ஆர்.டி.எம் செய்தி தொகுப்பாளர் பாரித் இஸ்மெத் எமிர் காலமானார். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவமனையில் இன்று காலை 11.10 மணியளவில் காலமானார்.
66 வயது பாரித் இஸ்மெத் எமிர், ஆர்.டி.எம் மூத்த செய்தி தொகுப்பாளராக இருந்தார். இந்த மரணத்தின் மூலம் ஒரு ‘மதிப்புமிக்க ரத்தினத்தை’ இழந்துவிட்டதாக ஆர்.டி.எம் அறிவித்துள்ளது.
ஆர்.டி.எம் ஊழியர்களிடையே 'பாக் ஙா' என அழைக்கப்பட்ட இவர் மலேசியர்களின் அபிமானத்திற்குரியவர் ஆவார்.
இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
நடமாட்டக் கட்டுப்பாடு இருப்பதால் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது பலருக்கு வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளனர்!
0 Comments