பிரதமர் டான் ஸ்ரீ முகைதின் யாசின் 14 நாட்களுக்குத் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
கடந்த புதன்கிழமை பிரதமர் கலந்து கொண்ட அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரி ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து பிரதமர் உட்பட அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (மே 22) அதிகாலையில் கோவிட் -19 பரிசோதனையை பிரதமர் மேற்கொண்டார். இச்சோதனையில் அவருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியானது.
ஆயினும், கோவிட் -19 பிரிவு 15 (1) சட்டம் 342 இன் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு உத்தரவின்படி, பிரதமர் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி 14 நாட்கள் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
இந்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை (மே 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மே 20-க்குப் பிந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வெள்ளிக்கிழமை தொடங்கி 14 நாட்கள் வீட்டிலேயே ஸ்கிரீனிங் சோதனைகள் மற்றும் சுய தனிமைப்படுத்தலுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது!
0 Comments