்கை அச்சே) ஆகியோர் பி.கே.ஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய மத்திய தலைமைக் கவுன்சில் (எம்.பி.பி) கூட்டத்தின் போது பி.கே.ஆர் இந்த முடிவை எடுத்தது.
புதிய கூட்டணியை அமைப்பதற்கான முயற்சியில் அஸ்மின் அலிக்கு ஆதரவாக இவர்கள் இருந்ததன் பிண்ணனியில் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்!
0 Comments