பெர்சத்து கட்சியிலிருந்து அதன் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட ஐவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர், இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், உச்சமன்ற உறுப்பினர்களான மஸ்லி மாலிக் மற்றும் அமிருடின் ஹம்சா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
கடந்த மே 18-ஆம் தேதி கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், அவர்கள் அனைவரும் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருந்ததே இதற்குக் காரணம் என கட்சியிலிருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஆட்சி மாற்றத்திற்கான புதிய அணிக்குத் தலைமையேற்றதைத் தொடர்ந்து, பெர்சத்து கட்சி உடையத் தொடங்கியது. இதனையடுத்து பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர மகாதீர் முயற்சித்தார்.
மேலும், கடந்த மே 18-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்கட்சி வரிசையில் மகாதீர் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
0 Comments