நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றத்திற்கு துணை சுகாதார அமைச்சர் அஸ்மின் அலி கஸாலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஒரு விருந்தில் கலந்துகொண்டமைக்காக துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கஸாலிக்கு ஜெரிக்கில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதிகபட்ச தண்டனையான RM1,000 அல்லது ஒரு மாதம் சிறைத்தண்டனையை விதித்தது.
பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் ரஸ்மான் ஜகாரியா மற்றும் மேலும் 13 பேருக்கும் இத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் மாஜிஸ்திரேட் நோர்ஹிடாயாத்தி முகமட் நஸ்ரோ, அவர்களுக்குத் தண்டனையை விதித்தார்.
இதனையடுத்து அனைவரும் அபராதத்தைச் செலுத்தினர்!
0 Comments