கோவிட்-19: நாட்டில் 68 புதிய சம்பவங்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், 88 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைம இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மேலும் கொரோனா மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4,864 ஆகவும், இது மொத்த பாதிப்புகளில் 74.43 சதவீதமாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் மொத்த பாதிப்புகள் 6,535 ஆக உள்ளன.
தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.டி) கீழ் உள்ள வட்டாரங்களில் இருந்து மொத்தம் மூன்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) மொத்தம் 18 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்!
0 Comments