மலேசியாவில் நேற்றைய நிலவரப்படி 36 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தியதில் இருந்து இது மிகக் குறைவான பதிவாகும்.
நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,425 என சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தினசரி பாதிப்புகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில் ஒன்றாகும் புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மார்ச் 20-ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக இன்று இறப்புகள் ஏதும் இல்லை என்றும் நூர் ஹிஷாம் தெரிவித்தார். நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 89 ஆகும். மேலும் 98 நோயாளிகள் கோவிட்-19ல் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் அறிவித்தார்.
மொத்தம் 3,295 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது மொத்த நோயாளிகளில் 60.7 சதவீதம் ஆகும்!
0 Comments