loader
அரசாங்க ஊழியர்களுக்குச் சிறப்பு நிதி!

அரசாங்க ஊழியர்களுக்குச் சிறப்பு நிதி!

நாடு முழுவதும் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிறப்பு நிதியை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 16 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் 500 வெள்ளியைச் சிறப்பு நிதியாகப் பெறுவார்கள்.

வரும் மே 20-ஆம் தேதி சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் இந்த 500 வெள்ளி சேர்க்கப்பட்டு விடும்.  மேலும் பென்சன் தொகை பெற்றுக் கொண்டிருக்கும் முன்னாள் அரசு ஊழியர்களுக்கும் 250 வெள்ளி நிதி உதவி வழங்கப்படும் என ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News