நடிகர் வடிவேலு கொரோனா தொடர்பாக தொடர்ந்து மக்களிடம் வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர் நேற்று பதிவிட்ட ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது : போர் தான் இப்போது நடக்கிறது. எவனோ இப்படி ஒரு வேலை பார்த்துவிட்டான். உயிர்கள் எல்லாம் சாகணும், கட்டடம், கார், வீடு வாசல் இருக்கணும். அப்படி செய்துள்ளார்கள். இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும். உலக நாடுகள் எல்லாம் அணு குண்டுகளை புதைத்து விட்டு மனித நேயங்களை ஒன்று சேர்க்க வேண்டும். மருத்துவ உலகம் தலையோங்கி நிற்க வேண்டும். மருத்துவ உலகம் திணறுகிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போதும். மருத்துவர்கள் நமக்கு கடவுள்கள்.
இப்போது கோடு, ரோடு, வீடு எதையும் தாண்டி வரக்கூடாது என்கிறார்கள். என்ன ஒரு சேட்டை. கேட்க மாட்டேங்குதுங்க இந்த பயபுள்ளைக. இந்த நேரத்தில் பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் பாடம் காலங்காலத்திற்கும் அவர் மனதில் நிற்கும். பிள்ளைகளை வளர்க்க நல்ல ஒரு சந்தர்ப்பம். கைகளை சுத்தமாக கழுவ சொல்லிக் கொடுங்கள். பிற்காலத்திற்கு அவர்கள் டாக்டர்களாக வந்தாலும் சரி, நாட்டையே ஆள்பவராக இருந்தாலும் சரி குழந்தைகளுக்கு ஒரு பாடம் தானே. சரியான சந்தர்ப்பத்தை கடவுள் கொடுத்திருக்கிறார். இதை வைத்து குழந்தைகளை நல்லப்படியாக வளர்த்துவிட வேண்டும்.
இவ்வாறு வடிவேலு கூறியுள்ளார்.
0 Comments