(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர் ஜூன் 27-
சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் என் அண்ணன் ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் போட்டியிட விரும்பினால், என் அண்ணனுக்கு விட்டுத் தர தயார் என, கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ எட்மண்ட் சந்தாரா தெரிவித்துள்ளார்.
என்னைப் பொருத்தவரை மக்களுக்குச் சேவை செய்வதே முக்கியம். அதற்காக ம.இ.காவின் தலைவர்களுடன் ஒத்துழைத்து வேலை செய்யவே தாம் விரும்புவதாக இன்று செந்தூல் வட்டாரத்தில் உள்ள வியாபாரத் தளத்தைப் பார்வையிட வருகை அளித்த டத்தோ ஸ்ரீ எட்மண்ட் சந்தாரா, செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
எந்த நேரத்திலும் தேர்தல் நடக்கலாம் என்னும் சூழல் எழுந்துள்ள நிலையில், எட்மண்ட் சந்தாராவின் இத்தகைய கருத்து, அரசியல் தலைவர்கள் தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டனர் என்பதயே காட்டுகிறது.
கடந்த பொதுத்தேர்தலில் சிகாமாட்டில் ம.இ.காவின் அப்போதைய தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியத்தை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற எட்மண்ட் சந்தாரா, அந்த நாடாளுமன்றத் தொகுதியை இப்போதைய ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு விட்டுத் தர விரும்பவதன் நோக்கம் என்ன? என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள கேள்வி!
0 Comments