சுங்கை பட்டாணி.கெடா
எப்ரல் 24-
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கை பட்டாணி ஜாலான் ஆஸ்பிட்டல் சாலையில் ஒரு சிறிய மரத்தடியில், முன்னாள் மாரமத்து ஜெகேஆர் இந்திய தொழிலாளிகளால் உருவாக்கப்பட்ட விநாயகர் ஆலயம், இப்போது தலைவர் வேலு முதலியாரின் மேற்பார்வையில் கண்காணிக்கபட்டு வருகிறது.
அவ்வாலயத்தின் தலைமைச் செயலாளர் குமரகுருவின் தலைமையில் பல்வேறு நற்பணி காரியங்களைச் செய்து வருகின்றனர்.
அவ்வகையில் கோவிட்19 நிவாரண உதவியும் வழங்கி வருகின்றனர்.
கோல மூடா வட்டாரத்தில் நிறையை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களுடன் இலவச சாப்பாடுகளை நேரடியாகக் கொடுத்து வருகிறார்கள்!
0 Comments