பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை (மே 31) 57 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 7,819 ஆக உயர்ந்துள்ளது.
இந்த 57 சம்பவங்களில் 10 இறக்குமதி செய்யப்பட்டவை என சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
உள்நாட்டில் பரப்பப்பட்ட 47 புதிய சம்பவங்களில், நான்கு மலேசியர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளனர்.
மற்ற சம்பவங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அடையாள ஆவணமில்லாத புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
செபாங்கில் உள்ள குடிநுழைவுத் தடுப்பு மையத்தில் 24 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாகவும், பகாங்கில் 15 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாகவும் டாக்டர் நூர் கூறினார்.
தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக கோவிட் -19 இறப்பு எதுவும் நிகழவில்லை. இறப்பு எண்ணிக்கை 115 ஆக உள்ளது.
இன்று 23 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 6,353 நோயாளிகள் கோவிட் -19 லிருந்து மீண்டுள்ளனர்.
மலேசியாவின் கோவிட் -19 மீட்பு விகிதம் மொத்த நேர்மறை நிகழ்வுகளில் 81.25% ஆக உள்ளது.
தற்போது, ஒன்பது நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவர் வென்டிலேட்டர் ஆதரவில் உள்ளனர்!
0 Comments