loader
மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பில் அறுவர் கைது!

மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பில் அறுவர் கைது!

கஜாங்: குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான நடவடிக்கையில் தற்போது போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், சிலாங்கூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் சுப் அஸ்மான் ஷரியாத், சனிக்கிழமை இரவு (ஜூன் 6) ஜலான் பாலகாங்கில் சாலை தடுப்புச் சோதனையில் மூன்று பேர் பிடிபட்டதாகவும், மேலும் மூன்று பேர் தெற்கு கிளாங்கில் இதேபோன்ற சாலைத் தடையில் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். 

போலீஸ்காரரைத் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக ஏழாவது நபரான ஒரு பெண்ணும்  கைது செய்யப்பட்டார்.

இதுவரைக்குமான 10 நடவடிக்கைகளில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போதைய மாநில அளவிலான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்று அவர் கூறினார்.

“நாங்கள் மக்கள் குடிப்பதைத் தடுக்கவில்லை.  இருப்பினும், இப்போதெல்லாம் உங்களுக்கு பல சேவைகள் உள்ளன.  நீங்கள் எளிதாக ஒரு டாக்ஸி அல்லது கிராப்பை அழைக்கலாம்" என்று அவர் கூறினார்!

0 Comments

leave a reply

Recent News