கோலாலம்பூர்: இன்று நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் அதிவேக மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பிற்பகல் மெக்ஸ் நெடுஞ்சாலையின் 4.3 கிலோமீட்டர இந்த விபத்து நிகழ்ந்தது.
சூப்பர் பைக்கும் SUV வாகனமும் மோதியதால், அந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு கால்வாயில் விழுந்தார்.
கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கார் சேதமுற்றுள்ளது, கார் ஓட்டுநருக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
0 Comments