பெட்டாலிங் ஜெயா: பக்காத்தானின் உயர் மட்டத் தலைவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) இங்குள்ள பி.கே.ஆர் தலைமையகத்தில் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பி.கே.ஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமுடன் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கலந்து கொண்டார்.
டாக்டர் மகாதீருடன் அவரது மகன் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் மற்றும் பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியின் (பெர்சாட்டு) முன்னாள் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
பார்ட்டி வாரிசன் சபாவின் தலைவர் டத்தோஸ்ரீ மொஹமட் ஷாஃபி அப்தால், டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மற்றும் பார்ட்டி அமானா நெகாரா பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் ஹட்டா ராம்லி ஆகியோரும் கலந்துகொண்டனர்!
0 Comments