நேற்றைய நாளில் (செவ்வாய்க்கிழமை) கொரோனாவல் பாதிக்கப்பட்ட நபர்கள் 57 ஆக பதிவாகியுள்ளன. மூவர் நேற்று மரணமடைந்துள்ளனர்.
இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,482 எனப் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மேலும் இத்தோடு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறினார்.
எனினும் இந்த நோயிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,349 பேராகும். நேற்று ஒரே நாளில் 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அவர் கூறினார்!
0 Comments