loader
பாங்கி ம.இ.கா தொகுதியின் ஏற்பாட்டில் கோவிட் நிவாரண நிதி!

பாங்கி ம.இ.கா தொகுதியின் ஏற்பாட்டில் கோவிட் நிவாரண நிதி!

கோலாலம்பூர், மே 4-

ம.இ.கா பாங்கி தொகுதி ஏற்பாட்டில் கோவிட்-19 நிவாரண நிதியாக பாலாகோங் மற்றும் பாங்கி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 246 வசதி குறைந்த குடும்பங்களுக்கு,  சமையல் பொருட்கள் வழங்கப்பட்டதாக பாங்கி ம.இ.கா தொகுதியின் செயலாளர் குபேரன் நவரத்னம் தெரிவித்தார்.

 

நடமாட்டக் கட்டுப்பாட்டினை அரசாங்கம் அறிவித்ததில் இருந்து பல வசதி குறைந்த குடும்பங்கள் வேலை இல்லாமல் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  அப்படிப்பட்டவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது.

 

மேலும் பாங்கி ம.இ.கா தொகுதியின் சொந்த ஏற்பாட்டில் இந்த உதவி செய்யப்பட்டு வருவதாக பாங்கி ம.இ.கா  தொகுதியின் தலைவர் முத்துவேலு கூறினார்.

அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி அனைவரும் வீட்டிலேயே தங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியமாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்!

0 Comments

leave a reply

Recent News