தேசிய அரசியல் மட்டுமின்றி மாநில அரசியலிலும் அரசியல் பரபரப்பு பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது.
இன்று காலை மலாக்கா மாநில சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பினைத் தொடர்ந்து கூட்டம் ஒரு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மலாக்கா சட்டமன்றத் தலைவர் டத்தோ ஓமார் ஜாஃபார் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாக, தேசிய முன்னணியின் சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ இட்ரீஸ் ஹாருண் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, இன்றைய கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டம் அரை மணி நேரம் மட்டுமே நடைபெற்றது!
0 Comments