loader

All News

கோலாலம்பூர் மே- 16

எம்.ஜி.ஆர் ,சிவாஜி ரஜினி ,கமல், தனுஷ், சிம்பு, மைக்கல் ஜாக்சன், விஜய்காந்த், நாகேஸ், மன்சூர் அலிகான், கார்த்திக், பி.ரம்லி  என 12 வேடங்களில் மலேசிய கலைஞர்கள் மேடையில் 30க்கு மேற்பட்ட நடனங்களை படைக்கவுள்ளனர். 

இந்த அனைத்து நாயகர்களின் நாயகியாக 20 ஆண்டுகாலமாக கலைத்துறை இருக்கும் honey பிரியா நடனமாடவுள்ளார்.

தலைநகர்  சோமா அரங்கத்தில் எதிர்வரும் மே 21 திகதி  நடைப்பெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த கலைஞர்கள்  மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற ஒரே மேடையில் முதல் முறையாக 12 நடிகர்கள் போல் வேடமிட்டு கலைஞர்களின் படைப்பும் அவர்களோடு ஒரே ஒரு நாயகியாக honey பிரியா வளம்வந்து இடைவிடாத 30 பாடல்களுக்கு நடனம் அடும் முயற்சியில் கலம் இறங்கி உள்ளனர்.

மாலை 3 மணி தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்தவர் ரோஜா கெதெரிங் உரிமையாளர் ரோஜா மலர். 

சாதனை புரிய துடிக்கும் ஒரு பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் முன்வந்ததாக ரோஜா மலர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் விலை 50 வெள்ளி என தெரிவித்த ரோஜா மலர் சுவையான உணவு மற்றும் அதிர்ஷ்ட குழுக்களும் உள்ளதாக தெரிவித்தார்.

முதல் பரிசு தங்க சங்கலி,  இரண்டாவது பரிசு Samsung தொலைப்பேசி, மூன்றாம் பரிசு தங்க வளையத் தோடு  மற்றும் இன்னும் சிறப்பு பரிசுகள் உள்ளது என ரோஜா மலர் தெரிவித்தார்.

இந்த கலைஞர்களின் சாதனைக்கு உதவும் நோக்கில் பொது மக்கள் டிக்கெட் வாங்கி ஆதரவு கொடுக்கும் படி ரோஜா மலர் கெட்டுக்கொண்டார்.

மேல் விவரங்களுக்கு 011-36778577

கோலாலம்பூர், மே.12-

டாக்கியின் சம்பா ராக் கலைநிகழ்ச்சிக்கு  மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதாகவும் , அதோடு இன்னும் இரண்டு நாள்தான் உள்ள நிலையில் கூடுதல் ஆதரவு தேவை என அதன் ஏற்பாட்டுகுழுவான  WHIMSY STREAMS  உரிமையாளர் சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

நாளை மறுநாள் 14ஆம் தேதி இரவு  செந்தூல் எச்.ஜி.எச் அரங்கத்தில் நடைபெறவிருக்கும்
உள்ளூர் ராக் பாடல்களின் ஜாம்பவான் டாக்கியின் SAMBA ROCK LIKE NEVER BEFORE எனும் மாபெரும் கலைநிகழ்ச்சிக்கு தற்போது மக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது மகிழ்ச்சி . இருப்பினும் இதுநாள் வரையில்  50 விழுக்காடு டிக்கேட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

அவ்வகையில் அந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலையில் 20 விழுக்காடு கழிவு வழங்க ஏற்ப்பாட்டுக்குழு முன் வந்துள்ளது என ஏற்பாட்டு குழு தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.
பிரிமியர் ஜோன், கோல்ட் ஜோன் மற்றும் ராக் ஜோன் ஆகியவற்றிக்கு மட்டும் இந்த சிறப்புக் கழிவு வழங்கப்படுகிறது என்ற தகவலை அவர் அறிவித்தார்.


 இந்நிகழ்ச்சியில் டாக்கி உட்பட மற்ற பிரபல  உள்ளூர் களைஞர்களான ஹெர்வின், சந்தேஷ், கபில் ராஜ், என்.எம்.லிங்கேஷ், எம்.சி.ராஜ், பிராடெர்கன், டிரீம் கேச்சர் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெறவுள்ளது.

அவ்வகையில் சம்பா ராக் நிகழ்ச்சி நிச்சயம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கும் மக்களை மகிழ்விக்கும் வகையில் பல சிறப்பு அங்கங்களை ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

அதோடு இந்த கலை நிகழ்ச்சியை தலைமை தாங்க ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்  வருகை புரிய உள்ளதாக சிவகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கேட்டுகளை மக்கள் my ticket.Asia என்ற அகப்பக்கத்தில் அல்லது நேரடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவான  WHIMSY STREAMS 016-9164345 / 016 -916 4325 என்ற எஎண்ணில் தொடர்புக் கொண்டு வாங்கிக் கொள்ளலாம்.

கோலாலம்பூர்: மே.10-

சமூக மேம்பாட்டு அறவாரியத்தின் திட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ரிதம் ஆப் யூனிட்டி எனும்  விருந்துடன் கூடிய இன்னிசை கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ கனகம் கூறினார்.

முன்னாள் அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ பழனிவேல் இந்த அறவாரியத்தை கடந்த 1994ஆம் ஆண்டு தொடங்கினார்.

கல்வி, பொருளாதாரம், தொழில் திறன் உட்பட இந்திய சமுதாயத்தில் மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகள் இந்த அறவாரியத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.தற்போது அறவாரியத்தின் தலைவராக பொறுபேற்ற நான் அதனை வலுப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

அவ்வகையில் அறவாரியத்தின் திட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த விருந்துடன் கூடிய இன்னிசை கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ கனகம் கூறினார்.

இந்த நிகழ்வு வரும் ஜூன் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு செந்தூல் எச்ஜிஎச் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாடகி தன்வி ஷா, பாடகர் சத்திய பிரகாஷ் தலைமையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதே வேளையில் டாக்டர் ரவிசந்திரிக்கா, புவனேஸ்வரன், தேவராஜன், சுகுனா ஆகியோரும் இன்னிசை  நிகழ்வில் தங்களின் படைப்புகளை வழங்கவுள்ளனர்.
நிகழ்வில் கிட்டத்தட்ட 1000 பேர் கலந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

ஆகவே மக்கள் இந்த நிகழ்வுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று அதன் ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் டத்தோ மலர்விழி குணசீலன் கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்வு குறித்த மேல்விரங்களுக்கு 0169800857 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

(வெற்றி விக்டர்)

 
கோலாலம்பூர் மே- 5

நாட்டில் நடக்கும் பல தமிழ்நாட்டு கலைஞர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுக்கும் நம் மக்கள், நம் நாட்டு மண்ணின் மைந்தர்களின் கலை நிகழ்ச்சியை கைவிடலாமா? என்ற கேள்வியை தமிழ் லென்ஸ் முன்வைக்கின்றோம்.

Samba Rock என்ற கலை நிகழ்ச்சி எதிர்வரும்  மே14 ஆம் திகதி செந்தூல்  HGH பிரமாண்ட மண்டபத்தில்  மாலை 7 மணியளவில் நடைப்பெறவுள்ளது.

டாக்கி, சந்தேஸ்,  ஹெர்வீன் கபீல் ராஜ் என சுமார் 11-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் முதல் முறையாக படைக்கவிருக்கும் மாபெரும் உள்ளுர்  கலைநிகழ்ச்சிக்கு ஆதரவு குறைவாக இருக்கிறது என ஏற்பாட்டாளர் சிவகுமார் ராஜேஸ் வருத்தத்துடன் தெரிவித்தார்.

நம் நாட்டு கலைஞர்கள் ஆதரவு கேட்டு கையேந்துவது நியாயமா? அந்நிய நாட்டு கலைஞர்களை கொண்டாடுபவர்கள் இவர்களை தூக்கிவிட்டால் இந்த கலைநிகழ்ச்சியின் வெற்றியின் பிறகு இன்னும் பல கலைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளுர் கலைஞர்களை வைத்து கலை நிகழ்ச்சி செய்ய முன் வருவார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம்  டிக்கெட் விற்பனை தொடங்கி 1,700 பேர் இருக்கை கொண்ட  அந்த மண்டபத்தில்  வெறும் 300 டிக்கெட் மட்டும்தான் இதுவரை விற்கப்பட்டது. அந்த வகையில்  300 பேர்களுக்கு நன்றி. அடுத்த வாரம் கலைநிகழ்ச்சி ஆனால் இன்னும் 1500 டிக்கெட் விற்கவில்லை ஆனால் வெளிநாட்டு நட்சத்திரங்களின் டிக்கெட் சில மணி நேரத்தில் விற்று முடிந்ததாக செய்திகள் வெளிவருகிறது.
என்ன செய்யபோகிறது சமுதாயம். ஆதரவு கேட்டு கையேந்தும் நிலையில் மலேசிய கலைஞர்கள்.

இந்த ஏற்பாட்டு குழுவினரின் அதிகபட்ச VVIP டிக்கெட் விலையே 189 வெள்ளி ஆகும். குறைவான டிக்கெட் விலை 59 வெள்ளி. ஆனால் வெளிநாட்டு படைப்பின் ஆக குறைவான டிக்கெட் விலையே 199 வெள்ளியில் தொடங்கும்  ஆனால் இங்கு ஏன் ஆதரவு இல்லை என்ற கேள்வியை மக்களிடத்தில் விட்டு விடுகிறோம்.

இன்னமும் நம் சமுதாயம் உள்ளூர் கலைஞருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு ஏற்பாட்டு குழுவினர் ஊடகத்தை நாடி வந்துள்ளனர்.

அந்த வகையில் தமிழ் லென்ஸ் மக்களிடத்தில் வைக்கும் கோரிக்கை நம் விட்டு பிள்ளை அழுகிறது கைகொடுக்க வாருங்கள்.

மாணவர்களே உங்களுக்கு ஏற்பாட்டு குழுவினர் டிக்கெட் விலையில் 20 விழுக்காடு கழிவு தருவதாக தெரிவித்து உள்ளனர். ஒரு கல்லூரியில் இருந்து 10 மாணவர்கள் கலந்துக்கொண்டால் 50 கல்லூரியில் 500 மாணவர்கள் கைகொடுங்கள்.

மகளிர்களே  தாயை போற்றும் நல்ல தினத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபடுவதால் திருமணம் ஆகிய மகளிர்களுக்கும் 20 விழுக்காடு கழிவு உண்டு.

அதோடு வருகை அழிக்கும் தயார்களுக்கு ஏற்பாடு குழுவினர்  கொண்டாடத்துடன் கூடிய பரிசும் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதுமற்றும்மின்றி அதிர்ஸ்ட குலுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியை வெற்றி அடை செய்யுமா நம் சமுதாயம்? விடையை சமுதாயத்திடமே விட்டு விடுகிறோம்...


உங்கள் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் வாங்க விரும்புவோர்: www.myticket.asia  வாயிலாக வாங்கலாம்.
அல்லது கீழ் காணும் எண்ணில்  தொடர்பு கொள்ளவும்
016- 918 4325 , 016- 892 2705, 016 -9164345

கோலாலம்பூர், மே.02-

நாட்டில் தற்பொழுது எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதற்கு தொடர்ந்து மக்களின் ஆதரவு கிடைப்பது போல் உள்ளூர் கலைஞர்களின் படைப்பில் நடைபெறவிருக்கும் டாக்கியின் சம்பா ராக் கலைநிகழ்ச்சிக்கு அதே ஆதரவு கிடைக்கப்பட வேண்டும் என அதன் ஏற்பாட்டாளரான WHIMSY STREAMS நிறுவன உரிமையாளர் ஹெடி கேட்டுக்கொண்டார்.

 இம்மாதம் 14ஆம் தேதி இரவு  செந்தூல் எச்.ஜி.எச் அரங்கத்தில் நடைபெறவிருக்கும்
உள்ளூர் ராக் பாடல்களின் ஜாம்பவான் டாக்கியின் SAMBA ROCK LIKE NEVER BEFORE எனும் மாபெரும் கலைநிகழ்ச்சியில் மற்ற உள்ளூர் களைஞர்களான ஹெர்வின், சந்தேஷ், கபில் ராஜ், என்.எம்.லிங்கேஷ், எம்.சி.ராஜ், பிராடெர்கன், டிரீம் கேச்சர் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய டாக்கி, இது போன்ற கலை நிகழ்ச்சிகளை உள்ளூர் கலைஞர்களுக்கு செய்தால் மட்டுமே அவர்கள் வாழ முடியும்.மக்கள் கொடுக்கும் ஆதரவில் தான் கலைஞர்கள் தங்களின் துறையில்  அடுத்த நிலையை அடைய முடியும். எனவே மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்வதற்கு மக்களின் ஆதரவு இந்நிகழ்ச்சிக்கு தேவை என கூறினார்.

அவ்வகையில் சம்பா ராக் நிகழ்ச்சி நிச்சயம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கும் மக்களை மகிழ்விக்கும் வகையில் பல சிறப்பு அங்கங்களை ஏற்பாட்டுக் குழு செய்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை அறிந்து ஏற்பாட்டுக்குழு இந்நிகழ்ச்சிக்கான டிக்கேட் கட்டணத்தை நியாயமான விலையில் மக்களுக்கு விற்பனை செய்கிறது. குறைந்தபட்சம் 59 வெள்ளியிலிருந்து அதிகபட்சம் 189 வெள்ளிக்கு மட்டுமே டிக்கேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என நிகழ்ச்சியின் நிர்வாக குழு தலைவர் வான்ஜராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கேட்டுகளை மக்கள் my ticket.Asia என்ற அகப்பக்கத்தில் அல்லது நேரடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவான  WHIMSY STREAMS 016-9164345 என்ற எஎண்ணில் தொடர்புக் கொண்டு வாங்கிக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

-இ.எஸ்.காளிதாசன்

 

 

கோலாலம்பூர், மே.02-

நாட்டில் தற்பொழுது எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதற்கு தொடர்ந்து மக்களின் ஆதரவு கிடைப்பது போல் உள்ளூர் கலைஞர்களின் படைப்பில் நடைபெறவிருக்கும் டாக்கியின் சம்பா ராக் கலைநிகழ்ச்சிக்கு அதே ஆதரவு கிடைக்கப்பட வேண்டும் என அதன் ஏற்பாட்டாளரான WHIMSY STREAMS நிறுவன உரிமையாளர் ஹெடி கேட்டுக்கொண்டார்.

 இம்மாதம் 14ஆம் தேதி இரவு  செந்தூல் எச்.ஜி.எச் அரங்கத்தில் நடைபெறவிருக்கும்
உள்ளூர் ராக் பாடல்களின் ஜாம்பவான் டாக்கியின் SAMBA ROCK LIKE NEVER BEFORE எனும் மாபெரும் கலைநிகழ்ச்சியில் மற்ற உள்ளூர் களைஞர்களான ஹெர்வின், சந்தேஷ், கபில் ராஜ், என்.எம்.லிங்கேஷ், எம்.சி.ராஜ், பிராடெர்கன், டிரீம் கேச்சர் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய டாக்கி, இது போன்ற கலை நிகழ்ச்சிகளை உள்ளூர் கலைஞர்களுக்கு செய்தால் மட்டுமே அவர்கள் வாழ முடியும்.மக்கள் கொடுக்கும் ஆதரவில் தான் கலைஞர்கள் தங்களின் துறையில்  அடுத்த நிலையை அடைய முடியும். எனவே மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்வதற்கு மக்களின் ஆதரவு இந்நிகழ்ச்சிக்கு தேவை என கூறினார்.

அவ்வகையில் சம்பா ராக் நிகழ்ச்சி நிச்சயம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கும் மக்களை மகிழ்விக்கும் வகையில் பல சிறப்பு அங்கங்களை ஏற்பாட்டுக் குழு செய்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை அறிந்து ஏற்பாட்டுக்குழு இந்நிகழ்ச்சிக்கான டிக்கேட் கட்டணத்தை நியாயமான விலையில் மக்களுக்கு விற்பனை செய்கிறது. குறைந்தபட்சம் 59 வெள்ளியிலிருந்து அதிகபட்சம் 189 வெள்ளிக்கு மட்டுமே டிக்கேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என நிகழ்ச்சியின் நிர்வாக குழு தலைவர் வான்ஜராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கேட்டுகளை மக்கள் my ticket.Asia என்ற அகப்பக்கத்தில் அல்லது நேரடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவான  WHIMSY STREAMS 016-9164345 என்ற எஎண்ணில் தொடர்புக் கொண்டு வாங்கிக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

 

கோலாலம்பூர்,  அக்டோபர்-5:

வீடு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டேனேஸ்  குமார், ஜாஸ்மின் மைக்கல் மற்றும் பிக் போஸ் அபிராமி நடித்துத் திரைக்கு வரவிருக்கும்  மலேசியத் திரைப்படமான 'கஜன்' திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி எதிர்வரும் அக்டோபர்-7 ஆம் திகதி யூடியூப்பில் வெளியீடு காணவுள்ள நிலையில், அதனை மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி  வெளியீடு செய்யவுள்ளதாக தாயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.

இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கும், மலேசிய நேரப்படி 8.30 மணிக்கும் இந்த முன்னோட்டக் காட்சி வெளியீடு காணவுள்ளது.

இயக்குனர் மதன் இயக்கத்தில்  உருவாக்கப்பட்ட 'கஜன்' திரைப்படத்திற்கு சமேஷன் இசையமைத்துள்ளார்.

விமலா பெருமாள் தயாரிப்பில்  உருவாக்கப்பட்ட இப்படம், எதிர்வரும் நவம்பர் மாதம் நாடுதளுவிய அளவில் திரையிடப்படவுள்ளது!

 

புது 'டைம் லைன்' ஆரம்பம்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர், ஜனவரி- 17

கள்வனைக் கண்டுப்பிடி , கலயாணம் டூ காதல் மற்றும் இன்னும் சில தொடச்சியான  வெற்றித் தொடர்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அசைக்கமுடியாத இடத்தைப் பிடித்து விட்டார் பாஷினி.

நீண்ட காலமாக மலேசியாவில் ஒளிந்து கொண்டிருந்த இரண்டு  முன்னணி கதாநாயகிகளின் பெயரை சமீபகாலமாக  மறக்கடித்தார் பாஷினி.  இதற்கு முக்கியக் காரணம்  கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில்  இந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை கட்டிப்போட்ட 'கல்யாணம் 2 காதல்' தொடர்தான். அதில் வலம் வந்த சௌமியா என்ற கதாபத்திரம் வாயிலாக மக்கள் பாஷினியை  சௌமியாவாகப் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டும் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றதால், இந்தக் குழுவினருக்கு  'உலகம் விருது' விழாவில் அதிகமான விருதுகளைக் குவித்துள்ளது.

இந்த இரண்டு முன்னணி கதாநாயகிகளை முந்திச் செல்ல ஷாலினி பாலசுந்தரம் பல முயற்சிகளை எடுத்து வந்த வேளையில், சௌமியா என்ற கதாபாத்திரம் வாயிலாக தன்னை முன்னிலை படுத்திவிட்டார் பாஷினி.

கல்யாணம் 2 காதல் (கல்கி)  பாணியில் சொல்லனும்னா ...
மலேசியத் திரை உலகில் பாஷினியின் வருகையால் புது டைம் லைன் தொடங்கியுள்ளது. 

இனி  கதாநாயகிகள் மத்தியில் மும்முனைப் போட்டி ஆரம்பம்!

 

கோலாலம்பூர், டிசம்பர் 15: இவ்வாண்டு இறுதியில், ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் உள்ளூர் தமிழ் ஆவணப்படமான ‘அந்த நாள்’ மற்றும் நாடக டெலிமூவியான ‘அக்டோபர் 22’ ஆகியவற்றை முறையே டிசம்பர் 18 மற்றும் டிசம்பர் 25 ஆகியத் தேதிகளில் ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில்  எதிர்ப்பார்க்கலாம்.

விருது வென்ற உள்ளூர் திரைப்பட இயக்குநர், இந்திராணி கோபால் தயாரிப்பிலும் மாறன் பெரியண்ணன் இயக்கத்திலும் மலர்ந்த ‘அந்த நாள்’, 1920கள் முதல் 1990கள் வரையிலான நிஜ வாழ்க்கை நிகழ்வுகளையும் அனுபவங்களையும் சித்தரிக்கிறது.

கபிலன் கந்தசாமி தொகுத்து வழங்கும் இவ்வாவணப்படம், மேற்க்கொண்ட நேர்காணல்கள் மூலம் பேரார்வம், விரக்தி மற்றும் வெற்றி ஆகியவற்றைப் பற்றிய மலேசியக் கதைகளைச் சித்தரிக்கிறது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8 மணிக்கு, ஒளியேறும் ‘அந்த நாள்’ ஆவணப்படத்தின் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழுங்கள்.

ஏ.பன்னீர்செல்வம், சித்திரா தேவி, எம்.எஸ் லிங்கம், பத்துமலை ராஜூ மற்றும் ஜமுனா ராணி நடித்த ‘அக்டோபர் 22’ எனும் நாடக டெலிமூவியையும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கலாம். 

நவ்ரோஸ் கான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த டெலிமூவி, பள்ளி நாட்களில் சித்ரா என்ற தனது காதலியின் நினைவுகளை மீண்டும்  நினைவுகூறும் செல்வம் என்ற முதியவரைச் சித்தரிக்கிறது.

டிசம்பர் 25,  இரவு 7 மணிக்கு ஒளியேறுகிறது ‘அக்டோபர் 22’ டெலிமூவி.

மேல் விபரங்களுக்கு, content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர்- மே 20

‘கல்யாணம் 2 காதல்’ தொலைக்காட்சி தொடரில் நட்சத்திரனாக (பிந்தாங் தெராங்) வலம் வந்து காதல் மழையில் இளைஞர்களை கவர்ந்தவர் ரவீன் ராவ்.

இப்போது ‘மன்மத புல்லட்ஸ்’ என்னும் தொடரில் கிருஷ்ணாவாக வலம் வந்து  episode 12 -13 -ல்  மனதை உருக்கும் காட்சியில் அபார நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக பெண்கள் மனதில் மண்ணின் அடுத்த நட்சத்திரனாக குடிபுகுந்துவிட்டார் ரவீன் ராவ். 

ஒரு நல்ல கலைஞருக்கு ஊக்கம் தருவது பாராட்டுதான். அந்த வகையில் நல்ல கலைஞர்களை, நல்ல படைப்பை மலேசிய மக்கள் பாராட்டாமல் இருந்தது இல்லை.

இந்நிலையில், நேற்று முதல் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரவீன் ராவ்வை மக்கள் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி பலர் “அந்த குறிப்பிட்ட காட்சியில் என்னைக் கலங்க வைச்சிட்டீங்க ரவீன்” என்று பதிவு செய்து வருகின்றனர் – வாழ்த்துகள் ரவீன்!

 

(வெற்றி விக்டர்)

தற்போது அஸ்ட்ரோ வானவில்  தொலைக்காட்சியில் நகைச்சுவை தொடராக ஒளிபரப்பாகும் 'அப்பளசாமி அபார்ட்மென்ட்' தொடர், நகைச்சுவை சக்கரவர்த்தி கானா தயாரிப்பில் வலம் வருகிறது. 

இதில், தோக்கோ சத்யா, நண்டு ரமேஸ்  இன்னும் பலர் நடித்து வரும் வேளையில், கஜோல் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சாந்தினி கோர், சீக்கியப் பெண்மணி கதாப்பாத்திரத்தில், கொஞ்சம் தமிழ் தெரிந்த சீக்கியர்கள் பேசும் அதே பாணியில் பேசி நம்மைக் கவர்கிறார்.

இவர் தமிழ் பேச முயற்சிப்பது போல, கானாவும் அவரிடம் ஹிந்தி பேச முயற்சிக்கும்  காட்சிகள், நகைச்சுவையோடு கலகலப்பூட்டுகிறது. 

90 -ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 'பி மாய் பி மாய் தாங் து' நாடகத்திலும் இப்படித்தான்,  மலாய் சீன இந்திய சமூகம் தங்களால் முடிந்தவரை தமிழ் சீன மற்றும் மலாய் மொழியில் நகைச்சுவையைப் புகுத்தினார்கள்.

அந்தப் பாணியில் இருப்பதும்.... அதில் சத்யா இருப்பதும் கூடுதல் சிறப்பு. இளம் கலைஞர்களுக்கு சவால் விடும் அளவிற்கு, தற்போது உள்ள இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில்,  சத்யாவின் நகைச்சுவை  அமைக்கப்பட்டிருப்பது இந்தத் தொடரின் வெற்றி.

டத்தோ ஷாசா ஸ்ரீ, சுபா ஸ்ரீ, அசோக் மற்றும் சுரேஹா குட்டி ஆகியோரின் கதாப்பாத்திரங்களும் சிறப்பாக உள்ளது.

அனைவரும் சிறப்பான நடிப்பில் அசத்துகின்றனர். அனைவருக்கும் வாழ்த்துகள்!

 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28- திரையீடு காண்பதற்கு முன்னரே பல்வேறு அனைத்துலக விருதுகளைப் பெற்றிருக்கும் மலேசியத் தமிழ் திரைப்படம் 'பரமபதம்'.

அண்மையில் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து  தற்போது ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளதாக இப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய நிலையில் பரமபதம் திரைப்படத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்காகப் பாடுபட்ட அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் பிரபு தெரிவித்தார்.

ஆசிய சாதனை புத்தகக் குழுவினர் நிர்ணயித்திருக்கும் அனைத்து தொழில்நுட்ப கூறுகளையும் ஒரு திரைப்படம் பூர்த்திச் செய்திருந்தால் மட்டுமே, அது அப்போட்டியில் இடம்பெறுவதற்கான தகுதியைப் பெறும் என்றும் விக்னேஸ் பிரபு மேலும் கூறினார்.

அதேவேளையில், மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான ஃபினாஸ்-இன் (FINAS) அனுமதி சான்றிதழையும் வைத்திருப்பதோடு, ஒரு வித்தியாசமான பாணியில் அமைந்திருக்கும் திரைக்கதையைக் கொண்டிருக்கும் எந்தவொரு திரைப்படமும் இதுபோன்ற போட்டிகளில் தாராளமாகக் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

வரும் நவம்பர் 26-ஆம் தேதி இப்படம் திரையீடு காண்கிறது! 

 

 

கோலாலம்பூர் -ஜீலை -5

 

(வெற்றி விக்ட்ர்)

 

பேய் வேட்டை என்ற நிகழ்ச்சி லிங்கேஸ்வரனுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்த நிகழ்ச்சி என்றாலும், பல கதாபாத்திரத்தில் நடித்த இந்த நாயனுக்கு, அமானுஷ்யம் என்ற ஒரு விசயம் எப்போதும் கைகொடுக்கிறது.

இவரின் 'பேய் வேட்டை'  நிகழ்ச்சி இவருக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தாலும், கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் தற்போது  அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி யில் வரும் 'கள்வனைக் கண்டுபிடி' தொடர் நாடகம், இவர் ஓர் அமானுஷ்ய நாயகன் என்பதை ஆழமாகப் பதிவு செய்துள்ளது. 

 

பேய் நாயகன் என்பது ஓர் அடையாளம் தான். காதல் கதை ஒரு புறம் இருக்க, மக்கள்  அதிகம் விரும்பிப் பார்ப்பது நம்பமுடியாத அமானுஷ்ய விசயங்களைத்தான். 

 

அந்த வகையில் கள்வனைக் கண்டுபிடி தொடர் மக்களை ஈர்த்துள்ளது. இது லிங்கேஸ்வரனின்  கலைப் பயணத்தில் இன்னொரு அடையாளம்!

கோலாலம்பூர், ஜனவரி 8-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் திரைப்படம் மலேசியாவில் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக நேற்று தகவல் வெளியானது.
இந்நிலையில் மலேசியாவில் நாளை தர்பார் திரையிடப்படும் என்று  லோட்டஸ் நிறுவனத்தின் தலைவர் டத்தோ ரெனா துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

லைக்கா நிறுவனத்திற்கு எதிராக மலேசியாவின் டிஎம்ஒய் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது. இது தொடர்பாக மலேசியாவில் தர்பார் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், நாளை வியாழக்கிழமை தர்பார் திரைப்படம் மலேசியா முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் நிச்சயம் வெளியாகும் எனவும் ரெனா துரைசிங்கம் கூறினார். மேலும் பொங்கல் பண்டிகையின் வெற்றிப்படமாக இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்!

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் நவம்பர் - 19

தற்போது  வெளியீடு கண்டுள்ள மலேசியத் திரைப்படமான 'புலனாய்வு', வெளியீடு கண்ட ஜந்தே நாட்களில் மூன்று லட்சம் வெள்ளி வசூலைக் குவித்துள்ளது. இது இப்படத்திற்கு நல்லதொரு  துவக்கமாக அமைந்துள்ளது.

ஷாலினி, ஷைலா நாயர் இருவருக்கும் இப்படம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இயக்குனர் சதீஸ் நடராஜன் தனது முதல் படத்திலேயே சிறந்த மலேசிய இயக்குநர் தரவரிசைக்குத் தேர்வு பெற்றுவிட்டார்.  பாடகியாக, மென்மையான நாயகியாக அனைவரும் அறிந்த டத்தின் ஷைலா நாயர், இப்போது மாஸ் ஹிரோயினாக மலேசிய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஜந்தே நாட்களில் 3 லட்சம்  வசூல் செய்ததன் மூலம், இவ்வாண்டின் சிறந்த வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற  பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

மலேசியத் தமிழ்த் திரை உலகின் வசூல் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள 'வெடிகுண்டு பசங்க' திரைப்படத்தை  இப்படம் முறியடிக்குமா?  பொறுத்திருந்து பார்ப்போம்!

கோலாலம்பூர் நவம்பர் - 15

64 திரை அரங்கில் நேற்று  முதல் திரையிடப்பட்டுள்ள ‘புலனாய்வு’ திரைப்படம் முதல் நாளே மக்களைக் கவரத் தொடங்கிவிட்டது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் கதையில் தொய்வு இல்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதோடு ஒவ்வொரு காட்சியும் அடுத்தக் கட்ட நகர்வின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக மக்கள் கருத்து அமைந்திருக்கிறது. அந்த வகையில் படத்தின் இயக்குனர்களான சதீஸ் நடராஜன், ஷாலினி பாலசுந்திரத்திற்குப் பாராட்டுகள். இனி வரும் காலங்களில் டத்தின் ஸ்ரீ ஷைலா நாயரை ‘பைரவி’ என்று  அழைக்கப்படுவார் போல. அந்த அளவிற்கு பைரவி கதாப்பாத்திரம் இப்படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளது. இசை படத்திற்கு உயிரோட்டம்.அதோடு படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் சிறந்த தரம் எனவும்  பேசப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அடுத்த மூன்று நாட்கள் இப்படத்தின் வெற்றி நகர்வைத் தீர்மானிக்கும். அந்த வகையில் அடுத்த முன்று நாட்கள்  64 திரை அரங்குகளில் இந்தப் பைரவியின் ஆட்டம்  இத்திரைப்படத்தின் வசூலைக் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டின் வெற்றிப்படமாக  அமையும் என ரசிகர்கள்  கருத்துக்களைக் கூறியுள்ளனர். மலேசியத் திரைப்படம் இப்படிப்பட்ட தரத்தில் வெளிவரவேண்டும் எனவும் மக்களின் கருத்து உள்ளது.

‘வெடிகுண்டு பசங்க’ வசூலை முறியடிக்குமா? ‘புலனாய்வு’ திரைப்படத்தின் வசூல்  பொறுத்திருந்து  பார்ப்போம்!

கோலாலம்பூர் நவம்பர்- 7

சமீபத்தில் சர்ச்சையாகப் பேசப்பட்ட 'புலனாய்வு' திரைப்படம், வரும் நவம்பர் 14-ஆம் தேதி மலேசியா முழுவதும் உள்ள 64 திரை அரங்குகளில் வெளியீடு காண்கிறது. 

அந்த வகையில் சபா சரவாக்கிலும் இப்படம் வெளியீடு காண்கிறது. சபாவில் சண்டக்காண் லோட்டஸ் திரை அரங்கிலும்,  சரவாக்கில் எம்.எம்.சி ரிவர் சைட் திரை அரங்கிலும் வெளியீடு காண்கிறது.

ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகளை படத்தின் இயக்குனர் ஷாலினி பாலசுந்தரம் காணொளிகள் வாயிலாகவும், பல பேட்டிகள் மூலமாகவும் எற்படுத்தி உள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் பிரபல பாடகியுமான டத்தின் ஸ்ரீ ஷைலா  நாயர் இப்படத்தில் மாறுபட்ட கோணத்தில் நடித்திருப்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படத்தில் ஷாலினியுடன் இணைந்து

சதீஸ் புதிய இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தனா, ஷாலினி, ஷைலா நாயர் ஆகிய முன்று பெண்களிடம் மாட்டித் தவிக்கும் நாயகனாக கபில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

சதீஸ் இயக்கும் முதல் படம் 'புலனாய்வு'. இந்த ஆய்வை அவர் தன் மனைவியுடன் இணைந்து செய்துள்ளார். அதோடு தன் மனைவியையும் இப்படத்தில் அவர் இயக்கி உள்ளார்.

படத்தைத் திரையில் பார்த்து உள்ளூர்க் கலைஞர்களுக்கு ஆதரவு வழங்குவோம். நம்மை மகிழ்விக்கும் அளவிற்குப் படம் இருக்கும் என நம்புவோம்.

'புலனாய்வு' நமக்கு என்ன சொல்ல வருகிறது?

64 திரை அரங்குகளில் விடை உள்ளது!

கோலாலம்பூர் நவம்பர்-2

இயக்குனர் விக்னேஷ் பிரபு இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'பரமபதம்' திரைப்படத்தில், இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் சிம்டாங்காரன் மற்றும் புள்ளினங்காள் பாடலை பாடிய பம்பா பாக்கியா  ஒரு பாடல் பாடியுள்ளதாக விக்னேஷ் பிரபு அண்மையில் அறிவித்திருந்தார். 

இளைஞர்களின் முயற்சியில் மலேசியத் திரையுலகில் அனுபவமிக்க மூத்தக் கலைஞர்களின் வழிகாட்டல் மற்றும் ஆசியுடன் 'பரமபதம்' தயாராகி உள்ள நிலையில், இப்படத்தின் டீசர் நாட்டில் உள்ள திரை அரங்குகளில் தீபாவளி திரைப்படங்களான  பிகில் மற்றும் கைதி திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. டீசரைப் பார்த்துவிட்டு # பரமபதம் சரவெடி என்று டைப் செய்து கருத்து தெரிவிக்கும் ரசிகர்களில், சிறந்த கருத்தினை வழங்கும் ரசிகர்களுக்கு சிறப்புப் பரிசு காத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இந்தப் படம் விக்னேஷ் பிரபு மற்றும் அவரது இளைஞர் குழுவிற்கு ஒரு முக்கியமான படமாகக் கருதப்படுகிறது. திரைப்படத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடத் தயாராய் இருக்கிறது பரம்பதம்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் அக்டோபர் - 30

மலேசியத் திரைப்படமான 'புலனாய்வு' திரைப்படம் எதிர்வரும் நவம்பர் - 14-ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது. தற்போது இத்திரைப்படத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளார் ஒரு நண்பர். புலனாய்வு திரைப்படத்தின் திரையரங்கு போஸ்டரில் தமிழ் இல்லை என்பது அவருடைய ஆதங்கம். நியாயமான ஆதங்கம்தான். ஆனால், அவர் விமர்சித்த விதம்,  உபயோகித்த வார்த்தை தவறாக இருக்கிறது.

 'புலனாய்வு' திரைப்படத்தையும் அதன் படக்குழுவினரையும் ஆய்வு  செய்த பின் அவர் அப்பதிவை செய்திருக்கலாம் நாகரிகமாக. அவருடைய அந்தப் பதிவில் யார் என்று தெரியாத  முகங்கள் இப்படத்தில் நடிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

நாடே இந்திய சினிமா பாடலை இங்குப் பாடிக்கொண்டிருந்த காலத்தில், ஒரு மென்மையான பெண் குரல் சொந்தத் தமிழ் பாடலுடன்  மலேசியா ரசிகர்களைக் கவர்ந்தது. அவர்தான் ஷைலா நாயர். அவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். முக்கிய போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

முட்டி மோதி தத்தளிக்கும்  மலேசியத் திரை உலகில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் . லிம் கோக் வீங் பல்கலைக்கழகத்தில் திரை சார்ந்த  படிப்பை முடித்து, இடை இடையே போட்டோ கிராப்பியும் செய்து, படிப்பிற்காக ஒரு குறும்படம் எடுத்து, அதுவும் 'இணை' என்று தமிழ்ப் பெயரில்  எடுத்தவர் இப்படத்தின் இயக்குனர் ஷாலினி பாலசுந்திரம். 

அதன் பின் கீதையின் ராதை, திருடாதே பாப்பா திருடாதே, ரயில் பயணங்கள் , இப்போது புலனாய்வு என்று மலாய் ஆங்கில கலவை இல்லாமல் சுத்த தமிழில் தலைப்பு வைக்கும் ஓர் இயக்குனர்.

அஸ்ட்ரோ விழுதுகளில் தினம்தோறும் தமிழில் உரையாடி, தமிழ் நிகழ்ச்சியின் வழி  பல பிரமுகர்களை நேர்காணல் செய்யும் கபிலனின் தமிழை, காலை 9.30 மணிக்கு விழுதுகள் நிகழ்ச்சியில் பார்க்கலாம் அவர்தான் இப்படத்தின் நாயகன்.

1000  தமிழ்க் கவிதைகள், திரைபாடல்களை எழுதியுள்ள கவி நாயகன் யுவாஜியும, தமிழ் திரைக் கதை வசனகர்த்தாவான தாசனும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள் 

புது புது மெட்டுகளுடன் பல இனிமையான தமிழ்ப் பாடல்களை வழங்கி, மலேசியப் பாடல்களைத் தமிழ் திரை உலக இசை தரத்தில் வழங்கும் சில இசை அமைப்பாளர்களில், ராகவேந்திராவும் ஒருவர். அவர்தான் இப்படத்தின் இசை அமைப்பாளர்.

இப்படித் தமிழ்ப் பற்று உள்ளவர்கள்தான் புலனாய்வு படக்குழுவினர் . 

பல தமிழ்த் திரைப்படங்கள்  ஆங்கில தலைப்புடன் தமிழில் எழுத பட்டிருக்கும். உதாரணதிற்கு 'சிக்சர்', 'மான்ஸ்டர்'  ஏன் தலைவர் நடித்த 'ரோபோ' இவை எல்லாம் தமிழ் தலைப்பு கிடையாது. எழுத்து மட்டும்தான் தமிழ். புலனாய்வு தமிழ் தலைப்பு அதற்குப் பாராட்டுவோம்.

அந்தப் படக்குழுவினர் ஆரம்பத்தில் இருந்து தமிழில் தான் பல விளமபரங்கள் செய்துள்ளனர். அது அந்த நண்பருக்குத் தெரிவியவில்லை அவரும் ஆய்வு செய்யவில்லை. அதனால் கோபப்பட்டுவிட்டார். கோபம் மனித இயல்பு.

ஆனால் அந்தக் கோபம் பலரது உழைப்பைச் சிதறடிக்கக் கூடாது. இங்கு நடப்பது எல்லாம் நன்மைக்கே. இங்கு ஒரு விஷயத்தை  நல்லவிதமாகச் சொன்னால், அது மக்களுக்குச் சேருவதற்குச் சற்று நேரம் எடுக்கும். ஆனால், நெகடிவ் விஷயம் உடேன வைரல் ஆகும் நண்பரின் பதிவு போல். அந்த நண்பர் புலனாய்வு திரைப்படத்திற்கு நன்மையே  செய்துள்ளார் படத்தின் தலைப்பை விமர்சித்து விளம்பரப்படுத்தி உள்ளார்.

புலனாய்வு திரைப்படத்தின் குழு தமிழ் பற்றுள்ள குழு. அவர்களுடைய போஸ்டர், இசை வெளியீடு டீசர்- டிரைலரில் தமிழ் இருக்கிறது.

இப்போது திரை அரங்கிலும் தமிழ் தவழும்.

அன்போடு சொல்லுங்கள், உரிமையோடு சொல்லுங்கள், சற்று பணிவு நாகரிகத்தோடு  சொல்லுங்கள் எல்லாம் சாத்தியமே!

(வெற்றி விக்டர்)

 

கோலாலம்பூர்  அக்டோபர்- 21

சாய்பா விஷன் தயாரிப்பில்  இயக்குனர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 'புலனாய்வு' திரைப்படத்தில், படத்தின் இயக்குநர் ஷாலினி நாயகியான ஷைலா நாயருக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளாதாகத் தெரியவந்துள்ளது. 

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் டத்தின் ஸ்ரீ ஷைலா நாயரிடம், ஷாலினி பாலசுந்தரம் கதையைச் சொன்னபோது, சுமார் நான்கு மணி நேரம் கதையைச் சொன்னதாகவும், கதையைக் கேட்ட ஷைலா நாயர்  கதை நன்றாக இருப்பதாகக் கூறியதோடு, கதையில் வரும் முக்கிய போலீஸ் வேடத்தை ஏற்று நடிப்பது யார் எனவும் ஷாலினியிடம் கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த ஷாலினி, புதுமுகம்தான் நடிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். 

அப்படியானால், அந்த முக்கிய வேடத்திற்குச் சரியான ஒரு பெண்ணைத் தேர்வு செய்யுங்கள் என ஷைலா கூற, அந்தப் பெண் நீங்கள்தான் என ஷாலினி கூற, உடனே, ஒரு கம்பீரமான பெண்ணைத் தெரிந்தெடுங்கள் என  ஷைலா சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

இதுவரை உங்களை இந்தத் திரை உலகம் ஒரு மென்மையான நாயகியாகவும், இனிமையான பாடகியாகவும் மட்டுமே பார்த்துள்ளது என ஷைலாவிடம் கூறிய ஷாலினி, இந்த மாதிரி  பார்த்தது இல்லை. இது உங்களின் புதுமுகமாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். 

முயற்சிப்பதாகக் கூறிய ஷைலா, நான் பொதுவாகவே மென்மையாகப் பேசக் கூடிய நபர், காரசாரமாகவும், விரைப்பாகவும் இருப்பது இயல்பாகவே வாராது. இருந்தாலும், முயற்சிக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அந்தக் கதாப்பாத்திரம் சரியாக வரவில்லை என்றால்,  வேறு ஒருவரைத் தேடிடுங்கள் என ஷைலா கூறியிருக்கிறார்.

இந்நிலையில் அந்தக் கதாப்பாத்திரத்திற்காக நடிப்புப் பயிற்சியில் இருந்த ஷைலாவிற்குத் தடுமாற்றம்  ஏற்பட்டபோது, தயவுசெய்து இந்தக் கதாப்பத்திரத்திற்கு வேறோருவரைத் தேடுங்கள் என ஷைலா நாயர் சொல்லியும் அதைக் கேட்காமல் ஷைலா நாயர்தான் இப்படத்தில் நடிக்கவேண்டும் எனத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துள்ளார் ஷாலினி.

இது தனக்கு ஒரு சவால் என  போலீஸ் துறையின் விசாரணை முறை எப்படி இருக்கும், அவர்களது நடை பாவனைகள், பேச்சு உடை போன்றவற்றை ஆய்வு செய்துள்ளார் ஷைலா. இதற்குப் படத்தின் இயக்குனர் குழுவும் ஷைலா நாயருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். அதோடு அவருடன் இத்திரைப்படத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த  துணை நடிகர்களும், ஷைலா நாயரை ஒரு மாஸ் போலீஸ் போல் காட்டுவதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

இப்படத்திற்கு இசை அமைத்த ராகவேந்திராவும் தீவிரமாக உழைத்திருக்கிறார்.  

கதையின் முக்கிய நாயகி ஷைலா நாயரை வேறொரு தோற்றத்தில் காட்ட வேண்டும் என்ற  நோக்கத்தில், அவருக்கு ஊக்கமும் அழுத்தமும் கொடுத்திருக்கிறார் ஷாலினி பாலசுந்தரம். அந்த வகையில் அண்மையில் நடந்த 'புலனாய்வு' பாடல் வெளியீட்டில், படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது. அதில் படக் குழுவினர்களான இயக்குனர் ஷாலினி, இசை அமைப்பாளர் ராகவேந்திரா, நாயகன் கபில்  ஆகியோர், இப்படத்தில் ஒரு மாறுபட்ட ஷைலா நாயரைப் பார்க்கலாம் என நம்பிக்கையோடு தெரிவித்தனர். விழாவிற்கு வந்தவர்களும் ஷைலாவா? இது என ஆச்சரியத்தோடு பாராட்டு தெரிவித்துள்ளனர்!

கோலாலம்பூர் அக்டோபர்-21

மலேசியத் திரை உலகில் அதிக வசூலை குவித்த திரைப்படமான 'வெடிகுண்டு பசங்க' திரைப்படத்தின் சாதனையை, இன்னும் எந்த ஒரு மலேசிய திரைப்படமும் முறியடிக்கவில்லை.

வீடு புரடக்சன்ஸ் தயாரிப்பில்  'வசூல் நாயகன்' டெனிஸ் குமார் -  சங்கீதா நடிப்பில், விமலா பெருமாள் இயக்கிய இப்படம், இவ்வாண்டு தீபாவளி வெடியாக அஸ்ட்ரோ வானவில்லில்  ஒளிபரப்பாக இருக்கிறது. 

எப்போதும் தீபாவளி என்றால், திரைக்கு வந்த புத்தம் புதிய திரைப்படம் என்ற விளம்பரத்துடன்,  தமிழ்நாட்டு சினிமா தொடர்பான விளம்பரம்தான் அஸ்ட்ரோவில் வரும். ஆனால் இந்தத் தீபாவளிக்கு 'வெடிகுண்டு பசங்க' தொடர்பான விளம்பரம் வெடிக்கிறது. மலேசியக் கலை உலகம் வளர்ச்சி அடைகிறது. அதற்கு ஏற்ப முக்கியத்துவமும் தற்போது கிடைக்கிறது.

27.10.2019  மாலை மணி 4 அளவில் 'வெடிகுண்டு பசங்க'  திரைப்படம் அஸ்ட்ரோ வானவில்லில் ஒளிபரப்பப்படும்.

அதுமட்டுமின்றி தீபாவளியை முன்னிட்டு சில சிறப்பு  உள்ளுர் நிகழ்ச்சிகளையும் அஸ்ட்ரோ தயாரித்துள்ளதாகத்  தகவல் கசிந்துள்ளது!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் செப்டம்பர் - 17

வீடு புரடக்‌ஷன் தயாரிப்பில், 'வசூல் நாயகன்' டெனிஸ் குமார் நாயகனாக நடிக்கும் 'தமிழ் ஸ்கூல்' திரைப்படத்தில்,  வித்யா, நடியா ஜாஸ்மின், கேத்ரீன் டிச்சர் என

3 நாயகிகள்  நடித்து வருகின்றனர். 

இதில் கேத்ரீன் டீச்சர் யார்? என்பதுதான் இப்போதைய கேள்வியாய் இருக்கிறது.

யார் இந்த கேத்ரீன் டிச்சர்?  

10 வருடமாக  மலேசிய டி.வி உலகில் வாய்ப்புக்காகப் பலமுறை முயற்சி செய்தும், சரியான வாய்ப்புகள் இன்றித் தவித்த, லீனா ஏண்டி என்கிற நளினா தேவிதான், இந்த கேத்ரீன் டிச்சர். 

இவரது திறமைக்கு வாசல் திறந்தது வீடு புரடக்‌ஷன்ஸ். இதன் மூலம் இவ்வளவு காலம் வெளியில் தெரியாத லீனாவின் முகம் 'தமிழ் ஸ்கூல்' திரைப்படத்தின் மூலம் மிளிரத் தொடங்கிவிட்டது. 

தற்போது 'தமிழ் ஸ்கூல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், இவரது புகைப்படம்  வைரல் ஆகி வருகிறது. 

யார் இந்த  இந்த கேத்ரீன் டீச்சர், என இப்போதே பலர் தேடத் தொடங்கிவிட்டனர். 

இத்திரைப்படத்தில் இவரது கதாப்பாத்திரமும்  ரசிகர்களை கவருமா? ஒரு சிங்கிள் புகைப்படமே யார் இந்த டீச்சர்? எனத் தேடவைத்துள்ள நிலையில், தற்போது இவருக்கு ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

இது குறித்து டீச்சர் என்ன சொல்றாங்க?

கே: நீங்கள் புதுமுகமா?

பதில் :நான் புதுமுகம் இல்லை! 10 வருடமாக திரை உலகில் இருக்கிறேன். என் முதல் டிராமா 'அடுத்த வீடு'.

கே: இவ்வளவு காலம் உங்கள் முகம் பதியவில்லையே?

பதில்: ரசிகர்களுக்கு இப்போது என்னைப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதுவும் கேத்ரீன் டீச்சரை... இது போதும் எனக்கு.

கே: உங்கள் மனநிலை எப்படி இருக்கு?

பதில் : 10 வருட முயற்சிக்கும் ஏக்கத்திற்கும் இப்போதுதான் மக்கள் தரிசனம் கிடைத்துள்ளது. இதைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

புன்னகை மலராய் நம்மிடம் பேசிய லீனா, தொழில் நிர்வாகத்துறையில் மாஸ்டர் பட்டம் பெற்றவர். திரை உலகில் சாதிக்கவேண்டும் எனப் பல காலமாகப்  போராடி வருகிறார்.

புதுமுகங்களுக்கு  வாய்ப்புகள் அவசியமானது  அப்போதுதான் பல தரப்பட்ட திறமைகள் வெளியில் வரும். அந்த வகையில் லீனா-விற்கு கேத்ரீன் டீச்சர் கதாப்பாத்திரம் முக்கிய கதாப்பாத்திரமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் சிறு வேடம்தான் செய்துள்ளதாகக் கூறும் இவர், இப்படி ஒரு ஆதரவு தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்கின்றார். சிறு வேடமாக இருந்தாலும், நிச்சயம் மக்களுக்குத் தனது கதாப்பாத்திரத்தைப் பிடிக்கவைப்பேன் எனக் கூறுகிறார் லீனா.

'இவ்வளவு நாள் என்னை அடையாளப் படுத்த ஒரு தளத்தைத் தேடினேன். 'தமிழ் ஸ்கூல்' அந்த அடையாளத்தை உருவாக்கி உள்ளது' என மகிழ்ச்சியில் திளைக்கும் லீனா, தனக்கென ரசிகர் பட்டாளத்தைச்  சம்பாதித்து வருவதோடு, டிக் டோக்கில் இன்னும் வைரலாகிக்கொண்டிருக்கிறார். 

இந்த கேத்ரீன் டீச்சரை மலேசியத் திரை உலகம் ஏற்றுக்கொள்ளுமா? லீனாவின் 10 வருட தவத்திற்கு உரிய வாய்ப்புக் கிடைக்குமா?  

பரிட்சை எழுதி காத்திருக்கிறார் டீச்சர்...

முடிவுகள் ரசிகர்கள் கையில்!

இயக்குனர் விக்னேஷ் பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள 'பரமபதம்' திரைப்படம், இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் பிரபு  சமீபத்தில்தான் தேசம் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் வஜ்ரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் விக்னேஷ் பிரபு, தனது மூன்று வருட உழைப்பு, பலன் தரும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

பழங்கால விளையாட்டாகக் கருதப்படும் 'பரமபதம்' இந்த நவீன உலகத்திற்குச் சொல்லும் கதை என்ன? என்கிற சஸ்பென்ஸ் கடல் தாண்டி இந்தியா வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இயக்குனர் பாக்யராஜ், 'பரமபதம்' திரைப்படத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாக அண்மையில் பேட்டி அளித்துள்ளார். நிச்சயம் படக்குழுவினர், அவரிடம் சில காட்சிகளை போட்டுக் காட்டியிருக்கவேண்டும். அதைப் பார்த்துவிட்டு, தனது கருத்தினை பாக்யராஜ் பதிவு செய்துள்ளார்.

எப்போது இந்தப் படம் திரைக்கும் வரும்? என்பதை, விரைந்து அறிவிப்பாரா விக்னேஷ் பிரபு?

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் செப்டம்பர் - 2

'காளி முனி தரிசனம்' திரைப்படம் பல சவால்களைத் தாண்டி திரைக்கு வெளிவந்த படம். இத்திரைப்படம் திரையிடப்பட்ட  முதல் வாரத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் வெள்ளி வரை வசூலைக் குவித்தது என படக்குழுவினர் அறிவித்தனர்.  

 3 வாரங்கள் கடந்து இத்திரைப்படத்தின் வசூல்  114,222.50 வெள்ளி என ஃபினாஸின் மலேசியத் திரைப்பட வசூல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் எது உண்மை? இந்தத் திரைப்பட விவகாரத்தில், சில முதலைகள் உள்ளே நுழைந்து  விழுங்கியதாகவும் சொல்கின்றனர். யார் அந்த முதலைகள்? படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான டி.தி.எஸ் இந்திரனுக்கே வசூல் எவ்வளவு  என்பதை அறிவிக்காமல், டிமிக்கிக் கொடுக்கும் அந்த முதலை யார்?

முதல் வாரம் 2 லட்சம் வெள்ளி வசூல் என்று படக்குழுவினருக்குத்  தெரிவிக்கப்பட்டது. இப்போது, அந்த வசூல் எப்படி 114,222.50 ஆகக் குறைந்தது? இதில் எது உண்மை? 

அதோடு தனியார் வானொலி நிறுவனங்களுக்கும், ஊடக விளம்பரத்திற்கும் வேறு பாக்கி உள்ளதாம்.

இன்னும் சில படக் குழுவினர்களுக்கும் வழங்க வேண்டிய பாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

'காளிமுனி தரிசனம்' திரைப்படத்தைச் சூழ்ந்துள்ள மர்ம முடிச்சு என்ன? ஏன் இவ்வளவு சிக்கல்? உண்மை நிலவரத்தை விளக்குவாரா டி.தி.எஸ் இந்திரன்?

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஆகஸ்ட் 7-

கடந்த 2018-ஆம் ஆண்டு 8  மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, அதில் 7 திரைப்படங்கள் வசூலில் லட்சத்தை எட்டிப்பிடித்தன. ஆனால், இவ்வாண்டு 3 மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, 30 ஆயிரம் வரைக்கும் கூட வசூலை ஈட்டவில்லை என ஃபினாஸ் வெளியிட்டிருக்கும் மலேசியத் திரைப்பட வசூல் பட்டியல் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

'சட்ட' திரைப்படம் 27,637.50 வெள்ளி வசூலையும், 'அழகிய தீ'  26,851.00 வெள்ளி வசூலையும், 'குற்றம் செய்யேல்' 14,615.00 வெள்ளி வசூலையும் பெற்றுள்ளதாக அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போது வெளிவந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் 'காளி முனி தரிசனம்' திரைப்படம்  2 லட்சத்தைத் தாண்டி வெற்றி நடை போடுவதாகத் திரைப்படக் குழுவினர் கூறிவருகின்றனர். 

ஃபினாஸ் வெளியிடும் வசூல் பட்டியலுக்குப் பிறகு இத்திரைப்படத்தின் முழு வசூல் என்ன என்பது தெரியவரும். 

ஆனால், தற்போது பட்டியலில் உள்ள இந்த மூன்று திரைப்படங்களும் வசூலில் மிகப்பெரிய சரிவைக் கொடுத்துள்ளது. 

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் வசூல் மலேசியக் கலை உலகத்திற்கு மிகப் பெரிய ஏமாற்றம்தான். அந்த வகையில் வசூல் ரீதியில் இந்த முன்று திரைப்படங்களும் தோல்விப்  படங்களே.

கடந்த ஆண்டு '33km from Kl' திரைப்படம்  18,779.00 வெள்ளி வசூலை எட்டிய நிலையில்,  மாபெரும் வெற்றிப் படமாக 'வெடிகுண்டு பசங்க' திரைப்படம் அமைந்தது. 1,330,302.40 வெள்ளி வசூலை அப்படம் குவித்தது. அதைத் தொடர்ந்து 'திருடாதே பாப்பா திருடதே' திரைப்படம் 314,524.00 வெள்ளி வசூலையும்,  'நீயும் நானும்' திரைப்படம் 307,956.96 வெள்ளி வசூலையும், 'வில்லவன்' திரைப்படம் 194,484.50 வெள்ளி வசூலையும், 'சுகமாய் சுப்புலட்சுமி' 138,970.00 வெள்ளி வசூலையும், 'கோரா' திரைப்படம் 129,815.75 வெள்ளி வசூலையும், 'அச்சம் தவிர்' திரைப்படம் 120,396.70 வெள்ளி வசூலையும்  பெற்றுள்ளன.

அந்த வகையில், கடந்த ஆண்டு மலேசியத் திரைப்படங்கள் வசூலில் லட்சத்தை எட்டத் தொடங்கிய நிலையில், இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து  30 ஆயிரத்தைக் கூட எட்டாததற்கு என்ன காரணம் என்பதை, மலேசியத் திரை உலகத்தினர் சற்று ஆராய வேண்டும். தங்களுக்குப் பிடித்த படைப்புகளுக்கு மக்கள் வெகுவாக ஆதரவு வழங்கி வருகிறார்கள் என்பதற்கு வசூலே சாட்சி.  

கூடுதல் கவனத்துடன் மலேசியத் திரை உலகம் செயல்படவேண்டிய காலகட்டம் இது. மக்களுக்குப் பிடிக்கும் படைப்புகள் கொண்டாடப்படுகிறது.  ஆகையால், தவறு எங்கே எனபதைச் சற்று ஆய்வு செய்யுங்கள்.

இவ்வாண்டு, இதுவரை மலேசியக் கலை உலகத்தின் அடைவு நிலை வசூல் ரீதியிலும், மக்கள் மனம் கவர்ந்ததிலும் மிகப்பெரிய சரிவு  என்பதனை 'தமிழ் லென்ஸ்' வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறது!

கோலாலம்பூர் ஜூலை 26-

மலேசிய பக்தி திரைப்படமான 'காளிமுனி தரிசனம்' திரைப்படம், தற்போது மலேசியாவில் மட்டும் அல்லாது சிங்கப்பூரிலும் திரையிடப்பட்டு, வெளியீடு கண்ட முதல் வாரத்திலேயே 2 லட்சம் வெள்ளி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

டி.தி.எஸ். இந்திரன் இயக்கத்தில், அவருடைய  நிறுவனத்தின் தயாரிப்பில், மலேசிய முன்னணி கலைஞர்கள் பலர் நடித்து வெளிவந்துள்ள இத்திரைப்படம், தற்போது 37 திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் இடம்பெற்றுள்ள  'ஆகால லோகத்திலே' என்ற பாடல், மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இத்திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடித்த ரத்னா கௌரி அப்பாடலுக்கு  உயிரோட்டம் கொடுத்துள்ளார்.

தற்போது டிக் டோக் செயலியில் பலரும் அவரது பாணியில் பல வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

பல போராட்டங்கள், தடங்கல்களைக் கடந்து வெளி வந்துள்ள 'காளிமுனி தரிசனம்' தொடர்ந்து பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது!

விளம்பரம்:

 

கோலாலம்பூர் ஜுலை-25 

நேற்று  முதல் சமூக ஊடகங்களில், மலேசியக் கலைஞர் ஒருவர் சம்பந்தப்பட்ட  ஓரினப் புணர்ச்சி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த ஆபாச வீடியோவில் உள்ள ஒருவர், பிரபல நடிகர் பாலகணபதி வில்லியம் என்று சிலர் வதந்திகளைப் பரப்பிவந்தனர்.

அந்த வீடியோவில் இடது கையால் முகத்தை மறைத்திருக்கும் அந்த ஆடவர், பாலகணபதிதான் என்றும்,  அந்த வீடியோவில் உள்ள ஆடவரின் தலைமுடி வெட்டும், பாலகணபதியின் தலைமுடி வெட்டும் ஒரே மாதிரியாக இருப்பதைச் சுட்டிக்காட்டி  ஒரு போஸ்டரும் பகிரப்பட்டது.

இந்நிலையில், இன்று தனது சமூக வலைத்தளத்தில் அது தொடர்பில் கருத்து பதிவிட்டிருந்த பாலகணபதி, தன்னைப் பற்றி பரவும் தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

சில விஷமிகள்  செய்த விஷமத்தனம் என பாலகணபதி குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆபாச வீடியோவில் இருப்பது பாலகணபதி இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தற்போது தகவல் கிடைத்துள்ளது. 

அந்த ஆபாச வீடியோவில் உள்ள நபருக்கு இடது கையில் 5 விரல்களும் முழுமையாக இருப்பது தெளிவாகத் தெரியும் வேளையில்,

நடிகர் பாலகணபதிக்கு இடது கையில் உள்ள மோதிர விரல் முழுமையாக இருக்காது எனக் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில், பாலகணபதியின் இடது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டது.

பாலகணபதியின மோதிர விரல் அவர் மீது சுமத்தப்பட்ட கலங்கத்தைப் போக்கியுள்ளது.

பாலகணபதியின் வளர்ச்சி பிடிக்காத சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரை அவமானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இப்படிப்பட்ட வதந்திகளை நம்ப வேண்டாம். மலேசியக் கலை உலகில் ஒரு கலைஞரை, ஆபாச விடியோவைக் கொண்டு கீழறுப்பு வேலை செய்யும் முயற்சி ஒரு வியாதியாகிவிட்டது இப்போது.

இது முற்றிலும் தவறான செயல் என, கலைத்துறையினர் பரவலாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்!

விளம்பரம்:

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூலை -16

டி சினிமா, DTS இந்திரன் தயாரிப்பில், DTS இந்திரன் இயக்கிய 'காளிமுனி தரிசனம்' திரைப்படம், பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு,  பல தடைகளைத் தாண்டி வெளியீடு காணவிருக்கிறது. 
எதிர்வரும் ஜூலை 18-ஆம் தேதி நாடு தளுவிய அளவில்  சுமார் 27 திரை அரங்குகளிலும், சிங்கப்பூரில் 3 திரை அரங்கிலும் வெளியீடு காணவுள்ளது இத்திரைப்படம்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக  இந்தப் படம் எப்போது வெளிவரும்  என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. காரணம், இத்திரைப்படத்தில் வந்த 'காளிமுனி' பாடல் பல எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் விதைத்தது. 
கடந்த ஆண்டு தைப்பூசத்திற்கு வெளிவர இருந்த இப்படம், சில  காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின் இவ்வாண்டு, இத்திரைப்படத்தை வெளியீடு செய்ய டி.தி.எஸ் இந்திரன் மற்றும் படக்குழுவினர் பல வகையில் போராடினர்.   
இதனையடுத்து  சில வாரங்களுக்கு முன்  இப்படத்தின் டிரைலர் வெளிவந்தது. மீண்டும் அதே 'காளிமுனி' பாடல் பல காட்சி அமைப்போடு வெளியிடப்பட்டது. ரசிகர்கள் இதற்குப் பெரும் ஆதரவு  வழங்கியதோடு, படத்தை விரைவில் வெளியிடுமாறும் படக் குழுவினருக்கு உற்சாகமூட்டினர். இதனையடுத்து வரும் வியாழக்கிழமை  தரிசனம் தரவிருக்கிறது காளிமுனி.

https://www.youtube.com/watch?v=-qIJXG-Xi7I

இப்படத்தில் காந்தி பென், ரத்னா கௌரி, நித்யா ஸ்ரீ,  ஜெகன், டேவிட் கண்ணன் ராஜமாணிக்கம், லோக்காப் நாதன் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

படத்தைப் பார்ப்போம்... பிறகு குறை நிறைகளைச் சொல்வோம்.

'காளிமுனி தரிசனம்'.
அம்மை - அப்பன் வேட்டை ஆரம்பம்!

மலேசிய சிம்ரன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ராஜி (37 வயது) காலமானார். மலாக்காவில் உள்ள தனது கணவரின் சகோதரர் இல்லத்திற்குச்  சென்றிருந்த வேளையில், கடந்த  15-ஆம் தேதி திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

தமிழ் மொழி மட்டுமல்லாது, மலாய் மொழியிலும் தனது அபார நடிப்பாற்றலால் எண்ணற்ற உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ராஜி. தொலைக்காட்சி நாடகங்கள், படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். கானாவுடன் இணைந்து இவர் செய்த நகைச்சுவை கலாட்டாக்கள், நம் அசல் மலேசியாவின் அக்மார்க் காமெடிகள்.
உடல் பருமனால் அவதியுற்றாலும், அதையே ஒரு மூலதனமாக வைத்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தார்.
நடிக்காமல் சிறிது காலம் ஓய்வில் இருந்த அவர், அண்மையில்தான் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் அவரின் மரணம் மலேசியக் கலை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூலை - 5

வீடு புரடக்சன்ஸ் டெனிஸ் குமார் - டாக்டர் விமலா பெருமாள் தயாரிப்பில், புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. 'வெடிகுண்டு பசங்க' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, வீடு புரடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை, பண்டார் பூச்சோங் ஸ்ரீ சீனிவாசா பெருமாள் ஆலயத்தில் இன்று நடைபெற்றது.

 

தங்களின் அடுத்த படத்தின்  தலைப்பில் 'பசங்க' என்ற வார்த்தை இடம்பெறாது என, அண்மையில் தயாரிப்பாளர் டாக்டர் விமலா பெருமாள் அறிவித்திருந்தார். எனவே தற்போது தயாராகும் புதிய படத்திற்கு 'தமிழ் ஸ்கூல்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.  தமிழ்ப் பள்ளிக்கும் இத்திரைப்படத்திற்கும் நிச்சயம் கதையில் தொடர்பு இருக்கும். ஒரு நல்ல கருத்தை திரைப்படத்தின் வயிலாகக் கூற விரும்புகிறார்கள் என்பது தலைப்பை வைத்தே தெரிகிறது.

'வசூல் நாயகன்' டெனிஸ் குமார்  இத்திரைப்படத்தின் நாயகன். இவரைச் சுட்டி நாயகனாக, காதல் இளைஞனாக நாம் பார்த்து ரசித்தோம். இனி ஒரு மாஸ் ஹீரோவாக, இவர் வலம் வருவாரா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இம்முறை பல புதிய கூட்டணி டெனிஸ் குமாருடன் இணைகிறார்கள். இது அவரின் ரசிகர்களுக்குப் புதிய எதிர்பார்ப்பை நிச்சயம் தரும்.

முதல் முறையாக டெனிஸ் குமாரை வைத்து இயக்கவுள்ளார் இயக்குனர் ஷான். எனவே எதிர்பார்ப்பு இன்னும் கூடியுள்ளது. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. திரைக்கதையும் அசத்தலாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

டெனிஸ் குமார் திரைப்படத்தைப் பொருத்தவரை, இசை எப்போதும் தூக்கலாகவே இருக்கும். எப்போதும் அதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இம்முறை  இசை அமைப்பாளர் ஷாமேசனின் மெட்டுக்கள் இத்திரைப்படத்திற்கு மெருகேற்றுமா என்பதைக் காத்திருந்து ரசிப்போம்.

டெனிஸ் குமாரின் ஜோடி யார் என்பதே அண்மைய பரபரப்பாக இருந்தது. பட பூஜைக்கு முன்னரே தன்னோட ஜோடி இம்முறை புதிய நாயகிதான் என அறிவித்திருந்தார் டெனிஸ். அதே போல், இப்படத்தின் நாயகியாக வித்யா லீயானா டெனிஸ் குமாருடன் இணைகிறார்.

டெனிஸ் குமாரின் இந்தப் புதிய கூட்டணி, ஒரு வித்தியாசமான மேஜிக்கை வழங்குமா? ரசிகர்களின்  இதயத்தில் இடம்பிடிப்பாரா வித்யா?

டெனிஸ் - சங்கீதா இருவரின் கூட்டணியை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். அதை மறக்கடிப்பாரா வித்யா?  - காத்திருப்போம்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எப்படி சூரியோ, அப்படித்தான் டெனிஸ் குமாருக்கு டேவிட் அந்தோணி. இவர்கள் இருவரின் கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது இப்படத்தில்.

பென் -ஜி, யாஸ்மின் நடியா ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.

யாஸ்மின் நடியா என்ன மாதிரியான கதாப்பாத்திரத்தை ஏற்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் சற்றுச் சுவாரஸ்யம்தான்.

'தமிழ் ஸ்கூல்' திரைப்படம்  சமுதாயத்திற்கு என்ன சொல்லப் போகிறது? டெனிஸ் குமார்  தனது ரசிகர்களுக்கு என்ன சொல்லப் போகிறார்? 'வெடிகுண்டு பசங்க' வெற்றிக்குப் பிறகு, அவரது அடுத்த படமான 'தமிழ் ஸ்கூல்' எப்படி இருக்கும் என ஆவலோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்!

 

விளம்பரம்:

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூலை-2

'வெடிகுண்டு பசங்க' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, புதிய கூட்டணியில் அடுத்த படத்திற்குத் தயாராகிவிட்டார் வசூல் நாயகன் டெனிஸ் குமார்.

இதற்கு முன் மைக்கல் ஜாஸ்மின், சங்கீதாவுடன் டூயட் பாடிய டெனிஸ், தற்போது புதிய கதாநாயகியுடன்  இணையவிருக்கிறார். படத்தின் தலைப்பு 'தமிழ்' என்ற வார்த்தையில் தொடங்கும் என்றும், அதைக் கொஞ்சம் கண்டுபிடியுங்களேன் என்றும் சஸ்பென்ஸ் வைக்கும் டெனிஸ் குமார், எதிர்வரும் ஜூலை 5-ஆம் தேதி நடக்கவிருக்கும் படபூஜையில்  படத்தின் தலைப்பு முழுமையாக வெளியிடப்படும் என்கிறார். மலேசிய சினிமா உலகத்திற்கு படத்தின் தலைப்பு ஓரளவு தெரியும். ஆனால் நாயகிதான் யார்? என்று எல்லாரும் ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.  மேலும், டெனிஸ் கூட்டணியில் இணையும் இயக்குனரும் புதியவர் என்று கூறுகின்றனர்.

யார் அந்தப் புதிய நாயகி? உங்களுக்குத் தெரியுமா? கண்டுபிடியுங்கள் எனக் கூறுகிறார்  டெனிஸ் குமார்!

கோலாலம்பூர் ஜூலை 2-

'பரமபதம்' ஒரு கலைஞனின் மாறுபட்ட படைப்பு.

விக்னேஷ் பிரபு இயக்கத்தில், முனைவர் லட்ச பிரபு, முனைவர் சக்கரவர்த்தி இணைந்து, சாய் நந்தினி  நிறுவனத்தின்  தயாரிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் 'பரமபதம்'.

சரித்திரப் புகழ் மிக்க கெடா மாநில மண்ணின் மைந்தன் எடுக்கும் இத்திரைப்படத்தில், சரித்திர விளையாட்டுதான் படத்தின் உயிரோட்டம்.

‘பரமபத’த்தின் 2-வது டீசர் அண்மையில் தலைநகரில்  வெளியிடு கண்டது. படத்தின் இயக்குனர் விக்னேஷ் பிரபு சொன்னது போல், சில காட்சிகள்  ஒரு வித்தியாசமான தளத்தில், சரிதிரப்பூர்வமான இடங்களில் காட்சியமைக்கப் பட்டுள்ளன.

4 இளைஞர்கள் காட்சியில் வருகிறார்கள்

இவர்கள் யார்? கேமராவை வைத்துக்கொண்டு காட்டுக்கு நடுவே,  ஆர்.எஸ்.சி  என்று  பெயர் பதித்த பழமை வாய்ந்த கட்டடதிற்கு எதற்கு நுழைகிறார்கள்? அவர் கையில் எப்படி பழைமைவாய்ந்த 'பரமபதம்' கிடைத்தது? இது எந்தக் காலத்தில் யாரால் உபயோகிக்கப்பட்டது?  இது ஏன் இவர்களுக்குக் கிடைத்தது? இதை  விளையாடினால் இவர்கள் வாழ்க்கையில் என்னென்ன திருப்புமுனை பிறக்கும்? உண்மையில் இந்தப் 'பரமபத'த்தின் ரகசியம் யாருக்கு தெரியும்?  இதை யார்- யார் தேடுகிறார்கள்? ஏன் தேடுகிறார்கள்? இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? வஜ்ரா என்பவர் யார்? அவருக்கும் 'பரமபத'த்திற்கும் என்ன சம்பந்தம்? இப்படிப் பல கேள்விகளை இந்த இரண்டாவது டீசரில் நம் மனதில் பதியவைத்துள்ளார் இயக்குனர்.

திடீர் என்று பென் ஜி ஒரு நூலகத்தில் இருப்பதுபோல் அல்லது அறிவியல் கூடத்தில் இருப்பதுபோல் ஒரு காட்சி வருகிறது. அவரது உடையை வைத்துப் பார்க்கும்போது, ஒரு படித்த முனைவர் போல் காட்சியளிக்கிறார். இவருக்கும் 'பரமபத'த்திற்கும் என்ன சம்பந்தம்? ஆர். எஸ் .சி (என்ற) எழுத்து நமக்கு என்ன சொல்ல வருகிறது?

சோழ  சாம்ராஜ்யமா? இல்லை வேறு ஒரு குறியீடா?

இவை அனைத்திற்கும் இவ்வாண்டு வெளியாகவிருக்கும்

'பரமபதம்' விடைகொடுக்கும் காத்திருங்கள்!

 

கோலாலம்பூர் ஜூலை -2

மலேசியாவில் தீவிர ரசிகர்களைக் கொண்டவர் பாடகர் திலிப் வர்மன். தனது அற்புதமான குரல் வளத்தால், சுமார் 16 ஆண்டுகள் மக்கள் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கிறார் இவர்.

அண்மையில், இவரின் 'கண்மணி என் கண்மணி' என்ற 100 -வது பாடல் பெட்டாலிங் ஜெயா புத்ரா இந்தெர்லெக் இண்டர்நேஷனல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் அறிமுகம் கண்டது.

டாக்டர் அண்ணாதுரை தயாரிப்பில் வெளியிடப்பட்ட இப்பாடலின் வரிகளை எழுதியவர் டாக்டர் அண்ணாதுரை.

'கண்மனி என் கண்மணி, பாடல் புத்ரா இந்தெர்லெக் கல்லூரியில் அறிமுகம் கண்டதன் நோக்கம்,

இக்கல்லூரி மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள  வேண்டும் என்பதே அக்கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் பரதனின் எண்ணம். மாணவர்களுக்கு இசைக் கல்வியை நிச்சயம் வழங்குவேன்.  அதை திலிப் வர்மன், அசோகன், டாக்டர் அண்ணாதுரை, புவனேஸ்வரன் போன்றவர்களைக் கொண்டு  நடத்துவேன். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன். நிச்சயம் நல்ல பதிலுடன் இக்கல்லூரி மாணவர்களுக்கு இசைக் கல்வி வழங்குவேன் என டாக்டர் பரதம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சில மாணவர்கள்  பாடல்களைப் பாடி, தங்களது திறமைகளை வெளிப்படுத்திய வேளையில், அம்மாணவர்களுக்கு, தங்கள் நிறுவனத்தின் அடுத்த வெளியீட்டில் வாய்ப்பு வழங்குவதாக புவனேஸ்வரன் மற்றும் அசோகன் நம்பிக்கை தெரிவித்தனர்!

டத்தோ ஹெத்தியின் AT மூவீஸ் தயாரிப்பில், லோகன் இயக்கத்தில், சரேஷ் - லதா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'அழகிய தீ'. முழுக்க முழுக்க மலேசியக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம், கடந்த 27-ஆம் தேதி மலேசியத் திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ளது.

இப்படம் குறித்து அண்மையில் வீடியோ பதிவொன்றில் இப்படத்தின் தயாரிப்பாளர் டத்தோ ஹெத்தி தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து இரண்டு படங்கள் வெளியாகியிருக்கிறது, இந்த நேரத்தில் 'அழகிய தீ' வந்திருக்கிறதே என்று டத்தோ ஹெத்தியிடம் ஒருவர் கேட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கணொளியை வெளியிட்டுள்ளார்.
எந்தப் படங்கள் வந்தால் என்ன? 'அழகிய தீ' நம்ம நாட்டுப் படம். முழுக்க முழுக்க எல்லாருமே மலேசியக் கலைஞர்கள்தான். நம்ம நாட்டு பொருளுக்கு நம்ம மக்கள் ஆதரவு கொடுக்க மாட்டார்களா?
இன்னொரு நாட்டு கதை, இன்னொரு நாட்டு படத்திற்கு இருக்கும் ஆதரவு, நம்ம நாட்டுப் படங்களுக்கு இல்லாதது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. நம்ம கலைஞர்கள், நம்ம சினிமா, நம்ம வாழ்வியல் சொல்லும் கதை 'அழகிய தீ'. எனவே மக்கள் நம்ம நாட்டுப் படத்துக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என டத்தோ ஹெத்தி தெரிவித்துள்ளார்!

 

வெற்றி விக்டர்

கோலாலம்பூர் ஜூன் 21-

மலேசியாவில் முதல்முறையாக பழங்காலத்து விளையாட்டான பரமபதத்தைக் கருவாகக் கொண்டு ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் பிரபு இயக்கத்தில், வெளியாகவிருக்கும்  இத்திரைப்படம் ஒரு சரித்திரப்படமல்ல என்றாலும், சுமார் 20,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பரமபதத்தைத் தொட்டவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான்  படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், மலேசியாவில் உள்ள பல சரித்திரப்பூர்வமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

கடினமான முயற்சிக்குப் பிறகு,  சரித்திர மர்மம் வாய்ந்த இடங்களில் காட்சியமைக்க  அனுமதி பெற்று இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக, இத்திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஸ் பிரபு தெரிவித்தார்.

நாளை (சனிக்கிழமை)  உலு கிள்ளான்  ஃபினாஸ் மண்டபத்தில்,  மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிக்குள் 'பரமபதம்' திரைப்படத்தின்  இரண்டாவது டீசர் வெளியிடப்படவிருக்கிறது. மலேசியக் கலைஞர் ரேபிட் மேக்  தலைமையில் இந்த டீசர் வெளியாகிறது.

'பரமபதம்' இதைத் தொடர்ந்து ஆராய்வோம்...

அதற்கு முன்,

நாளை அதன் இரண்டாவது டீசரைக் காணத் தவறாதீர்கள்.

தைரியம் இருந்தால் தயராகுங்கள் பகடையை உருட்ட...

'பரமபதம்' விரைவில் திரையில் விளையாடும்!

கோலாலம்பூர் ஜூன் 12-

மலேசியக் கலைத் துறையில் நடிப்பு இயக்கம், இசை, தயாரிப்பு எனப் பல துறைகளைச் சார்ந்த சங்கங்கள் உள்ளன.

இப்படித் தனித் தனியாக உள்ள பல இயக்கங்கள் ஒன்றாய் ஒருங்கிணைந்தால், அது கலைத் துறைக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.

அந்த வகையில் சுமார் பத்து இயக்கங்களின் கூட்டமைப்பில் உதயமாகியுள்ள  'மைஃபேம் பெடரேஷன்' கலைஞர்களின் நலனைக் காக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக, அவ்வியக்கத்தின் செயலாளர் காந்திபென் தெரிவித்தார்.

இவ்வியக்கம் கலைஞர்களின் குரலாக விளங்கும் என்றும், கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் எதிர்பார்ப்பு, கோரிக்கைகளை அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்ல இவ்வியக்கம் பாடுபடும் எனவும் காந்திபென் தெரிவித்தார்.

இவ்வியக்கத்தின் தலைவர் கவிமாறன் கலைத் துறைக்காகவும், கலைஞர்களின் முன்னெற்றத்திற்காகவும் பல திட்டங்களை வைத்துள்ளார். அந்த வகையில் அவர் தற்போது சவாலாகக் கையில் எடுத்துள்ள ஒரு திட்டம், இவ்வியக்கத்திற்காக ஒரு கட்டடம் வாங்க வேண்டும் என்பதுதான். கலைஞர்களுக்கு என்று ஒரு சொந்தக் கட்டடம் இருந்தால், அது பல வகையில் கலைஞர்களுக்கு உதவியாகவும் பெருமையாகவும் இருக்கும். கலைத்துறை சார்ந்த கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகள் இந்தக் கட்டடத்தில் நடத்த வாய்ப்புப் பிறக்கும். இன்னும் சில பட்டறைகளை நடத்தவும் வசதியாக இருக்கும்.

ஆகையால் சங்கத்தின் தலைவர் கவிமாறன், இவ்வியக்கத்திற்காக ஒரு சொந்தக் கட்டடம் வாங்கியதும்,  தனது அறுபதாம் கல்யாணத்தை நடத்தவிருப்பதாக கங்கணம் கட்டியுள்ளார் என காந்திபென் தெரிவித்தார்.  

நடிகர் விஷால் போல் கவிமாறனும் இப்போது ஓர் இலக்கை முன் நிறுத்தி, கட்டடம் வாங்கிய பிறகு, தனது அறுபதாம் கல்யாணத்தை நடத்தப்போவதாக காந்தி பென் தெரிவித்தார்!

(வெற்றி விக்டர்)

பெட்டாலிங் ஜெயா- 10

மிம்டா எனப்படும் மலேசிய இந்திய திரைப்பட இயக்குனர் சங்கத்தின் ஏற்பாட்டில், 'மலேசிய நட்சத்திரங்களுடன் ஒரு மாலை பொழுது'  கலைநிகழ்ச்சி, பெட்டாலிங் ஜெயா கிரிஸ்டல் கிராவ்ன் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தகவல் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ  தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர் ஓம்ஸ் தியாகராஜன், மனித நேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் ஆகியோருடன் இன்னும் சில தயாரிப்பு நிறுவன இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.

அவ்வியக்கத்தின் தலைவரான  காந்திபென் @ பென் ஜி அமைச்சர் முன்னிலையில் கலைஞர்களுக்காக  மூன்று கோரிக்கைகளை முன் வைத்தார்.

கலைஞர்களுக்கு இலவச மருத்துவ அட்டை வழங்க வேண்டும் என்பதே எங்கள் முதல் கோரிக்கை.

இங்கு பலர் நினைப்பது போல், மலேசிய இந்திய கலைஞர்கள் சொகுசாக வாழவில்லை. இ.பி.எஃப் சொக்சோ கூட இல்லாமல்தான் வாழ்கிறோம். ஆகையால் மூத்தக் கலைஞர்களுக்கு  வீடுகள் வழங்கப்பட வேண்டும். அது இலவசமாகவோ அல்லது மளிவு விலையிலோ இருந்தால் நல்லது. காரணம் கலைத்துறையை மட்டுமே நம்பியுள்ள கலைஞர்களுக்கு, மாதம் வருமானம் என்ற ஒன்று இல்லை.  இ.பி.எஃப் ,சொக்சோ கிடையாது என்பதால், கடன் உதவி கிடைப்பதிலும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதனை அமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டும் என பென்ஜி தெரிவித்தார்.

மூன்றாவது கோரிக்கையாக,  எங்கோ உள்ள இந்திய நாட்டுக் கலைஞர்களுக்கு கிடைக்கும் டத்தோ விருது அங்கீகாரம், உள்நாட்டுக் கலைஞர்களுக்கு அதுவும் கலைத்துறையில் நீண்டகாலம் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும்  எனவும் அமைச்சர் கோபிந் சிங் முன்னிலையில் கோரிக்கை வைத்தார் காந்தி பென்.

அமைச்சர் கோபிந்த் சிங் தமது சிறப்புரையில், எங்கள் அமைச்சின் கீழ் உள்ள இத்துறையை நிச்சயம் கவனத்தில் கொள்வோம். அடுத்த தலைமுறை எளிதாக வாழ இத்துறையை அடுத்த நிலைக்கு நகர்த்தும் எல்லா முயற்சிகளும்  ஃபினாஸ் வழி இப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும். குறிப்பாக இலவச மருத்துவ அட்டை மற்றும் கலைஞர்களுக்கு இ.பி.எஃப், சொக்சோ தொடர்பான நல்ல செய்தியும் உண்டு.

அதே சமயம் கலைஞர்கள் வீடு வாங்க சிரமப்படும் பிரச்னை, கவனிக்கப்படவேண்டிய பிரச்னை. அதற்கும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நம்பிக்கை தெரிவித்தார். நல்ல தகவல்களை என்னோடு பகிருங்கள். கலைஞர்களுக்கு வேண்டியதை, நல்ல விஷயங்களைக் கண்டிப்பாக நான் சீர் தூக்கிப் பார்ப்பேன். கலைத்துறைக்குச் சேவை செய்யும் நம் நாட்டுக் கலைஞர்கள்  கண்டிப்பாக கௌரவிக்கப்படவேண்டும் என அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்!

(வெற்றி விக்டர்)

பெட்டாலிங் ஜெயா ஜூன் -11

மலேசிய இந்திய திரைப்பட இயக்குனர் சங்கத்தின் கலை நிகழ்ச்சிக்கு வருகை அளித்த மனிதநேய  மாமனி ரத்னவள்ளி அம்மையார் கலைஞர்களுக்கு உதவி செய்தே தாம் ஓய்ந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இந்நாட்டில் உள்ள கலைஞர்கள் திறமைசாலிகள்தான். வாய்ப்பும், முறையான பண வசதியும், வருமானமும் இருந்தால் நம் கலைஞர்கள் கொடிகட்டிப் பறப்பார்கள். என்னைப் போன்று அல்லது தொழிலதிபர் ஒம்ஸ் தியாகராஜன் போன்றவர்களின் உதவி அவர்களுக்குத் தேவைப்படாது.

ஆனால் இங்குச் சூழலோ வேறு. அதனால் என்னை நாடி உதவி கேட்கும் கலைஞர்களுக்கு என் சொந்தப் பணத்தைக் கொடுத்து ஓய்ந்துவிட்டேன்.

அமைச்சர் கோபிந்த் சிங் நம் நாட்டுக் கலைஞர்களுக்கு நல்லது செய்வேன் என வாக்குறுதி அளித்துள்ளார். மகிழ்ச்சியாக உள்ளது. கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த சில நடவடிக்கைகளை அமைச்சர் செய்யவேண்டும் என ரத்னவள்ளி அம்மையார் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவிற்கு அதிகமான  இந்திய கலைஞர்கள் வருகிறார்கள்; கலை நிகழ்ச்சிகள் செய்கிறார்கள்; வருமானம் ஈட்டிச் செல்கிறார்கள்.  எனக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்த வாய்ப்பை உள்ளூர்க் கலைஞர்களுக்கு வழங்கினால் நல்லது என ரத்னாவள்ளி அம்மையார்  கூறியதும், அரங்க. அதிர எழுந்தது கரகோசம். அந்தக் கரகோச அலை ஓய்வதற்குள், உள்ளுர்க் கலைஞர்கள் மீது ஓர் அம்பை வீசினார் அம்மையார்.

இப்போது கைதட்டுவீர்கள், இந்திய கலைஞர்கள் வந்தவுடன், அவர்களிடம் புகைப்படம் எடுக்க அலைமோதுவீர்கள் என ரத்னவள்ளி அம்மையார் நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

உள்நாட்டுக் கலைஞரோ, வெளிநாட்டுக் கலைஞரோ இருவரும் கலைஞர்கள்கள்தான். எனவே நம்ம கலைஞர்கள் புகைப்படம் எடுக்க அலைமோதாதீர்கள். அவர்கள் தரத்திற்கு உங்களை நினைத்து கெத்தாக இருங்கள் என ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்தார்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே- 25

நம் நாட்டின் தமிழ் சினிமா வெளி என்பது மிக மிகக் குறுகியது. அதிலும் கலைஞர்களைப் பொறுத்தவரை மீண்டும் மீண்டும் ஒரே முகங்கள்தான் திரையில் மின்னுகிறார்கள். 
மலேசியத் தமிழ் சினிமாவிற்கான வரவேற்பும் நம் மக்களிடையே குறைவாகத்தான் உள்ளது. நம் நாட்டுச் சிறந்த படங்கள் கூட தோல்வியைத் தழுவும் அவலமும், தமிழ் நாட்டு மொக்கை படங்கள் கூட லாபம் பார்க்கும் வேடிக்கையும் இங்கேதான் நிகழ்கிறது.
இந்நிலையில் நம்ம கலைஞர்களையாவது அங்கீகரித்து, விருதுகள் மூலம் அவர்கள் திறமையை அடையாளம் காட்டுவோம் என்கிற நோக்கில்தான் மிக்கா விருது தொடங்கப்பட்டது.

இதற்கு முன் இப்படி ஒரு விருது நம் கலைஞர்களுக்கு வழங்கப்படவில்லை. பல வருடங்களாக, பல ஏக்கங்களுடன் இருந்த கலைஞர்களுக்கு இப்படி ஒரு விருது கையில் கிடைப்பது, ஈன்றேடுத்த பிள்ளையை முதன்முதலாகக் கையில் தாங்கும் சந்தோஷத்திற்குச் சமம்.

இங்கு ஏக்கத்தோடு காத்திருக்கும் கலைஞர்களுக்கு இவ்விருதுகள் ஒரு வழியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இருந்தபோதும், இந்த விருதுகள் வழங்குவது குறித்து சலசலப்புக்கும் நம்மிடையே பஞ்சமில்லை. வேண்டியவர்களுக்கு மட்டுமே விருது வழங்குகிறார்கள் என்கிற கசப்பும் இங்கே உண்டு.
அவ்வகையில் இவ்வாண்டும் மிக்கா 2019 விருது விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது அண்மையில்.

இருந்தபோதும், மிக்கா விருதுக்குத் தகுதியானவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?
மிக்கா விருதிற்கான நீதிபதிகள் யார்? போன்ற  கேள்விகள் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, வருங்காலங்களில் விருதுகளுக்கான திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு முன், அதன் நீதிபதிகளை வெளிப்படையாக அறிவிப்பதே இதற்குச் சரியான தீர்வாக இருக்கும்.

திரைக்கு வந்த படங்கள் - கலைஞர்களை  எந்தச் சாராம்சத்தில் நீதிபதிகள்  விருது பட்டியலுக்குத் தேர்வு செய்துள்ளனர் எனபதையும் ரசிகர்களுக்கு விளக்குங்கள் .

நீதிபதி மற்றும் மக்கள் வாக்கெடுப்பில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுங்கள். 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு'. அது திரைப்படமோ தொலைக்காட்சி டெலி மூவியோ எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். நடுவர் - மக்கள் ஆகியோரின் தேர்வில் விருது வழங்கப்படவேண்டும்.

காரணம், விருது வழங்குவதில் அரசியல் நடப்பதாகச் சொல்கிறார்கள். வரும் காலங்களில் ஏற்பாட்டுக் குழுவினர் இந்தப் பொறுப்பை நீதிபதி மற்றும் ரசிகர்களிடம் வெளிப்படையாகவே விட்டு விடுங்கள்.

அதோடு, நீதிபதிகள் அலசி  ஆராய்வதற்கு முன், உதாரணத்திற்கு 2019  முதல் அடுத்த விருது அறிவிப்பு வரை வந்த அனைத்து திரைப்படங்கள், டெலிமுவீகளைப்  பட்டியல் இட்டு, மக்கள் மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துங்கள்.
மக்கள் தேர்ந்தெடுத்த சிறந்த 10 வரிசையில் உள்ள திரைப்படங்களையும், டெலிமூவீகளையும் விருதின் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, நீதிபதிகள் தங்கள் ஆய்வுப் பணிகளைத் தொடங்கலாம்.
உள்ளே நுழைந்த சிறந்த பத்து படைப்பை ஆய்வு செய்வதன் மூலம், விருது தேர்வுக்குரிய படைப்புகளையும் இதன் மூலம் கண்டறியலாம்.

இப்படி எல்லாப்
பிரிவுகளும் மக்கள் மற்றும் நீதிபதிகளின் வெளிப்படையான தலையீட்டில் இருந்தால், யாரும் குறைசொல்ல முடியாது. அடுத்த முறை மக்களைக் கவர்வதற்கான முயற்சிகளை கலைஞர்கள் தங்களின் படைப்பின் வழி எடுப்பதற்கும் இது வழியாக அமையும்.

இம்முறை விருது பெற்றவர்களில், தகுதியானவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு  வாழ்த்துகள். அதேபோல் விருது பெறத் தகுதியான பல படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டும் உள்ளனர்.
முடிந்ததைப் பற்றிப் பேசி எந்தப் பயனும் இல்லை. ஆனால் இனி நடக்கும் அனைத்தும், வெளிப்படையாக எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், அரசியல் தலையீடு இல்லாமல் நடக்கவேண்டும்.

அரசியல் தலையீடு எல்லாம் இல்லை என்று சிலர் கொந்தளிப்பார்கள். அதற்கான நியாயம் கற்பிப்பார்கள்.
உண்மையில் அரசியல் நடந்ததா? இல்லையா? என்பது அவர்கள் மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும்.
உங்களின் சிறந்த முயற்சிக்குப் பாராட்டுகள். அதே நேரத்தில் விருதுகளின் தரமும், விருது வழங்கும் நீங்களும் சத்தியத்தின் பக்கம் நின்று விருதுகளைக் கௌரவியுங்கள்.
மிக்கா விருது என்றால் அது தரமான விருது என்று அனைவரும் சொல்லட்டும்!

(வெற்றி விக்டர்)

கிள்ளான் மே 24-

‘இம்மோர்டல் புரடக்சன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய இயக்குனர் எஸ்.பி ஸ்ரீ காந்த் இயக்கத்தில் இரண்டு புதிய கதாநாயகர்கள் அறிமுகம் காண இருக்கும் திரைப்படம் ‘உனக்காகத்தானே’.

மலேசியத் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை  பெரும்பாலான படங்களில் வழக்கமான அதே நட்சத்திரங்கள், அதே டி.வி  - வானொலி நடிகர்கள்தான் முகம் காட்டுகிறார்கள்.  மலேசியத் தமிழ் சினிமா இப்படித்தான் இயங்குமா?  என்ற குரல் எப்போதும் எழுந்து கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம்  திறமை இருந்தும் அதற்கான களம் அமையாமல், வெளியே காத்திருக்கும் திறமையான கலைஞர்களால் உண்டான ஆதங்கம்தான்.

மூத்த கலைஞர்களும் வாழ வேண்டும். அதே சமையத்தில் புதிய கலைஞர்களும் உருவாக வேண்டும்.  அப்போதுதான் மலேசியத் தமிழ் சினிமா உருப்படும். அந்த வகையில் கடந்த இரு வருடங்களாகப் புதிய முகங்கள் நடிக்கும் படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதே சமயம் புதியவர்களை முடக்கவும் அரசியல் நடக்கிறது. இந்த சினிமா உலகம் யாருடைய சொத்தும் கிடையாது. இன்னும் எளிமையாகச் சொன்னால் சினிமா உலகம் சென்ட்ரியான் பெர்ஹாட் கிடையாது.

அந்த வகையில் ‘உனக்காகத்தானே’ திரைப்படதிற்காக  ஆடிஷன் வைத்து புதிய முகங்களைத் தேந்தெடுத்துள்ளனர் படக் குழுவினர்.  கதையின் நாயகர்களையும் ஆடிசன் வைத்துதான் தேர்வு செய்துள்ளனர்.  இதன் வழி புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கும் ‘இம்மோர்ட்டல்’ நிறுவனத்தின் இயக்குனர் கோகிலவாணிக்கும், தயாரிப்புக் குழுவினருக்கும் வாழ்த்துகள் .

சிவசங்கர் , ராஜேந்திரன் என்ற இரு புதுமுகங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து கதையையும் காதாப்பாத்திரத்தையும் நம்பி,  அறிமுக இயக்குனர் எஸ்.பி.ஸ்ரீகாந்த்  ‘உனக்காகத்தானே’ திரைப்படத்தின் வாயிலாக என்னதான் சொல்லபோகிறார்?  என்கிற தேடல் உருவாகியுள்ளது

புதியவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் , படம் தரமாக இருக்குமா? எப்படி சினிமா அனுபவம் இல்லாமல் திரை உலகில் நுழைகிறார்கள்?  போன்ற விமர்சனங்கள் இனி வரும். அதோடு இது தேறாது என்ற வாடிக்கையான வசனமும் இடம்பெறும். அதையும் தாண்டி  இந்தப் புதிய குழுவின்  இணைப்பில் வெளியாகவிருக்கும் ‘உனக்காகத்தானே’ திரைப்படம் மக்கள் மனதைத் தொட்டால், அதுவே மலேசியத் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாதையை உருவாக்கும். திறமையானவர்கள் அறிமுகமாக புதிய களமாகவும் இது அமையும்.

ரசிகர்களுக்கு இப்படி ஒரு திரைப்படம் வரவிருக்கிறது என்பதைக் கொண்டு சேர்க்கவே ‘இது தேறாது’ என்ற தலைப்பில் உங்கள் கவனத்தை இந்தப் புதியவர்கள் பக்கம் திருப்பினோம் . இங்கு நல்லதை  நல்லாச் சொன்னா எஙகப்பா  ரீச் ஆகுது? அதான் தலைப்பில் கொஞ்சம் சர்ச்சையைக் கிளப்பினேன் .

புதிய இயக்குனர், புதிய நாயகர்கள், பிரபலமான நாயகி யாஸ்மின் நடியா இவருக்கு ஜோடியாக இந்த இருவரில் யார்?  என்ற கேள்வியும் உண்டு.

அதோடு  130 கலைஞர்கள், 30 தொழில்நுட்பக்கலைஞர்கள், புதிய நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி, பெரிய பொருள்செலவில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்திற்கு, ஜித்திஸ் இசை அமைக்க, தீலீப் வர்மன் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

இப்படி ஒரு மெகா கூட்டணியில் இவ்வாண்டு திரைக்கு வரவிருக்கும் இப்படம்,  புதியவர் என்ற காரணத்தினால் ஒரே வரியில் ‘தேறாது’ என்று யாரும் எண்ணிவிடக்கூடாது என்பதற்காக, இந்தக் குழு யார் என்பதை ரசிகர்கள் அறிந்துகொள்ள, தலைப்பின் வழி உங்கள் பார்வையை இவர்கள் மீது திருப்பி, இந்தப் புதிய கலைஞர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். இத்திரைப்படம்  செப்டம்பரில் திரைகாணவிருக்கிறது.

‘உனக்காகத்தானே’ என்கிற இந்தப் புதிய முயற்சி, புதிய தேடலுக்கு புதிய எதிர்பார்ப்போடு ஆதரவு கொடுக்கக் காத்திருப்போம்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே 13-

"மலேசியத் திரைப்படம் என்பதற்காகத் தரமில்லாத படங்களை உயர்வாகப் பேசி 100 புள்ளிகள் வழங்கும் வகையில், ஊடகங்களின் செய்திகளும் இருந்தால் மலேசியத் திரைப்படத்தின் தரத்தை எதிர்பார்க்க முடியாது. தரமான படத்திற்கு  ஆதரவு வழங்க வேண்டும், தமிழ்நாட்டில்  'ஆனந்த விகடன்' போன்ற இதழ்கள் தரத்திற்கு முக்கியத்துவம் வாழங்குவார்கள்.... யார் நடித்தது? யார் இயக்கியது? என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். தரமே முக்கியம் என்பதுபோல் அவர்களது திரை விமர்சனம் இருக்கும். இந்த நடைமுறையை மலேசிய ஊடங்கள் பின்பற்ற வேண்டும்" என்று 'ஒரு கதை சொல்லட்டா சார்' திரைப்படத்தின் முன்னோட்ட  அறிமுக விழாவில் 'மண்ணின் மைந்தன்' கூறியுள்ளார்.

டி.ராஜேந்தர் போல், மலேசியாவில் கதை திரைக்கதை, வசனம், இயக்கம் நடிப்பு, தயாரிப்பு என அனைத்திலும் கைதேர்ந்த மலேசியக் கலைஞரான சி.கே எனும் சி.குமரேசன் இப்படியான கருத்தினை வெளியிட்டுள்ளார்.

'ஒரு கதை சொல்லட்டா சார்' நிகழ்ச்சியில் ஒரு கதையைச் சொன்ன தங்களுக்கு,
நான் ஒரு கதையைச் சொல்லட்டா மிஸ்டர் சி.கே சார்?
என் பெயர் வெற்றி விக்டர். ஞாபகம் இருக்கிறதா?  நீங்கள் உட்பட மலேசியக் கலை உலகில் பலருக்கும் என் பெயர் தெரியும், ஆனால், என்னைத் தெரியாது . காரணம் நான் மலேசியக் கலைஞர்களின்  திறமையைப் பார்த்தேன், ரசித்தேன், இன்னும் ரசிப்பேன், அவர்களை ஆய்வு செய்வேன்,  கட்டுரை எழுதுவேன் அவ்வளவுதான்.
கலைஞர்களின் திறமை பற்றி ஒரு கட்டுரை வரும்போது, அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி  பிறக்கும். நான் எழுதிய கட்டுரையின் நட்சத்திரங்கள் முகநூலில் அந்தக் கட்டுரையைப் போட்டு நன்றி சொல்வார்கள். இவ்வளவுதான் எனக்கும், கலைஞர்களுக்கும் உள்ள உறவு. அதில் நீஙகளும் ஒருவர்தான். இதைத் தைரியமாக நான் எழுதுவதற்குக்  காரணம், கலைத்துறையினரிடம் விசாரியுங்கள் உண்மை வெளிப்படும்  சி.கே சார்.

இன்னொரு கதை சொல்லட்டா  சி.கே சார். '2014 ஆகஸ்ட் மாதம்  நடிகர்  சூர்யாவின் திரைப்படம் வெளிவந்தபோது, ''மைந்தன்' என்ற ஒரு மலேசியக் கலைஞனின் படம் திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் போய் அப்படத்தைப் பார்க்கவேண்டும். மலேசியக் கலைஞர்களை அடுத்தக் கட்ட நிலைக்குத் திரை உலகில் கால் பதிக்க வைக்கும் படம். நம் மக்களின் ஆதரவு இல்லை எனில், படத்தைத் திரையரங்கில் இருந்து எடுத்து விடுவார்கள். மலேசியக் கலைஞருக்கு ஆதரவு கொடுங்க' என்று அப்படத்தைப் பற்றி விமர்சனம் எழுதியிருந்தேன். அப்படித் தவறாக எழுதியதற்கு மன்னித்து விடுங்கள் மிஸ்டர் சி.கே. அன்று நாங்களும் 'ஆனந்த விகடன்' போல் நடந்திருக்க வேண்டும். அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்

இப்படி ஒவ்வொரு கலைஞனின் படைப்புகளும் திரை அரங்கில் இருந்து எடுக்கப்படும் அபாயம் ஏற்படும்போது, மக்களே நம் கலைஞர்களுக்குத் தோள் கொடுங்கள் என்று எழுதியதற்கு மன்னிக்கவும். 

நாங்கள் கண்டிப்புடன் திரை விமர்சனத்தை எழுதியிருக்க வேண்டும் மன்னிக்கவும். 'மயக்க'மாக ஒரு பேய் படத்தை நீங்கள்  எடுத்தபோது, நம் நாட்டுக் கலைஞர் என்று மயங்காமல்,  உங்களின் அந்த  'மயங்காதே' திரைப்படத்திற்குத் தாங்கள் சொல்வது போல் திரை விமர்சனம் எழுதியிருக்கவேண்டும்... அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இனி திரை விமர்சனம் நீங்கள் சொன்னதுபோல் அனல் பறக்கும். அதையும் சொல்லிக் கொள்கிறேன் அன்புடன். இம்முறை வெளியே திறமையை வைத்துக்கொண்டு வாய்ப்புக் கிடைக்காமல் இருக்கும் நணபர்களுக்காகக் கொஞ்சம் பேசுவோம். முதலில் டி.வி பிரபலம், வானொலி பிரபலங்களை மையமாகக் கொண்டு திரை உலகம் செயல்படுவதைத் தவிர்க்கவும். ஆடிஷன் வைத்துத் திறமையைத் தேடுங்கள் .

யூடியூப்பில் 72 லட்சம் ரசிகர்களை ஈர்த்த முகேன் ராவ் என்ற கலைஞர், இப்ப உள்ள காலகட்டத்தில்  ஒரு  நாயகனுக்கான  சிறந்த தேர்வு. இதையும் அந்தக் கலைஞனை ஆய்வு செய்து வருவதால் நான் கூறுகிறேன். அவரிடமும் விசாரியுங்களேன். நிச்சயம் அவருக்கும் என்னைத் தெரியாது.காரணம்  பத்திரிகையாளருக்குப் படைப்புதான் முக்கியம். ஆனால்,  இது நீங்கள் மேடையில் சொன்ன படைப்பு கிடையாது. படம் தரமா? தரமில்லையா? என்பதைப் பார்க்கும் ரசிகர்கள் முடிவு செய்வார்கள்.  இங்கு ஒரு பத்திரிகையாளன் செய்யவேண்டிய கடமை, அத்திரைப்படத்தின் உழைப்பு, திரைக்குப் பின்னால் இருந்த வியர்வையை மக்களிடம் சேர்ப்பதுதான். அதைத்தான் இவ்வளவு காலம் செய்தோம், இத்துறை வாழவேண்டும் என்பதற்காக. படத்தைப் பற்றிய புள்ளிகளை ரசிகர்கள் தருவார்கள். அவர்கள் குறை நிறைகளை உள்வாங்கி  எந்த ஒரு கலைஞன் தன்னை செதுக்குகிறானோ அவரே வெற்றிக் கலைஞனாய் வலம் வருவார்.

அந்த வகையில் உங்கள் குற்றச்சாட்டை நான் ஏற்கிறேன். வளரும் கலைஞருக்கு, பிரபலமான கலைஞர்களின் படைப்புக்கு இனி நீங்கள் சொல்வதுபோல், 'ஆனந்த விகடன்' போல எழுத கண்டிப்பாக  முயற்சி செய்வேன்.

இனி திரைவிமர்சனம், மூத்தக் கலைஞர்களின் படைப்பு தொடர்பான விமர்சனம் எல்லாம் நிச்சயம் அனல் பறக்கும்!

மலேசிய உள்ளூர் படைப்புகளுக்குச் சிறந்த அங்கீகாரம் வழங்கும் நோக்கில், ‘மலேசிய இந்திய சினிமா விருது’ (மிகா) நிகழ்வு இவ்வாண்டும் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. 

அவ்வகையில், கடந்த ஆண்டு ஆஸ்ட்ரோ வானவில் தயாரிப்பில் வெளிவந்த ‘பினல் கோட் 302’, ‘காதல் நெஞ்சோடு’, ‘ரயில் பயணங்கள்’, ‘சாலை ஓரம்’, ‘வெவ்வேறு ரூபம்’ ஆகிய 5 தொலைக்காட்சி நாடகங்கள் ‘Astro Ulagam Most Popular’ எனும் பிரிவில், மிகா விருது விழாவில் போட்டியிடவுள்ளது.
இந்த 5 நாடகங்களில் ரசிகர்களின் விருப்ப  நாடகம் இப்பிரிவில் வெற்றி பெற வேண்டுமென்றால், www.astroulagam.com.my/mica-voting எனும் அகப்பக்கத்தை நாடி, மே 15-ஆம் தேதிக்குள் வாக்களிக்க வேண்டும்.
தற்போது ‘வெவ்வேறு ரூபம்’ நாடகம் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேல் விவரங்களை www.astroulagam.com.my அகப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் மே- 6

ஷைலா நாயர்- ஷாலினி பாலசுந்தரம் இரண்டு கதாநாயகிகளும் இணைந்து மோதப்போகும் திரைப்படம் 'புலனாய்வு.'

இத்திரைப்படத்தை டத்தின் ஸ்ரீ ஷைலா நாயர் தயாரிக்க, ஷாலினி பாலசுந்தரம் மற்றும் சதீஸ் நடராஜன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.

சசிதரன், கபில்,  ஷைலா நாயர், ஷாலினி பாலசுந்தரம், கீர்த்தி நாயர் இன்னும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் தலைப்பு அறிமுக விழா தலைநகரில் நடைபெற்றது . அஜெண்டா சூரியா இயக்குனர் ஜெகா ராவ் தலைமையில் இத்திரைப்படத்தின் தலைப்பு அறிமுகம் செய்யப்பட்டது.

முழுக்க முழுக்கக் குற்றப்புலனாய்வு சம்பந்தமான இத்திரைப்படத்தில், காதலுக்கும் இடமுண்டு. மாறுபட்ட வேடத்தில் ஷைலா நாயர் நடிக்கும் இப்படத்திற்கான திரைக்கதையை, பல சுவாரஸ்யங்களோடு அமைத்துள்ளாராம் ஷாலினி!

 

திறமையான படைப்பாளிகளை அடையாளம் கண்டு, அவர்களின் படைப்புகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில் ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி கடந்த 2009-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 

9-வது முறையாக நடைபெறவுள்ள இவ்வாண்டு ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டியில், 18 வயதுக்கு மேம்பட்ட மலேசியர்கள் கலந்துகொள்ளலாம். 13-15 நிமிடங்களுக்குள் ஒரு குறும்படத்தைத் தயாரிக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் ஆஸ்ட்ரோ உலகம் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடி, அங்குள்ள குறும்படப் போட்டியின் விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் பெற்று கொள்ளலாம்.
இந்தப் போட்டியின் முதல் நிலை வெற்றியாளருக்கு ரிம 10,001 ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்கள் முறையே ரிம 7,501 மற்றும் ரிம 5,001 ரொக்கப் பரிசு தட்டிச் செல்லலாம். ஆறுதல் பரிசாக 6 பேருக்கு தலா ரிம 2,501 ரொக்கம்  வழங்கப்படும். அதுமட்டுமின்றி, வெற்றி பெறும் அனைத்து குறும்படங்களும் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் ஆஸ்ட்ரோ கோ செயலியில் ஒளிபரப்பப்படும்.
எதிர்வரும் மே 14-ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் தங்களுடைய படைப்புகள் அனுப்பி வைக்க வேண்டும். ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி குறித்து மேல் விவரங்களை அறிய www.astroulagam.com.my/shortfilm என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்!

கோலாலம்பூர் ஏப்ரல் 14-

மலேசிய பக்தி திரைப்படமான 'காளிமுனி தரிசனம்' திரைப்படம் பல இடையூறுகளுக்குப் பிறகு, விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. இதனையடுத்து அதன் சிறப்புக் காட்சி நாளை தலைநகரில் உள்ள 'ஃபெடரல்' திரை அரங்கில்  இரவு 8 மணிக்கு திரையிடப்படவிருப்பதாக இதன் தயாரிப்பாளர் டி.தி.எஸ் இந்திரன் தெரிவித்தார்.
இதற்கு முன் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி அதே திரையரங்களில் கடந்த டிசம்பர் மாதம் திரையிடப்படுவதாக இருந்து, திரைப்பட தணிக்கை குழுவின் அனுமதி இல்லாததால், காட்சி ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்தப் பிரச்னைகள்  சரிசெய்யப்பட்டு விட்டதாகத் திரைப்படக் குழுவினர் தெரிவித்தனர். இத்திரைப்படத்தில்  ரத்னகௌரி, பென்- ஜி, ஜெகநாதன் உட்பட பல உள்நாட்டுக்  கலைஞர்கள் நடித்துள்ளனர். 'காளிமுனி தரிசனம்' சிறப்புக் காட்சிக்குச் செல்ல விரும்புவோர், கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொண்டு, மேல் விவரங்களைப் பெறலாம்!

03-40432231/016-6040329

Recent News