புத்ரா ஜெயா: நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 19- ஆகப் பதிவாகியுள்ளது. இத்துடன் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8, 322 ஆக .அதிகரித்துள்ளது.
இன்று பதிவு செய்யப்பட்ட 19 சம்பவங்களில் 11 பேர் மலேசியப் பிரஜைகள் ஆவர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று மரணச் சம்பவம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதுவரை நாட்டில் கொரோனாவால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 117 ஆகும்!
0 Comments