loader
பணியில் இருந்த போலீஸ் மீது கார் மோதி காயம்!

பணியில் இருந்த போலீஸ் மீது கார் மோதி காயம்!

கோலாலம்பூர்: போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் மீது இன்று வெள்ளிக்கிழமை (மே 29) கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் காயமடைந்தார்.

இது குறித்து நகர போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (ஜே.எஸ்.பி.டி) தலைவர்  சூல்கெஃப்ளி யஹ்யா கூறுகையில்,  "ஜலான் குச்சிங்கில் போலீஸ் கான்ஸ்டபிள் போக்குவரத்து கட்டுப்பாட்டு கடமையில் இருந்தார். அவர் சாலை தடுப்பின் நடுவில் நின்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் போக்குவரத்து கட்டுப்பாட்டு கடமையில் இருந்தபோது, ​​வேறு ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் அந்த போலீஸ் தாக்கப்பட்டார்.
இதனால், போலீஸ்காரரின் முகத்தில் காயம் ஏற்பட்டதோடு, சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்" என்றார்!

0 Comments

leave a reply

Recent News