loader
துணிக்கடைகளில் இனி துணியைப் போட்டுப் பார்க்கலாம்! அரசாங்கம் அனுமதி!

துணிக்கடைகளில் இனி துணியைப் போட்டுப் பார்க்கலாம்! அரசாங்கம் அனுமதி!

புத்ராஜெயா - பொது நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை ஒட்டி வர்த்தக தளங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. துணி கடைகளுக்குச் செல்வோர் உடைகள் மற்றும் காலணிகளை போட்டு பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.  தற்போது அந்த தடை அகற்றப்பட்டுள்ளது . இனி துணி கடைகளுக்குச் செல்வோர் மற்றும் காலணி கடைகளுக்குச் செல்வோர் அதை அணிந்து பார்க்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

பெரும் வர்த்தக தளங்களில் கோவிட்-19 நோய் சம்பவங்கள் பதிவாகாததைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

உடை மற்றும் காலணி வியாபாரங்கள் செயல்படுவது போன்று, தையல் கடைகளும் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News