loader

All News

பெட்டாலிங் ஜெயா, செப்.18-

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மக்கள் மத்தியில்  பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தை மலேசியாவில்  பிரபல நிறுவனமான லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் வெளியீடு செய்தது.

கடந்த வியாழக்கிழமை 14 ஆம் திகதி அன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள எல்.பி.எஸ். பி.ஜே.ஸ்டேட் திரையரங்கத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் இடம்பெற்றது. 

லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மூர்த்தி உட்பட ஊடகவியாளர்கள், ரசியர்கள் மற்றும் மலேசிய கலைஞர்கள் இத்திரைப்படத்தின் முதல் காட்சியை கண்டு கழித்தனர்.

இந்த 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் கதாநாயகன்  விஷாலுக்கு வில்லனாக  அனைவராலும் கவரப்பட்ட ஒரு கதாபாத்திரமாக எஸ்.ஜே.சூரியா நடித்துள்ளார். ஏக்‌ஷன், காமடி, 

என்டர்டைன்மென்ட் கலந்த சிறப்பான ஓர் திரைப்படமாக தற்பொழுது நாடு முழுவதிலும் அனைத்து திரையரங்கத்திலும் இப்படம் பிரம்பாண்டமாக திரையிடப்பட்டு வருகிறது.

இப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் பிரபல மலேசிய தொழிலதிபர் ஞானலிங்கம் இப்படத்தில் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் முதல் சிறப்புக் காட்சியில் ரசிகர்கள் படத்தை பர்த்து  கொண்டாடி மகிழ்ந்தனர்.ரசிகள்களின் எதிர்பார்ப்பை 'மார்க் ஆண்டனி' படம் பூர்த்தி செய்துள்ளது என்பது இதன் வளி தெரியவந்துள்ளது.

கோலாலம்பூர், ஆக.10-
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ள வேளையில் இன்று காலையில் கொலிசியம் திரையரங்கில் மலேசியாவில் உள்ள சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அலையென திரண்டனர்.

மலேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் ஜெயிலர் திரைப்படத்தில் முதல் காட்சி நடைபெற்றது. இந்த திரைப்பட காட்சிக்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

ஜெயிலர் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

இத்திரைப்படத்தின் முதல் காட்சிக்கு
ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் மலேசிய ரஜினி ரசிகர்களின் பட்டாளம் இங்கு கூடியது. இந்த திரைப்பட முதல் காட்டிக்கு புளு பெரதர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ரசிகர் மன்றமும் இணை ஆதரவாளர்கள் ஆவர்.

மன்றத்தின் உறுப்பினராக இருந்த Sara மறைந்ததை தொடர்ந்து அவரின் புதல்வருக்கு காசோலை வழங்கப்பட்டது. அதன் பிறகு முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

திரைப்படம் ஒளிப்பரப்பட்டதுடன் ரசிகர்களின் கோஷம் திரையரங்கை அதரவைத்தது.

தன் மகனை காப்பாற்ற ரவுடிகளை எதிர்க்கும் சூப்பர் ஸ்டாரின் flashback, அவரின் பவர் என்ன என்பதுதான் கதையின் சுவாரிசம். படத்தின் காட்சியமைப்புகள், சூப்பர் ஸ்டாரின் style வேற லெவல்... 1980இல் இருந்த சூப்பர் ஸ்டார் மீண்டும் வந்துவிட்டார் எனலாம். நாட்டிலுள்ள திரையரங்களில் சக்கப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை மக்கள் திரையரங்குகளில் கண்டு கழிக்கலாம்.

கோலாலம்பூர் ஜூலை-  20

4 தலைமுறையாக தமிழ் சினிமாவில் சிம்மாசனம் போட்டு சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் வலம்வரும் நடிகர் ரஜினிகாந்துடைய
நடிப்பு சாம்ராஜ்ஜியம் சரிந்துவிட்டது என ஈராண்டுகளாக பல விதமான விமர்சனங்கள் வந்த வேளையில்,
பல நடிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை தமிழ் சினிமா புகுத்த பார்த்த நேரத்தில்,
ஒரே பாடலில் 90ஆம் ஆண்டு காலத்தில் ரஜினி தக்க வைத்த ராஜ்ஜியத்தை தமிழ் சினிமாவிற்கு  
நிரூபித்து உள்ளார் சூப்பர் ஸ்டார்.

73 வயது ஆகியும் அதே மாஸ் அதே style-லுடன் ஜெயிலர் திரைப்படத்தில் மாஸ் காட்டியுள்ளார் 
சூப்பர் ஸ்டார். இந்த திரைப்படம் Pan India திரைப்படமாக வசூல் சாதனை செய்யபோகிறது என்பதையும் 
ரஜினி அதில் தீவிரம் காட்டியுள்ளதையும்   ஒரே பாடலில் மிரட்டலாக சூப்பர் ஸடார்
திரைப்பட தாயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு ஒரு மெசேஜ் கொடுத்துள்ளார்.

TIGER KAA HUKUM : அந்த ஒற்றை பாடல்   ரஜினியின் 90s  தீயை ஏற்படுத்தியதால்  
தமிழ் சினிமா இப்பொழுது பற்றி எரிகிறது. பல நடிகர்களை வரிகளால் பீதி அடைய வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

வரிகள் ஒவ்வொன்றும் மிரட்டல், எனக்கு வயதாகி விட்டது என்று தப்பு கணக்கு போடவேண்டாம் என்று
தமிழ் சினிமாவிற்கு நேரடி மெசேஜ் கொடுத்துள்ளார். புதிய trend-டை நானே உருவாக்குவேன் என 
பாடலில் மிரட்டியுள்ளார்.  சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு  பலர் துடிக்கிறார்கள்; குட்டி சுவரை எட்டி பார்த்தால்
உயிரை கொடுக்க கோடி பேரு... என தன் ரசிகர் ராஜ்ஜியத்தை நிரூபிக்க கிளம்பிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
இந்த படத்தின் வழி இயக்குனர் நெல்சனை இறக்கி பேசிய அனைவரது வாயையும் 
அடைத்து அந்த இயக்குனரை மீண்டும் உச்சத்தில் கொண்டு வந்து வைத்து தனது ராஜ்ஜியத்தை தமிழ் சினிமாவிற்கு உணர்த்த ரஜினி அதிக கவனம் செய்துள்ளார் என்பது தெரிகிறது.

உன் அப்பன் விசில கேட்டவன்  என்ற வரி பழைய சூப்பர் ஸ்டாரை யாரோ தட்டி எழுப்பி விட்டு விட்டார்கள் 
என்பது போல் தெரிகிறது. அடுத்த மாதம் ஜெயிலர் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. 
இப்போதே பல தயாரிப்பாளர்கள் அந்த மாதத்தில்  தங்களது படங்களை வெளியீடு செய்வதில் 
இருந்து பின் வாங்கி விட்டனர் என தமிழ் சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். 
ஒரே பாடலில் தமிழ் சினிமா உலகமே மிரண்டு போய் நிற்கிறது. 

-வெற்றி விக்டர்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து 1996-ல் திரைக்கு வந்த இந்தியன் படம் வெற்றி பெற்றதால் 27 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்தியன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியதில் இருந்து விபத்து, தயாரிப்பாளர்-டைரக்டர் மோதல், வழக்கு என்றெல்லாம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தினர். சமீபத்தில் வெளிநாடு சென்றும் முக்கிய காட்சிகளை படமாக்கி விட்டு வந்தனர். அதன்பிறகு ஷங்கர் தெலுங்கில் இயக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தை எடுக்க சென்று விட்டார். அந்த படத்தின் படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வந்தது.

நேற்று முன்தினம் கிளைமாக்ஸ் காட்சியுடன் முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டதாகவும் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கப்போகிறேன் என்றும் ஷங்கர் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று முதல் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் கமல்ஹாசனுடன் சித்தார்த், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

சென்னை, மே 3-

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். 

இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் தங்கலான் படப்பிடிப்பில் ஒத்திகையின்போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காயம் காரணமாக தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் விக்ரம் பங்கேற்பார் என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் விக்ரம் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

தமிழகம் ஏப்ரல் -9

கலாசேத்ரா கல்லூரி பேராசியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். கல்லூரியின் பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்த விவகாரத்தில் பிக்பாஸ் நடிகை அபிராமி, பேராசிரியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் கூறும்போது, "நான் கலாசேத்ரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி. பேராசிரியர் ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார். அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. பிரச்சினைக்கு அங்குள்ள 2 பேராசிரியைகள்தான் காரணம்

அவர்கள் என்னிடமும், ஹரிபத்மனுக்கு எதிராக பேசும்படி வற்புறுத்தினர். இருதரப்பிலும் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும்'' என்றார். அவரது கருத்தை சிலர் ஆதரித்தாலும், பெரும்பாலானோர் எதிர்த்தனர்.

இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டியும், அபிராமியை விமர்சித்துள்ளார். சனம் ஷெட்டி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அவர்கள் குரல் கொடுப்பதற்கு யாரும் பாடம் சொல்லித்தர தேவை இல்லை. தங்களுக்கு நடந்துள்ள கொடுமைக்கு எதிராக போராட அவர்களுக்கு தைரியம் மட்டும் தேவை. அது அவர்களுக்கு இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றால், பேசாமல் உட்காருவது நல்லது. உண்மை வெளியில் வரட்டும். உங்களுக்கு நடக்கவில்லை என்பதற்காக, மற்றவர்களுக்கு நடக்கவில்லை என்று அர்த்தமா. நீங்கள் ஏன் ஒருதலைபட்சமாக இருக்கிறீர்கள்'' என்று கண்டித்துள்ளார்.

சென்னை - மார்ச் -20

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம்  மார்ச் 30 ஆம் வெளியாகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்  பேசிய நடிகர் சிம்பு, நான் இங்கே வரும்போது ஒரே விஷயம் தான் மனதில் நினைத்தேன். அது இந்த நிகழ்ச்சியில் அழக்கூடாது என்பதாகும். அது மட்டும் தான் என் மனதில் இருந்தது.படங்களில் சின்ன சென்டிமென்ட் காட்சி வந்தால்கூட அழுதுவிடுவேன். ஆனால் உங்களுக்காக தான் இன்று அழக்கூடாது என்று நினைத்தேன்.
ஏனென்றால் நாம் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்தித்து உள்ளோம். இனி சந்தோஷமாக வாழ வேண்டும் என சிம்பு நம்பிக்கை வார்த்தை கூறியுள்ளார்.

இந்தப் படத்தை கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடித்திருப்பார். அவர் அங்கே ஒரு சூப்பர் ஸ்டார். அவர் கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிக்க முடியும் என தயங்கினேன். அதையும் தாண்டி இந்தப் படம் ஒத்துக் கொண்டதற்கு காரணம் இயக்குனர் கவுதம் தான். சிறிய படம், பெரிய படம் எதுவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் அந்தப் படத்தில் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டும் வழக்கம் எனக்கு உண்டு.ஏனென்றால் இங்க தட்டி விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தட்டி கொடுப்பதற்கு யாரும் இல்லை.எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும் தான் உள்ளனர் என சிம்பு  கூறினார். 

இனி பெரிதாக பேசுவதற்கெல்லாம் ஒன்றும் இல்லை; செயல் மட்டும்தான். இனிமே ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கலாம். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். இனிமே நான் என்ன பண்ணுகிறேன் என்பதை மட்டும் பாருங்கள். சாதாரணமாக வரவில்லை, வேறு மாதிரி வந்துள்ளேன். இனிமே உங்களை தலை குனிய விடமாட்டேன். இந்த படத்தில் எனக்கு ஜோடி இல்லை. படத்திலும் இல்லை நிஜத்திலும்  ஜோடி இல்லை என  சிம்பு பேசினார்.

 

`துணிவு' படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் லாரி மீது ஏறி நடனமாடி கீழே குதித்ததில் முதுகுத்தண்டு உடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் நடித்துள்ள `துணிவு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் ரோகினி திரையரங்கில் வெளியான `துணிவு' பட சிறப்பு காட்சியை காண ஏராளமான அஜித் ரசிகர்கள் வருகை தந்து, பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த டிரெய்லர் லாரி மீது ஏறி நடனம் ஆடியபடி கீழே குதித்ததில் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த ரசிகர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

`துணிவு' படம் பார்க்க வந்த இடத்தில் ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அஜித் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர், ஜூன் -7

தமிழ் சினிமாவின் வித்தியாசம் நிறைந்த படைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ் ரசிகர்களின் தாகத்தை தணிக்க உலக நாயகனால் மட்டும்தான் முடியும் என்பதை, 4 வருட இடைவேளைக்குப் பிறகு ரசிகர்களுக்கு நிரூபித்துள்ளார் நம்மவர் கமல்.

தமிழ் சினிமாவை ஆளும் ஆண்டவரே... என்ற  முழுக்கத்துடன் உலக நாயகன் கமல் ஹாசனை வருக வருக என என ரசிகர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க இப்போது வித்திட்டவர், உலக நாயகனின் தீவிர ரசிகன் இயக்குனர் லோகேஸ் கனகராஜ்.

மிக பெரிய ஒரு பார்வை இயக்குனர் லோகேஸ் மீது தற்போது விழுந்துள்ள நிலையில், அவரின் அடுத்த படம் எதுகைதி 2- வா? அல்லது விக்ரம் 3 -யா? என்ற பொறுப்பை விக்ரம் 2 படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவருக்குக் கொடுத்துவிட்டார்கள். அதனால் மிக விரைவில் அதற்கான திரைக்கதையை உருவாக்கும்  பொறுப்பு அவருக்கு ரசிகர்களால் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் பின்னடைவில் இருந்து மீட்டு,  மீண்டும்   சிம்மாசனத்தில் அமர்த்தியிருக்கும் விக்ரம் 2 வாயிலாக,  உலக நாயகன் களத்தில் குதிக்கிறார் என்பது போல், படத்தின்  பாடல் ‘நாயகன் மீண்டும் வர எட்டுத்திக்கும் பயம்தானே’….

ஆரம்பிக்கலாமா! என உலக நாயகன் தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகமூட்டி இன்று  அனைத்து சமூக உடகங்களிலும் கமல் kluster  பரவத் தொடங்கிவிட்டது.

உலக மெங்கும் விக்ரம்...விக்ரம் ...விக்ரம் தான்.

படத்தில் நடித்திருக்கும் பஹத் பாசல், விஜய் சேதுபதி தொடங்கி ஏஜெண்ட் தினா குழந்தை விக்ரம் வரை அனைவரும் ரசிகர்கள் மத்தியில் இடம்பெற்று, அனைவரையும் பேட்டி எடுக்க ஊடகங்கள் முண்டி அடிக்கும் நிலையில் அனைவரும் தங்கள் படைப்பை விதைத்துள்ளனர்.

படத்தில் அன்பறிவின் சண்டை காட்சி அமைப்புகள் ரசிகர்களைக் கட்டிபோட்டுவிட்டது. அனிருத்தின் இசை படத்தின் உயிரோட்டம். ஒளிப்பதிவு  மிரட்டவைக்கிறது.

அதோடு நடிப்பின் நாயகன்  சூர்யா 2 நிமிடக் காட்சியில் விக்ரம் 3 க்கு ஓர் உயிரோட்டம் கொடுத்து,  இப்போதே ரசிகர்களை விக்ரம் 3 க்கு தயாராகுங்கள் என அடுத்த விருந்துக்கு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டார்.

நீண்டநாள் கழித்து  வெள்ளித் திரையில் ரசிகர்களைச் சந்தித்த உலக நாயகன் kluster  கமல் தாக்கத்தை ரசிகர்களிடம் பரப்பிவிட்டார்.

 

'சேது' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் பாலா. அதன் பின் வித்தியாசமான கதைக்களத்தில் படங்களை எடுத்துக் கவனம் ஈர்த்தார்.

ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய நான் கடவுள் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றார்.

விக்ரம், சூர்யா ஆகிய இருவரையும் வித்தியாசமான வேடங்கள் மூலம் முழு நடிகராக மாற்றிய பெருமை பாலாவுக்கு மட்டுமே உண்டு.

இவர், முத்துமலர் என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில், யாரும் எதிர்பார்த்திராத வகையில் நேற்று அவர் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

அவரும், முத்து மலரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சட்டப்பூர்வமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில்,  விவாகரத்து பெற்ற பின்னரே இந்த விஷயம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

பாலா அடுத்து சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது!

தன்னை 'தல' என்றோ அல்லது வேறுபட்ட பெயர்களில் அழைக்கப் கூடாது என நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது
ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,
இனி வரும் காலங்களில் என்னை பற்றி
எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார் , மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க
வேண்டாம் என்று அன்போடு
வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம்,
உள்ள உவகை, வெற்றி, மன அமைதி,
மன நிறைவு உள்ளிட்ட சகலமும்
கிடைக்க வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
அஜித்குமார்.

- இவ்வாறு தமது பதிவில் நடிகர் அஜித் குறிப்பிட்டுள்ளார்!

 

கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடன இயக்குநர் சிவசங்கர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு இன்று இரவு 8 மணியளவில் உயிர் பிரிந்ததாக அவரது மகன் தகவல் தெரிவித்துள்ளார்.

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் இதுவரை தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர். அஜித்தின் 'வரலாறு' படத்திற்கும் இவர்தான் நடனம் அமைத்தார். மேலும், தனுஷின் 'திருடா திருடி' படத்தில் இடம்பிடித்த 'மன்மதராசா' பாடலுக்கும் நடனம் அமைத்தவர் இவரே.

சூப்பர் ஹிட் அடித்த ராஜமெளலி - ராம் சரணின் 'தீரா தீரா தீரா' பாடலுக்கு நடனம் அமைத்து தேசிய விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாறு', 'பரதேசி', 'அரண்மனை', 'கஜினிகாந்த்' உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்தவர் சந்தானத்தின் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் மேலும் கவனம் ஈர்த்தார்!

 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசனுடன், இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. மாநாடு திரைபடத்தின் ப்ரீ ரிலீசிங் ஈவென்ட் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சிலம்பரசன், " நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் உங்களால் தான் இந்த படத்தை தயாரிக்க முடியும் இதில் வரக்கூடிய பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும் எனக் கூறினேன். பல பிரச்னைகளைத் தாண்டி இந்தப் படத்தை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

 

மாநாடு சிலம்பரசன்

மாநாடு சிலம்பரசன்

ஒரு இனத்தின்மீது எப்படி குற்றம் சுமத்தப்படுகிறது என்கிற ஒன்லைன்தான் இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்யவைத்தது. படத்தின் டைம் லூப் கான்செப்ட்காக படக்குழு மிகவும் சிரத்தையெடுத்து உழைத்திருக்கிறோம். யுவன் ஷங்கர் ராஜா என்னைப் புரிந்துகொள்கிற ஒரு இதயம். எடிட்டர் பிரவீன் கே.எல் -க்கு ரொம்ப நன்றி என்றார். திடீரென கண்கலங்கி ``ரொம்ப பிரச்னையா இருக்கு. நிறைய ப்ராப்ளம் பேஸ் பண்ணிட்டேன். நிறைய பிரச்னை குடுக்கறாங்க. பிரச்னையலாம் நான் பாத்துக்குறேன். என்னை மட்டும் நீங்க பாத்துக்கங்க" என்றார்.

நடிகர் வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் வடிவேலு பங்கேற்று பேசும்போது, “எல்லா பிரச்சினைகளையும் கடந்து நாய் சேகர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் சாதித்து விட்டதாக நான் நினைக்கவில்லை. இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது. பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியும் உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர்களை சிரிக்க வைப்பது எனக்கு பிடித்து இருக்கிறது.

குழந்தைகள் என்னைப்போல் பாவனை செய்வதை கடவுள் கொடுத்த வரமாகவே பார்க்கிறேன். சினிமாவில் எனக்கு போட்டி நான்தான். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் முந்தைய கதாபாத்திரத்தைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என்று உழைப்பேன். இனிமேல் சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறேன். சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலிகணக்குகள் உள்ளன. நான் வலைத்தளத்தில் இல்லை. வலைத்தளத்தில் எனது பெயரில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் போலியானவை’' என்று தெரிவித்துள்ளார்!

சின்னத்திரையில் 'தெய்வமகள்' சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் வாணிபோஜன்.

சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையிலும் தற்போது முகம் பதித்து வருகிறார்.

இந்நிலையில், வாணி போஜன் நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான 'லாக்கப்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் வைபவ், வாணி போஜன் இருவரும் இணைந்து 'மலேசியா To அம்னீஷியா' என்கிற படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இந்தப் படம் வருகிற மே 28-ஆம் தேதி ஜீ5 தளத்தில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது!

ரஜினியின் 'அண்ணாத்த' படப்பிடிப்பு 60 சதவீதத்துக்கு மேல் முடிந்து விட்டது. மீதியையும் முடிக்க இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர்.

முந்தைய படப்பிடிப்பில் படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கொரோனா தடுப்பு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளனர். ஓரிரு மாதங்களில் முழு படத்தையும் முடித்து தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

இந்தப் படத்தை முடித்த பிறகு ரஜினி மேலும் 2 புதிய படங்களில் நடிக்க ஆலோசிப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ரஜினியை வைத்து 'பேட்ட' படத்தை எடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுபோல் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' வெற்றிப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து ரஜினி பாராட்டியதுடன் தனக்கு கதை தயார் செய்யும்படி கூறியுள்ளார்.

இதுபோல் மேலும் சில இயக்குனர்களும் ரஜினிக்குக் கதை வைத்துள்ளனர். 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்ததும் ரஜினி நடிக்க உள்ள புதிய படங்கள் பற்றிய அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

சூர்யா - ஜோதிகா இருவரும் திருமணத்திற்கு முன்பு, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் 6, சில்லுன்னு ஒரு காதல் என ஏழு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு நட்சத்திரத் தம்பதிகளான அவர்கள், இதுவரை எந்தப் படத்திலும் இணையவில்லை.

திருமணத்திற்குப் பிறகு 36 வயதினிலே படத்தில் ஜோதிகா நடித்ததைத் தொடர்ந்து கதையின் நாயகியாக தனக்கான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்தநிலையில், பூவரசம் பீப்பீ, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களை இயக்கிய ஹலிதா சமீம், சூர்யா-ஜோதிகாவை மீண்டும் இணைக்க ஒரு கதை ரெடி பண்ணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒப்புதலையும் அவர்களைச் சந்தித்து பெற்று விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள ஹலிதா சமீம், அவர்களை மீண்டும் ஜோடியாக திரையில் கொண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்!

’எந்திரன்’ திரைப்படத்திற்காக தனது கதையை திருடியதாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்று வெளியான தகவலை இயக்குநர் ஷங்கர் மறுத்துள்ளார்.

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 1996-ஆம் ஆண்டு இனிய உதயம் என்ற தமிழ் இதழில் ஜூகிபா என்ற கதை எழுதினார். அதே கதையை திக் திக் தீபிகா என்ற தலைப்பில் நாவலும் எழுதி வெளியிட்டார். இந்த கதையை இயக்குனர் ஷங்கர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் எந்திரன் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாக கூறி, அவர் மீது ஆரூர் தமிழ்நாடான் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகாரை காவல்துறை ஏற்காததால், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக குற்ற வழக்கை ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஷங்கர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை ஷங்கருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறி வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. ஷங்கர் சினிமா பிரபலமாக உள்ளதால் நீதிமன்றத்துக்கு வந்தால் கூட்டம் கூடி, விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால், தேவைப்படும்போது, ஆஜராகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், எழும்பூர் 2-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை முன்பு ஆரூர் தமிழ்நாடான் தொடர்ந்த வழக்கு ஜனவரி 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் ஷங்கரோ அல்லது அவர் சார்பில் வழக்கறிஞரோ ஆஜராகவில்லை. இதையடுத்து, இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததாக செய்தி வெளியானது.

இந்நிலையில், ஷங்கர் 'எனக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல் தவறானது. எனக்கு எதிராக எந்த வாரண்ட்டும் பிறப்பிக்கவில்லை’ என நீதிபதி உறுதி செய்ததாக தெரிவித்தார்.

இணையத்தில் வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறால் இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது” என்று ஷங்கர்  தெரிவித்துள்ளார்!

'எந்திரன்' திரைப்படத்திற்காக தனது கதை திருடியதாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 1996-ஆம் ஆண்டு இனிய உதயம் என்ற தமிழ் இதழில் ஜூகிபா என்ற கதை எழுதினார். அதே கதையை திக் திக் தீபிகா என்ற தலைப்பில் நாவலும் எழுதி 2007-ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த கதையை இயக்குனர் ஷங்கர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் எந்திரன் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாக கூறி, அவர் மீது ஆரூர் தமிழ்நாடான் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகாரை காவல்துறை ஏற்காததால், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக குற்ற வழக்கை ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷங்கர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை ஷங்கருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறி வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

ஷங்கர் சினிமா பிரபலமாக உள்ளதால் நீதிமன்றத்துக்கு வந்தால் கூட்டம் கூடி, விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால், தேவைப்படும்போது, ஆஜராகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், எழும்பூர் 2-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை முன்பு ஆரூர் தமிழ்நாடான் தொடர்ந்த வழக்கு ஜனவரி 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் ஷங்கரோ அல்லது அவர் சார்பில் வழக்கறிஞரோ ஆஜராகவில்லை. இதையடுத்து, இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் மற்றும் ரஜினியின் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பரில் பாதியில் நிறுத்தப்பட்ட 'அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது.

பிப்ரவரி மாத இறுதியில் ரஜினி ஷூட்டிங்கிற்கு வர விருப்பம் தெரிவித்திருபதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அரசியல் பரபரப்பான இந்தக் காலகட்டத்தில் அண்ணாத்தே திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால், ரஜினியின் உடல் நிலை, அரசியல் கட்சி வேண்டாம் என்கிற அறிவிப்பு போன்ற உளைச்சலால் ரசிகர்களும் மனம் மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ரஜினி மன்றத்தின் நான்கு மாவட்ட முக்கியத் தலைவர்கள் அண்மையில் தி.மு.க-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது!
 

'ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில், வயதான ‘அப்பா’ வேடத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. இதனையடுத்து தற்போது நகைச்சுவை நடிகர் சூரியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரி கதாநாயகனாக நடிக்க, வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சூரிக்கு ‘அப்பா’வாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அப்பா வேடத்தில், முதலில் டைரக்டர் பாரதிராஜா நடிப்பதாக இருந்தார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அதில் கலந்து கொள்ள பாரதிராஜாவும் ஊட்டிக்குச் சென்றார். அங்கு குளிர் கடுமையாக இருந்தது. பாரதிராஜாவினால் அந்த குளிரை தாங்க முடியவில்லை என்று சென்னை திரும்பி விட்டார்.

இந்நிலையில் அவர்  நடிக்க இருந்த ‘அப்பா’ வேடத்தில், விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா பட வாய்ப்புகள் சிலருக்கு சூப்பராகவே அமையும், ரம்யா பாண்டியனுக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பே தற்போது அடித்துள்ளது. அதனால் ரம்யா பாண்டியன் ரொம்பவே சந்தோஷத்தில் உள்ளார்.

வழக்கமாக 2டி நிறுவனம் தயாரிக்கும் படங்கள் எல்லாமே தரமான படங்களாகவே இருக்கும், ரம்யா பாண்டியனின் புதிய படமும் அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநரான அரிசில் மூர்த்தி இயக்கவுள்ளார்.

இத்தகவல் சமூக வலைதளத்தில் பரவிய உடனே, அப்போ சோமசேகர் தான் ஹீரோவா என்றும் அவர் தான் ஹீரோவா நடிக்கணும் என்றும் சோம்யா ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்!

 

வடசென்னை, அசுரன் என தொடர் வெற்றியைக் கொடுத்துவரும் வெற்றிமாறனின் கையில் இரண்டு படங்கள் இருக்கிறது.

சூர்யா நடிக்கும் வாடிவாசல் மற்றும் சூரி ஹீரோவாக நடிக்கும் படம். இவ்விரண்டில், முதலில் சூரி படத்தைக் கையில் எடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் படமாக்கப்பட்டுவருகிறது. ஒரே ஷெட்யூலில் முழு படத்தையும் முடித்துவிட இருக்கிறது படக்குழு. இந்தப் படத்தில் சூரிக்கு நாயகியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இவர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ.ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்தவர்.

இந்தப் படத்தில் சூரிக்கு இணையான ரோலில் பாரதிராஜா நடிக்க இருந்தது. ஆனால், சத்தியமங்கலம் காடுகளில் நிலவிவரும் கடும்குளிரின் காரணமாகப் படத்திலிருந்து விலகினார் இயக்குநர் இமயம். இந்நிலையில், அந்த கேரக்டருக்கு முதலில் கிஷோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியாக, விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வெற்றிமாறனின் வடசென்னை படத்திலேயே விஜய் சேதுபதி நடிக்க வேண்டியது. சில நாட்கள் படப்பிடிப்புக்கு வந்தபிறகு படத்திலிருந்து விலகினார் சேதுபதி. இந்நிலையில், வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணி இந்தப் படத்தில் கைகூடியிருக்கிறது.

அடுக்கடுக்காக படங்களைக் கைவசம் வைத்திருக்கும் சேதுபதி, சில படங்களை பின் தள்ளிவிட்டு, வெற்றிமாறன் படத்துக்கு முன்னுரிமை கொடுத்து, படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக 10 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. சின்ன ரோல்தான் என்றாலும், க/பெ.ரணசிங்கம் படத்தில் எப்படி முழு படத்திலும் வருவதுபோல இருக்குமோ அந்த மாதிரி இந்தப் படத்திலும் கேரக்டர் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தை வெற்றிமாறனே இயக்கி, தயாரிக்கிறார். படத்துக்காக விஜய் சேதுபதிக்கு சுமார் மூன்று கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எப்படியும் பத்து நாட்கள் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றால் ஒரு நாளைக்கு 30 லட்சம் வரை சம்பளம் வரும் எனக் கணக்கு வருகிறது. ஏன் இத்தனை பெரிய தொகை என்று விசாரித்தால், படத்தின் விஜய் சேதுபதியின் ரோல் அப்படியாம். அந்த ரோலின் வெயிட்டேஜைப் பொருத்து இந்த சம்பளத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

அதோடு, சூரி படம் என்றால் பெரிதாகப் படம் விற்பனையாகுமா என்பது தெரியாது. ஆனால், விஜய் சேதுபதி நடித்திருப்பதால் பட விற்பனையிலும் கைகொடுக்கும் என்பதால் தான் இத்தனைப் பெரிய தொகையாம்!

நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் (பிப்ரவரி) திருமணம் நடக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது. திருமண தேதியை ரகசியமாக வைத்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் நயன்தாரா தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.

நயன்தாராவுக்கு இப்போது 36 வயது ஆகிறது. 2005-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி இன்றுவரை தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். ஏற்கனவே 2 முறை காதலில் சிக்கி முறிவு ஏற்பட்ட பிறகும் மார்க்கெட் சரியவில்லை. 2015-ல் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது.

இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். புதிய பட நிறுவனம் தொடங்கி பட தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது அடுத்த மாதம் திருமணத்துக்கு தயாராவதாக புதிய தகவல் பரவி வருகிறது. நயன்தாரா கைவசம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய 3 படங்கள் உள்ளன. மலையாளத்திலும் 2 படங்களில் நடிக்கிறார்!

'இந்திய சினிமாவின் தந்தை' என்று அழைக்கப்படும் தாதா சாஹேப் பால்கே பெயரில் தரப்படும் விருதுகள், திரைப்பட விருதுகளில் பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது.

அந்த வகையில், 2020 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-ல் வெளியான திரைப்படங்களுக்கு 2020-ல் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக அனைத்துப் பொது நிகழ்ச்சிகளும் ரத்தானதால் இந்த விருது வழங்கும் விழாவும் ரத்தானது. தற்போது பிப்ரவரி மாதம் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020-க்கான வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தமிழ் சிறந்த நடிகர் - தனுஷ் ('அசுரன்') சிறந்த நடிகை - ஜோதிகா ('ராட்சசி') சிறந்த இயக்குநர் - பார்த்திபன் ('ஒத்த செருப்பு சைஸ் 7') சிறந்த திரைப்படம் - 'டூலெட்'. சிறந்த இசையமைப்பாளர் அனிருத். சிறந்த பன்முக நடிகர் - அஜித் குமார் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

 

2020-ஆம் ஆண்டு திரையுலகிற்கு மோசமான ஆண்டாக அமைந்தாலும், நடிகர் சிம்புவுக்கு இந்தாண்டு திருப்புமுனையாக அமைந்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை 30 கிலோ வரை குறைத்த சிம்பு, ஒரே மாதத்தில் சுசீந்திரனின் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து முடித்தார். தற்போது 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் 'பத்து தல' படத்தில் நடிக்க உள்ளார். மேலும், தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராமிடமும் கதை கேட்டுள்ளாராம்.

இப்படத்தில் ஹீரோவைப் போன்று ஹீரோயின் கதாபாத்திரமும் படம் முழுக்க பயணிக்குமாம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவை படக்குழு அணுகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் இப்படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டால், இது சிம்புவுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படமாக அமையும். இவர்கள் இருவரும் ஏற்கனவே வல்லவன், இது நம்ம ஆளு போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது!

ரஜினியின் பிறந்த தினத்துக்கு திரை நட்சத்திரங்களில் துவங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஒவ்வொரு வருடமும் தவறாமல் ட்விட்டரில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிடும் தனுஷ், இந்த முறை எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.

காரண்ம், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவான படம் காலா. 2018-ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் வெளியானது. படத்துக்கும் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ஆனால், தயாரிப்பாளராக தனுஷூக்குப் படம் நஷ்டம்.

காலா படத்தினால் பல கோடிகள் நஷ்டத்தில் சிக்கினார் தனுஷ். அதை ஈடுகட்டவே அடுக்கடுக்காகப் படங்களில் ஒப்பந்தமானார். அப்படித்தான் மூன்று படங்கள் வீதம் கலைப்புலி எஸ்.தாணுவுக்கும், சத்ய ஜோதி பிலிம்ஸூக்கும் ஒப்பந்தமானார்.

தனுஷூக்கு காலாவினால் நஷ்டம் என்பது தெரிந்தும், மற்ற தயாரிப்பாளர்களிடம் எப்படி சம்பளத்தைப் பெறுவாரோ அந்த மாதிரி, கறாராக முழுமையாகச் சம்பளத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டாராம் ரஜினி. காலா சிக்கலுக்கு எதாவது செட்டில்மெண்ட் செய்வார் என்றும் எதிர்பார்த்திருக்கிறார் தனுஷ். அதையும் ரஜினி செய்யவில்லை என்றே தெரிகிறது.

அதோடு, ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் அறிவிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், ரஜினியின் மீது சிறிது வருத்தத்தில் தனுஷ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது!

தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

மர்மம் நிறைந்த இவரது வாழ்க்கை கதையை ஏற்கனவே இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுத்தனர். அதில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

தற்போது சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை தமிழிலும் படமாக உருவாக இருக்கிறது. அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் இந்தப் படத்தில் சில்க் சுமிதா கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் அப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது!

சென்னை, நவம்பர் 23- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். அவருக்கு வயதுக்கு 60.

'கிழக்குச் சீமையிலே' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார் தவசி. நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' திரைப்படத்திலும் தவசி நடித்துள்ளார்.

தமிழில் 50-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். தேனி மாவட்டம் சங்கராபுரத்தை பூர்விகமாக கொண்டவர் தவசி.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் நடிகர் தவசி. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற வசனம் மூலம்  பிரபலமானார்.

தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை, கருப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த தவசி, உணவுக் குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மீசை தாடி எதுவும் இல்லாமல் மொட்டை அடித்து உடல் மெலிந்து போயிருக்கும் தவசியின் போட்டோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை பார்த்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்ட பலரும் அவருக்கு நிதியுதவி செய்தனர்.

இந்நிலையில் நடிகர் தவசியின் உடல் நிலை இன்று மேலும் மோசமடைந்தது. இதனை தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது!

ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தப்படம் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்ற OTT தளத்தில் வெளியானது.

இந்தப் படத்தில் இந்து போலி சாமியார்கள் எப்படியெல்லாம் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பார் ஆர்ஜே பாலாஜி.

மேலும் தமிழ்நாட்டில் பரபரப்பைக் கிளப்பி வந்த இரண்டு  இந்து சாமியார்களின் கலவையாக ஒரு நெகட்டிவ் சாமியார் கதாபாத்திரத்தை உருவாக்கி, அவரை வைத்து கதையை நகர்த்தினார் ஆர் ஜே பாலாஜி.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தில் இந்து மதத்தை மட்டுமே கிண்டல்  அடித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு இந்தப்படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்தப் படம் OTTயில் வெளியாவதற்கு முன்பு, போலி கிறிஸ்தவ மதபோதகர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளையும் கிண்டலடித்து இடம்பெற்ற காட்சி ஒன்றை யூடியூபில் வெளியிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் அந்தக் காட்சி படத்தில் இடம் பெறவில்லை.

மேலும் பாலாஜி அந்தக்காட்சியை பாகுபாடு பார்த்துதான் நீக்கினார் என்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல், ‘மற்ற  மதத்தைச் சேர்ந்தவரின் உணர்வுகளை மதிக்கும் நீங்கள் இந்து மதத்தையும் அவர்களுடைய உணர்வுகளையும் ஏன் மதிக்கத் தவருகிறீர்கள்?’ என்று பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவ்வாறு கடும் சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து அந்தக் காட்சியை யூட்யூப்பில் இருந்து கூட நீக்கிவிட்டனர் படக்குழுவினர்.

பெரும்புள்ளி ஒருவர் போன் செய்து அந்தக் காட்சியை நீக்கும்படி கேட்டுக் கொண்டதால்தான், படத்திலிருந்தும் யூடியூப்பிலிருந்தும் அந்தக் காட்சியை நீக்கி விட்டார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

எனவே ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்திருக்கும் மூக்குத்தி அம்மன் படத்திற்கு பெரும் கண்டனங்கள் எழுந்ததால் பயங்கர அப்செட்டில் இருக்கிறார்களாம் படக்குழுவினர்!

'கிழக்கு சீமையிலே' தொடங்கி 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் தவசி.

தற்போது ரஜினிகாந்த் நடித்துவரும் 'அண்ணாத்தே' படத்தில் நடித்த நிலையில், புற்றுநோய் பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

உணவுக் குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்படும் அவருக்கு, திரைத்துறையினர் பலரும் உதவி புரிந்து வருகின்றனர்

நடிகர் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி தலா 1 லட்சம் வழங்கியுள்ளனர்.

சிவகார்த்திகேயன் 25 ஆயிரமும், சூரி 20 ஆயிரமும் நிதி வழங்கியுள்ளனர்.  செல்போன் மூலம் தவசியைத் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் நலம் விசாரித்துள்ளார்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இடம் பெற்ற 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற வசனம் மூலம் புகழ் பெற்றவர் தவசி.

'கொம்பன்' படத்தில் கம்பீர மீசையுடன் காட்சி தந்த இவர், இன்று உடல் மெலிந்து மீசை இல்லாமல் தோற்றமளிப்பது பலரையும் நெகிழச் செய்துள்ளது!

 

ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை கதையாக உருவாக்கி சமகால அரசியல் பிரச்னைகளையும் அதில் சேர்த்து நகைச்சுவை கலந்து ‘மூக்குத்தி அம்மனாக’ படைத்துள்ளனர் படக்குழுவினர்.

தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை தான் வெகுவாக ரசித்ததாகவும் படக்குழுவை பாராட்டியும் ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “மதத்தின் பெயரால் சமகாலத்தில் நிகழும் கொடுமைகளையும், மதத்தைக் கொண்டு மக்களைப் பிரித்து வாக்குவேட்டையாட முற்படும் அரசியல் நாடகங்களையும் தோலுரிக்கும் மூக்குத்திஅம்மன் திரைப்படம் கண்டு வெகுவாக ரசித்தேன்.

மக்களை விழிப்பூட்டி எழச்செய்யும் வகையில் சமூகக்கருத்துக்களை நகைச்சுவையோடு தந்திருக்கிற இயக்குநர்கள் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே. சரவணன் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு சீமான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்!





 

அரசியலில் வரவேற்பு இல்லை....
மீண்டும் சினிமாவில் கமல்!

அரசியலில் கமல் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார் என்கிறார்கள்.

சினிமாவில் குறைந்த தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் படத்தை முதலில் வெளியிட திட்டமிட்டுள்ளார் கமல்.

அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தியன்2 படம் வெளிவர உள்ளது.

இந்நிலையில் 23 வருடத்திற்கு முன்னர் கமல் இயக்கத்தில் உருவாகி ஆரம்பத்திலேயே கைவிடப்பட்ட மருதநாயகம் படத்தை மீண்டும் கையில் எடுக்க உள்ளாராம் கமல்!

 

சென்னை: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.

படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால், படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சீமான், சேரன்,  வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது!

சென்னை: இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குறித்த 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதா வேண்டாமா என ஆலோசனை செய்து ஓரிரு நாளில் பதில் அளிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. 800 என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அண்மையில் வெளியிடப்பட்டன.

இஇந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி  நடிக்கக் கூடாது என தமிழ் தேசியவாதிகளும் படைப்பாளிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். விளையாட்டில் முத்தையா முரளிதரன் என்னதான் சாதனைகள் படைத்திருந்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்ட போது சிரித்து மகிழ்ந்தவர் என்ன சாதித்தாலும் என்ன பயன்?

ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்திருந்தார். இதனால் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என பலர் வலியுறுத்தி வருகிறார்கள். பாரதிராஜா, வைரமுத்து, சேரன், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோர் இந்த படத்தை கைவிட வலியுறுத்தியுள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதா வேண்டாமா என்பது குறித்து விஜய் சேதுபதி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் தொடர்ந்து நடிப்பதா, இல்லை விலகுவதா என விஜய் சேதுபதி இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிப்பார் என தெரிகிறது!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். 2020-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமும் இதுதான்.

ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியில் மாறுதல்கள் ஏற்பட்டு தற்போது எப்போது வெளியிடப் போகிறார்கள் என்ற எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரசிகர்கள் திணறி  வருகின்றனர்.

இதற்கிடையில் அமேசான் மற்றும் நெட்ப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் மாஸ்டர் படத்தை கைப்பற்ற பல்வேறு வகையில் முயற்சி செய்ததையும், ஆனால் தியேட்டரில் தான் படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தெரிவித்ததையும் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.

திடீரென அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் படங்களில் லிஸ்டை அறிவித்தது. அதில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாக இருப்பதாக அதில் இடம்பெற்றிருந்தது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அந்தப் படம் 2017 -ஆம் ஆண்டு உருவான ஹாலிவுட் மாஸ்டர் படம் என்பது பிறகுதான் தெரிந்தது.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பிறகுதான் விஜய் ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர். மாஸ்டர் படம் கண்டிப்பாக வசூலில் பெரிய சாதனை படைக்கும் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு புரளி கிளம்பியது அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் தியேட்டரில் விஜயின் பிரமாண்ட ஆட்டத்தைப் பார்ப்பது போல் இருக்குமா எனவும் ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்!

மக்களுக்கு விரோதமாக எந்தக் காரியம் நடந்தாலும் அதற்கு எதிராக தைரியமாக குரல் கொடுப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அதற்காக ஆளும் தரப்பிடமிருந்து எதிர்ப்பையும் சம்பாதித்தவர்.

அதேபோல் 'மண்டி' என்கிற ஆன்லைன் விளம்பரத்தில் நடித்ததற்காக சிறு குறு வியாபாரிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியபோது, தயங்காமல் மன்னிப்புக் கேட்டுவிட்டு, விளம்பரத்திற்கும் தடை போட்டவர் விஜய்சேதுபதி. அப்படிப்பட்ட விஜய்சேதுபதியின் கைகளில் இப்போது 'லாபம்', 'க/பெ.ரணசிங்கம்', 'துக்ளக் தர்பார்'’ உட்பட 5 படங்கள் உள்ளன.

'லாபம்'’ படத்தின் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன், கம்யூனிச சித்தாந்தத்தின் மீது பற்றுள்ளவர் என்பதால், 'லாபம்- பகல் கொள்ளை' என சப்-டைட்டில் வைத்துள்ளார். முழுக்க முழுக்க முதலாளித்துவ அரசியல் பேசும் இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதிதான். எஸ்.பி. ஜனநாதனின் 'புறம்போக்கு' படத்தில் நடித்தவர் விஜய்சேதுபதி. அந்தப் புறம்போக்கிற்கு உண்மையான அர்த்தத்தைச் சொன்னவர் எஸ்.பி.ஜனநாதன்.

'க/பெ.ரணசிங்கம்' படம் மணல் மாஃபியாக்களையும் குடிநீர் கொள்ளையர்களையும் பற்றிய கதையுடன் வருகிறது.

'துக்ளக் தர்பார்' படத்தில்தான் செம அரசியல் தர்பார் நடத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இப்படத்தை விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் எஸ்.லலித் தயாரிக்க, டெல்லி பிரசாத், தீனதயாளன் என்ற புதியவர் டைரக்ட் பண்ணியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துள்ளது.

முடிந்துள்ள அந்தப் பாதியிலும் பண மதிப்பிழப்பால் மக்கள் அல்லாடியது, ஜி.எஸ்.டி. வரி, தினசரி ஏறும் பெட்ரோல் விலை என எல்லா பிரச்சினைகளையும் தங்களால் முடிந்த அளவுக்கு போட்டுத் தாக்கியுள்ளதாம் படக்குழு.

இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் திரைக்கதை எழுதுவதில் தேர்ச்சி பெற்றுள்ளார் விஜய்சேதுபதி. அந்த அனுபவத்தை வைத்து 'துக்ளர் தர்பார்' படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்கள் குறித்து டைரக்டர் டெல்லி பிரசாத்திடம் ஆலோசித்தாராம் விஜய்சேதுபதி.

அதன்படி இந்த லாக்டவுன் காலத்தில் கைதட்டச் சொன்னது, மணி அடிக்கச் சொன்னது, இங்கே ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு டாஸ்மாக் கடையைத் திறந்தது, 28 நாளில் விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் எனச் சொன்னது, 20 லட்சம் கோடி எங்கே போச்சு, என்ன ஆச்சு என சகலத்தையும் துக்ளக் தர்பாரின் மீதிப் பாதியில் பிரித்து மேயப் போகிறார்களாம்.

‘நையாண்டி கிங்’ ரா.பார்த்திபன் இருப்பது படத்திற்குக் கூடுதல் சிறப்பு!

 

 

சென்னை: விஜய்யின் 46-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

நள்ளிரவே பிறந்தநாள் கொண்டாட்டத்தை களைகட்ட திட்டமிட்டு இருந்த ரசிகர்களுக்கு ஸ்பெஷல் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் திரை பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

#HBDTHALAPATHYVijay என்ற ஹாஷ்டேக்கை போட்டு வெறித்தனமாக நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

கிளின்டன் ரோச் டிசைனில் உருவான இந்த போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

ஆளவா தலைவா என்றும், எதிர்க்க எதிர்க்க எழுவேன் என் ரசிகர்களுடன் என எழுதப்பட்டிருக்கும் வாசகங்களுடன் இருக்கும் மெர்சலான போஸ்டரை மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, பொருத்தமான வரிகள் என அந்த வாசகங்களையும் பதிவிட்டுள்ளார்.

சண்டியர் செளந்தர் எனும் மற்றொரு டிசைனர் உருவாக்கிய பிறந்தநாள் போஸ்டரையும் ரத்னகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில், இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

நகைச்சுவை நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில், இன்னுமொரு தெறி மாஸான தளபதி விஜய்யின் பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

ஹேப்பி பர்த்டே தளபதி என இருக்கும் இந்த அட்டகாசமான போஸ்டரை ராக்கி விஜயன் உருவாக்கி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியின் ரசிகர்களும் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அட்டகாசமான ஒரு போஸ்டரை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பதிவிட்டு சமூக வலைதளத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். ஹாஷ்டேக்குகளையும் போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்!

டாப் கன், காக்டெய்ல், ஸ்பேஸ் ஸ்டேஷன் 3டி, த லாஸ்ட் சாமுராய், எட்ஜ் ஆப் டுமாரோ, மிஷன் இம்பாசிபிள் உட்பட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் முன்னணி நடிகர் டாம் குரூஸ் தயாரித்து நடிக்கும் அடுத்த படம் விண்வெளி தொடர்பான படம்.

இதுபோன்ற படங்கள் இதற்கு முன் வந்தாலும் அவை செட் போட்டும், கிரீன்மேட் தொழில்நுட்பத்திலும் படமாக்கப்பட்டது. டாம் குரூஸ் தனது படத்தின் படப்பிடிப்பை ஒரிஜினலாக விண்வெளியில் படமாக்க இருக்கிறார்.

பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதை படமாக்க டாம் குரூஸ் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக டாம் குரூஸ் நாசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த தகவலை நாசா உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

விண்வெளி நிலையத்தில் டாம் குரூஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாசா உற்சாகமாக இருக்கிறது. நாசாவின் லட்சியத் திட்டங்களை நனவாக்குவதற்காக புதிய தலைமுறை பொறியாளர்களையும், விஞ்ஞானிகளையும் ஊக்குவிக்க பிரபலமான மீடியா தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளியே வருவதற்கு மட்டுமே தமிழக அரசு அனுமதியளித்ததுள்ளது.

இந்த தருணத்தைப் பயன்படுத்தி தங்களுடைய டி.ஆர்.பியை அதிகரித்துக் கொள்ள, முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே தாங்கள் உரிமைப் பெற்றுள்ள ஹிட் படங்கள் அனைத்தையும் ஒளிபரப்பி வருகிறது.

இதில் சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி மாலை ரஜினி நடித்த 'தர்பார்' ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதன் முறையாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், டி.ஆர்.பி அள்ளும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், 'காஞ்சனா 3' படத்தை விட 'தர்பார்' படத்துக்கு டி.ஆர்.பி குறைவாகவே கிடைத்ததுள்ளது.

'காஞ்சனா 3' திரைப்படம் கடந்தாண்டு தீபாவளிக்கு சன் டிவி ஒளிபரப்பியது. அதனைத் தொடர்ந்து பல முறை ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், இந்த ஊரடங்கைக் கணக்கில் கொண்டு மீண்டும் ஒளிபரப்பு செய்தது. அதற்கு 15184 டி.ஆர்.பி புள்ளிகள் கிடைத்தது. இதற்குப் பிறகு 'தர்பார்' படத்துக்கு 14593 புள்ளிகள் கிடைத்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'தர்பார்'. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ஆம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மக்களிடையே எடுபடவில்லை. அதுவே, டி.ஆர்.பி புள்ளிகளிலும் எதிரொலித்திருப்பது குறிப்பிடத்தக்கது!

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான பால்வெளியில் பூமியைப் போன்றே உயிரினங்கள் வாழ சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானம்  சொல்கிறது.

அந்த வகையில் வேற்றுக்கிரகவாசிகளை ஏலியன் என்று அழைக்கிறது மேல்நாட்டு ஹாலிவுட் சினிமா. ஏலியன் கதை சொல்லும் பல திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வெளிவந்துள்ளது. ஹாலிவுட்டின் முதல் ஏலியன் திரைப்படம் ஈடி  மற்றும் மென் இன் பிளாக் போன்ற படங்கள் ஏலியன் பற்றிய கதைகளை அதிகம் சொன்னது.

ஆனால் ஏலியன் தமிழில் அயலானாக வலம் வரவிருக்கிறது. அயலான் என்ற தமிழ்த் திரைப்படம் இப்போது தயாராகி வருகிறது. நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திக்கேயனும்  வேற்றுக்கிரகப்பிள்ளை   அயலானும் கைகோர்க்கின்றனர். 

இப்படத்தில்  யோகி பாபு இருப்பது இன்னும் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. யோகி பாபு, சிவகார்த்திகேயன் ஏலியன் கொம்போவால் நிச்சயம் காமெடிக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இதனால், பிரமாண்டங்களையும் ஆச்சரியத்தையும் படத்தில் எதிர்பார்க்கலாம். இந்த அயலான் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஏலியன் எனக் கூறப்படுகிறது.

24 ஏம்ஸ்டுடியோ மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இத்திரைப்பத்தில் பானுப்ரியா, ரகுல் பீரித் சிங், கருணாகரன், ஷரத் கெல்கர் உள்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் நடிக்கும் ஏலியன் உருவத்தை தற்போது படக்குழுவினர்  வெளியிட்டுள்ளனர். அந்த ஏலியன் சிவகார்த்திகேயனுடன் லாலிபாப் சாப்பிடுகிறது. எனவே தமிழில் தயாரிக்கப்படும் இந்த ஏலியன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஏலியனாக இருக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்!

 

நடிகர் விஜய் நடித்து கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியான திரைப்படம் பிகில். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 5) ஏஜிஎஸ் குழும உரிமையாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமானவரி புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையிலிருந்து படப்பிடிப்பு நடந்த பகுதிக்கு இன்று காலை சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள் விஜய்யை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால், நீங்கள் யாரென்று தெரியவில்லை எனக் கூறி படப்பிடிப்பு தளத்தில் இருந்த பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விட மறுத்துள்ளனர்.

இதனையடுத்து, ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் வருமான வரித் துறை சோதனை தொடர்பாக விஜய்யை விசாரிக்க வேண்டுமென சம்மன் தயாரித்த அதிகாரிகள், அதனை படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களிடம் வழங்கினர். இதன்பிறகு விஜய்யை சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவரை தனது கேரவனிலேயே விஜய் இருந்திருக்கிறார்.

விஜய்யுடன் சிறிது நேரம் உரையாடிய அதிகாரிகள், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, விஜய்யை அவரது காரிலேயே விசாரணைக்கான அழைத்துச் சென்றனர். கார் விருத்தாச்சலம் நோக்கிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறினர். விஜய்யை சென்னை அழைத்துச் சென்று விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யை விசாரணைக்கான அழைத்துச் சென்ற நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது!

பிகில் படத்தைத் தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். மாஸ்டர் என பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கவுரி கிஷன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்று மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளனர். இருவரும் ரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனமாக கத்தும் வகையில் உள்ளது போஸ்டர்.

இதனை விஜய் ரசிகர்களும் விஜய் சேதுபதியின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்!

தர்பார் படத்தில் நடித்து முடித்த பிறகு ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 என்று அழைக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டது. முதலில் ரஜினி, குஷ்பு, மீனா உள்ளிட்டோரின் காட்சிகள் மட்டும் படமாக எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த கதாநாயகிக்கான விருதைப் பெற்ற கையோடு ஹைதராபாத்தில் நடைபெறும் தலைவர்168 ஷூட்டிங்கிற்குச் சென்றுள்ளார். தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷை  பூங்கொத்து கொடுத்து வரவேற்று, பின்னர் படக்குழுவினருடன் சேர்ந்து ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடினார்.
ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டிவிடுவதுபோன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது!

 

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இதற்குள் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து சூர்யாவை வைத்து இயக்குனர் சிவா படம் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் படம் தள்ளிப்போனதால் ரஜினியின் படத்தை எடுக்கவுள்ளார்.

ரஜினியின் 168 -வது படமாக உருவாக இதில் டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை ரஜினி தனது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் நிலையில், இன்று ‘தலைவர் 168’ படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. இணையத்தில் அந்தப் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பூஜையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொள்ளவில்லை!

 

 

ஸ்ருதிஹாசன், சில நாள்களுக்கு முன்பு தன் நீண்ட நாள் காதல் பயணத்தை முடித்துக்கொண்டார். உறவு முறிவுக்கான காரணம் எதுவும் வெளியிடப்படாத நிலையில், தற்போது தெலுங்கு ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர், அது பற்றி மனம் திறந்திருக்கிறார்.

ஸ்ருதிஹாசனும், லண்டனைச் சேர்ந்த நடிகரும் பாடகருமான மைக்கேல் கோர்சாலும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகச் செய்திகள் வெளியாகிய நிலையில், மைக்கேல் கோர்சால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், `இந்த இளம்பெண் என் வாழ்க்கையின் முக்கிய, சிறந்த நண்பராக எப்போதும் இருப்பார்' எனப் பதிவிட்டு தங்களின் காதல் பயணம் முடிவுற்றது என்று மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.
இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்த ஸ்ருதி, தங்கள் பிரிவுக்கான காரணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

"நான் ரொம்ப கூல் டைப். யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காதவள். மிகவும் எமோஷனலான பெண். அதனால்தானோ என்னவோ மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது எனக்கு ஒரு நல்ல அனுபவம் என்றுதான் சொல்லுவேன். காதலில் விழுவதற்கு எந்த ஃபார்முலாவும் இல்லை. நல்லவர்கள் நல்ல நேரங்களில் நல்லவர்கள். அதே நபர்கள் சில நேரங்களில் மோசமானவர்களாக மாறலாம்.

ஆனால், எனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது. இதில், நான் நிறைய கற்றுக்கொண்டேன். இதை நல்ல கற்றல் அனுபவம் என்று சொல்லலாம். நான் எப்போதும் ஓர் ஆழமான அன்புக்காகக் காத்திருப்பவளாக இருப்பேன். அதை நான் எதிர்பார்த்திருக்கிறேன் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார் ஸ்ருதி!

ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது 'தர்பார்' திரைப்படம். இத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று  நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் முருகதாஸ், ஷங்கர், அனிருத், பாடலாசிரியர் விவேக், நிவேதா, பவானி உள்ளிட்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, 'ரமணா' படத்தைப் பார்த்தபோதே முருகதாஸை எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. 'கஜினி' திரைப்படம் வெளியானதுமே, முருகதாசும் நானும் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் சில காரணங்களால் அது தள்ளிப்போய்விட்டது.

எனக்கு வயசாகிவிட்டது என்பதால், இனி டூயட் பாடல்கள் வேண்டாம் என்று முடிவெடுத்தேன். எனவேதான், கபாலி, காலா போன்ற படங்களில் நடிக்கத் தொடங்கினேன்.

ரஜினிகாந்த் என்ற பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு வைக்கலாம் என்று பாலச்சந்தர் யோசிச்சிட்டு இருந்தப்போ என்னப் பாத்து அந்த நம்பிக்கையை வச்சி அந்தப் பேரை எனக்கு வச்சாரு. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அதே மாதிரிதான், என் மேல நீங்க வச்சிருக்குற நம்பிக்கை என்றும் வீண் போகாது.

தர்பார் படத்தின் ஆதித்யா அருணாசலம் கேரக்டர் மிகவும் பவர்ஃபுல்லானது. 160-க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்திருந்தாலும், இந்தப் படம் ஸ்டைலாக, த்ரில்லாக இருக்கும். சந்திரமுகி படத்தைக் காட்டிலும், நயன்தாரா இப்போதுதான், கிளாமராகவும் எனர்ஜியாகவும் இருக்கிறார்.

இந்த வருடம் என் பிறந்த நாள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான பிறந்த நாள். எழுபதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். அன்று நான், வழக்கம்போல, சென்னையில் இருக்க மாட்டேன். எனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடாதீர்கள் என அவர் தெரிவித்தார்!

ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் திருநாளொல் வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவாகியுள்ள பாடல்களை வரும் 7-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கு முன்பாக இப்டத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். 'நான் தான்டா இனிமேலு' என தொடங்கும் இந்தப் பாடல், படத்தின் ஓப்பனிங் பாடலாக அமைந்துள்ளது. பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் அனிருத் இரண்டாவது முறை இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது!

விஷால் நடித்த 'ஆக்சன்' மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் இன்று வெளியாகிறது.

பொதுவாக பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாகும் போது அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் இன்று அதிகாலை காட்சிகள் எந்தத் திரையரங்கிலும் திரையிடப்பட்டதாகத் தெரியவில்லை

அதுமட்டுமின்றி இன்றைய அனைத்து காட்சிகளுக்கும் முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு இருந்தபோதும் இரண்டு படங்களுக்கும் மொத்தமாக இரண்டு வரிசை கூட முன்பதிவு ஆகவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்தியாகும்

ஒரு சில திரையரங்குகளில் 5 பேர் கூட முன்பதிவு பதிவு செய்யவில்லை என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ரூபாய் 50 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் 'ஆக்சன்' திரைப்படத்தை பார்க்க 5 பேர் கூட இல்லையா? என்பதே இப்போது அங்கே கேள்வியாய் இருக்கிறது!

இயக்குநர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் ,அடுத்த படைப்பாக ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

இத்திரைப்படத்தில்   சரத்குமார், ராதிகா சரத்குமார்,  விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா  ராஜேஸ், மடோனா செபஸ்டியன், நந்தா, சாந்தனு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மணிரத்னம் எழுதிய கதையை, அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனா இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம்   இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமானுக்கு  முதல் வாய்பை வழங்கி, அவர் இசையமைப்பாளராக உருவெடுக்க்க் காரணமாக இருந்த மணிரத்னம், இப்போது சித்ஸ்ரீராமுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்கியுள்ளார்!

தல, தளபதி ரசிகர்கள் இரு துருவங்களாக இருந்தாலும், இருவரும் நல்ல நண்பர்களாகத் தான் உள்ளார்கள்.

பிகில் வெற்றிக்குப் பிறகு தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
நேர்கொண்ட பார்வையைத் தொடர்ந்து, வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.
இந்நிலையில், விஜயின் 64-வது படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. அதே சமயம் அஜித்தின் வலிமை படப்பிடிப்பையும் டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.
இதனையடுத்து, தல - தளபதி இருவரும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்பு, மங்காத்தா மற்றும் வேலாயுதம் படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்தது. அப்பொழுது, அஜித் மற்றும் விஜய் இருவரும் சந்தித்தார்கள்.
சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இருவரின் படப்பிடிப்பும் டெல்லியில் நடைபெற உள்ளதால், இருவரும் சந்திப்பார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் ரஜினி, அதற்கு அடுத்து ஒரே ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அரசியலில் முழு மூச்சாக இறங்க முடிவெடுத்துள்ள நிலையில், அப்படத்தைத் தயாரிக்க சுமார் 4 முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'விஸ்வாசம்'சிவா இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. இதில் ரஜினியின் ஜோடியாக அசுரன் பட நாயகி மஞ்சு வாரியரும் அவரது மகளாக கீர்த்தி சுரேஷும் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் நடமாடுகின்றன. 

'தலைவர் 168'என்று பெயரிடப்பட்டுள்ள ரஜினியின் அடுத்த படம் மிக விரைவில் துவங்க உள்ளது.

இந்நிலையில் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி, அவர் அடுத்து இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கப்போகிறாராம். அப்படத்துக்கான இயக்குநரோ, தயாரிப்பாளரோ இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும் ரஜினியின் கடைசிப்படத்தை தயாரித்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் பாலசந்தரின் கவிதாலயா, ஏ.வி.எம்.,எஸ்.தாணுவின் வி புரடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் போட்டியில் உள்ளனராம். 

இவர்களுடன் தனது வுண்டர்பார் நிறுவனத்துக்கு அப்படத்தைத் தட்டித் தூக்கிவிடவேண்டும் என்ற முடிவில் இயக்குநர் வெற்றிமாறனுடன் தயாராக இருக்கிறாராம் தனுஷ்!

சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில் புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், போராட்டத்தில் குதிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, அமைச்சர் தனது அடியாட்களை ஏவிவிட்டு அடித்து துரத்துகிறார். இதையடுத்து விஜய்(மைக்கேல்) வசிக்கும் பகுதியில் மாணவர்கள் தஞ்சமடைகின்றனர். மாணவர்களை தேடி அப்பகுதிக்கு வரும் அடியாட்களை அடித்து துவம்சம் செய்கிறார் விஜய். 

விஜய்யின் இந்த நடவடிக்கையால் கல்லூரியை இடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார் அமைச்சர். இது ஒருபுறம் இருக்க, நயன்தாரவுக்கு அவரது தந்தை ஞானசம்பந்தன் கல்யாண ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் தான் விஜய்யை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார் நயன்தாரா. 

இந்த சூழலில் விஜய்யின் நண்பரும், தமிழ்நாடு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளருமான கதிரை, விஜய்யின் எதிரியான டேனியல் பாலாஜி கத்தியால் கழுத்தில் குத்தி விடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பயிற்சியாளர் இல்லாததால் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா அடங்கிய பெண்கள் அணியினர் முக்கியமான போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிறது. 

ஆனால் அவர்களை எப்படியாவது போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் கதிர், விஜய்யை பயிற்சியாளராக செல்லுமாறு அறிவுறுத்துகிறார். ரவுடியை எப்படி பயிற்சியாளராக ஆக்க முடியும் என அணியின் மேலாளர் கதிரிடம் கேட்க, அப்போது தான் பிகிலின் பிளாஷ்பேக்கை சொல்கிறார் கதிர்.

ராயபுரத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ராயப்பனின் (தந்தை விஜய்) மகன் தான் பிகில் (மகன்). அப்பகுதி மக்களுக்கு இடையூறாக பல்வேறு வேலைகளை செய்யும் டேனியல் பாலாஜியின் தந்தையை ராயப்பன் தட்டிக்கேட்கிறார். இதனால் இருவருக்கும் பகை உண்டாகிறது. ராயப்பனை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார் டேனியல் பாலாஜியின் தந்தை. தன்னைபோல் தனது மகனும் ரவுடி ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை கால்பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக உள்ளார். 

இந்த விளையாட்டால தான் நம் அடையாளங்கள் மாறும் என மகனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறும் பிகிலுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. இதற்காக அவர் டெல்லி புறப்படும் வேளையில், ராயப்பனை டேனியல் பாலாஜியின் தந்தை கொன்றுவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில், டேனியல் பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை இறந்ததால், ராயபுரம் மக்களை பாதுகாக்க வேண்டும் என பிகில் முடிவெடுக்கிறார்.  இதனால் பிகில் கால்பந்து விளையாட முடியாமல் போகிறது. பின்னர் மைக்கேலாக வாழ்ந்து வருகிறார். 

விஜய்யின் பின்னணியை கதிர் கூற, அவரது விருப்பப்படி விஜய் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது கால்பந்து வீராங்கனைகளுக்கு பிடிக்கவில்லை. ரவுடி எப்படி பயிற்சியாளர் ஆக முடியும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

இந்திய கால்பந்து அசோசியேசன் தலைவராக இருக்கும் ஜாக்கி ஷெராப், விஜய் பயிற்சி அளிக்கும் தமிழ்நாட்டு பெண்கள் அணியினருக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இதனை மீறி பெண்கள் அணி வென்றதா? கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை விஜய் நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை

விஜய், ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய், செண்டிமென்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன்னர் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டை காட்சி வேற லெவல்.

பெண்கள் அணியின் பிசியோதெரபிஸ்டாக வரும் நயன்தாரா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜியும், ஜாக்கி ஷெராப்பும் கொடூரமான வில்லன்களாக வந்து மிரட்டுகிறார்கள். கால்பந்தாட்ட வீராங்கனைகளாக வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். யோகிபாபு, விவேக், கதிர், ஆனந்தராஜ், சவுந்தரராஜா என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். 

நடிகர் விஜய்யை போல், கால்பந்து பெண்களுக்கும் இந்த படத்தில் இயக்குனர் அட்லீ முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. செண்டிமென்ட், ஆக்‌ஷன், ரொமான்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கு படத்தில் பஞ்சமில்லை. 

விஜய்யின் கதாபாத்திரத்தை செதுக்கி இருக்கிறார் அட்லீ.

தந்தை ராயப்பன் கதாபாத்திரம் 4 சீன் வந்தாலும் நச்சுனு இருக்கு. லாஜிக் மீறல்களை சற்று குறைத்திருக்களாம். குறிப்பாக கதிரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சில மணிநேரங்களில் அவர் பேசுவது போன்ற இடங்களை கவனித்திருக்கலாம். 

படத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர். ரகுமான். அவரது பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டான நிலையில், பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக விஜய் வரும் காட்சிகளில் சும்மா தியேட்டரை அதிர வைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பிகில்’ விசில் போட வைக்கும்!

 

விஜயின் பிகில் திரைப்படத்திற்கு நெருக்கடி அளிக்கும் விதத்தில் கோடிகளை கொட்டிக்கொடுக்கும் சிறப்பு காட்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக விநியோகஸ்தர்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்த பணத்தில் பாதியை கேட்டு பிரச்சனை செய்ய, செய்வதறியாது தவித்து வருகிறது தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி குழுமம்.

என்றாலும் தங்களுக்கு நெருக்கமான, அரசியல் பிரமுகர்கள் வாயிலாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண தயாரிப்பு நிறுவனம் முயன்றாலும், விஜய் வந்து தங்களிடம் பேசும் வரை எந்த முன்னேற்றமும் இருக்கப் போவதில்லை என ஒற்றைக் காலில் நிற்கிறது நெருக்கடி கொடுக்கும் அரசியல் கட்சி.

இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனம் விஜயை அணுகினால், அவரோ என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

என்றாலும் சமாதானப் பேச்சுவார்தைக்கு விஜய் தந்தை சந்திர சேகர் அவர்கள் அழைக்கப்பட்டு, அவரும் 'எடப்பாடி எங்களுக்கு தந்தை மாதிரி' என்றெல்லாம் வெள்ளைக் கொடி காட்டி இருந்தார்.

இருந்தாலும் விட மறுக்கும் அரசியல் கட்சி, நடிகர் விஜயே நேரில் வந்து பேசினால் ஒழிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டாது என செக் வைத்து விட்டதாம்!

சென்னை: பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள பல திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு என அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எந்தப் படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார். சிறப்பு காட்சியை திரையிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரையரங்குகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் அரசின் எச்சரிக்கையையும் மீறி பல திரையரங்குகளில் சிறப்புக் காட்சியை திரையிடுவதாகக் கூறி டிக்கெட் விற்பனை செய்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தைக் காண திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்குகளில் முன்பதிவு மற்றும் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் 10-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கெனக் கூறி அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறப்பு காட்சி இல்லாத பட்சத்தில் 6 மணி அல்லது 7 மணிக்குத் தொடங்கும் முதல் காட்சிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என்று திரையரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் கதி கலங்கி நிற்கின்றனர். அதே வேளையில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் திரையரங்குகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பிகில் திரைப்படத்தின் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த சமூக ஆர்வலர் தேவராஜன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசு விதிமுறைகளை மீறி வரும் 25 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பிகில் சிறப்புக் காட்சியை திரையிட பல திரையரங்குகள் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கான டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய திரையரங்குகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பண்டிகை நாட்களில் சிறப்புக் காட்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை சில திரையரங்குகள் தவறாக பயன்படுத்தியதால் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாலேயே பிகில் உள்ளிட்ட திரைப்படங்களின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிகில், திகில் என எந்தத் திரைப்படமானாலும், யாராக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் பொதுவானது எனவும் தெரிவித்தார்!

நடிகை ஆண்ட்ரியா தன்னுடன் தொடர்பில் இருந்த திருமணமான அரசியல் வாரிசு யார் என்பதை தெரிவிக்க இருந்த நிலையில், அரசியல் பலத்தால் அவரது வாயை அடைத்து இருக்கிறார் சர்ச்சையில் சிக்கிய அரசியல் வாரிசு நடிகர்.

முன்னதாக தான் எழுதிய 'ப்ரோக்கன் விங்ஸ்' என்கிற புத்தக வெளியீட்டு விழாவில், தான் திருமணமான ஒருவர் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் செய்த கொடுமைகளால் மனஉளைச்சலுக்கு ஆளாகி,

சில மாதங்கள் ஆயூர்வேத சிகிச்சை எடுத்து திரும்பியதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தான் வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தில், தன்னுடன் தொடர்பில் இருந்த அந்த நபர் யார் என்பது குறித்த தகவலும் இடம்பெற்று இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அந்த தகவலை அவர், நேரடியாக தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியிட இருப்பதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். என்றாலும் அவர் சொன்னபடி அந்த தகவலை வெளியிட வில்லை.

இதற்கு அரசியல் வாரிசு நடிகர் இவருக்கு, தனது அரசியல் செல்வாக்கை உபயோகித்து நடிகைக்கு விடுத்த மிரட்டல்களே காரணம் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த நபர் யார் என்பது குறித்த செய்தி வெளியிட்ட பிரபல ஊடகம் ஒன்றும், அவசர அவரசமாக அந்தச் செய்தியை நீக்கி இருந்ததும் தற்போது பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது!

பிரபல காமெடி நடிகர் கிருஷ்ண மூர்த்தி, படப்பிடிப்பு தளத்திலேயே மாரடைப்பால் திடீரென காலமானார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் புரொடக்ஷன் மானேஜராக வேலை பார்த்தார். பின்னர் நடிகராக மாறியவர், காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தவசி படத்தில் பைத்தியகாரர் வேடத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து வடிவேலுவின் குழுவில் இணைந்து பல படங்களில் காமெடி வேடங்களிங் நடித்தார்.
குமுளி அருகே படப்பிடிப்பில் ஒன்றில் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது!

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும்  தளபதி 64 படம் தற்போது உறுதியாகியுள்ளது.

எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குகிறார்.

தலைப்பு இன்னும் வைக்கப்படாத நிலையில், இப்படத்திற்கான பூஜை, சென்னையில் நேற்று நடைபெற்றது.

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கேங்க்ஸ்டர் கதைக்களமாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பைல் கூட்டியிருக்கிறது.இதனால்,

ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.  விஜய் சேதுபதி இதில் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது!

 

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, வேல ராமமூர்த்தி, சமுத்திரக்கனி, நட்டி, சூரி என மெகா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. 

நீராவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் வெளியானதையொட்டி பல்வேறு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன.

அதிலும் குறிப்பாக பலரும் தெரிவித்திருக்கும் கருத்து, இந்தப் படம் ஒரு மெகா சீரியல் என்று சொல்லியிருப்பதுதான்.

அண்ணன் தங்கை பாசத்தைச் சொல்லும் இக்கதையில் குடும்ப உறவின் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களைச் சொல்லியிருப்பது அழகு. சில இடங்களில் வசனங்களால் ஈர்க்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.  

இரண்டு படங்களின் தோல்விக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு இது முக்கியமான படம்.    அந்த வகையில் இதில் ஓரளவு தேறியிருக்கிறார். கொஞ்சம் மெகா சீரியல் பார்ப்பது போன்று இருந்தாலும், வசனங்களும், சில காட்சிகளும் ஈர்க்கின்றன. ஆனாலும், பல இடங்களில் சலிப்புத் தட்டவே செய்கிறது.

அனு இம்மானு வேல் ஏதோ வந்து போகிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் கதாப்பாத்திரம் உருக்கம். அவரின் நடிப்பும் உருக்கம். பாரதிராஜா, வேல ராமமூர்த்தி, நட்டி, சமுத்திரக்கனி எல்லாருமே சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். சூரியின் காமெடி சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு கண்களில் நிற்கிறது.

பழைய பாணி கதை  போல் இருப்பதாலும், சீரியல் அம்சக் காட்சிகள் நீள்வதாலும் கொஞ்சம் சலிப்புத் தட்டினாலும்... நம்ம வீட்டுப் பிள்ளையை ஏற்றுக்கொள்ளலாம்!

 

கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' முடிந்தவுடன், ஷங்கரின் அடுத்த படம் உலகப் படமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

உலகத் தரத்திலான கதையும், அதற்கான முதற்கட்டப் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் ஜாக்கி சான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நல்ல கதையம்சம் கொண்ட இந்தியப் படங்களுக்கு சீனச் சந்தைகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை இயக்குனர் ஷங்கர் நன்கு கணக்கிட்டுள்ளார்.  இதை மனதில் வைத்து, தனது சந்தையை விரிவுபடுத்த விரும்புகிறார் ஷங்கர்.  

இந்திய திரையுலகின் மேலும் நான்கு சூப்பர்ஸ்டார்கள் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

நீருக்கடியில் நிகழும் அதி பயங்கர சாகச த்ரில்லராக இப்படம்  இருக்கும் என்று சொல்லப்படுகிறது!

 

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி நிச்சயதார்த்தம் செய்து ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாக பல வதந்திகள் வந்துள்ளன. 

ஆனால், அவர்கள் தரப்பு அதற்கு ஒருபோதும் பதிலளிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், செய்திகள் எப்போதும் வைரலாகவே இருக்கின்றன.

தற்போது நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளாதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

டிசம்பர் 25 அன்று திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறப்படுகிறது. 

திருமணம் வெளிநாட்டில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்து அல்லது கிறிஸ்தவ பாரம்பரியத்தின் படி திருமணம் நடக்குமா என்பது இன்னும் தெரியவில்லை.  இந்தத் திருமணத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பெரிய புள்ளிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது! 

 

ஒவ்வொரு படம் முடித்ததும் குடும்பத்துடன் வெளிநாடு செல்வது தளபதி விஜய்யின் வழக்கம். ஆனால், அண்மைய காலமாக அந்த வழக்கத்தை மாற்றியிருந்தார் விஜய்.

இந்நிலையில்,  'பிகில்' படம் வரும் தீபாவளிக்குத் திரைக்கு வரும் நிலையில், அடுத்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவிருப்பதாலும், தற்போது அவர் வெளிநாடு சென்றுள்ளார். 
இதனையடுத்து விமான நிலையத்தில் அவர் மாஸ்க் அணிந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஒரு வேளை நம்ம மலேசியாவிற்கு வந்திருப்பாரோ புகைமூட்டம் இருப்பது தெரியாமல்?

 

அட்லி இயக்கத்தில் விஜய் - நயன் தாரா நடித்துள்ள 'பிகில்' படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

இப்படத்தில், நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் படத்திற்கான பாடல்களை எழுதியிருக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் `சிங்கப் பெண்ணே', `உனக்காக' பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸார் லேசாகத் தடியடி நடத்தினர். நிகழ்ச்சியில் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபனா, `மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள நடிகர் சிவா, ரம்யா தொகுத்து வழங்கினர்.

ரஹ்மான் கச்சேரிக்குப் பிறகு இயக்குநர் அட்லி பேசுகையில், ``தெறியை விட இரண்டு மடங்கு மெர்சல். மெர்சலை விட மூன்று மடங்கு பெரியது பிகில். என்னை வேற நடிகர்கள் கூடவும் படம் பண்ணுங்கன்னு விஜய் அண்ணா சொன்னார். ஆனால், நான் எந்த கதை எழுதினாலும், எனக்கு மனதில் முதலில் வருவது அவர்தான். மெர்சல் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் நிறைய வந்தன. இருந்தாலும் என்னுடய லக்கி நடிகர் விஜய் அண்ணாதான். என் அண்ணன விட்டு நான் எப்படி வெளியே போவேன். அவர் இல்லைனா நான், என்னோட வளர்ச்சி எல்லாம் ஒண்ணுமே இல்லை. கமர்சியல் படமா, விளையாட்டு படமா என்பதைத் தாண்டி உங்களுக்கு பிடிச்ச படமா பிகில் இருக்கும்.

ராஜா ராணி கதை சொல்லும்போது ஒரு சட்டையோட கதை சொன்னேன் ஓகே ஆயிடுச்சு. அந்த சட்டைதான் ராசின்னு தெறி கதை சொன்னேன். அதுவும் ஓகே அயிடுச்சு. அந்த ராசியான சட்டை மெர்சல் பட கதை சொல்லப்போறப்போ பழசாகிடுச்சு. இருந்தாலும் அண்ணன நம்பி போனேன் மெர்சலுக்கு ஓகே சொன்னார். அப்போதான் புரிஞ்சது, எனக்கு ராசி சட்டை கிடையாது. விஜய் அண்ணன் தான்னு" என்று பேசியவரிடம், அவரது நிறம் குறித்து வெளியாகும் ட்ரோல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ப்பதிலளித்த அவர், ``இங்கிலீஷும் ஹிந்தியும் வெறும் மொழிகள் மட்டும்தான்; அதுவே தகுதி இல்ல. அதுமாதிரி கறுப்பும் ஒரு கலர் அவ்ளோதான்" என்றவர் டீசர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறினார்.

இதையடுத்து மேடையேறிய விஜய், ``லைஃப் ஃபுட்பால் கேம் மாதிரி. நம்மலாம் கோல் அடிக்க ஆசைப்படுவோம். அதைத் தடுக்க ஒருகூட்டம்வரும். நம்மகூட இருக்குறவனே சேம்சைட் கோல் போட்ருவான். யாரோட அடையாளத்தையும் எடுத்துக்கிடாதீங்க. உங்களுக்குனு ஒரு அடையாளத்தை கொண்டுவாங்க. புடிச்சா எடுத்துக்கோங்க; இல்லைனா விட்டுருங்க. உலகத்துலயே உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகன்தான். வெறித்தனம் பாட்டுக்காக ஒரு சாம்பிள் பாடி ரஹ்மான் சாருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் அவர் மும்பைக்கு போயிட்டார்.

ஒருவேளை நான் பாட வேண்டாம்னு சொல்லிட்டாங்க போலன்னு நான் நினைச்சேன். ஆனால், அட்லி போன் பண்ணி ரஹ்மான் சார் ரெக்கார்டிங்க்கு கூப்பிட்டதா சொல்லும்போதுதான் எனக்கே தெரிஞ்சது. அரசியல்ல புகுந்து விளையாடுங்க; ஆனா விளையாட்டுல அரசியல் பாக்காதீங்க. சுபஸ்ரீ விவகாரத்தில் டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் கொண்டுவந்திருந்த நல்லா இருந்திருக்கும். யார் மேல பழிபோடுறதுனு தெரியாம லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுறாங்க. யாரை எங்கு உட்கார வைக்கணுமோ... அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்.." என்று பேசினார்!

 

'தர்பார்' பட வேலைகளில் தற்போது ரஜினி பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையுல் ரஜினி எப்போது முழு நேர அரசியலில் இறங்குவார் என பல்வேறு தரப்பினர்ய்ம் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக அவரின் ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். ஆனால், ரஜினி இதுநாள் வரைக்கும் வழக்கம்போலவே குழப்ப நிலையில்தான் இருந்து வருகிறார்.
கமல்ஹாசன் கட்சி தொடங்கியதோடு, தேர்தலில் போட்டியிட்டு, தமது பலத்தைக் காட்டிவிட்டார்.
ஆனால் பல ஆண்டுகளாய் கோடி காட்டி வந்தாலும், இன்னும் மௌன சாமியாராகவே தொடர்கிறார் ரஜினி.
இந்நிலையில் தமிழக பிஜேபி தலைமை பதவி ரஜினிக்குத் தேடி வந்ததாகவும், அதையும் அவர் கிடப்பில் போட்டுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன.
இன்னொரு புறம் தர்பார் படத்திற்குப் பிறகு நிச்சயம் அரசியலில் குதிப்பார் எனவும் தகவல்கள் சொல்கின்றன!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில்.  இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்த நிலையில், விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய். அதற்கான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ‘பிகில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. 95% படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது. படம் குறித்த அப்டேட்டுகளை அறிவிக்காததற்கு மன்னியுங்கள். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்து செய்ய முயற்சி செய்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார்

மேலும் பிகில் படத்தில் தினமும் 400-க்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் தளபதி விஜய். அவருடைய மனது தங்கம் போன்றது. தளபதி தான் பெஸ்ட் என்றும் கூறியுள்ளார்!

உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய 'தி ஜங்கிள் புக்' படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரே தற்போது 'தி லயன் கிங்' படத்தை இயக்கியுள்ளார். 1994-ல் அனிமேஷன் படமாக வெளிவந்த படத்தின் ரீமேக்தான் இது. 

இந்நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் வசந்த பாலன், ஃபேஸ்புக்கில் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் லயன் கிங் அரசியல் குறித்து கூறியுள்ளார்.

 

ஜெயில் திரைப்படத்தின் இறுதி ஒலிக்கலவை வேலைகள் நடந்து கொண்டிருந்ததால், இன்றுதான் குழந்தைகளை அழைத்துக்கொண்டு லயன் கிங் திரைப்படத்திற்கு செல்ல இயன்றது. திரையரங்கு முழுக்க கிராமத்தையும், வனத்தையும் பார்க்க அழைத்துச் செல்லாத பெற்றோர்கள், ஒருவிதக் குற்ற உணர்ச்சியுடன் லயன் கிங் திரைப்படத்திற்குத் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள். ஒருநாளும் தங்கள் குழந்தைகளுக்கு இவர்கள் அடர் வனத்தைக் காட்டப்போவதில்லை. ஆகவே இது ஒரு சமரச ஏற்பாடு. இதைக் குழந்தைகளும் அறிந்திருந்தார்கள். திரையரங்கில் குழந்தைகளின் ஆரவார ஒலி இடையறாது கேட்ட வண்ணம் இருந்தது. 

முக்கியமாக மனோபாலா, சிங்கம்புலி, ரோபோ சங்கர் இவர்களுடைய காமெடியான குரல் திரையரங்கில் இடைவிடாத சிரிப்பலையை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது . ஆனால் எனக்குப் படம் பார்க்கும்போது ஒன்றுதான் தெரிந்தது. வயது வந்தவர்களுக்கு ஒரு 'பாகுபலி' என்றால் , குழந்தைகளுக்கு ஒரு 'லயன் கிங்' என்று தோன்றியது. இடைவிடாது இங்குக் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சொல்லப்படுகிற கதைகளின் அரசியல், ராஜாவுடைய மகன் மீண்டும் அந்த ராஜ பதவிக்கு வர வேண்டும். அதற்காகப் போராட்டம், மற்றும் யுத்தம், குருதியாறு. இறுதியில் ராஜாவிடம் மகன் வில்லனைக் கொன்று அந்தச் சிம்மாசனத்தை அடைகிறான். மக்கள் சந்தோஷமடைகிறார்கள். இந்த அரசியலை, இது போன்ற கதைகளைத் தொடர்ந்து படங்களில் பார்ப்பது ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. மகாராஜாவின் மகனைத் தவிர, இந்த உலகத்தில் வேறு யாருக்கும் அறிவு என்பதே இல்லை என்கிற ஒருவித மூளைச் சலவையைத் தொடர்ந்து மக்களிடம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது வாரிசு அரசியலை மக்களாட்சியில் உருவாக்குகிற ஆயுதமாக நான் பார்க்கிறேன் என்று எழுதியுள்ளார்!

விளம்பரம்:

 

வசூலில் சாதனைகள் படைத்து, மிகப்பெரும் வெற்றிபெற்ற படம் ஷங்கரின் முதல்வன். இப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடித்தார்.
தற்போது 'முதல்வன் 2-ஆம் பாகத்தில் விஜய் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
அப்போதைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் பரப்ரப்பாக பேசப்பட்ட இப்படம் முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது. ஆனால் பல அரசியல் காரணங்களுக்காக ரஜினி அப்படத்தில் நடிக்கவில்லை. ஆனாலும் படம் ஹிட் ஆனது.

ஷங்கர் தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகளில் இறங்கியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க உருவாக இருந்த 'இந்தியன் 2' பிரச்சனைகளால் துவக்கப்படாமல் உள்ளது. '24 ம் புலிகேசி' படமும் பிரச்சனையில் இருப்பதால், ஷங்கர் மீது லைகா தயாரிப்பு நிறுவனம் கோபத்தில் உள்ளது. இதனால் ஷங்கர் தன் அடுத்த படத்தை துவக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'பிகில்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து விஜய் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு பிறகு ஷங்கர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

தற்போது ஷங்கர், 'முதல்வன் 2' படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகளை ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமென தெரிகிறது. இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி!

தற்போது விஜயின் 63-வது படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. படத்தின் பெயரும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

இயக்குனர் அட்லீ மற்றும் தளபதி விஜயின் கூட்டணியில் வெளி வர உள்ள மூன்றவது படத்தின் பெயர் 'பிகில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் தோற்றம் அளிக்கிறார்.

இரு வேறு தோற்றத்தில் அசத்திய விஜய்,
வேஷ்டி அணிந்து வயதான தோற்றம்  கொண்டு லோக்கல் டானகவும், இளமை  கால்பந்து வீரர் தோற்றத்திலும் போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

படத்தின் பார்வையில் இருந்து விளையாட்டு சம்மந்தப்பட்ட படம் என்று தெரிகிறது.

'கேப்டன் மைக்கேல்', 'வெறித்தனம்', 'அசால்ட்', 'பிகில்' என பல பெயர்கள் வதந்திகளாக வந்த வண்ணம் இருந்தாலும், இப்போது 'பிகில்' என்ற பெயர் சூட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் கால்பந்து வீரர் தனது உள்ளூர் கால்பந்து அணியை எவ்வாறு தேசியப் போட்டியில் வெற்றி பெறச் செய்கிறார் என்பது ஒரு வரிக் கதையாக உள்ளது. மைக்கேல், பிகில் என்ற கதாபாத்திரத்தில் தளபதி நடித்துள்ளார். ஏஜெல் என்ற பாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெராப், விவேக், கதிர், டேனியல் பாலாஜி, இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசைப் புயல் ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், எடிட்டிங் ரூபனும் செய்துள்ளனர். 'மெர்சல்' படத்தில் பணியாற்றிய குழு இப்படத்திலும் பணியாற்றி உள்ளனர்.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது!

கோலாலம்பூர் ஜூன் 21-

'மாலீக் ஸ்ட்ரீம்' வெளியீடான 'சிந்துபாத் திரைப்படம், இன்று (ஜூன் 21) மலேசியா முழுவதும் திரையிடப்படும் என அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வந்த நிலையில், தற்போது  இப்படம் வெளியீடு காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சற்றுத் தாமதம் ஏற்படும் என, மாலீக் ஸ்ட்ரீம் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில்  அறிவித்துள்ளது.

தாமதத்திற்கான காரணம் எதுவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தாமதத்திற்கு மன்னிப்புக் கோரி,  தவிர்க்க முடியாத சில காரணங்களால், படம் வெளியிடுவது தாமதமாகி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இப்பிரச்னையை விரைந்து சரி செய்து, அடுத்த அறிவிப்பை வழங்குவோம் என, மாலீக் ஸ்ட்ரீம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.  இதில், நடிகர் நாசர் தலைமயிலான பாண்டவர் அணியும்,  நடிகர் கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.  இருதரப்பினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்த கேள்வியை எழுப்பி, யாருக்கு ஆதரவு என்று  செய்தியாளர்கள் கேட்டபோது, ’’இது நடிகர் சங்கத் தேர்தல்தானே.  நாடாளுமன்றத் தேர்தல் இல்லையே.  இவ்வளவு பரபரப்பாக்க வேண்டிய அவசியம் இல்லை.  கடந்த  காலங்களில் அவர்களுக்கு (விஷால் அணி) வாய்ப்புக் கொடுத்தார்கள். 

முறையாக இயங்கவில்லை என்பதால்தான் இவ்வளவு எதிர்ப்புகள் வருகிறது.   என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில் ஐயா பாக்யராஜை நான் அறிவேன்.  அவர் எந்த வேலையைச்செய்தாலும் அதில் நேர்மையாக இருப்பார்.   எழுத்தாளர் சங்கத்திற்குத் தலைவராக இருக்கும்போது 'சர்க்கார்' பிரச்சனையில் அவருக்கு எவ்வளவோ நெருக்கடிகளைக் கொடுத்தபோதும் நேர்மையின் பக்கம் நின்றார்.   அதனால் அவர் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்.   அவர் வெல்லுவதற்கு நான் வாழ்த்துகிறேன்.’’என்று பதிலளித்தார்!

'பொன்னியின் செல்வன்' படத்தை ரூ. 800 கோடி செலவில் எடுக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக வைத்து படம் எடுக்க உள்ளார் இயக்குநர் மணிரத்னம். 'பொன்னியின் செல்வனை'ப் படமாக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.  அந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேற உள்ளது. இரண்டு பாகங்களுக்கான பட்ஜெட் ரூ. 800 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. படத்தை பாகுபலியை விடப் பிரமாண்டமாக எடுக்கப் போகிறாராம். கிராபிக்ஸ் பணிகள் ஆச்சரியப்படும் வகையில் இருக்குமாம். மணிரத்னம் தனது இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தது இல்லை. இதுதான் முதன் முறை ஆகும்.

'பொன்னியின் செல்வன்' கதைக்கு ரூ. 800 கோடி தாராளமாக செலவு செய்யலாம். அதில் தவறே இல்லை.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மணிரத்னம் தேர்வு செய்துள்ள நடிகர்கள், நடிகையர்களில் சிலர் அந்தக் கதாபாத்திரங்களுக்கு ஒத்து வர மாட்டார்கள் என்கிறார்கள் ரசிகர்கள். தயவு செய்து அவர்களை நடிக்க வைக்க வேண்டாம் சார் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பொன்னியின் செல்வன் போன்ற அற்புத படைப்பைப் படமாக எடுக்காமல் இருப்பதே நல்லது.

கற்பனையில் உள்ள கதாபாத்திரங்களைத் திரையில் காட்ட வேண்டாம். மணிரத்னம் இந்த முயற்சியை கைவிடுவது நல்லது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்!

 

எழுத்தாளரும், நாடக மற்றும் திரைப்பட கலைஞருமான கிரிஷ் கர்னாட் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட மொழி எழுத்தாளர் கிரிஷ் கர்னாட். 1938- ஆம் ஆண்டு, மே 19-ஆம் தேதி மும்பையில் பிறந்த இவர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அங்கு அவர் ‘யாயதி' என்கிற நாடகத்தை எழுதினார். அந்த நாடகத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல அவர் எழுதிய ‘துக்ளக்' (1964) மற்றும் ‘ஹயவாதனா' (1972) ஆகிய நாடகங்களும் பலரால் பாராட்டப்பட்டது.

கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வந்தார். உலக சினிமாவிலும் அவர் தனி அக்கறை எடுத்துக் கொண்டார். 1970 -ஆம் ஆண்டு ‘சம்ஸ்காரா' என்கிற கன்னட திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதினார்.

தமிழில் 'காதலன்', 'ரட்சகன்', 'ஹேராம்', '24' போன்ற படங்களில் சிறப்பாக நடித்தார்.

கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவர். பத்மஸ்ரீ, பத்ம பூஷண் போன்ற விருதுகளும் பெற்றவர்.

நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என நாடக,  திரைப்பட உலகில் தனி முத்திரை பதித்த அவர், உடல்நலம் குன்றி இருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வந்த அவர்  இன்று அதிகாலை  காலமானார். அவரது மறைவுக்குத் திரைப்பட பிரபலங்கள், கலைஞர்கள் பல்வேறு துறை சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்!

நடிகை கீர்த்தி சுரேஷின் அண்மைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘சாவித்ரி’ வாழ்க்கை வரலாற்றில் சாவித்ரியாக  நடித்ததில் இருந்து கீர்த்தி சுரேஷுக்குப் பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால், தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  உடற்பயிற்சி முடித்துவிட்டு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் கீர்த்தி சுரேஷ். அதில், மிகவும் உடல் இளைத்துக் காணப்பட்டார். இதனால், பலரும் இப்புகைப்படத்தை இணையத்தில் பகிரத் தொடங்கினர். விளையாட்டை மையப்படுத்திய படங்களில் நடிக்கவுள்ளதால், உடலை அவர் மிகவும் குறைத்துள்ளார் என்று கீர்த்தி சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

 

வட சென்னை படத்திற்குப் பிறகு வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் அசுரன். இது ஒரு நாவலை மையமாகக் கொண்டு உருவாகும் படம். இதில் தனுஷ் விவசாயியாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
மஞ்சு வாரியார் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இயக்குனர் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். தனுசுக்கு உதவும் ஒரு அதிகாரியின் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி!

இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், சிம்புவின் சகோதரருமான குறளரசன் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய குறளரசன், நபிலா அஹமத் எனும் இஸ்லாமியப் பெண்ணை கடந்த 26-ஆம் தேதி எளிய முறையில் திருமணம் செய்தார்.

இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உற்சாகம் பொங்க அனைவரையும் வரவேற்றார் டி.ஆர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாக்யராஜ், லதா ரஜினிகாந்த், சித்தார்த், வெங்கட் பிரபு, கௌதம் கார்த்திக் உட்பட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். முதன் முறையாக சிம்பு தனது ஸ்லிம் லுக்கில் அசத்தியது, அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது!

தனது காதலன் விக்னேஷ் சிவனுக்கு, நடிகை நயன்தாரா விரைவில் குட்பை சொல்லக்கூடும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
நடிகை நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவைக் காதலித்து வந்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சிம்புவிடம் இருந்து பிரபுதேவாவுக்கு மாறினார். பின்னர் பிரபுதேவாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விக்னேஷ் சிவன் கைக்கு மாறினார் நயன்தாரா. இப்பொழுது இங்கும் சிக்கல் விழுந்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது
விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல் கடந்த சில வருடங்களாக நன்றாக சென்றுகொண்டிருந்தது. இப்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை. தற்போது திருமணம் எனும் வார்த்தையால் திரும்ப விரிசல் விழுந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பே நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஊர் சுற்றிவருவது விக்னேஷ் சிவன் வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் நயன்தாரா பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இப்போது திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனால் நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவன் வீட்டிற்கு சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. அதனால் இருவரும் பிரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என செய்திகள் வெளியாகியிருக்கிறது!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63-வது படத்தில் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. அதன்பிறகு சென்னையில் கிரிக்கெட் விளையாட்டை ஷாருக்கான் பார்க்க வந்தபோது அவரை அதே மைதானத்திற்குச் சென்று சந்தித்தார் அட்லீ. பின்னர் இருவரும் தனியாகவும் சந்தித்து பேசினார். விஜய் படத்தில் அவரை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தவே அட்லீ சென்றதாகவும், 'மெர்சல்' படத்தின் இந்தி ரீ-மேக் தொடர்பாகப் பேசியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் விஜய் - ஷாருக்கான் நடிப்பது பற்றிய செய்திகள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
விஜய் 63-வது படத்தில் 15 நிமிடம் மட்டுமே வரக்கூடிய ஒரு எதிர்மறையான கேரக்டரில் ஷாருக்கான் நடிக்கிறாராம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.
விஜய் 63-வது படத்தில் ஷாருக்கான் குறைவான நேரமே வந்தாலும், அவரது கேரக்டரை எதிர்பார்க்க வைக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெறுகிறதாம்!

'பிக்பாஸ் 2' புகழ் மஹத், அவருடைய காதலி பிராச்சி இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் நேற்று லக்னோவில் அவர்களின் நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடைபெற்றது. `மங்காத்தா', `ஜில்லா', `காளை', `வல்லவன்', `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' ஆகிய படங்களிலும் நடித்தவர் மஹத்.

ஆனாலும், மஹத் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகுதான்... 
மஹத்தும் அவர் காதலி பிராச்சி மிஸ்ராவும் துபாயில் நடந்த விழாவொன்றில்தான் முதன்முதலில் சந்தித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள், பிறகு காதலைச் சொல்லியிருக்கிறார்கள். பல வருடங்களாகக் காதலில் இருந்தவர்களுக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது.
பிராச்சி, 2012-ல் 'மிஸ் இண்டியா எர்த்' அழகியாகத் தேர்வானவர். இபதுபாயில் ஃபேஷன் அண்ட் ஈவண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி வைத்திருக்கிறார்!


அண்மையில் ஒரு சினிமா மேடையில் தயாரிப்பாளர் ராஜன் "ஆன்லைன்ல பெண்களும் ஒரு தப்பு பண்ணுறாங்க. பெரிய ஆளுங்களைத் தாங்கள் டச் பண்ண முடியலைன்னாலும், அவுங்கள பத்தி தப்பா சொல்லி டேமேஜ் பண்ணுறாங்க" என்று 'மீடூ' குறித்து விமர்சித்தார்.
பிறகு, " இதெல்லாம் ஸ்ரீரெட்டி என்று ஒரு பொண்ணு ஆரம்பிச்சது. அவங்க ஒழுக்கம் தவறாத ஆந்திர கண்ணகி" என்று கிண்டலாகக் கூறி "அவுங்கதான் இந்த டைரக்டர் என்னை கூப்பிட்டார். அந்த டைரக்டர் என்னை கூப்பிட்டார்னு சொன்னாங்க. நான் கேக்குறேன், நீ எத்தனை பேரை கூப்பிட்ட?" என்று பரபரப்பைப் பற்ற வைத்தார்.
தொடர்ந்து  "சமீபத்தில் குஷ்பூ ஒருத்தனை அடிச்சிருக்காங்க. அது கரெக்ட். அடிக்கணும், நம்ம பெண்களை தவறா பயன்படுத்த நினைச்சா அடிக்கணும். ஆனா, அந்த அடிப்படையில ஒரு பொண்ணு முந்தாநேத்து வைரமுத்துவை தரக்குறைவா பேசியிருக்கு. கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டையார் வரிசையில் தமிழைக் காப்பாற்றுபவர் வைரமுத்து. அவரை இப்படியெல்லாம் சீண்டுவது தவறு. எவ்வளவு கஷ்டப்பட்டு உயர்ந்திருக்காங்க அவங்க. அவர்களைப் போய் ஒரு சின்ன ஆசைக்காக சிதைக்கிறீங்க? அப்படிப் பார்த்தால், என்கிட்டே சில ஆளுங்க இருக்காங்க, பார்த்துக்கங்க" என்று தொடர்ந்து மீடூ குறித்தும் பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்த பெண்கள் குறித்தும் கடும் விமர்சனத்தை வைத்தார்.

இவருக்குப் பின் நிகழ்ச்சியில் பேச வந்த இயக்குனர் பா.ரஞ்சித், கே.ராஜன் பேசியது குறித்த தனது கருத்தை தெரிவித்தார். "அய்யா ராஜன் அவர்கள் பேசுனாங்க. அதுல பெண்கள் குற்றச்சாட்டு வைப்பதை பற்றி மட்டும் பேசுவது தவறு. அவர்களது குற்றச்சாட்டுகளை ஆராய வேண்டும், விசாரிக்க வேண்டும். சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டும் போக்கு நிறைந்திருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி இருக்கும்போது ஸ்ரீரெட்டி போன்றோர் குற்றச்சாட்டுகளை வைப்பதாலேயே அவர்களை குற்றம் செய்தவர்களாக பார்ப்பதும் அவர்களை குறை சொல்வதும் மிக மிக தவறு. இதை நான் எதிர்க்கிறேன். மகிழ்ச்சி" என்று கூறி தனது பேச்சை முடித்தார்.

பல மேடைகளில் ரஞ்சித், ஏற்கனவே பேசியவர்களின் கருத்தை மறுத்து பேசியிருக்கிறார், தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் நடந்த பல சினிமா விழாக்களில் மேடையிலேயே கருத்து பரிமாற்றங்களும் மோதல்களும் நடந்திருக்கின்றன!

Recent News