பெட்டாலிங் ஜெயா: துன் டாக்டர் மகாதீர் முகமதுவை பிரதமருக்கான பக்காத்தான் ஹரப்பனின் தேர்வாக இருக்க பி.கே.ஆர் அனுமதிக்காது. அதே நேரத்தில் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம்தான் பிரதமர் என பி.கே.ஆர் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
மகாதீர் பிரதமர் என யாரோ ஒருவர் அதை முன்மொழிந்தார். ஆனால் பக்காத்தானின் 91 எம்.பி.க்கள், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் அதை ஏற்கவில்லை. நாங்கள் அன்வருக்கானவர்கள் என முகமட் சானி கூறினார்.
அவர் (டாக்டர் மகாதீர்) ஓய்வு பெற்று நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய அடுத்த தலைமுறையினருக்கு அதை விட்டுவிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பக்காத்தான் உயர்மட்டக் கூட்டத்தில் அன்வார்தான் இனி பிரதமராக வேண்டும் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் பக்காத்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 6 மாத காலம் தாம் பிரதமராக இருப்பதாகவும், அதன்பின்னர் அன்வாரிடம் பதவியை ஒப்படைப்பதாக மகாதீர் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் பக்காத்தான் உறுப்பினர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன!
0 Comments