கிள்ளான்: பி.கே.ஆர் கட்சியின் இளம் பெண்கள் பிரிவு தலைவர் (Srikandi) நூரைனி ஹசிகா ஷாஃபி பதவி விலகியதன் மூலம் மீண்டும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது பி.கே.ஆர்.
29 வயதான நூரைனி, கட்சி மீது ஏமாற்றமடைந்ததாகக் கூறினார்.
"கட்சி மற்றும் அதன் திசையில் எனக்கு இனி நம்பிக்கை இல்லை" என்று 2013 இல் பி.கே.ஆரில் சேர்ந்த நூரைனி கூறினார்.
சில உறுப்பினர்கள் எவ்வாறு நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டார்கள் என்பது குறித்து தமக்கு வருத்தம் இருப்பதாக அவர் கூறினார்.
"கட்சியில் ஓரங்கட்டப்பட்டவர்களும் இருக்கிறார்கள், அவர்களால் எதுவும் செய்ய வாய்ப்பு இல்லை" என்று நூரைனி கூறினார்.
கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியைத் தாக்கிய பலவற்றில் இவரது ராஜினாமா ஒன்றாகும். அவர் இப்போது பெர்சாத்து கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார்.
கடந்த வார தொடக்கத்தில், பி.கே.ஆரின் லூனாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் நஸ்ருதீன் மற்றும் சிடாம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ ஆகியோர் கட்சியை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, பெட்டாலிங் ஜெயா நகர கவுன்சிலர் பதவியில் இருந்து நூரைனி ராஜினாமா செய்துள்ளார்.
தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராக இருக்கும் நூரைனி, தனது சட்ட நடைமுறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) பணிபுரியும் பணிகளில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
"நான் மூன்று முதல் நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் தீவிரமாக இருக்கிறேன், அவற்றின் மூலம் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வேன்," என்று அவர் கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில், அஸ்மினுடன் இணைக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட ‘பெமுடா நெகாரா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பெண்கள் தலைவராக நூரைனி நியமிக்கப்பட்டார்!.
0 Comments