புத்ராஜெயா: மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (மே 26) 187 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டின் மொத்த தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,604 ஆக உயர்ந்துள்ளது.
பெரும்பாலான சம்பவங்கள் குடிநுழைவு தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சம்பந்தப்பட்டவையாகும் என சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
187 புதிய சம்பவங்களில் 10 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். மீதமுள்ளவை உள்ளூர் பரிமாற்றங்கள் என அவர் கூறினார்.
இன்று எந்த ஒரு மரணமும் பதிவு செய்யப்படவில்லை. இறப்பு எண்ணிக்கை 115ஆக உள்ளது!
0 Comments