loader
கடும் மழையினால் மோசமான நிலையில் தாமான் சொங்கேட்!

கடும் மழையினால் மோசமான நிலையில் தாமான் சொங்கேட்!

சுங்கைப்பட்டாணி:

கடந்த இரண்டு மூன்று நாட்கள் இடைவிடாத நிலையில் கணத்த மழையின் விளைவாக சுங்கைப் பட்டாணி தாமான் சொங்கேட்டில் தண்ணீர் வெள்ளம் போல வீட்டிலும், காய்வாய்களிலும் புகுந்து சாலையினை நாசப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே போன்று சம்பவம் நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக் காட்டி  பேசிய முன்னாள் கிரமத்து தலைவர் திரு மதி முனியாண்டி இதுகுறித்து கூறுகையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சம்மந்தபட்ட தலைவர்கள் மற்றும் சுங்கைப்பட்டாணி நகராண்மை ஊராட்சி மன்றத்திடம் புகார் செய்துள்ளதாகக் கூறினார்.

இந்த ஆண்டு அரசாங்கத்தின் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளனர்.

ஆனால் இப்போது மிக மோசமாக நிலைமை மாறியுள்ளது.

கூடிய விரைவில் இதற்குத் தீர்வு காணவில்லை என்றால்,  பல பிரச்சினைகள் நிகழும் என்ற அச்சம் எழுந்து வருகிறது.

ஒரு பக்கம் கோவிட், மறுபக்கம் நடமாட்டக் கட்டுபாடு. விரைவான தீர்வு கிடைக்குமா?

0 Comments

leave a reply

Recent News