loader

All News

கோலாலம்பூர், மார்ச் 18-

மித்ரா எனப்படும் இந்திய உருமாற்ற பிரிவில் மீண்டும் ஆய்வை மேற்கொள்வதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறினார்.

செடிக் என உருவாகிய இந்த பிரிவு தற்போது மித்ரா என பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்திய சமுதாயத்தின் உருமாற்றம் குறித்த ஆய்வு அப்பொழுதே செய்யப்பட்டு விட்டது. மேலும் இந்திய மேம்பாட்டு திட்ட வரைவை அமலுக்கு கொண்டு வந்தாளே போதும், இந்திய சமுதாயம் சார்ந்த எந்த ஆய்வினையும் செய்யத் தேவையில்லை என அவர் சொன்னார்.

கடந்த காலத்தில் மித்ராவின் மூலம் இந்திய சமுதாய குழந்தைகளுக்கு கல்வி,  அரசு சாரா இந்திய அமைப்புகளுக்கு மானியம் வழங்குதல், இளைஞர்களை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், பி40 மக்களுக்கான உதவிகள் என பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. தற்போது அவை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் தவனை முடிவடையும் நிலையில் இன்னுமும் மித்ராவில் ஆய்வை மேற்கொண்டிருந்தால் மக்களுக்கான உதவிகள் எப்பொழுதுதான் வழங்கப்படும் என அவர் கேள்வி எழுப்பினார்.

தற்போது நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. வரிச் சுமை, நாணய வீழ்ச்சி என பலவற்றால்,  குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தினர் பல இன்னல்களுக்குள்ளாகி உள்ளனர். 

இந்நிலையில் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட மானியம் வழங்குவது இழுப்பறியாக இருந்தால் அது மக்களுக்கு இன்னும் கூடுதல் இன்னலை விளைவிக்கும் என அவர் சொன்னார்.

ஆகையால் மித்ராவில் ஆய்வை மேற்கொள்வதை நிறுத்தி விட்டு செயல் திட்டத்தில் இறங்குங்கள். பிரதமர் துறையின் கீழ் மித்ரா இருந்தபோது அதன் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இந்த பிரிவு ஆரம்பமானதே பிரதமர் துறையில்தான். 

ஆகையால் மித்ரா பிரதமர் துறையின் கீழ் மீண்டும் செயல்பட வேண்டும். மித்ரா பிரதமரின் நேரடி பார்வையில் செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு சேர வேண்டியவை முறையாக வந்து சேரும் என டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

படம்: காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர்,மார்ச் 18-

பிள்ளைகளுக்கு தேர்வு இல்லை என்றால்  இடைநிலைப் பள்ளிகளில் புகுமுக வகுப்பு ஏன் உள்ளது.

தேர்வு உள்ளதா இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்து பெற்றோர் விடுபட வேண்டும் என ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா கூறினார்.

ஶ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கியது முதல் 6ஆம் ஆண்டு மாணவர்கள்தான் இங்கு அதிகம் வந்து கல்வி பயில்கின்றனர்.

ஆனால், இம்முறை 6ஆம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது.

இதற்கு காரணம் யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதாதது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. புகுமுக வகுப்பை தாண்டி மாணவர்கள் எப்படி நேரடியாக படிவம் 1க்கு செல்கிறார்கள் என்பதை பெற்றோர் சிந்திக்க வேண்டும்.

அதற்கு பிள்ளைகளை தயார் செய்வது குறித்தும் பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமென அவர் சொன்னார்.

அதற்கு தேர்வு உள்ளதா இல்லையா என்பது குறித்து சிந்திகாமல் பிள்ளைகளை எப்படி அனைத்து சவால்களை எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய சமூகம் எந்த வகையில் பிரிந்து இருந்தாலும் கல்வி என்று வந்தால் அனைவரும் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும்.

இது தான் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இலக்கு என்று சுரேந்திரன் கூறினார்.

கோலாலம்பூர்,மார்ச் 18-

கேகே மார்ட் கடையில் அல்லாஹ் என்று எழுத்தப்பட்ட காலுறைகள் வைக்கப்பட்ட விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேவை மசீச வலியுறுத்தியுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து கேகே மார்ட் கடைகளையும் புறக்கணிக்க வேண்டும் என அக்மால் கூறுவதில் நியாயமில்லை என மசீச பொதுச் செயலாளர் சோங் சின் ஹுன் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

சர்ச்சையான காலுறை விவகாரத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்டுவிட்டது. ஆனால் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளையும் புறக்கணிக்கச் சொல்வது வேடிக்கையாக உள்ளது.  இதனால் நம் நாட்டிற்குதான் பாதிப்பு என்பதை அக்மால் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர்,மார்ச் 18-

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர்களால் ஏற்பட்ட மொத்த இழப்பு வெ.1 பில்லியனுக்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) பேரழிவின் விளைவாக ஏற்பட்ட சேதத்தின் மதிப்பை அளவிட்டு வருகிறது. பொதுப்பணித் துறையால் சீரமைக்கப்படும் மத்திய சாலைகள் மற்றும் KKDW ஆல் கிராமப்புற சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளவை இதில் அடங்கும்.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட வீடுகளை சரிசெய்வதற்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கும் NADMA ஆல் மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள உதவித் தொகையும் இதில் அடங்கும் என அவர் சொன்னார்.

இருந்தபோதும், கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது சில மாநிலங்களில் உதவிகள் சீராகவும் சமமாகவும் வழங்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசியல் காரணமாக உதவி பெற வேண்டிய நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படாது வேதனை அளிப்பதாகவும் இதனை நாம் தவிர்க்க வேண்டும் என அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மார்ச் 18-

இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் நிலைமை அறிந்து பேசக் கூடியவர்கள் யார் என்றால், நாங்கள் வாக்களித்து இன்று எம்பிகளாக உள்ள இந்திய தலைவர்கள்தான்.  அவர்களுக்கு புரியாதது ஆலோசனை நிறுவனத்திற்கு புரிந்துவிடுமா?

மித்ராவை அரசாங்கத்திலுள்ள இந்திய தலைவர் குழு அமைத்து அதனை வழிநடத்த வேண்டும். அதை விடுத்து ஆலோசனை நிறுவனம் அல்ல என இன்று நாடாளுமன்றத்தின் வெளியே கூடிய அரசு சாரா இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மித்ரா எனப்படும் இந்திய உருமாற்ற பிரிவு ஒரு துறையிலிருந்து மற்றொரு பிரிவுக்கு பந்தாடப்படுவது வழக்கமாகிவிட்டது. தற்போது மித்ரா ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் உள்ளது. அதன் செயல்பாடுகள் குறித்து அந்த துறையின் அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் கேட்டபோது அதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும் அதன் செயல்பாடுகள் என்னவென்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமரால் ஒற்றுமைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நபர் இப்படி கூறுவதில் நியாயமில்லை. இந்தியர்கள் உறுமாற்றத்தில் அக்கரை இல்லாத அவரின் அமைச்சின் கீழ் மித்ரா செயல்படக் கூடாது. மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்பட வேண்டும் என அரசு சாரா இயக்கத்தின் பிரதிநிதி தயாளன் தெரிவித்தார்.

ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் இருந்து மித்ரா வெளியாக்கப்பட்டு பிரதமர் துறையின் கீழ் செயல்பட வேண்டுமென அரசு சாரா இந்திய அமைப்புகள் கோரி மகஜர் ஒன்றை பிரதமரின் அதிகாரி சண்முகத்திடம் வழங்கினர்.

சம்பந்தப்பட்ட ஆலோசனை நிறுவனம் இதற்கு முன்னர் இந்தியர்களுக்காக மை ஹெட்டோம், மை துக்கார் ஆகிய இரு திட்டங்களை முன்னெடுத்து தோல்விக் கண்டது. மீண்டும் அதே ஆலோசனை நிறுவனம் எதற்கு இந்தியர் உறுமாற்ற பிரிவின் ஆலோசனை நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என தயாளன் தெரிவித்தார்.

மேலும் மித்ரா நடவடிக்கை குழுவின் தலைவராக பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனை பிரதமர் நியமித்தார். ஆனால் ஒற்றுமை துறை அமைச்சில் அந்த நியமனம் இன்னுமும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதாக தயாளன் தெரிவித்தார்.

மித்ரா தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. மித்ராவின் செயல்பாட்டை பற்றி  விளக்கம் கேட்டதற்கு இந்திய எம்பிகள் எங்களின் ஆலோசனை நிறுவனத்துடனான சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒற்றுமைத் துறை அமைச்சர் கூறியது ஒட்டுமொத்த இந்திய சமுயாத்தையும் பாதித்துள்ளது என டிரா மலேசியா அமைப்பின் தலைவர் சரவணன் தெரிவித்தார்.

இப்படி இந்தியர்களின் தேவைகளை புரிந்து கொள்ளாத அமைச்சரின் கீழ் மித்ரா செயல்பட்டால் அதனால் எந்த நன்மையும் நடக்க போவதில்லை. ஆகையால் மித்ரா பிரதமர் துறையின் கீழ் கொண்டுச் செல்லப்பட வேண்டுமென நாடாளுமன்ற வெளியில் கூடியிருந்தவர்கள் ஒருமித்த குரலுடன் தெரிவித்தனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

படம்: காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர் -மார்ச் 17 

மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தை பொறுத்தவரை, ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ எம் சரவணன்  அமைச்சரவையில் இருந்த காலம் ஒரு பொன்னான காலம் என இன்று  பி.ஜே, சிவிக் செண்டரில்    எம்.எம்.ஒய்.சி  ஏற்பாட்டில் நடைப்பெற்ற புனித நோன்பு  துறப்பு  நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் ஆலோசகர்  முகமாட் அஷ்ரீன்  இவ்வாறு தெரித்தார்.

டத்தோ ஸ்ரீ சரவணன் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சமுதாயத்தைச் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டன.
அதனால் தான் ,  டத்தோ ஸ்ரீ சரவணன் அமைச்சராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ,  அவர் மீது மதிப்பும் பாசமும் வைத்து அவரைத்  இன்று தலைமை தாங்க அழைத்தோம் என அஷ்ரீன்  தெரிவித்தார்.

அவர் எங்கள் அமைப்புக்குக் கொடுத்த நிதியை கொண்டு கடந்த  2 ஆண்டுகள் சமுதாயத்திற்கு பல நல்ல காரியங்களைச் செய்தோம்.
எங்களைப் பொறுத்தவரை டத்தோ ஸ்ரீ சரவணன்  மீண்டும் அமைச்சரவையில் இருக்கவேண்டும். அவரின் தலைமை சமுதாயத்திற்கு தேவை என எம்.எம்.ஒய்.சி வலியுறுத்துவதாக அஷ்ரின் தனது உரையில் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் தெரிவித்தார்.


ஜொகூர் பாரு, மார்ச் 17-
விவசாயத் துறையில் அதிலும் குறிப்பாக காய்கறி பயிரிடுதல் மற்றும் விற்பனை துறையில் அதிகமான வெளிநாட்டவர்கள் ஈடுபட்டு வருவதால் சுமார் 2,000 உள்நாட்டு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

காய்கறி பயிரிடுவது முதல் அதனை சந்தைப்படுத்துவது, விற்பனை செய்வது வரை அனைத்து பிரிவுகளிலும் அந்நிய நாட்டவர்கள் ஈடுபட தொடங்கி விட்டனர். சட்டத்திற்கு புறம்பான தோட்டங்களில் அவர்கள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். சுமார் 1,000 ஹேக்கரில் அவர்கள் விவசாயத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சுமார் 5 ஆண்டுகளாக காய்கறி விவசாயத் துறையில் அந்நிய நாட்டவர்கள் அதிகமாக ஈடுபட தொடங்கினர். நாடு முழுவதிலுள்ள தங்களின் உறுப்பினர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இந்த தகவலை திரட்டியதாக மலேசிய காய்கறி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் லிம் செர் குவி தெரிவித்தார்.

இந்தோனேசியர்கள், வங்காளதேசிகள், ரொஹிங்யா பிரஜைகள் ஆகியோர் இந்த காய்கறி உற்பத்தி முதல் விற்பனை வரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் நாட்டிலுள்ள பெரிய காய்கறி விற்பனை சந்தைகளிலும் அவர்கள் காய்கறிகளை சுயமாக விற்பனை செய்ய தொடங்கி விட்டனர்.

அதிகமாக காய்கறிகளை இவர்கள் பயிரிடுவதால் உள்நாட்டு விவசாயிகள் அதிகமாக பதிக்கப்படுகின்றனர். காய்கறிகளை பயிரிடுவதில் தொடங்கி தற்போது அதனை சந்தைப்படுத்துதல், காய்கறிகளை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து சேவை, நாடு முழுவதிலுள்ள பாசார் போரோங், சந்தைகளுக்கு காய்கறிகளை அனுப்பும் அனைத்து பிரிவுகளிலும் அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கம் கூடிவிட்டது.

அந்நிய நாட்டவர்கள் தீபகற்ப மலேசியாவில் அதிகமாக காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிலாங்கூர், ஜொகூர், மலாக்கா, பினாங்கு, பகாங், அதிலும் கேமரன் மலையில் அவர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது.

இவர்களின் தோட்டங்கள் அதிகமாக உட்புற பகுதிகளில் உள்ளன. சாதாரண மக்கள் உட்பட விவசாயத்துறை அதிகாரிகளும் கண்டுபிடிக்க அளவிற்கு உட்புற பகுதியில் உள்ளன. ஆகையால் இவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென லிம் செர் குவி வலியுறுத்தினார்.

 

கோலாலம்பூர், மார்ச் 17-
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 5.02 மில்லியன் மலேசியர்கள் PADU-வில் பதிவு செய்துள்ளனர். மார்ச் 31 காலக்கெடுவை முன்னிட்டு சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் கூடுதலாக கவுன்டர்கள் திறக்கப்படுகின்றன.

"மார்ச் 15, இரவு 11.59 மணிக்கு, தங்கள் பதிவுகளை புதுப்பித்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 5.02 மில்லியன்" என்று PADUவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதாவது 16.7% மலேசியர்கள் மற்றும் PR வைத்திருப்பவர்கள் PADU-வில் தங்கள் தகவல்களைப் பதிவு செய்து புதுப்பித்துள்ளனர்.

30.08 மில்லியனில் குழந்தைகள் உட்பட அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் தகவலைப் புதுப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் பதிவு செய்ய வேண்டிய இளைஞர்களின் மொத்த எண்ணிக்கை 21.97 மில்லியன் ஆகும்.

சிலாங்கூர் 760,000 பதிவுகளுடன் அதிக எண்ணிக்கையிலான தனிநபர்களைப் பதிவுசெய்துள்ளது, அதைத் தொடர்ந்து சரவாக் (630,000) மற்றும் ஜொகூர் (500,000) உள்ளன.


பாசிர் கூடாங், மார்ச் 17-
தன் ஒன்றரை வயது குழந்தையை கத்தியால் அருத்து கொலை செய்து விட்டு அந்த காட்சியை புகைப்படமாக எடுத்து தன் கணவரின் கைப்பேசிக்கு அனுப்பியுள்ள மாதின் கொடூரச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட 32 வயது மாதை போலீசார் கைது செய்ததுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஜொகூர் மாநில போலீஸ் படைத் தலைவர் ஆணையர் எம்.குமார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், மார்ச் 16-

நாட்டிலுள்ள அனைத்து படைப்பாளர்களும் சக படைப்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும். படைப்பாளர்கள் மத்தியில் ஆதரவு வழங்கிக்கொண்டால் மட்டுமே அந்த படைப்புகள் வாழும் என மஇகாவின் தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சர்வணன் தெரிவித்தார்.

இன்று தலைநகரில் மஇகா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் வாழ்த்து காணொளி அறிமுக விழா மற்றும் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவை தலைமையேற்று பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து நாட்டில் பல உள்ளூர் படைப்புகள் வெளியாகி வருகிறது. அது எழுத்துபூர்வமாகவும்  திரைப்படமாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அந்த முயற்ச்சிக்கு சக கலைஞர்கள் முதலில் ஆதரவை வழங்க முன் வர வேண்டும். குறிப்பாக ஒரு எழுத்தாளன் தனது கடின முயற்ச்சியில் ஒரு புத்தகத்தை   வெளியிடும்போது அதற்கு அனைத்து எழுத்தாளர்களும் ஆதரவு வழங்கி அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இதை நாம் கட்டாயமாக பின் பற்றினால் மட்டுமே படைப்பாளிகளையும் அவர்கள் வெளியிடும் படைப்புகளையும் நாம் காப்பாற்ற முடியும். அதே போல்தான் நம் நாட்டில் வெளியிடப்படும் திரைப்படங்களும், அதற்கும் சக கலைஞர்கள் அத்திரைப்படங்களை திரையரங்குகளில் கண்டு அவர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் தற்பொழுது நமது மொழி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு வழங்குவோர் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அவ்வகையில் மஇகா மற்றும் தேசிய நில நிதி கூட்டுறவு கழகம் இது போன்ற மொழி சார்ந்த நிகழ்வுகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. 

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் ஏற்பாட்டாளர் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஞான சைமன், மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் அயலக தலைவர் பெ.இராஜெந்திரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

ஹம்பேர்க், மார்ச் 16-

நவீன ரோபோட்டிக் நிறுவனம் ஒன்று MH370 விமானத்தை தேடும் பணியை தொடரவுள்ளதாக ஜெர்மன் ஊடகம் ஒன்றும் வெளியிட்ட செய்திக்கு, விமானத்தை தேடுதல் நடவடிக்கை குறித்து அதிக நம்பிக்கை வைத்துவிட வேண்டாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி 239 பயணிகளை கோலாலம்பூரிலிருந்து பெர்ஜிங்கிற்கு ஏற்றிச் சென்ற MH370 விமானம் செல்லும் வழியில் காணாமல்போனது. இந்த விமானத்தில் சுமார் 150 சீன பிரஜைகளும் 50 மலேசியர்களும் பயணித்தனர். இந்த விமானம் காணாமல் போன சம்பவம் உலகத்தையே உலுக்கியது.

இச்சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆகிய நிலையில் புதிய நிறுவனம் ஒன்று அந்த விமானத்தை தேடும் பணியை தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேடும் நடவடிக்கைக்கான முடிவு இன்னும் இரு வாரங்களில் எடுக்கப்படும். ஆகையால் விமானத்துடன் காணமல்போனவரிகளின் குடும்பத்தினர் இந்த தேடல் நடவடிக்கை மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம் என அவர் சொன்னார்.

மக்களிடம் பொய்யான் வாக்குறுதியை நான் அளிக்க விருமபவில்லை. இரும்தபோதும் காணாமல் போனவர்களை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் என்ற முயற்சியை அரசு கைவிடவில்லை என்பது மட்டும் உறுதி என ஜெர்மனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் அங்குள்ள ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தேடல் நடவடிக்கைக்கு அதிகமான பணம் செலுத்தப்பட்டாலும் கூட  தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், மார்ச் 16-

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள ஆறுகளில் இப்போது டோம்போட் எனும் பண்டாராயா மீன்களின் ஆதிக்கம் அதிகரிப்பது ஒரு முக்கியமான அச்சுறுத்தலாகக் கருதப்பட வேண்டும், ஏனெனில் இது உள்ளூர் மீன்களின் அழிவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் வடிகால் சுற்றுச்சூழல் அமைப்பையும் சேதப்படுத்துகிறது.

பெரும்பாலான ஆறுகள் புலம்பெயர்ந்த மீன் இனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மீன்களைக் கண்டுபிடிப்பது கடினமாகி வருகிறது. இதனால் உள்ளூர் மீன்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என நகர மீன்பிடி சமூகத்தினர் புகார் செய்துள்ளனர்.

குறிப்பாக தலைநகரில் உள்ள பல ஆறுகளில் இந்த Pterygoplichthys எனப்படும் மீன் இனம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மீன்கள் மற்ற உள்ளூர் இன மீன்களின் முட்டைகளை சாப்பிடுவதன் விளைவால் மற்ற மீன்களின் இனவிருத்தி பாதிக்கப்படுகிறது என நகர மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்த முகமட்  ஹஜிக் என்பவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தனது தரப்பு வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டதில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரைச் சுற்றியுள்ள ஆறுகளில் இருந்து 3,200 க்கும் மேற்பட்ட நகர மீன்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன என அவர் சொன்னார்.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில், நிலைமை மிகவும் சிக்கலாகதாக உள்ளது, இதற்கும் இங்கு குடியிருக்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம். 

தலைநகரில் வசிப்பவர்கள், பலருக்கு அலகு மீன்களைப் பாதுகாப்பதில் ஒரு பொழுதுபோக்கு உள்ளது, குறிப்பாக மீன் தொட்டிகளை சுத்தமாக பாதுகாப்பதில் புலம்பெயர்ந்த மீன்களில் ஒன்று இந்த பண்டாராயா மீன் ஆகும். 

 ஏனெனில் அது மீன் வளர்ப்பு தொட்டிகளில்  இருக்கும் கழிவுகள் மற்றும் மீன் உணவின் எச்சங்களைச் சாப்பிட்டு தொட்டிகளை சுத்தம் செய்துவிடும். ஆகவே அதிகமானோர் மீன் தொட்டிகளில் இந்த மீனை வளர்த்து வருகின்றனர். மீன் பெரிதாக ஆகியதும் அதனை ஆற்றில் அவர்கள் விடுவதால்தான் இந்த மீன் தலைநகரில் உள்ள ஆற்றில் பெறுகி வருவதாக அவர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

செத்தியு, மார்ச் 16-

நேற்று இரவு கோல திரெங்கானு கம்போங் ராஜா வழியாக போர்ஷே காரில் சென்றுக்கொண்டிருந்த நிருவன உரிமையாளர் ஒருவர் அங்கு சாலையை கடக்க முயன்ற யானையை மோதி விபத்தில் சிக்கினார்.

இச்சம்பவம் இரவு 10 மணி அளவில் ஜாலான் ரூ-வில் இருந்து லெம்பா பீடோங் செல்லும் சாலையில் நிகழ்ந்துள்ளது. யானையை மோதியதில் போர்ஷே ரக கார் சேதமடைந்தது, ஆனால் அந்த காரை ஓட்டிய நபர் அதிர்ஷ்டவசமாக எவ்வித கடுமையான காயங்களும் ஏற்படாமல் உயிர் தப்பியதாக  செத்தியு மாவட்ட போலீஸ் தலைவர் அப்பண்டி உசேன் தெரிவித்தார்.

இரவு நேரத்தில் சாலையில் அந்த 42 வயதுடைய ஆடவர் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது சாலையில் யானை இருப்பதை கண்டு அதிர்ச்சியில் காரின் கட்டுப்பாட்டை இழந்து யானையை மோதியதாக அவர் கூறினார்.

இந்த விபத்தில் காயமடைந்த யானை சில மணி நேரங்களுக்கு பிறகு சாலையில் இருந்து அருகில் உள்ள காட்டிற்குள் ஓடியதாக போலீசார் தெரிவித்தனர்.

கோலாலம்பூர், மார்ச் 14-

மலேசியத் திரைப்படங்கள் தற்போது கதை, திரைக்கதை, வசனம், தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டு வருவதாக மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

அதேபோல் வசூல் ரீதியாகவும் மலேசியத் திரைப்படத்தின் சாதனை வரவேண்டும். அந்த வகையில்  ஒரு கதை சொல்லுங்க சார் ,  திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி என அவர் சொன்னார்.

நல்ல நல்ல திரைப்படங்களை மலேசிய கலைஞர்கள் கொடுக்க வேண்டும். அவர்களின் படைப்புக்கு மலேசிய மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,மார்ச் 14-

கோழியின் விலை 30 சென் அதிகரித்தாலும் அதன் உச்சவரம்பு விலையான 11.40 வெள்ளியைத் தாண்டவில்லை என  விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமாட்  சாபு தெரிவித்தார். 

நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் கோழியின் விலை உயர்வால் மக்கள் சிரமத்தை எதிர்கொள்ளாமல்  இருக்க  சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன்  தனது  தரப்பு தொடர்ந்து கண்காணிக்கும் என்றார் அவர்.

கோழியின் விலை, முன்பு நிர்ணயித்த விலையுடன் ஒப்பிடும்போது  நிலையாக உள்ளது. 

மைடின் பேரங்காடியில் கோழி 9 வெள்ளிக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறது. சில சமயங்களில் 7.90, 8.00 வெள்ளிகளில் கோழி விற்பனை செய்யப்படுகிறது என மட் சாபு தெரிவித்தார்.

கடந்தகாலங்களை விட  அரசு நிர்ணயம் செய்த விலையை விட  இது அதிகமாக இல்லை என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ரவூப், மார்ச் 14-

சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கல்வி ஆண்டில்  பினாங்கு, காராக் ஆகிய பகுதிகளிலிருந்து 9 மாணவ்ரகள் மாற்றலாகி வந்திருப்பதன் வழி, இப்பள்ளியின் மாணவர் பதிவில் முன்னேற்றம் காணப்படுகிறது.

30 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் பன்மை வகுப்புகள் உருவாகும் சூழல் இருந்து வருகின்ற நிலையில், கணிசமான மாணவர் சேர்க்கை அதிகரிப்பினால் சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி அந்த அபாயக் கட்டத்தைக் கடந்துள்ளது.

பினாங்கு மாநிலத்திலிருந்து நிறுவன மேலாளராக பதவி உயர்வு பெற்று ரவூப் மாவட்டத்திற்கு மாற்றலாகி வந்திருக்கும் காளிதாஸ், தனது 4 பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்திருக்கிறார். 

முன்னதாக, தனது இரு பிள்ளைகளை தேசியப் பள்ளியில் சேர்க்கலாம் என முடிவு செய்திருந்த அவர், பள்ளியின் தலைமையாசிரியர் இல.கருணாநிதி வழங்கிய மிகத் தெளிவான ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, பின்னர் இரு பிள்ளைகளையும் தனது மற்ற இரு பிள்ளைகளோடு சேர்த்து இப்பள்ளியில் பதிவு செய்து விட்டார்.

அவரைத் தொடர்ந்து, சமூகச் சேவையாளரும் தொழில்முனைவருமான ஐ.சண்முகநாதன், தனது 4 பிள்ளைகளை காராக் தமிழ்ப்பள்ளியிலிருந்து மாற்றி, தான் கல்வி பயின்ற அதே சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பதிவு செய்திருக்கிறார். 

தமிழ்ப்பள்ளி மீது, அதிலும், குறிப்பாக தனக்கு கல்வி அறிவு புகட்டிய அதே தோட்டத் தமிழ்ப்பள்ளியில் என் பிள்ளைக்ளையும் சேர்த்ததில் மன நிறைவு அடைவதாக ஐ.சண்முகநாதன் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ரவூப் பட்டணத்திலுள்ள சீனப் பள்ளியிலிருந்தும் ஒரு மாணவர் மாற்றலாகி சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்திருக்கிறார். பாலர்பள்ளியிலும் கூடுதலாக ஒரு மாணவர் இணைந்திருக்கிறார்.

மாணவர்களின் நலன் மீது அதீத அக்கறை கொண்டுள்ள ஆசிரியர் பெருந்தகையினரின் பெருமுயற்சியால், இப்பள்ளி மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குகின்றனர்; பல போட்டிகளிலும் பங்கேற்று முதன்மை பரிசுகளை வென்றுள்ளனர். மேலும், மிகச் சிறந்த தணிக்கைக்குமான விருதுகளையும் இப்பள்ளி பல முறை வென்றுள்ளது.

கல்வி புறப்பாட நடவடிக்கைகளுக்கு அப்பாற்றப்பட்டு, மனிதநேய ஒருமைப்பாட்டுரிமையை மாணவர்களிடத்தில் வளர்க்கும் பொருட்டு, திருஅருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளின் வாழ்வியல் நெறிமுறைகளும் இப்பள்ளியில் வாரந்தோறும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 

பள்ளி வளர்ச்சிக்கும் மாணவர் மேன்மைக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், சுற்றுவட்டார ஆலயங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு சாரா அமைப்பின் தலைவர்கள், சமூகச் சேவையாளர்கள், வணிகர்கள் என பல நல்லுள்ளங்கள் இப்பள்ளி மீது அக்கறை கொண்டிருப்பதால் தங்களால் இன்னும் உற்சாக பணியாற்ற முடிகிறது என தலைமையாசிரியர் இல.கருணாநிதி தெரிவித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 14-

டிரா மலேசியா தொடர்ந்து கூறி வருவதை போலவே குடியுரிமை சமூக அமைப்புகள், வழக்கறிஞர் மன்றம், மலேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியுரிமை சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் அமலாக்ககூடாது என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். 

ஆயினும், எதையும் கருத்தில் கொள்ளாமல் இம்மாதமே இச்சட்டத் திருத்தத்தை நாடாளுமன்ற பரிந்துரைக்கு அனுப்புவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல்தான் என்கிறார் டிரா மலேசியாவின் தேசிய தலைவர் சரவணன் சின்னப்பன்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சட்ட மாற்றங்களில் மலேசிய பெண் வெளிநாட்டில் வசிக்கும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு தாயின் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். அது தவிர மற்ற சட்ட மாற்றங்களை தள்ளி வைக்க வேண்டும். 

ஏற்கனவே பல தலைமுறைகளாக வேரோடியிருக்கும் குடியுரிமை பிரச்சனைகளுக்கு எந்த தீர்வுமில்லை. இந்த புதிய சட்ட திருத்தம் இந்நிலையை மேல் மோசமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

மேலும், அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு, பொது மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கிறது. 

கடந்த மார்ச் 7-ஆம் தேதி உள்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் 5,187 15(A) விண்ணப்பங்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். அவரே 15 மார்ச் அன்று வெளியிட்ட அறிக்கையில் 35,000 15(A) விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் அதில் 98% ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியுரிமை வழங்கப்பட்டதாவும் கூறியுள்ளார். 

இதில் எந்த புள்ளி விவரம் உண்மை என்ற குழப்பம் ஒருபுறமிருக்க. டிரா மலேசியா மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணபங்களின் முடிவுகளை பதிவு இலாவின் இணையதளத்தில் மூலமும், பதிவு இலாகா அலுவலகங்களில் பரிசிதித்து பார்க்கும் போது; அவ்விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. 

ஏன் இந்த விவரங்கள் பதிவு இலாகா தளத்திலும் அலுவலகங்களிலும் இன்னும் சீரமைக்கப்படவில்லை என சரவணன் கேள்வி எழுப்பினார். 

15(A) என்பது மலேசிய ஆணுக்கு வெளிநாட்டு பெண்களுடன் திருமணமாகாமல் பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை இல்லாமல் மலேசியர்களால் தத்தெடுக்கப்படும் குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் சட்டபிரிவு. இப்பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 21 வயதிற்கும் குறைந்தவர்களே.

உள்துறையமைச்சரின் கூற்றுப்படி நிராகரிக்கப்பட்ட 2 % விண்ணப்பதாரர்கள் மேற்கொண்டு எந்த சட்டபிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம்; அவர்களுடைய எதிர்கால நிலை என்ன என்பதையும் உள்துறை அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் சரவணன்.

இந்த குடியுரிமை சட்ட மாற்ற நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வினையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஏனெனில் இது ஒட்டு மொத்த மலேசிய சமுதாயத்தையும் பாதிக்க கூடிய மாற்றம் என்றார் அவர்.

கோலாலம்பூர்,மார்ச் 14-

தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபார் சாடிக்குடன் தன்னை தொடர்புபடுத்தி  தனது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திய தரப்பினருக்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மாலிக் ஸ்டீரிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அப்துல் மாலிக்  தேசிகர் தெரிவித்தார்.

ஜாஃபார் சாடிக்கிற்குத் தான்  முதலாளியாக இருந்ததாகவும் மலேசியாவில் போதைப் பொருள் கடத்தல்  நடவடிக்கைகளுக்குப்  பின்னணியில்   இருந்ததாகவும் தமிழ்நாட்டு ஊடகம்  ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவற்றில் உண்மை இல்லை. இத்தகவல்கள்  தனது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகமாலிக் காணொளி ஒன்றின் வழி   ஊடகங்களுக்கு  விளக்கம் அளித்தார்.

“எனக்கும் ஜாஃபார் சாடிக்கிற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. நான் அவரைச் சந்தித்ததோ அல்லது அவருடன் பேசியதோ கிடையாது. நான் ஒரு வர்த்தகர். குறிப்பாக திரைப்பட துறை சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறேன். எனது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதற்காக சில தரப்பினர்  மேற்கொண்ட நடவடிக்கையே இது ” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பில் தலைநகர் , டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு தான் புகார் செய்திருப்பதாகவும்  இப்புகார் அறிக்கையை இந்திய தூதரகத்திடம் சமர்ப்பித்திருப்பதாகவும் மாலிக் குறிப்பிட்டார்.

இந்தப் புகாரை போலீசார்  கடுமையாகக் கருதுவதோடு  இதன் மீது விரைவில் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இவர்  கேட்டுக் கொண்டார்.

தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்ட இந்தியா மற்றும் மலேசிய  ஊடகங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி   இந்தியா மற்றும் இங்குள்ள  தனது வழக்கறிஞர்களைத் தான் பணித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

அதே வேளையில், மலேசியாவில் கொள்ளை மற்றும் போதைப் பொருள் கும்பலின் செயல்  பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்துவதாக   காணொளி  வழி ஒருவர் வெளியிட்ட தகவல்  மீது தான் அதிருப்தி கொள்வதாகவும்  இது நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும்  இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  மாலிக் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், மார்ச்.14-

பங்குனி உத்திர விழாவிற்கு பிரசித்திப்பெற்ற மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 93 ஆவது பங்குனி உத்திர விழா இவ்வாண்டு மிக கோலாகலமாக நடைபெறும் என ஆலய தலைவர் டத்தோ க. தமிழ்செல்வம் கூறினார்.

இவ்வாண்டு பங்குனி உத்திர விழாவில் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. 

நாட்டில் புகழ்பெற்ற ஆலயங்களில் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விழா பெரிய அளவில் நடத்தப்படவில்லை.

குறிப்பாக கடந்தாண்டு ஆலயத்தில் திருப்பணிகள் நடந்தது. ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

தற்போது 93ஆவது பங்குனி உத்திர விழா  ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. அவ்வகையில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

இதன் உச்சக்கட்டமாக வரும் மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை பங்குனி உத்திர விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பால்குடம் ஏந்தியும் காவடிகள் ஏந்தியும் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு கருதி ஆலய நிர்வாகம் பல முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளுக்காக அமர்த்தப்படுவார்கள்.

இதைத் தவிர்த்து இந்த விழாவை முன்னிட்டு ஆலய சுற்றுவட்டாரத்தில் தற்காலிக கடைகளும் அமைக்கப்படவுள்ளது.

இவ்வாண்டு 12 குழுக்களாக 1,500 பேர் பத்துமலையில் இருந்து பாத யாத்திரையாக மாரானுக்கு வரவுள்ளனர். அப்படி வருபவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் மார்ச் 24ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஸ்ரீ கங்கை இசைக் குழுவின் குமார் தலைமையில் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இதைத் தவிர்த்து இந்த விழாவில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங், சபாய் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆகவே பக்தர்கள் திரளாக வந்து இந்த விழாவில் கலந்து மாரான் மரத்தாண்டவரின் அருளை பெற்று செல்லுமாறு டத்தோ தமிழ்ச்செல்வம் கேட்டு கொண்டார்.

பங்குனி உத்திர விழா குறித்து மேல் தகவல் பெறுவதற்கு பக்தர்கள் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத்தை தொடர்புக்கொண்டோ அல்லது அதன் முகநூல் வாயிலாக விவரம் பெறலாம்.

கோலாலம்பூர் மார்ச்- 14

நாட்டில் வயது முதிர்ந்த மக்களை  பாதுகாக்க அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன அதற்காக அரசாங்கம் ஆய்வு  செய்ய வேண்டும் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம். சரவணன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

வரும் 2030 ஆண்டில் நாட்டில் அதிகமான வயது முதிர்ந்த மக்கள் வாழும் நாடாக மலேசியா விளங்கும். அந்த நேரத்தில் இவரை பாதுகாக்க அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளதா ? அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு  ஆழமான ஆய்வு தேவை என டத்தோ ஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டர்.

தற்போது தொழிலாளர்களாக இருக்கும் அவர்கள் வயது முதிர்ந்த பின் அவர்களுக்கென ஒரு  பாதுகாக்கப்பட வேண்டும்.

இதை இப்போதே ஆய்வு செய்வது வயதி முதியவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் என டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 13-

பெரிக்காத்தான் நேஷனலுள்ள (PN) உயரிய அந்தஸ்து கொண்ட இன்னும் சில தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகி பிகேஆரில் வந்து இணைவார்கள் என பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் சைப்புடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

நாட்டு அரசியலில் பெயர் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பிகேஆரில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். 

பிகேஆரில் யாரையும் வற்புறுத்தி அல்லது அச்சுறுத்தி உறுப்பினர்களாக இணைப்பது போன்ற எந்த கூறுகளையும் பயன்படுத்துவதில்லை. மாறாக, கட்சி உறுப்பினர் என்பது ஒருவரின் சொந்த விருப்பமாக இருந்தால் மிகவும் மதிப்புமிக்கது என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர், மார்ச் 13-

நோன்பு மாதத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கழிப்பறையில் உணவு உண்ட சம்பவத்தை பாஸ் மறந்துவிடக் கூடாது என ஜசெகவின் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிட்ஸான் ஜோஹன் நினைவுறுத்தியுள்ளார்.

நோன்பு மாதத்தில் பள்ளிகளில் சிற்றுண்டிச்சாலைகள் திறந்திருக்க வேண்டுமென கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் அறிவித்ததை தொடர்ந்து பாஸ் கட்சியை சேர்ந்த அகமட் யாஹயா அதனை குறைக்கூறியுள்ளார்.

நோன்பு இல்லாத மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி பணியாளர்களும் உணவு உண்பதை பற்றி அவருக்கு அக்கரை இல்லை என்பது போல் அவரின் கருத்து உள்ளது. கல்வி அமைச்சு ஓர் அறிவிப்பை செய்வதற்கு முன்பு பல கோணங்களில் ஆய்வு செய்துதான் அதனை வெளியிடும்.

கடந்த காலத்தை போல முஸ்லிம் அல்லாத மாணவர்கள் தகாத இடங்களில் உணவு உண்ணும் சம்பவம் நிகழ்ந்து விடக் கூடாது என்ற எண்ணத்திலும் இந்த முடிவை கல்வி அமைச்சு எடுத்திருக்கலாம் என அவர் சொன்னார்.

பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்து சமுதாயத்திற்கு  ஆதரவாகவும் நன்மையாகவும் இருத்தல் வேண்டும். பாஸும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும்  அந்த எண்ணம் இல்லை என்பது இதில் தெளிவாக தெரிகிறது. 

பள்ளி விவகாரங்களில் அரசியல் நடத்துவதை பாஸும் பெரிக்காத்தான் நேஷனலும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஷாரிட்ஸான் ஜோஹன் அறைகூவல் விடுத்தார்.

செராஸ், மார்ச் 13-

அடையாளம் தெரியாத இரு ஆடவர்களால் ரொஹிங்யா மாது ஒருவரும் அவரின் 2 வயது குழந்தையும் எரியூட்டப்பட்ட சம்பவம் செராஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை செராஸிலுள்ள விளையாட்டு பூங்காவில் இரவு 10.30 மணியளவில் நிகழ்ந்ததாக பாதிக்கப்பட்ட மாதின் கணவர் ஷாபிர் சுல்தான் அகமட் கூறினார்.

சம்பவம் நிகழ்வதற்கு முன்னர், பாதிக்கப்பட்ட அஸுமா என்ற மாது சமய வகுப்பிற்கு சென்ற தன் பிள்ளைகளை அழைத்து வரச் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் குழந்தைகள் இதர பிள்ளைகளுடன் அங்குள்ள விளையாட்டு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

தன் குழந்தைகளுக்காக அவர் அந்த பூங்காவில் தன் இரண்டு வயது குழந்தையை தூக்கியவாறு காத்து கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் அஸுமா மீது எண்ணெய்யை ஊற்றியதுடன் அவரையும் அவரின் குழந்தையையும் எரியூட்டிச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த மக்கள் அஸுமாவையும் அவரின் குழந்தையையும் காப்பாற்றி அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அஸுமா மருத்துவமனையில் சுயநினைவு திரும்பாத நிலையில் இருக்கும் வேளையில் அவரின் குழந்தை சீராக உள்ளதாக செராஸ் போலீஸ் படைத் தலைவர் ஜாம் அலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

இந்த கொடூரச் செயலை புரிந்த அந்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரம் செக்‌ஷன் 326 குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மார்ச் 13-

இஸ்ரயேல் - பாலஸ்தீன போரில் ஹாமாஸ் அமைப்பிற்கு மலேசிய ஆதரவு தெரிவிப்பதாக ஜெர்மனுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  கூறியுள்ளார்.

ஹமாஸ் அரசியலுக்கு மலேசியா ஆதரவு வழங்குகிறது. ஆனால் அதன் ராணுவ பிரிவுடன் எந்த தொடர்பும் இல்லை என பிரதமர் கூறியதாக பெர்லின் உள்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த போர் தற்போது தொடங்கியது அல்ல. காலம் காலமாக தொடர்கிறது. ஹமாஸ் நிர்வாகத்திற்கு மலேசியா ஆதரவு தெரிவிப்பது தொடர்பில்  ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவிலுள்ள சகாக்களிடம் விளக்கியதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறியுள்ளார். மேலும் ஹமாஸ் அரசியலுடன் மலேசியா தொடர்பு வைத்திருப்பதை தொடர்ந்து தான் யாரிடமும் மன்னிப்பு கேட்க போவதில்லை எனவும் அவர் கூறியாதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குவாந்தான்,மார்ச் 12-

கொள்ளச் சம்பவங்களில்  ஈடுபட்டு வந்த சென்ட்ரோ கும்பலைச் சேர்ந்த மூன்று அந்நிய நாட்டவர்களை போலீசார் சுட்டுக் கொண்றனர்.

கிலோமீட்டர் 17, ஜாலான் பெக்கான் பகுதியில் இரவு 11.30 மணி அளவில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயற்சித்த போது, அந்த வாகனம் போலீசார் வாகனத்தை மோதி தள்ளி அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயற்சித்த போது வாகனத்திலிருந்து அந்த சந்தேக நபர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதால் தங்களின் பாதுகாப்பிற்காக போலீசார் மீண்டும் அந்த கும்பலை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில்  மூவர் கொல்லப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யாயா ஒத்மான் தெரிவித்தார்.

இந்த கும்பல் பல பகுதிகளில் வீடு மற்றும்  நகைக்கடையில் கொள்ளையிடுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

கொல்லப்பட்டவர்களில் இருவர் வியட்நாமியர், ஒருவர்  வங்காளதேசியர் என உறுதிப்படுத்தப்பட்டதாக யாயா ஒத்மான் பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சிக்,மார்ச் 12-

திடீரென ஏற்பட்ட காட்டு தீயை அணைக்க சுமார் மூன்று மணி நேரம் போராடியதாக தீயணைப்பு மீட்பு துறை தெரிவித்தது.

இங்குள்ள செபார் பெசார் பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட காட்டில் ஏற்பட்ட தீச் சம்பவம் தொடர்பில் காலை 9 மணி அளவில்  அவசர அழைப்பு  பெற்ற பின் சம்பவ இடத்திற்கு 12 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சிக் மாவட்ட தீயணைப்புத் துறையின் உதவி தலைவர் சுல்கைரி மாட் தஞ்சில் தெரிவித்தார்.

10 ஹெக்டரில் எரிந்த தீயை அணைக்க 500 மீட்டர் உயரமுள்ள மலையில் தீயணைப்பு வீரர்கள் ஏறியதாகவும் அதிகமான வெப்பமும் காற்றின் அழுத்தத்தாலும் தீயை அணைக்க பல போராட்டங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 266.50 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த காட்டுப் பகுதியில் தீ பெருமளவில் பரவாமல் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சுல்கைரி பத்திரிக்கை அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

கோலாலம்பூர்,மார்ச்.12-

தமிழ்ப்பள்ளிக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் என்ன தொடர்பு என்று மஇகா கல்வி குழுத் தலைவர் டத்தோ நெல்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே தாய் மொழிப் பள்ளிகளுக்கு எதிராக பேசியுள்ளார்.

குறிப்பாக தாய் மொழிப் பள்ளிகள் தேசிய ஒருமைபாட்டுக்கு சிக்கலாக உள்ளது. இது தொடர்பில் சிறப்பு கலந்துரையாடலை நடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

என்னை பொருத்த வரையில் அக்மால் சாலே போன்றவர்கள் தான் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள்.

தாய் மொழிப் பள்ளிகளில் படிப்பதால் எந்த வகையில் ஒருமைப்பாடு சீர்குலைகிறது.இதை அக்மால் விளக்க முடியுமா என்று டத்தோ நெல்சன் கேள்வி எழுப்பினார்.

அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தான் தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுகின்றன.

குறிப்பாக தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்குகளில் கூட அனைத்து நீதிமன்ற நீதிபதிகளும் தீர்க்கமான தீர்ப்பை வழங்கியுள்ளன.

இருந்தாலும் அக்மால் போன்ற நபர்கள் தொடர்ந்து தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக பேசுவதை மஇகா வண்மையாக கண்டிக்கிறது. அதுலும் தாய்மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மலாய் ஆளுமை இல்லை என்பதற்கு சரியான ஆய்வு உண்டா எத்தனை விழுக்காடு ? ஆய்வு பூர்வமான ஆதாரம் உண்டா என நெல்சன் கேள்வி எழுப்பினார்.

அதே வேளையில் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறியுள்ளார். இவ்வேளையில் அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தாய் மொழிப் பள்ளிகளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று டத்தோ நெல்சன் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், மார்ச் 12-

நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டிச்சாலைகள் திறந்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் அறிவித்தது அதிகபிரசிங்கித் தனமாக உள்ளதாக பாஸ் கூறுகிறது.

அவரின் இந்த அறிவிப்பு, அவர் நோன்பு மாதத்தை மதிக்காததை காட்டுவதாக பாஸ் கட்சியை சேர்ந்த அகமட் யாஹயா தெரிவித்தார்.

முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பள்ளிக்கு வீட்டிலிருந்து உணவை எடுத்து வந்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அதனை உண்ணலாம். இதுவே போதுமானதாகும். சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

இது முஸ்லிம் மாணவர்கள் முறையான நோன்பை கடைபிடிக்க உதவும் என்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் நோன்பு எடுக்கும் மாணவர்களை மதித்து நடக்கவும் வழிவகுக்கும் என அவர் கூறியுள்ளார்.

சிப்பாங்,மார்ச் 11-

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு மேற்கொண்ட அதிரடி சோதனையில் டீசல் எண்ணெய் கடத்தல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

கடந்த மார்ச்  8 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் இங்குள்ள கம்போங் பத்து 1, டிங்கிலில்  உள்ள ஓர் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட இடத்தில் டீசல் எண்ணெய் பதுக்கி வைப்பதற்காகவும் விற்பனை செய்வதற்காகவும்  பயன்படுத்தப்பட்டுவந்தது கண்டறியப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பே அந்த பகுதியை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் சட்டவிரோத செயல்கள் அங்கு நடப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் தெரிவித்தது.

இந்த கும்பல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எண்ணெய் நிலையங்களில் மானிய விலையில் உள்ள எண்ணெய்களை நிரப்பிக் கொண்டு ஒரு பகுதியில் சேமித்து வைத்து, பின்னர் கூடுதல் விலைக்கு விற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இந்த அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 12 ஆயிரம் லிட்டர் டீசல் எண்ணெய்,லோரி, டீசல் சேமித்து வைக்கும் பிளாஸ்டிக் தொட்டிகள் மற்றும் கருவிகள் ஆகியவை அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதோடு அதன் மதிப்பு வெ.49,100.00 என தெரிவித்தது.

 

சிரம்பான்,மார்ச் 11-

சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் வெ.13.4 மில்லியன் மதிப்புள்ள சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 26 மற்றும் மார்ச் 1 ஆம்  தேதிகளில்  கிள்ளான் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளில் இந்த பறிமுதல் செய்யப்பட்டதோடு ஐவர் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில சுங்கத் துறை இயக்குநர் முகமது ஹபீஸ் இஷாக் கூறினார்.

இந்த சோதனையின் முதல் கட்டமாக நெகிரி செம்பிலான்  அமலாக்கப் பிரிவின் உறுப்பினர்கள் மூன்று கொள்கலன்களை மார்ச் 26ஆம் தேதி நண்பகல் 12 மணி அளவில்  கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைத்ததோடு சந்தேக நபர்களையும் கைது செய்ததாக அதன் இயக்குநர் தெரிவித்தார்.

மேலும் அந்த கொள்கலன்களை சோதனை செய்ததில் பல்வேறு வகையான மதுபானங்களும் சிகரெட்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

சீனா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி  செய்யப்பட்டிருந்த இந்த கொள்கலன் நம் நாட்டில் இருந்து அண்டை நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டதாக ஹபீஸ் இஷாக்  பத்திரிக்கை அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

அலோர் காஜா, மார்ச் 11-

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் 220.4ஆவது கிலோ மீட்டரில் விரைவு பேருந்து டிரெய்லரின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் பலியான வேளையில் பேருந்தில் பயணித்த 7 பயணிகள் காயங்களுக்குள்ளாகினர்.

அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உடல் நசுங்கி மாண்டார் என அலோர் காஜா மாவட்ட போலீஸ் படைத் தலைவர் அர்ஷாட் அபு தெரிவித்தார்.

விபத்தில் காயமுற்ற 20 முதல் 50 வயதிற்குட்பட்ட பேருந்து பயணிகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட பேருந்து ஜொகூர் லாக்கின் பேருந்து நிலையத்திலிருந்து 30 பயணிகளுடன் தலைநகரிலுள்ள திபிஎஸ் பேருந்து நிலையத்திற்கு பயணித்து கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மார்ச் 11-

நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் சிற்றுண்டிச்சாலைகள் சாதாரண நாட்களை போல் திறந்திருக்கும் என்றும் நோன்பு காலத்தில் அவை மூடப்படாது என்றும் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.

இருந்தபோதும் நோன்பின் புணிதத்தை அறிந்து இஸ்லாம் அல்லாத மாணவர்கள் நோன்பு இருக்கும் இஸ்லாம் மாணவர்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.

நோன்பு காலத்தில் இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்கு பள்ளிகளில் முறையாக உணவு விநியோகம் செய்யப்படுவதற்காக சிற்றுண்டிச் சாலைகள் திறக்கப்படுகின்றன.

இரு தரப்பினர்களும் புரிதலுடன் செயல்பட வேண்டும். ஆகையால் அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள் இதனை முறையாக கண்காணிப்பர் என்றார் அவர்.

2024-2025 பள்ளி தவணைக்கான முதல் நாள் பள்ளி இன்று திறக்கப்பட்டத்தை முன்னிட்டு பூச்சோங்கிலுள்ள ஒரு பள்ளிக்கு சிறப்பு வருகையளித்த அவர் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

ஈப்போ மார்ச் - 9

அண்மையில் பேராக்கில் உள்ள ஈப்போ கே.டி.எம்  ரயில் நிலைய சுற்றுலா பதாகையில்  மலாய் ,ஆங்கிலம் , சீன , தாய்லாந்து  மொழிகளில் வருகை பதாகை இருந்த  நிலையில் , தமிழ் மொழி புறக்கணிக்க பட்டது தொடர்பாக பல விதமான சர்ச்சைகள் எழுந்தன.

இது இந்திய மக்களிடையே மிக பெரிய அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இன்று  மலேசிய வீர தமிழர் இயக்கம் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மலேசிய சுற்றுலா துறை அமைச்சு, மாநில சுற்றுலா துறைக்கு  மகஜர் அனுப்பியதோடு ஈப்போ ரயில் நிலைய   அதிகாரி சாஃபுவானை நேரடியாக சந்தித்து மகஜர் அவர்கள் வழங்கினர்.

எல்லா எதிர்ப்பையும் வாட்சாப்பில் தெரிவிக்காமல் தமிழர்கள் முன் வந்து மகஜர் வழங்க வேண்டும் என தெரிவித்த மலேசிய  வீர தமிழர் இயக்கத் தலைவர் பார்த்திபன் சரவணன், இயக்கங்கள் முன் வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க  நேரடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர் மார்ச் -  8

இன்று புத்ரா உலக வாணிக மண்டபத்தில் ஒரு மாபெரும்  தமிழ் படைப்பை 12 ஆய்வாளர்கள் ஆய்வு செய்து  மகா கவிதை என்ற  புத்தகத்தை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு "பெருந்தமிழ்" விருது விழா இனிதே அரங்கம் நிறைந்து நடைபெற்று வருகிறது.

தமிழுக்காக நடக்கும் விழாவிற்கு தமிழர் கூட்டம்  நிறைந்து வந்து அதை  நடத்தி காட்டினர்.

ஒரு சில குழுவினர் இந்த விழா நடக்குமா ? எப்படி நடக்கும் என கொக்கரித்த நிலையில்  , தமிழுக்காக நடக்கும் விழாவை நடத்தி காட்டினார்  ம.இ.காவின் துணை தலைவர் சொல் வேந்தர்  டத்தோ ஸ்ரீ எம். சரவணன்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் -6

ரஸியாவில் 4ஆம் ஆண்டு மருத்துவம் பயிலும் ஓர் இந்திய மாணவியின் தாய் , தனது மகளின் கல்வி செமஸ்டர் நிதியான 35 ஆயிரம் வெள்ளிக்கு பாக்கி 15 ஆயிரம் வெள்ளி உதவி  கேட்டு  ஓர்  இந்திய துணை அமைச்சரை அணுகிய போது,  அவரின் அதிகாரி கடிதத்தை பெற்றுக்கொண்டு , பிறகு அழைக்கிறேன் என அனுப்பி விட்டார்.

அதன் பின் மேல் விவரம் கேட்க தொடர்பு கொண்ட தாயிடம் அந்த அதிகாரி,  துணை அமைச்சரிடம் மானியம் இல்லை என அதிகாரி சொல்ல , முடிந்த அளவிற்கு உதவி செய்யுங்கள் என தாய் கேட்க , அந்த அதிகாரி உங்களை விட கஷ்ட படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். பணம் இல்லை என்றால் ஏன் பிள்ளையை அங்கு படிக்க அனுப்பீர்கள் என ஏளனமாக பேசியுள்ளார்.

இந்த கேவளமான பேச்சை கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் அந்த தாய்.

அந்த துணை அமைச்சர், கவனத்திற்கு  இன்று நீங்கள் வகிக்கும் பதவி இந்த பாமர மக்களால் கொடுக்கப்பட்டது. மறந்துவிடாதீர்கள் . உங்களின் உதவியாளராக இருக்கும் அதிகாரிகளுக்கு  கிடைத்த வேலையும் வாய்ப்பும் இந்த மக்கள் கொடுத்தது.

உங்களிடம் உதவி கேட்டு வரும் மக்களிடம் உதவி இல்லை என்பதை கூட நாகரீகமாக சொல்ல முடியவில்லையா உங்களுக்கு.

 ஆனால் கல்விக்கு முக்கியதுவம் கொடுக்கிறோம் என அறிக்கை மட்டும் பெரிய அளவில் விடுவீர்கள்.

காசு இல்லாதவர் பிள்ளைகள் படிக்க கூடாதா? இல்லை காசு இல்லாதவன் படிக்கவே கூடாதா? 
படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு தான் அந்த வலி தெரியும். அந்த துணை அமைச்சர் யார் அவர் அதிகாரி யார் என்ற எல்லா பதிவும் தமிழ் லென்ஸ்சிடம் உள்ளது.

அந்த தாய் ஒரு நடுதர குடும்பத்தை சேர்ந்தவர். எனக்கு அரசியல் வாதிகளின்  பகை வேண்டாம் தம்பி , என் பிள்ளையின் படிப்புக்கு உதவி வேண்டும் என அவர் கேட்டு கொண்டதால் நாங்கள்  பெயரை சொல்லாமல் வைத்துள்ளோம்.

இனி இப்படி ஒரு சம்பவம் மற்றவர்களுக்கு நடந்தால் அல்லது  மீண்டும் அவர்களுக்கு அழைத்து  இது தொடர்பாக திட்டுவது என ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்தால் பெயர் படம் எல்லாம் வெளியில் அம்பலம் மாகும்.

மக்கள் கொடுத்த வாய்ப்பில் பதவியை அனுபவிக்கும் தரப்பினருக்கு நாவடக்கம் தேவை. உங்களை நம்பி மக்கள் இல்லை மக்களை நம்பி தான் நீங்கள் உள்ளீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இவர்கள் பேசிய இழிவான பேச்சால் அந்த தாய் பொதுவில் வந்து பொது மக்களிடம் உதவி கேட்கவே அச்சம் கொண்டுள்ளார்.

ஆகையால் , பொது மக்களுக்கு தமிழ் லென்ஸ் வைக்கும் வேண்டுகோள்.  இந்த தாயின் மகளின் கல்விக்கு உதவ நினைக்கும் பொது மக்கள் தமிழ் லென்ஸ் ஊடகத்தை நாடினால் நாங்கள் அந்த தாயின் தொலைபேசி எண் விவரத்தை உங்களுக்கு கொடுப்போம்.

ஒரு மாணவியின் கல்விக்கு உதவுங்கள் மக்களே !

செய்தி : வெற்றி விக்டர்

அந்த தாயின் மேல் விவரம் பெற  தமிழ் லென்ஸ் ஊடகத்தை  அணுகவும்.

014-3237321
0102262290

கோலாலம்பூர், மார்ச் 6-

கட்சிகள் பார்க்காமல் அனைத்து எம்பிகளுக்கும் மானியத்தை அரசு வழங்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தேர்தலின் வழி எம்பிகள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். அப்படி இருக்கையில் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள் அவர்களின் சேவையை தொடர மானியம் முறையாக வழங்கப்பட வேண்டும் என பெரிக்காத்தான் நேஷனல் மாராங் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ அப்துல் அடி அவாங் தெரிவித்தார்.

அரசு மானியம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டும். இதில் யார் ஆட்சியை பிடிக்கிறார்கள் யார் எதிர்க்கட்சியாக உள்ளார்கள் என்ற பாகுபாடு கூடாது. 

வரி வசூலிக்கும்போது நாட்டு மக்கள் அனைவரிடம்தான் வசூலிக்கப்படுகிறது..யார் ஆட்சியை பிடித்த கட்சியை ஆதரிக்கிறார்களோ அவர்களிடமிருந்து மட்டும் வசூலிக்கப்படுவதில்லை. வரி வசூலுக்கு மட்டும் இந்த நிலை இருக்கும்போது மானியம் ஒதுக்கீட்டிலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேற்கு கடற்கரை மாநிலங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக சுதந்திரம் பெற்றிருந்தாலும் கூட கிழக்கு மலேசியா இன்னும் பின்தங்கியே உள்ளது. திரெங்கானு மற்றும் கிளந்தானுக்கு ராயல்டி இல்லை, மற்ற மாநிலங்களில் ராயல்டி பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படாததை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்தார். அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மானியம் நேரடியாக வழங்கப்படாமல் நேரடியாக மக்களிடம் வழங்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

ஈப்போ, மார்ச் 6-
அதிகமான இந்தியர்கள் வாழும் பேராக் மாநிலத்தில் பல பழமை வாய்ந்த இடங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது வரலாறு.

ஆனால், சமீபத்தில் தெலுக் இந்தான்  சந்தையின்  நுழைவு வாசலில் தமிழ் இல்லை என்ற சர்ச்சை கிளம்பியது. பல எதிர்ப்புகள் வந்தவுடன் தமிழ் எழுத்து அங்கு மீண்டும் வைக்கப்பட்டது. இந்த செய்தியை தமிழ் லென்ஸ் வெளியிட்டது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

இப்போது ஈப்போ கே.டி.எம் ரயில்  நிலைய பதாகையில் பேராக்கிற்கு வருகை தாருங்கள் என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த பதாகையில் மலாய், சீன, ஜாவி, மற்றும் தாய்லாந்து மொழியும் இடம்பெற்றுள்ளன. ஆனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாட்டு தைலாந்து மொழிக்கு கொடுக்கும் மரியாதையை அந்த மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்குக் கொடுக்க தவறியது யார் குற்றம்?

பேராக் மாநில ஆட்சி குழு உறுப்பினர் சிவநேசனுக்கு இதை கவனிக்க நேரம் இல்லையா என  சமூக வலைத்தளத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

எது எதுக்கோ அவசரக் கூட்டம் போடும் சிவநேசன், தான் ஆட்சி குழு உறுப்பினராக இருக்கும் பேராக் மாநிலத்தில் ஒரு பொது போக்குவரத்து இடத்தில்  தமிழ் மொழி புறக்கனிக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுக்க திரானி உண்டா ?  இதற்கு அவசரக் கூட்டம் போடுவாரா?

தமிழ் மொழியை வாழவைப்போம் என அறிக்கை விடுவது மட்டும் தமிழ் உணர்வு  அல்ல. மாறாக தமிழ் மொழி பெருமையை நிலை நிறுத்தும் வகையில் குரல் கொடுத்து நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.


செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் 6-

கடந்த செப்டம்பர் மாதம் வரை, மலேசியா முழுவதிலும் உள்ள 20 குடி நுழைவுத் தடுப்பு மையங்களில் மொத்தம் 1,467 அந்நிய நாட்டு குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வாட்ச் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்ட குழந்தைகள் அங்கு தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டு வருவதை நேரில் கண்ட அலி என்ற ஆடவர் அதனை தட்டிக்கேட்க முயன்றபோது அவரும் அங்கு சித்திரவதை செய்யப்படதாக அவர் கூறியுள்ளார்.

44 வயதான அலி, இரவு முழுவதும் தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேற முயன்ற போது அவர் கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஒன்பது வயது சிறுவன் அதிக ரொட்டி கேட்டதற்காக எப்படி அடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டான் என்ற  கொடூரமான காட்சியை நேரில் கண்ட  அவர் அந்த அனுபவத்தை சர்வதேச மனித உரிமை ஆணையத்திடம் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

பொதுவாக டேப்போக்கள் என்று அழைக்கப்படும் தடுப்பு மையங்களில் உள்ள குழந்தைகள், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள மூத்தவர்கள் எதிர்கொள்ளும் அதே துஷ்பிரயோகங்களை அடிக்கடி எதிர்கொள்கின்றனர். மருத்துவ உதவி மறுப்பு, போதிய உணவு மற்றும் தவறான சிகிச்சை உட்பட பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி தடுப்பு காவலில் இருக்கும் மொத்த குழந்தைகளில் மூன்றில் இரண்டு பகுதியினர் துணையின்றி அல்லது அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிந்து, சில சமயங்களில் தனியாக (அவர்கள் பிறந்த நாட்டிற்கு) திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்குப் பின்பு அவர்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கப்படாமல் அவுதிபடுவதாக கூறப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு தேவையான பால் மாவு மற்றும் பெம்பஸ் போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் பெண்கள் டெப்போவில் பிரசவித்து, புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

மலேசிய அரசாங்கம் குழந்தைகளை குடியேற்றக் காவலில் வைத்திருப்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், 

கைது செய்யப்படும் சிறார்கள் மற்றும் குடும்பத்தினர்களின் பாதிகாப்பு கறுதி தடுப்பு காவல் சட்டத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என வாட்ச் மனித உரிமை ஆணையம் புத்ரா ஜெயாவை வலியுறுத்தியது.

கோலாலம்பூர், மார்ச் 6-

ஊடகவியலாளர்கள் தங்களின் கடமையை செய்வதற்கான லைசென்சாக ஊடக அட்டை வழங்கப்படவில்லை. மாறாக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொள்வதற்கான சிறப்பு அட்டையாகவே தகவல் துறை அதனை வெளியிட்டுள்ளதாக தொடர் துறை அமைச்சர் ஃபாமி பட்ஸில் தெரிவித்தார்.

மருத்துவ துறைக்கு தேவைப்படும் லைசன்ஸ் போல் இது இல்லை. அதேபோல் வழக்கறிஞர்கள், கட்டட வடிவமைப்பாளர் போன்றவர்கள் அத்துறைகளில் கடமையாற்றுவதற்கு தேவைப்படும் லைசென்ஸ் போன்ற இது இல்லை என்றார் அவர்.

ஊடக அட்டைக்கான 2 ஆண்டு செல்லுபடி காலம் மற்றும் விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது அல்ல. ஊடக அட்டை என்பது ஊடகவியலாளர்களுக்கு தேவையான உரிமம் அல்ல, (அது இல்லாதது) செய்தியாளர்கள் செய்திகளை வெளியிடுவதைத் தடை செய்யாது, எனவே அது ஊடக சுதந்திரத்தைத் தடுக்காது என்றார் அவர்.

கோலாலம்பூர், மார்ச் 6-

கூட்டரசு நில மேம்பாட்டு இலாகாவான பெல்டாவிற்கு வெ.1.005  பில்லியன் இழப்பை எதிர்நோக்குவதாக ஆடிட்டர் ஜெனரல் வான் சுராயா வான் முகமட் ரட்ஸி தெரிவித்தார்.

வான் சுரயாவின் கூற்றுப்படி, டிசம்பர் 31, 2022 இல் முடிவில் பெல்டா வெ.0.808 பில்லியன் இழப்பை கொண்டிருந்தது. பெல்டா குறைந்த ரொக்கம் மற்றும் பணத்திற்கு சமமான நிலையைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

2022 இல் பெல்டா பெற்ற அரசாங்க மானியம் வெ.0.214 பில்லியன் (2021: வெ.0.342 பில்லியன்) ஆகும். பெல்டா இயக்க செலவுகள் மற்றும் பொறுப்புகளை ஈடுகட்ட மத்திய அரசின் நிதி உதவியை நம்பியுள்ளது.

ஃபெல்டா நிதி நிறுவனங்களிடமிருந்து வெ.7.973 பில்லியன் மற்றும் மத்திய அரசிடம் வெ.0.686 பில்லியன் கடன்களைப் பெற்றுள்ளது" என்று அவர் கூறினார்.

இன்று மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான கூட்டரசு ஏஜென்சிகளின் நிதிநிலை அறிக்கைகள் குறித்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் இந்த விஷயம் கூறப்பட்டுள்ளது.

ஷா அலாம், மார்ச் 5-

சிலாங்கூர் மாநிலத்தில் பி40 வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளில் பயிலும்  மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில் இலவச பேருந்து கட்டணம் வழங்கப்படுவதாக ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு  இன்று தெரிவித்தார்.

இந்த   300 வெள்ளி இலவச பேருந்து கட்டணம் வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி  மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

கடந்த 2013 இல் வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம் வழங்கும் திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகப்படுத்தியது.

2013 முதல் தொடர்ந்து இந்த இலவச பேருந்து கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 3,594 மாணவர்களுக்கு 11 லட்சத்து 78 ஆயிரம்  வெள்ளி வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப இலவச பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

இதைத் தவிர்த்து பி40 இந்திய மாணவர்களுக்கான உயர் கல்வி திட்டங்களுக்கும் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இளங்கலை பட்டப்படிப்புக்கு 5 ஆயிரம் ரிங்கிட்டும் டிப்ளோமா படிப்புக்கு 3 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படவுள்ளது.

இவ்விரு திட்டங்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி பிற்பகல் 12.00 மணிக்குள் முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இத்திட்டம் நிச்சயம் வசதிக் குறைந்த மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று பாப்பாராயுடு கூறினார்.

இத்திட்டம் குறித்த மேல்விவரங்களுக்கு 03-55447307 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

-செய்தி: காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், மார்ச் 5-

உள்நாட்டு அரிசி விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் அரிசித் தட்டுப்பாடு பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் மொகிதீன் யாசின் இன்று நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

நான் விவசாயம் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் அரிசி தொடர்பான பிரச்சினைகளை நான் சமாளித்து வந்தேன், சந்தையில் அரிசி இல்லை என்ற பிரச்சினையோ அல்லது அரிசியின் விலை அதிகரிப்பையோ நாங்கள் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விட உள்ளூர் அரிசி தற்பொழுது சந்தையில் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. உள்நாட்டு அரிசி விற்பணை சந்தையில் குறைவாக உள்ளது. உள்ளூர் அரிசி எல்லாம் எங்கே போகிறது? இன்று வரை அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மடானி அரசாங்கத்தில் உணவு விலை மற்றும் பொருளாதாரம் கட்டுப்பாடு இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் தற்பொழுது சூழ்நிலையில் அரிசி மற்றும் விலையேற்றம் தொடர்பாக தமக்கு புகார்கள் கிடைத்து வருவதாக அவர் சொன்னார்.

இதற்கிடையில், வாழ்க்கைச் செலவு மற்றும் சவாலான பொருளாதாரம் ஆகியவை இந்த நேரத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என மொகிதீன் மேற்கோள் காட்டினார்.

மேலும் ரிங்கிட்டின் மதிப்பு  குறைந்துக்கொண்டே போகிறது. அதாவது மலேசியர்களுக்கே ரிங்கிட்டின் மீது நம்பிக்கை இல்லை.

அவர்கள் ரிங்கிட்டை சேமிக்க விரும்பவில்லை. ஏனென்றால் மதிப்பு தொடர்ந்து குறையும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். எனவே அவர்கள் வெளிநாட்டு நாணயத்தை சேமிக்க எண்ணம் கொள்கிறார்கள்.

ஆகவே மடானி அரசாங்கம் உடனடியாக இப்பிரச்சனை தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், மார்ச்.4-

மக்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும் முயற்ச்சியில் ஒற்றுமை அரசாங்கம் செயல்பட்டால் நிச்சயம் மைபிபிபி கட்சி ஆதரவாக இருக்கும் என அதன் தலைவர் டத்தோ லோகபாலா தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கோவிட்-19 தொற்று பாதிப்பை அடுத்து இன்னும் தொடர்ந்து மக்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

அதில் குறிப்பாக தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள பொருட்கள் விலைவாசி ஏற்றத்தாழ் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை செலவீனங்களை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவ்வகையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மை பிபிபி கட்சி சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன் வைத்தது. முக்கியமாக உணவு மற்றும் பொருட்கள் விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கட்டட வாடகையை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை கட்சி முன் வைத்துள்ளது. 

கட்டட வாடகை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகமாக வசூலிக்கப்படுவதால் வியாபாரிகள் உணவு மற்றும் பொருட்களின் விளையை ஏற்றம் செய்கின்றனர். கட்ட வாடகை விலையை கட்டுப்படுத்துவதால் உணவு மற்றும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

நேற்று மை பிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற உட்சமன்ற கூட்டத்தில் கட்சியின் நலன் கருதி பல புதிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவற்றில் கட்சியின் சட்ட திட்டங்களில் புதிய மாற்றம் செய்யப்பட்டதோடு மை பிபிபி கட்சியின் சின்னத்தை மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என டத்தோ லோக பாலா தெரிவித்தார்.

தொடர்ந்து இனி புதிய பொலிவுடன் மை பிபிபி கட்சி மக்களின் நலனுக்காக செயல்படும் என அவர் உறுதியளித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 3-

ஒரு தமிழ் படைப்புக்கு  மலேசியாவில் விருது கொடுக்க 12 தமிழ் கல்வி ஆய்வாளர்களின் முயற்சிக்குக் கைக்கொடுக்கும் வகையில் ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் முன்னெடுத்த முயற்சி தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

எந்த புல்லுருவிகள் பல நாடகம் போட்டலும் ... ஜாதி அடிப்படையில் உள்ள சில சில்லறைகள் தமிழ் மொழியை விட சுய அரசியலுக்காக நடத்தும் நாடகம் அனைத்தும் , இந்த நாட்டில் தமிழ் மொழி-சமயம் இரண்டும் என் கண்கள்  என கூறும் டத்தோஸ்ரீ சரவணனிடம் பலிக்காது... 

இந்த கூட்டம்  தான் டத்தோஸ்ரீ சரவணன் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உரையாற்ற கூடாது என பல முயற்சி எடுத்தும்.. அனைத்தையும் தவிடுபொடி ஆக்கி ஒரு தமிழ் தலைவர் 5 நிமிட வாய்ப்பில்  தனது உரையில் அரங்கத்தை அதிர வைத்தார் என்பது நடப்பு நிலவரம். அது அவர்களுக்கும் தெரியும்...

இன்று தமிழுக்காக ஒரு படைப்பாளி கொடுத்த மகா கவிதை படைப்புக்கு  பெருந்தமிழ் விருதை  வழங்க செந்தமிழ் சுடர் டத்தோ ஸ்ரீ சரவணன் ஏற்பாட்டில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில்  இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை.. எந்த நாச வாதிகள் திசை திருப்பினாலும்...  நிகழ்ச்சி நடைப்பெறும் காரணம் நிகழ்ச்சியை நடத்துவது தமிழ் சமுதாயத்தின் சமயம் மற்றும் மொழியின் காவலர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்.

 தமிழ் மொழி சார்ந்த விசியங்களில்....எந்த ஜாதி அரசியல் வந்தாலும் தமிழே முதன்மை.

செய்தி : வெற்றி விக்டர்

சுங்கைபூலோ,மார்ச்.2-

தெக்குனில் கடனுதவிப் பெற்ற137,520 தொழில்முனைவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் அதனை திருப்பி செலுத்தாத நிலையில் அதன் மதிப்பு 1.1 பில்லியன் ரிங்கிட் இருப்பதாக தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் தெரிவித்தார்.

குறிப்பாக இதில் சிலாங்கூரில் ஆக அதிகமாக 22,662  பேரும் சபா 16,945 மற்றும் கெடாவில் 14,823 பேரும் இந்தக் கடனை திரும்ப செலுத்தவில்லை என இன்று  சிலாங்கூர் மாநில மடானி தெக்குன் பெருவிழாவை தொடக்கி வைத்து பேசியபோது இவ்விவரங்களை தெரிவித்தார்.

இந்தக் கடனுதவியைப் பெற்ற தொழில்முனைவோர் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் அந்தத் தொகையை மீண்டும் செலுத்திவிட வேண்டும்.

காரணம் இதன் மூலம்தான் வியாபாரம் செய்வதற்கான முதலீடு தேவைப்படும் மற்ற தொழில்முனைவோருக்கும் உதவ முடியும் என்று கூறினார்.

மேலும் சிலாங்கூர் மாநில தொழில் முனைவோரின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு இவ்வாண்டு தெக்குன் 65 மில்லியன் ரிங்கிட் நிதியை வழங்க முனைந்துள்ளது.  

இந்த நிதியானது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 4 ஆயிரம் அதிகாரப்பூர்வமற்ற, மைக்ரோ தொழில்முனைவோருக்குக் கடனுதவியாக வழங்கப்படவுள்ளது.

அதே சமயம் இவ்வாண்டு ஜனவரி மாதம் மட்டும்  சிலாங்கூர் மாநிலத்தைச்  சேர்ந்த 225 தெக்குன் தொழில்முனைவோருக்கு 7.35 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.2-

பெட்டாலிங் ஜெயாவில் வீற்றிருக்கும் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் தவ திரு பால யோகி சுவாமிகளின் ஆசியோடு உலக வரலாற்று பதிப்பக தமிழில் அமைந்த இந்து கலைக்களஞ்சிய நூல்கள் இன்று தமிழ் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

இந்து கலைக்களஞ்சிய நூல்கள் 4,200 பக்கத்தில் 12 பிரதிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

இன்று பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் இந்த நூல்கள் இலவசமாக தமிழ் பள்ளிகளுக்கும் திரு கோவில்களுக்கும் வழங்கப்பட்டதாக  இருப்பிடத்தின் செயலாளர் கண்ணா தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு முன்னிலையில் தமிழ்ப் பள்ளி பொறுப்பாளர்களிடம் இந்த நூல்கள் ஒப்படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய அவர், நம் சமுதாயத்தின் அடுத்த தலைமுறை ஒழுக்கமாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்றால் இளைஞர்களுக்கு முறையான  சமயக்கல்வி கற்றுத்தரப்பட வேண்டும். ஒவ்வொறு பெற்றோர்களும் இதனை கருத்தில்கொண்டு தனது குழந்தைகளுக்குக் கட்டாயமாக சமயக்கல்வியை கற்றுக்கொள்வதற்கு வழி வகுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சிலாங்கூர்  பிப்ரவரி-29

அண்மையில் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கணினி வகுப்புக்குத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த தகவலை சொன்னது சிலாங்கூர் மாநில  கல்வி இலாகா என சொல்லப்பட்டாதாக   தகவல் பரவியாதாகவும் ,
அந்த தகவல் தொடர்ச்சியாக  சிலாங்கூரில் உள்ள் அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பரவியதாக  சிலாங்கூர் தமிழ் சங்கத்  தலைவர் எல். சேகரன் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இதற்கான விளக்கம் கேட்டு சிம்பாங் லீமா   தமிழ்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களால் ஒரு நடவடிக்கை குழு  மணிவண்ணன் தலைமையில் உருவாக்கப்பட்டு கடிதம் ஒன்றை  தயார் செய்து விளக்கம் கேட்டு சிலாங்கூர்  கல்வி இலாகா, சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, கல்வி அமைச்சு , கல்வி அமைச்சர் , துணை கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை கடந்த பிப்ரவரி 7 முதல் 9 வரை அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்திற்கு எந்த ஒரு பதிலும் இல்லாத பட்சத்தில் இந்த நிலவரம் உண்மையா ? என சிலாங்கூர் கல்வி இலாகா மற்றும் கல்வி அமைச்சு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என  அவர்கள் செய்தியாளர் சந்திப்பை இன்று நடத்தினர்.

இந்த செய்தியாளர் சந்திப்பிற்கு வருகை அளித்த மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார்,
மாணவர்கள் விவகாரத்தில்  குழப்பம் இருக்க கூடாது; அமைச்சு உடனடி விளக்கம் கொடுக்க வேண்டும்; கணிணி வகுப்பு தடை இல்லாமல் நடக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதே வேளையில் சிலாங்கூர் தமிழ் சங்கத் தலைவர் எல். சேகரன் பேசுகையில் அமைச்சு மௌனமாக இருக்காமல்  உடனடியாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்றார்.


செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், பிப்.28-

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு சமூக ஊடகத் தள வழங்குநர்கள் தங்களின் சுய மதிப்பீட்டை பயன்படுத்துகின்றனர். இதில், சம்பந்தப்பட உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு அரசாங்கத்திடமிருந்து எந்த அறிவுறுத்தல்களையும் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

நடப்பில், சமூக ஊடகங்களில் இருக்கும் உள்ளடக்கம் தொடர்பான அறிக்கைகளை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) Facebook, Tiktok மற்றும் X போன்ற சமூகத் ஊடகத் தள வழங்குநர்களிடம் அதன் கோரிக்கையை சமர்ப்பிக்கிறது.

இருப்பினும், குறிப்பிட்ட அந்த கோரிக்கையைக் கொண்ட உள்ளடக்கத்தை அகற்றும் நடவடிக்கையை எடுக்கும் முடிவு சமூக ஊடகத் தள வழங்குநர்களின் சுய வழிகாட்டுதலைப் பொறுத்தது.

அவர்கள் (சமூக ஊடகத் தள வழங்குநர்கள்) எம்.சி.எம்.சி மற்றும் அரசாங்கத்தின் கருத்துக்களுடன் உடன்படுகிறார்களா அல்லது இல்லையா என்பது அவர்களின் சொந்த முடிவாகும்."

சமூக வலைத்தளங்களில் இருக்கும் குறிப்பிட்ட பதிவு அகற்றப்பட்டால், அது அரசாங்கத்தின் மதிப்பீடு, முடிவு மற்றும் கோரிக்கையுடன் உடன்படுகிறது என்று அர்த்தம். சில சமயம், அரசாங்கத்தின் சில கோரிக்கைகளும் அவர்களால் நிராகரிக்கப்படுகின்றன," என்று மக்களவையில் முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையது சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ இவ்வாறு பதிலளித்தார்.

முன்னதாக, மக்களின் விமர்சனத்திற்கு பயந்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படும் உள்ளடக்கங்களை அரசாங்கம் அகற்றுவதாகக் கூறி அக்குற்றச்சாட்டை சையத் சாதிக் முன்வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

கோலாலம்பூர், பிப்.27-

தலைநகரில் இன்று நடைபெற்ற #Reformasi100peratus எனும் பெர்சே பேரணியில் ஈடுபட்ட நபர்கள் மேல்விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள் என போலீஸ் அறிவித்துள்ளது.


இன்று அதிகாலை தொடங்கி நாடாளுமன்றத்திற்கு  அருகில் கூடிய கூட்டம் தொடர்பான விசாரணைக்கு உதவவே அப்பேரணியில் ஈடுபட்டவர்கள் அழைக்கப்படுவார்கள் என டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர் உதவி ஆணையர் நூர் டெல்ஹான் யாஹ்யா தெரிவித்தார்.

பேரணியில் ஈடுபட்ட அனைவரையும் நாங்கள் அழைப்போம். அவர்கள் மீது அமைதியான சட்டசபை சட்டம் 2012 இன் பிரிவு 9(1) இன் கீழ் விசாரணை நடத்தப்படும்  என்று அவர் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் முன்புறம் நடத்தப்பட்ட பேரணியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பாங்கி, பிப்.27-

கார் ஓட்டுநர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 உணவு விநியோகிப்பாளர்கள் மீது இன்று மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில்  குற்றம் சாட்டப்பட்டது. 

கடந்த பிப்ரவரி 20 ஆம் திகதி அன்று இரவு 9.54 மணிக்கு பெரானாங்கில் உள்ள ஜாலான் டிபிஎஸ் 2/3, தாமன் பெலாங்கி செமினி 2 இல் ஷாரில் சமத் (வயது 42) என்பவரைக் சில உணவு விநியோகிப்பாளர்கள் காரில் இருந்து வெளியே இழுத்து தள்ளி அடிக்கும் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகியதை தொடர்ந்து இக் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட முகமது யூரி ரனோஃப் முகமது பச்சூரி (வயது 41) அசாருல் அசுவான் முகமது அசான் (வயது 34),தேங்கு இழம் தேங்கு ஹமீது (வயது 22), மஹாசிர் நோர்டின் (வயது 43), மற்றும் சியாம்சுல் கமர் அயோப் (வயது 40), ஆகியோர்களுக்கு  எதிரான குற்றச்சாட்டுகள் மாஜிஸ்திரேட் நூர்தியானா முகமட் நவாவி முன் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஐவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் கீழ் பிரிவு 302ன் படி வழக்குத் தொடரப்பட்டது, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 பிறம்பட்டிகள் குறையாது தண்டனை விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை . அதற்கு காரணம் தடயவியல் ஆவணங்கள், வேதியியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரையில் நீதிமன்ற விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

மகா கவிதை புத்தகத்திற்காக கவி பேரரசு  வைரமுத்துவிற்கு  மலேசியாவில் பெருந்தமிழ் விருது வழங்கப்படுகிறது என சென்னையில்
 மஇகாவின்  துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் அறிவித்தார்.

மலேசியா தமிழ் சங்கத்தைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய குழுவினர்  கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை என்ற புத்தகத்தை ஆய்வு செய்துப் பாராட்டியுள்ளனர். 

அதன் அடிப்படையில் மகா கவிதை புத்தகத்திற்காக கவிஞர் வைரமுத்துவிற்கு பெருந்தமிழ் விருது வழங்கப்பட விருப்பதாக டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. 


இவ்விழா வரும் மார்ச் 8ஆம் திகதி  மாலை 06.00 மணிக்கு  கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெவுள்ளது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உட்பட பல அறிஞர்கள், தலைவர்கள் முன்னிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கு  இந்த விருது வழங்கப்படவுள்ளது.


இந்நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, 

விருது சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். 90 வயது வரை யாரும் காத்திருக்க வயது இல்லை, பொறுமையும் இல்லை, விருது வழங்கும் நிறுவனத்திற்கு நான் வைக்கும் கோரிக்கை இல்லை, எனது ஆதங்கம். 

தமிழகத்தில் உள்ள பல நூல்களில், மகா கவிதை நூல் விருது பெற்றது தமிழ்யிட்ட கட்டளை என்று நான் கருதுகிறேன்

இந்திய புத்தகத்திற்கு மலேசியா விருது வழங்க உள்ளது.

ஆனால் இந்தியாவின் உயரிய விருதான ஞான பீடம் விருது, தமிழ் மொழிக்கு எத்தனை முறை ஞான பீடம் விருது வழங்கியுள்ளது?  இந்தியாவின் உயரிய விருதான ஞான பீடம் இதுவரை 58 விருதுகள் வழங்கியுள்ளது.

இந்தி மொழிக்கு 11 முறையும், கன்னட மொழிக்கு 8 முறையும், மலையாளம், வங்காளம் மொழிக்கு 6, உருது மொழிக்கு 5 முறை. 

ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு 2 முறை மட்டுமே அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேருக்கு மட்டுமே விருது கொடுத்துள்ளது ஞான பீடம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் வைரமுத்து!

அலோர் ஸ்டார்,பிப்.26-

நாட்டின் எல்லைக் வழியாக இரண்டு கொள்கலன்களை பயன்படுத்தி தாய்லாந்திற்கு 80,000 லிட்டர் டீசலை கடத்தும்  முயற்சியை மலேசிய சுங்கத் துறை முறியடித்தது. 

இந்த மாநிலத்தின் டுரியான் பூருங் அருகே உள்ள கோத்தா  புத்ரா எல்லையை பயன்படுத்தி இந்த கும்பல் ஏற்றுமதி ஆவணத்தில் பொய்யான தகவலை குறிப்பிட்டு டீசலை கடத்தும் முயற்சியை மேற்கொண்டது.

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி காலை 9 மணி அளவில் உள்ளூர் பதிவு எண்களைக் கொண்ட இரண்டு கொள்கலன் லோரிகள் கோத்தா புத்ரா டுரியான் பூருங்  சுங்கத்துறை வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான அந்த இரண்டு  லோரிகளை சோதனை செய்தபோது அதில் ஆவணத்தில் குறிப்பிடப்படாத டீசல் நிரப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கெடா மாநில சுங்கத்துறை இயக்குநர் நோர் இசா அப்துல் லத்தீஃப் தெரிவித்தார்.

மேலும் விசாரணைக்காக ஓட்டுநரையும் இரண்டு கொள்கலன் லோரியையும் தடுத்து வைத்திருப்பதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட டீசலின் மதிப்பு வெ.172,000 எனவும் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.

அலோர் ஸ்டார், பிப்.26-

பாடாங் செராய், தாமான் டாமாயிலுள்ள காப்பி கடையில் பட்டப் பகலில் ஆடவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆடவரை இருவர் பாராங் கத்தியை ஏந்தியவாறு துரத்தி வந்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க லோரி ஓட்டுநரான அந்நபர் காப்பி கடைக்குள் சென்றுள்ளார்.

இருந்தபோதும் கடைக்குள் நுழைந்த அவ்விருவரும் 27 வயதுடைய அந்நபரை சரமாரியாக பாராங் கத்தியால் வெடியுள்ளனர். பலத்த காயங்களுக்குள்ளான அந்நபர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சமவம் பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்தது என்றும் இந்த கொலைச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி ஏஎஸ்பி அஸ்மிருல் அப்துல் அஸிசை 019-4446521 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளுமாறு கூலிம் மாவட்ட போலீஸ் படையின் இடைக்காலத் தலைவர் சபுவான் முகமட் நோர் தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிப்.26-

நாடாளுமன்றத்தில் மகஜர் கொடுக்க பெர்சே அமைப்பு நாளை நடத்தவுள்ள பேரணியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என போலீஸ் வலியுறுத்துகிறது.

இந்த பேரணி நடத்துவது குறித்து போலீசுக்கு இதுவரை எந்த கடிதமும் கிடைக்கவில்லை. அமைதி பேரணி சட்டம் 2012-இன் கீழ் அதற்கு அனுமதியும் வழங்கப்படவில்லை என கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் அலாவுதின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

அனுமதி பெறாமல் பேரணி நடத்தப்பட்டால் அது செக்‌ஷன் 9(5) அமைதி பேரணி சட்டம் 2012-இன் கீழ் குற்றமாகும். ஆகையால் சட்டத்தை மதிக்காமல் நடைபெறும் பேரணிகளில் பொதுமக்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டுமென போலீஸ் வலியுறுத்துகிறது.

பேரணி ஒன்றை நடத்துவதற்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன்பே அதன் ஏற்பாட்டாளர் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் பேரணியை நடத்தினால் குறைந்தபட்சம் வெ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம். ஆகையால் சட்டத்தை மீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலாவுதின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

சுபாங், பிப்.25-

நாட்டில் தற்போது அரசியல் நிலை பேய் பிடித்து ஆடுவதைப் போல் உள்ளது. இது நீடித்தால் வருங்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினையை நாம் சந்திப்போம் என 

மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

அரசியலில் தொடர்ந்து ஏற்பட்டும்  குளறுபடிகளுக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் அது நாட்டு  மக்களை பாதிக்கும், ஆகவே அரசியலின் மூலம் நல்ல நிலையில் இருக்கும் நபர்களை அது பாதிக்காது. மாறாக சாதாரண பாமர மக்கள் தான் இதனால் பாதிக்கப்படுவார்கள் என அவர் கருத்துரைத்தார்.

ஆகவே அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவதை தவிர்த்து விட்டு பொது மக்களின் நலனுக்கான சிறந்த திட்டங்களை வகுக்க வேண்டும். அவ்வகையில் நான் இந்த அரசாங்கத்திற்கு  இரண்டு சிறந்த திட்டங்களை கொடுத்துள்ளேன்.

அவற்றில் நாட்டில் வர்த்தகம் மேற்கொள்ளும் கட்டடங்களின் வாடகையை குறைக்க அரசாங்கம் முன் வர வேண்டும். குறிப்பாக உணவகங்களை நடத்தி கொண்டிருக்கும் கடைக்காரர்கள் அதிக அளவுக்கு கட்டட வாடகையை கட்ட வேண்டியுள்ளது.

இதனால் அவர்கள் உணவு விலையை ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நாட்டில் உணவு விலை ஏற்றம் அடைந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

அரசாங்கம் முயற்சி செய்தால் கண்டிப்பாக உணவு உட்பட பல பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் சொன்னார்.

இன்று சுபாங் தேசிய கோல்ஃப் மண்டபத்தில் சிலாங்கூர் மாநில மைபிபிபி பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

இதனிடையே இந்த நிகழ்வில் மறைந்த டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் தபால் தலையை வெளியிட்டு அதை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர்  பிப்ரவரி -24

காந்தியத் தொண்டர் மன்றத்தின் 52 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி பிரபல அரசியல் பிரமுகரும், நடிகர்- எழுத்தாளருமான பழ.கருப்பையாவின் " இப்படி  தான் உருவானேன் " என்ற நூல்  வெளியீடு நிகழ்ச்சி, தமிழ் நாடு கண்ணதாசன் மண்டபத்தில் நாளை  நடைப்பெறுகிறது.

ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ  டாக்டர் எம்.சரவணன் இந்த நூலை வெளியிடுகிறார்.

இந்த விழாவில் கலந்துக்கொள்ள  தமிழ் நாட்டுக்கு சென்றுள்ளார் ,டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் .

இந்த நிகழ்ச்சியில்  கு.பெலிக்சு,  சிங்கப்பூர் செ. சங்கரநாதன், விசயராகவன், கோவிலூர் நாராயண சாமிகள், மூத்த தலைவர்  பழ.நெடுமாறன் , பிரபல நடிகர் சிவகுமார்  ஆகியோரும் கலந்துக்கொள்கின்றனர்.

‘பன்மொழிக் கல்வி என்பது புதிய தலைமுறையினருக்கு இடையேயான கற்றலின் தூண்’ என்பதை, 2024 பன்னாட்டு தாய்மொழி தினத்திற்கான கருத்தாக யுனெஸ்கோ மன்றம் பிரகடனப் படுத்தி உள்ளது.

அந்த வகையில், பல இன-பன்மொழி-பல்கலாச்சார-பல சமயக் கூறுகளைக் கொண்ட மலேசிய கூட்டு சமுதாய மக்கள் அனைவரும் தத்தம் தாய்மொழியைப் போற்றவும் அதேவேளை பிற மொழிகளை மதிக்கவும் உறுதி ஏற்போம் என்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தரும் ம.இ கா -வின் தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் தாய் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்னும் சிந்தனையை உள்ளீடாக வைத்து ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் திகதி, உலகத் தாய்மொழி தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது.

மனிதர்கள் நாகரிக வாழ்வை எட்டி, நவீன கருவிகளைக் கையாண்ட போதிலும் ஆண்டுதோறும் எண்ணற்ற மொழிகள் வழக்கொழிந்து வருகின்றன.

உலக மயமாதல், சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினர் ஒடுக்குவது, தம் தாய்மொழி குறித்த அக்கறையின்மை என்றெல்லாம் மொழிகள் அழிவதற்கான பல காரணங்களை ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு பட்டியல் இட்டுள்ளது.

இவ்வாறு பல்லாயிரக் கணக்கான மொழிகள் அழியும் நிலை, இனியும் தொடரக் கூடாது என்பதற்காக இந்தத் தாய்மொழி நாள் வடிவமைக்கப் பட்டுள்ளது. கடந்த 20-ஆம் நூற்றாண்டின் நிறைவுக் கட்டத்தில் செப்பம்பெற்ற இந்த உலகத் தாய் மொழி நாளுக்குரிய வரலாறு நம் ஆசிய பெருநிலத்திலேயே கருக்கொண்டது என்பது நமக்கெல்லாம் பெருமைதான்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் பிரிட்டன் காலணி ஆட்சியாளர்கள் மெல்ல மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். அந்த வகையில் முதன் முதலில் இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்கிவிட்டு, மற்ற நாடுகளுக்கு காலப்போக்கில் கட்டம் கட்டமாக விடுதலை அளிக்க முடிவு செய்தனர்.

இந்தியா செழிப்பு நிறைந்த மண்டலமாக இருந்தாலும் வறட்சி, புயல்-வெள்ளம் போன்ற சமயங்களில் அந்தப் பெருநாட்டை நிர்வகிப்பதில் அதிகமான சிரமத்தை ஆங்கில ஆட்சியாளர்கள் எதிர்கொண்டனர். அதிக மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டை நிர்வாகம் செய்ய திணறியது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் மக்களின் விடுதலைப் போராட்டம் உச்சத்தைத் தொட்டது.  ஆனாலும், இரு உலகப் போர்கள் குறுக்கிட்டதால், அவர்கள் அதில் கவனம் செலுத்தினர்.

1930-க்குப் பின் இந்திய விடுதலை குறித்த பேச்சு அழுத்தமாக எழுந்த நேரத்தில், பெரும்பான்மை சமயத்தினர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால், அச்சம் கொண்ட சிறுபான்மை சமயத்தினர் பிரிந்து தனியாக சென்றனர். முகமது அலி ஜின்னா தலைமையில்  பாக்கிஸ்தான் என்னும் நாடு உருவானது.

சமய அடிப்படையில் பிரிந்த பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான்-மேற்கு பாகிஸ்தான் என இருமண்டலங்களாக விளங்கியது.

ஆஃப்கானிஸ்தானை ஒட்டிய மேற்கு பாகிஸ்தானின் வாழ்ந்த மக்கள் உருது மொழி பேசுபவர்களாகவும் மியன்மாரை ஒட்டிய கிழக்கு பாகிஸ்தானில் வாழ்ந்தவர்கள் வங்கமொழி பேசுபவர்களாகவும் இருந்தனர். இரு தரப்பினரும் ஒரே சமயத்தைப் பின்பற்றினாலும் பெரும்பான்மை உருது பாகிஸ்தானியர்கள் சிறுபான்மை வங்காள பாக்கிஸ்தானியர்கள்மீது மேலாண்மை புரிய ஆரம்பித்தனர்.

இதன் விளைவாக எழுந்த முறுகல் நிலை மேலும் மேலும் முறுக்கேற,  ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம் வரை சென்றது. அந்த வகையில், வங்கமொழிக்கும் வங்காள மக்களுக்கும் எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்றனர்.

அவர்களில் நான்கு பேர், 1952 பிப்ரவரி 21-ஆம் நாளில் பாகிஸ்தான் இராணுவத்தினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாயினர். அதன்பிறகு நிலைமை மேலும் முற்றவே, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டன. குறிப்பாக, இந்தியா கிழக்குப் பாகிஸ்தானுக்கு அதரவளித்து வங்காள தேசம் என்னும் நாடு உருவாக துணை போனது.

ஒரு நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட பிப்ரவரி 21- சம்பவம், துன்ப நிகழ்வாக இருந்தாலும் தங்களின் தாய்மொழிக்கான உயிர்நீத்த அந்த வீர மாணவர்களின் மாண்பைப் போற்றும் வகையில் இந்த நாளை உலகத் தாய்மொழி தினமாக யுனெஸ்கோ பிரகடனம் செய்துள்ளது.

இதன் அடைப்படையில், மலேசியர்களாகிய நாமும் உலக மக்களைப் போல சொந்த மொழியைப் போற்றி மற்ற மொழிகளை மதிக்கும் சிந்தனையை நம் மனதில் பதிய வைப்போம் என்று  டான் ஸ்ரீ  எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தன்னுடைய உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மொழியின்றி சிந்தனையில்லை, சிந்தனையின்றி மனிதன் இல்லை. மனிதனது பிறப்பாலும்⸴ மரபாலும் பின்னிப் பிணைந்த ஒரு பிரிக்க முடியாத அங்கமே தாய்மொழி ஆகும் என ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர்  டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் உலகத் தாய்  தினத்தையோட்டு  கருத்து தெரிவித்தார்.

தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா என 

தாய்மொழிக்காக உயிரைக் கொடுத்துப் போராடியவர்கள் பலர் உள்ளனர். அவர்களின் தியாகம் இன்று வீணாகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார் அவர் 

உலகில் பல்லாயிரம் மொழிகள் இருந்தாலும் ஒருவருக்கு அவரின் தாய்மொழி என்பது தாயை விடச் சிறந்தது என்கிறார் மகாகவி பாரதியார்.

ஆனால் மாற்றாந் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்பதைப் போல நம்மில் பலருக்குத் தாய்மொழியை விட, பிற மொழிகளின் மேல்தான் மோகம் அதிகம். செம்மொழியான நம் தமிழ்மொழியின் பெருமைக்கு அளவே இல்லை. 

தொன்மை⸴ இனிமை⸴ எளிமை, வலிமை என பல சிறப்புகளைக் கொண்ட தமிழ் மொழியை அலட்சியப் படுத்துவதும், அனாவசியமாகக் கருதுவதும் நம் அறியாமையே

தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே

தமிழைப் பழித்தவனை உன் தாயே தடுத்தாலும் விடாதே  

உயர்ந்த பொருட்களை இயற்கையே பாதுகாக்கும். எனவே தமிழ் தானாகத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். நம் மொழியின் பெருமையைத் தெரிந்து கொள்ள 1300 திருக்குறள்கள் போதும் என தெரிவித்த டத்தோ ஸ்ரீ எம் சரவணன் . 

இந்த மொழியை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது என்றார். 

ஆனால் நாம் அந்த கடமையிலிருந்து தவறி வருகிறோம். தமிழில் பெயர் வைப்பதில்லை, தமிழில் பேசுவதில்லை, தமிழ்ப் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புவதில்லை. ஆனாலும் நாம் தமிழர்கள்.

மொழியின் ஆற்றல் சிந்தனைத் திறனை வளர்த்து,  நாகரீகமான வாழ்க்கையை உருவாக்க உதவும். மனிதனது சிந்தனைத் திறனுக்கும் தாய்மொழிக்கும் தொடர்பு இருக்கிறது. தாய்மொழியில் ஒருவர் அதிகம் சிந்திக்க முடியும். சிறுவயது முதலே நம் பிள்ளைகளுக்கு நம் தாய்மொழியான தமிழ் மொழியின் சிறப்பையும், அதில் புதைந்து கிடக்கும் தமிழ் அறிஞர்களின் படைப்பையும் அறிமுகம் செய்ய வேண்டும்  என்றார்.

தாய்மொழி தினத்தில், தாய்மொழியைப் போற்றுவோம். தமிழ்மொழியைக் காப்போம்.

           பட்டினி கிடந்து பசியால் மெலிந்து

                 பாழ்பட நேர்ந்திடினும்

கட்டி இழுத்து கால் கை முறிந்து

       அங்கம் பிளந்து இழந்து துடித்திடும்

             பொங்கு தமிழைப் பேச மறப்பேனோ..

அனைவருக்கும்  உலகத் தாய்மொழி தின நல்வாழ்த்துகளை தெரிவிப்பதாக டத்தோ ஸ்ரீ எம் .சரவணன்  அறிக்கையில்  தெரிவித்தார்.

சரவாக், பிப்.21-

முன்னாள் சரவாக் மாநில ஆளுநர் துன் தைய்ப் மாமூட் மறைந்ததையொட்டி  இன்று முதல் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என சரவாக் அரசு அறிவித்துள்ளது.

சரவாக் முழுவதும் மாநில கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

மேலும் 2 நாட்களுக்கு எந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறாது, அனைத்தும் ஒத்திவைக்கப்படும் என்று சரவாக் அரசு கூறியுள்ளது.

எனினும் மசூதிகள் மற்றும் வழிபாட்டு இல்லங்கள் பிரார்த்தனை கூட்டங்களை மட்டும் தொடந்து நடத்த ஊக்குவிக்கப்படுகின்றன.

அப்துல் தைப்பின் உடல் இன்று பிற்பகல் 1 மணி அளவில் கோலாலம்பூரில் இருந்து சரவாக்  டேமாக் ஜாயா ஜாலான் பாக்கோவில் உள்ள அவரது இல்லத்திற்கு  எடுத்துவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோத்தா கினபாலு, பிப்.20-

இங்குள்ள வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவரை கட்டையால் அடித்து கொள்ளையிட்ட அந்நிய நாட்டவரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை காலை 6.30 மணிக்கு ஜாலான் காயாவில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 50 வயதிற்குட்பட்ட பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண் வேலையிடத்திற்கு நடந்து செல்லும் வழியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டவர் அப்பெண்ணை தாக்கிவிட்டு அவரின் கைப்பையை கொள்ளையிட்டுச் சென்றதாகவும் கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் படையின் இடைக்காலத் தலைவர் கல்சம் இட்ரிஸ் தெரிவித்தார்.

இச்சம்பவம் அங்குள்ள ரகசிய கேமராவில் பதிவாகியது. அதனை அடிப்படையாக கொண்டு கொள்ளையனை நேற்று அதிகாலை 2.30 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.

அந்நபரிடம் நாட்டிற்குள்ள தங்குவதற்கான ஆவணங்கள் இல்லை. மேலும் அவன் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக கல்சம் இட்ரிஸ் தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிப்.20-

தலைநகரிலுள்ள ஓர் உணவகத்தின் மீதும் கெந்திங் மலையிலுள்ள தங்கு விடுதி ஒன்றின் மீதும் ஆஸ்ட்ரோ நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கடந்த 17 மற்றும் 19ஆம் தேதிகளில் அந்த நிறுவனம் மற்றும் தங்கு விடுதியின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டதை ஆஸ்ட்ரோ அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் வெ.55,000 நஷ்ட ஈடை வழங்குவதாகவும் ஊடகத்தில் பகிரங்கமாக மனிப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். இவ்விரு வணிக தளத்திலும் ஆஸ்ட்ரோவின் அனுமதியின்றி அதன் அலைவரிசைகள் ஒளிப்பபரப்பட்டதால் அவர்கள் மீது ஆட்ஸ்ரோ சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி அவ்விரு வணிக தளங்களும் வணிக ஆஸ்ட்ரோ அலைவரிசை  தொகுப்புக்கு விண்ணப்பிப்பதாகவும் உறுதியளித்துள்ளன.

கூலாய்,பிப்.17

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கனரக லோரி ஒன்றின் பின்புறத்தில்  ஆபத்தான முறையில் ஏரி பயணித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் செனாய் நெடுஞ்சாலை கிலோ மீட்டர் 30இல்  இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தை சாலையை பயன்படுத்திய வாகநமோட்டுனர் காணொளி பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததை தொடர்ந்து தனது தரப்புக்கு புகார்கள் வந்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்  டான் செங் லீ தெரிவித்தார்.

அந்த கனரக லோரி ஓட்டுநருக்கு இந்த சம்பவம் தொடர்பாக எந்த ஒரு தகவலும் தெரியாத பட்சத்தில் அவரின் நண்பர்கள் அனுப்பிய காணொளியை கண்டதும் அதிர்ச்சி அடைந்து பின்னர் சனிக்கிழமை போலீஸ் புகார் அளித்ததாக டான் செங் மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் விவரங்கள் தெரிந்தவர்கள் கூலாய் போலீஸ் நிலையத்தை 016-7573507 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம் என அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர், பிப்.17-

நாட்டில் 10 கிலோ அரிசி வெ.26-இல் இருந்து வெ.30-க்கு ஏற்றம் கண்டது தொழித்துறையினர் மேற்கொள்ளும் இயக்க செலவுகளுக்கு ஏற்ப இருப்பதாக தொழிற்சாலை நடத்துபவர்கள் கருதுகின்றனர்.

அரிசி விவகாரத்தில் விலைக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட்டு விட்டு உற்பத்தி விவகாரத்தில் கவணம் செலுத்த வேண்டும். உள்ளூர் அரிசி சந்தையில் போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மலேசிய மலாய் அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முகமட் தெர்மிஸி யோப் தெரிவித்தார்.

சந்தையில் உள்நாட்டு அரிசி தட்டுப்பாடு பலவீனமான அமலாக்கத்தை காட்டுகிறது. இதற்கு முன்பு உள்நாட்டு உற்பத்தி நாட்டின் தேவைகளில் 60 விழுக்காடு வரை பூர்த்தி செய்ய முடிந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் கடையில் அரிசி இல்லை என்றால் மக்கள் கோபம் அடைவார்கள் என்றார் அவர்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகுதான் உள்நாட்டு அரிசியின் விலை ஏற்றம் கண்டுள்ளது. தற்போதைய அதன் விலை ஏற்றம் ஏற்புடையதுதான். அரிசி உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவை அது ஈடுகட்டும் என்றார் அவர்.

அரிசி விலை ஏற்றத்தை பெரிது படுத்தாமல், உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் தேவை. இந்த விவகாரத்தை மேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தேசிய வாழ்வாதார நடவடிக்கை கவுன்சலுக்கு கொண்டு செல்ல வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு அரிசி உற்பத்தி விவகாரத்தில் சிறந்த முடிவு எடுக்கப்படவில்லை என்றால் வரும் காலத்தில் உற்பத்தி இன்னும் மோசமாக குறைந்துவிடும். அதன் பின்னர் ஒருவரை ஒருவர் குறைக்கூறுவதில் அர்த்தம் இல்லாமம் போய்விடும் என முகமட் தர்மிஸி எஃப்எம்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கோலாலம்பூர், பிப்.17-

குறைந்த விலையில் மலேசியா மடானி வெள்ளை அரிசியை சந்தைப்படுத்தும் திட்டம்  குறித்து அரசு எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை என வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் முகமட் சாபு தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்வதாக அவர் சொன்னார். 

இந்த தொடர்பிலான முடிவை உடனே எடுத்துவிட முடியாது. அடுத்த தேசிய வாழ்வாதார நடவடிக்கை கவுன்சில் கூட்டத்தில் இந்த முன்மொழிவை பற்றி கலந்து பேசிய பின்னர் முடிவு எடுக்கப்படும்.

எந்த முடிவாயினும் நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டு சட்டம் 1994இன் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்படும். அதன் பின்னர்தான் அந்த முடிவு அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும் என முகமட் சாபு தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிப்.16-

அரசியல் தலைவர்கள் பதவிக்கு வருவது முக்கியமல்ல. பதவிக்கு வந்து சமுதாயத்திற்கு என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம் என அன்வார் இப்ராஹிம் சிறை முதல் பிரதமர் வரை எனும் நூல் வெளியீட்டு விழாவில்

மஇகாவின் தேசிய துணை தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கருத்துரைத்தார்.

அவ்வகையில் இந்திய சமுதாயத்தின் மிகப் பெரிய நம்பிக்கைக்குறிய தலைவர்கள் பட்டியலில் டத்தோஸ்ரீ அன்வாரும் ஒருவர். அவரின் கடந்த கால அரசியல் பயணத்தில் எவ்வாறான போராட்டங்களை அவர் சந்தித்தார், எப்படி இந்திய சமுதாயத்தின் ஆதரவை அவர் பெற்றார் என்ற வரலாற்றை நமக்கு தெரிவிக்கும் வகையில் எழுத்தாளர் இரா. முத்தரசன் இந்த அன்வார் இப்ராஹிம் சிறை முதல் பிரதமர் வரை எனும் நூலை எழுதியுள்ளார்.

அரசியலில் தொடர்ந்து போராடினால் வெற்றி காண முடியும் எனும் புதிய நம்பிக்கையை கொடுக்கும் புத்தமாக இது அமைந்துள்ளது. மேலும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மீது இந்திய சமுதாயம் வைத்த நம்பிக்கை, இறுதி வரையில் அவரை ஆதரித்து அவர் பிரதமராகும் வரையில் இச்சமுதாயம் அவருக்கு வழங்கிய ஆதரவு குறித்து இப்புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் முத்தரசன் அவர்கள்.

இது மக்கள் வாசிக்க வேண்டிய புத்தகமாக அமைந்துள்ளது. இவ்வேளையில் நூல் ஆசிரியர் முத்தரசனுக்கு எனது வாழ்த்துகள்.

மேலும் மஇகாவின் புதிய தலைமையகத்தில் எழுத்தாளர்களுக்கு மண்டபம் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

தமிழ் புத்தகங்களுக்கு என முகப்பிடம் ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கைகளை முத்தரசன் முன்வைத்துள்ளார்.

அவரின் கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலனை செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

 

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், பிப்.16-

மடானி ரக்யாட் ஜோன் தெங்கா திட்டத்தின் கீழ் நடத்தப்படும் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 2,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி இம்மாதம் 23 முதல் 25ஆம் தேதி வரை காம்பிலக்ஸ் சுக்கான் கோலா சிலாங்கூரில் நடைபெறவுள்ளது.

மக்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற எண்ணத்தில் மனிதவள அமைச்சு இந்த வாய்ப்பினை வழங்க முன்வந்துள்ளதாக பாச்சுவை சேர்ந்த முகமட் ஷாம்மிடி முகமட் அஸ்ரி தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் வேலைக்கான நேரடி முகத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வு பெறுபவர்களுக்கு வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கப்படும். 

அதுமட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் தொழில்திறன் மேற்கல்விக்கான (திவெட்) பதிவுகளும் நடத்தப்படும். இந்த வேலை வாய்ப்பு கண்காட்சிக்கு 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் 25ஆம் தேதி இதனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார் என்றும் அவர் சொன்னார்.

கோலாலம்பூர், பிப்.16-

Tik tok சமூக வலைத்தளத்தில் பிரபலமாவதற்காக உணவு விநியோகிப்பாளர் ஒருவர் முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி ரயில் நிலையம் அருகில் உதவி போலீஸ் வாகனத்தை எரியூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரை எரியூட்டிய காட்சியை பதிவு செய்து அந்நபர் tik tok பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பிரபலமாகவதற்காக தான் இச்செயலை புரிந்ததாக 25 வயதுடைய அந்நபர் ஒப்புக் கொண்டுள்ளார். 

சம்பந்தப்பட்ட நபர் அங்குள்ள பேருந்து நிலைய சுவற்றில் அரசாங்கத்திற்கு எதிரான வசனத்தை எழுதிவிட்டு காருக்கு தீ வைத்துள்ளதாக பெட்டலிங் ஜெயா மாவட்ட போலீஸ் படைத் தலைவர் முகமட் பக்ருடின் அப்துல் அமிட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபரை புலோரா டாமன்சாராவிலுள்ள அவரின் வீட்டில் நேற்று நண்பகல் 12 மணியளவில் போலீசார் கைது செய்தனர். அவர் கார் மீது பெட்ரோல் குண்டை எறிந்ததுடன் காரை எரியூட்டியுள்ளார்.

கோலாலம்பூர், பிப்.14-

நாட்டிலுள்ள அனைத்து போலீசார்கள் உட்பட போலீஸ் அதிகாரிகளும் தங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்று கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜீத் வலியுறுத்தினார்.

அவ்வகையில் பத்தாயிரம் போலீஸ்காரர்களில் இரண்டு அல்லது மூன்று விழுக்காட்டினர்கள் இந்த உடல் எடை பிரச்சனையை கொண்டுள்ளனர். போலீஸ் துறை மிகவும் சவால் மிகுந்த துறை. இதில் பணி புரிவதற்கு உடல் ஆரோக்கியம் மற்றும் வீரியம் வேண்டும் என அவர் கூறினார்.

அனைத்து போலீசார்களும் ஆரோக்கியமாகவும் அதே சமயம் சீருடை அணிந்திருக்கும் போது புத்திசாலியாகவும் இருப்பார்கள் என்று தாம் நம்புவதாக  கோலாலம்பூர் காவல் படைத் தலைமையகத்தில் நிகழ்ந்த  மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு அவர் சொன்னார்.

உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்காத போலீஸ் காரர்களுக்கு எவ்வித காலக்கெடுவும் இது நாள் வரையில் வழங்கப்படவில்லை என்றாலும் விரையில் இது கட்டாயமாக்கப்படலாம் என அவர் கூறினார்.

ஜொகூர், பிப்.14-

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்கூடாயிலுள்ள இரவு விடுதியில்  கைகலப்பில் ஈடுப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை  வட ஜொகூர்பாரு போலீஸ் தலைவர் பல்விந்தர் சிங் உறுதிப்படுத்தினார்.

ஜொகூர்பாரு ஸ்கூடாய் தாமான் சூத்ராவில் உள்ள இரவு விடுதியில் நடந்த கைகலப்பு தொடர்பான வீடியோ பதிவுகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் வாயிலாக இந்த 11 பேரை கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் 22 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்களாவர் என்று அவர் கூறினார்.

ஷா ஆலம், பிப்.14-

காப்பார் அருகே நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த இலகுரக விமான விமானி, துணை விமானி ஆகியோரின் உடல் விபத்து ஏற்பட்ட இடத்தில் 1.52 மீட்டர் ஆழத்தில்  புதையுண்ட அந்த விமானத்தின் விமானி அறையிலிருந்து  கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் முகமட் வான் ரஜாலி தெரிவித்தார்.

BK 160 Gabriel இலகுரக விமானம் நேற்று விபத்துள்ளான பகுதியில் மண்ணுக்கடியில் புதையுண்ட நிலையில்  இருந்துள்ளது. இந்த விபத்தில் புதையுண்ட விமானத்தில் சிக்கிய இரு உடல்களில் முதல் உடல் இரவு 7.06 மணி அளவிலும் இரண்டாவது உடல் 11 நிமிடம் கழித்தும் மீட்கப்பட்டது என அவர் கூறினார்.

இந்த விமானம் விபத்துக்குள்ளாகிய பகுதியில் இருந்து 800 மீட்டர் தூர சுற்றுவட்டாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களையும் உடைந்து சிதறிய விமானத்தின் பாகங்களையும் தேடும் பணியில் தற்பொழுது மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் தன்னார்வ தீயணைப்புப் படை, காவல்துறை, குடிமைத் தற்காப்புப் படை (APM), மலேசிய தன்னார்வத் துறை (RELA) மற்றும் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களும் உதவியதாக அவர் கூறினார்.

இந்த விமானத்தில் பயணம் செய்த டேனியல் இ சியோங் ஹுன் (வயது 30), ரோஷன் சிங் ராய்னா ( வயது 42) என கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் முறையே பினாங்கு, ஜொகூர் ஆகிய மாநிலங்களை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாம்பூர் பிப்-10

தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியான ம.சீ.ச கட்சியின்  சீன புத்தாண்டு விருந்து உபசரிப்பு  தலைநகரில் நடைப்பெற்றது. 

இந்த விருந்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் , தேசிய முன்னணி தலைவரும்,  துணை பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஷாஹிட் ஹமீட், ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ  டாக்டர் எம்.சரவணன்,  முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் என  தலைவர் கலந்து சிறப்பித்தனர். 

தலைவர்கள் மற்றும் பொதுமக்களை  வரவேற்ற  ம.சீ.ச தலைவர் டத்தோ ஸ்ரீ வீ கா சியோங்  தலைவர்களுடன் இணைந்து  சீனர்களின் பாரம்பரிய  வரவேற்பு முறையுடன்   இந்த  புத்தாண்டை வரவேற்றார்.

கோலாலம்பூர்,பிப்.8-

கடந்த 5 பிப்ரவரி திங்கட்கிழமையன்று பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் 

ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான 13-வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. 

இப்பட்டமளிப்பு விழா பள்ளியின் தலைமையாசிரியர்  சரஸ்வதி செங்கல்ராயன் மேற்பார்வையில் இனிதே நடந்தேறியது.  ஆசிரியர் ரஜீவி வீரன் ஆறாம் ஆண்டு ஆசிரியர்கள் துணையுடன் இவ்விழாவை ஒருங்கிணைத்துக் கோலாகலமாக வழிநடத்தினார். 

இப்பட்டமளிப்பு விழாவை ஆசிரியர்கள் முருகன் ரெங்கநாதன் மற்றும் சுபத்ரா தேவி சண்முகம் ஆகியோர் அறிவிப்பாளர்களாக வழிநடத்தினர். ஆறாம்  ஆண்டு மாணவி பாரதி  மாதவன்  பாடிய இறைவாழ்த்துடன் இந்நிகழ்வு தொடங்கியது.  ஆறாம் ஆண்டு மாணவர்கள் பட்டமளிப்பு ஆடையணிந்து இசையொலியுடன் மண்டபத்தினுள்ளே சபையோர் வியக்க நடந்து வந்து சிறப்பு இருக்கையில் அமர்ந்தனர். 

தொடர்ந்து, இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினரான பள்ளியின் தலைமையாசிரியர் சரஸ்வதி செங்கல்ராயன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஹரிராஜா தட்சிணாமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் திரு.விக்னேஸ்வரன் நடராஜன்,  நிர்வாகத் துணைத்தலைமையாசிரியர் சித்ரா தேவி ராமசாமி, மாணவர்நலத் துணைத் தலைமையாசிரியர் விக்டர் ஆசீர்வாதம், இணைப்பாடத் துணைத்தலைமையாசிரியர் விஜயலட்சுமி பக்கிரி, மாலை நேரத் துணைத்தலைமையாசிரியர் கோமதி தம்புசாமி  மற்றும் ஆறாம் ஆண்டு வகுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் படை சூழ குத்துவிளக்கு ஏற்றியபின் மேடையின் சிறப்பு இருக்கையில் அமர்ந்தார். 

தொடர்ந்து, தேசிய கீதம், மாநில கீதம், பள்ளிப் பாடல் ஒலிக்கப்பட்டது. பரதத்துடன் தொடங்கிய இவ்விழா பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஹரிராஜா தட்சிணாமூர்த்தி வரவேற்புரையாற்றி வருகையாளர்கள் அனைவரையும் வரவேற்றார்.  பள்ளியின் தலைமையாசிரியர் சரஸ்வதி செங்கல்ராயன் சிறப்புரையை ஆற்றி  13-வது பட்டமளிப்பு விழாவை அதிகாரப்பூர்வமாகத் திறப்பு செய்தார்.

இன்றைய நிகழ்வின் உச்சக்கட்டமாக பள்ளியின் தலைமையாசிரியரும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் மாணவர்களுக்கான நற்சான்றிதழை முறையே எடுத்து வழங்கினர். ஆறாம் ஆண்டு வகுப்பாசிரியர்கள் புனிதா சுகுமாறன், லெட்சுமி கோதண்டபாணி, பரமேஸ்வரி கிருஷ்ணன்,  கோகிலவாணி கன்னியப்பன், பிரேமா லெட்சுமணன் மற்றும் இந்திரா ஜெகநாதன் ஆகியோருக்கு நற்சான்றிதழ் மற்றும் பூங்கொத்துகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இறுதியாக, 13-வது பட்டமளிப்பு விழாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை ரஜீவி வீரன் பள்ளி அளவிலான பட்டமளிப்பு விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற உதவிய பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் அறங்காவலர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா,  பள்ளியின் தலைமையாசிரியர் சரஸ்வதி செங்கல்ராயன், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம்,  துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

காஜாங், பிப்.8-

மேடான் மஸ்ரியா அருகில் கிராண்ட் சாகாவிலிருந்து வெளியேறும் வழியில் சமிக்ஞை விளக்கில் நின்றுக் கொண்டிருந்த நான்கு கார்களை லோரி  மோதிய சம்பவத்தில் இருவர் பலியாகினர்.

நேற்று மாலை 4.45 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. லோரியில் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் முகமட் ஜைட் ஹசான் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட லோரி சூக் நெடுஞ்சாலையிலிருந்து பத்து 9 டோல் சாவடியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. சமிக்ஞை விளக்கு முச்சந்தியில் நின்றுக் கொண்டிருந்த கார்களை அந்த லோரி மோதியது.

இச்சமவத்தில் புரோட்டோன் சாகா வாகன ஓட்டுநர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மற்றொரு காரின் பயணி பலத்த காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணமுற்றார்.

மேல் விசாரணைக்காக 40 வயதிற்குட்பட்ட லோரி ஓட்டுநரை போலீசார் கைது செய்ததாக முகமட் ஜைட் ஹசான் தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிப்.8-

விரைவு பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் தெர்மினல் அதிரடி சோதனையில் 13 பேருந்துகள் பயணத்தை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை மற்றும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டதாக சாலை போக்குவரத்து துறையின் துணை இயக்குநர் லொக்மான் ஜாமான் தெரிவித்தார்.

இம்மாதம் தொடக்கம் முதல் நேற்று வரை நாட்டிலுள்ள 28 பேருந்து நிலையங்களில் 2,801 பேருந்துகள் சோதனையிடப்பட்டன. அதில் 44 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் 13 பேருந்துகள் பயணத்தை தொடர தடை விதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

மேலும் விரைவு 187 பேருந்து ஓட்டுநர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் நால்வர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் லொக்மான் ஜாமான் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,பிப்.8-

பிகேஆர் கட்சியில் எந்தவித மாற்றமும் புதுமையும் இல்லாததால் கட்சியை விட்டு விலகுவதாக பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சுரேந்திரன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தொடர் பிரிவு இயக்குநரான ஃபாமி பட்சிலுக்கு கட்சியில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆர்வம் இல்லை போல தெரிகிறது. நானும் சில நாட்களாக கட்சியில் ஈடுபாடு இல்லாமல் இருந்தேன். கட்சியின் மாற்றங்களை பற்றி நான் கேட்டதற்கு இது வரை பதில் கிடைக்கவில்லை. ஆகையால் இந்த முடிவை தான் எடுத்ததாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் அவர் பதிவை வைத்துள்ளார்.

என்.சுரேந்திரன் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

சிப்பாங் பிப்-7

இன்று சிப்பாங் தொகுதி ம.இ.காவின் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியை  தலைமை தாங்கிய ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் , சிப்பாங் தொகுதியில் வாழும் இந்திய மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் நடத்தப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சி பாராட்டத்தக்கது என்றார்.

மண்டபம் நிறைந்த கூட்டத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்ததாகவும்  

எவர்,தூற்றினாலும் போற்றினாலும் தொடர்ந்து இந்திய சமுதாயத்திற்கு உதவும் கட்சியாக ம.இ.கா விளங்கி வருகிறது . எவராலும்  எட்டமுடையாத வரலாற்று கட்சியான ம.இ.காவின் ,  ஒரே சிந்தனை வீழ்வது  நாமாக இருந்தாலும் வாழ்வது நம் சமுதாயமாக  இருக்க வேண்டும் என்பதே.

 இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் நம்மிடையே ஒற்றுமை இருந்தால்தான் நாம் வெற்றிபெற முடியும். 

எல்லாரும் ஒரே அணியில் பயணிப்போம் அப்போதுதான் நமக்கானவற்றை நாம் முழுமையாகப் பெற முடியும் என டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

ஈப்போ, பிப்.6-

கடந்த வியாழக்கிழமை பீடோர் குடிநுழைவுத் துறையின் தடுப்புக் காவலிருந்து தப்பியோடியவர்களில் 83 பேரை போலீசாரும் குடிநுழைவுத் துறை அதிகாரிகளும் கைது செய்துள்ளனர்.

இன்று காலை 7 மணி வரை இந்த 83 பேரும் கைது செய்யப்பட்ட வேளையில் மேலும் 46 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பேரா மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை இரவு 9.50 மணியளவில் பீடோரிலுள்ள குடிநுழைவுத் துறையின் தற்காலிக தடுப்புக் காவல் மையத்திலிருந்து 131 பேர் தப்பி ஓடினர். அதில் ஒருவன் சம்பவத்தன்று இரவு வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி பலியாகிய வேளையில் மற்றொருவன் (ரொஹிங்யா பிரஜை) கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே நெடுஞ்சாலையின் தாப்பா ஓய்விடத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தான்.

கோலாலம்பூர், பிப்.6-

அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி மற்றும் தொகுதித் தலைவர்களுடான நேற்று நடந்த சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசாங்கத்துடனான ஆதரவை அம்னோ மீட்டுக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

SRC இண்டர்நேஷனல் வழக்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு முழு அரச மன்னிப்பு வழங்க தவறியதை அடுத்து ஒரு சில தொகுதித் தலைவர்கள் அரசாங்கத்துடனான ஆதரவை அம்னோ மீட்டுக் கொள்ள வேண்டுமென அழுத்தம் தந்ததாக பெயர் குறிப்பிட மறுத்த தலைவர் ஒருவர் எஃப்எம்டியிடம் கூறியுள்ளார்.

இருந்தபோதும் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான நடவடிக்கை கட்சிக்கு ஆபத்தானது. அம்னோ தற்போது உறுதியான நிலையில் இல்லை. ஆட்சியிலிருந்து விலகினால் அது தன் பலத்தையும் பேரம் பேசும் சக்தியையும் இழந்துவிடும் என அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தொகுதித் தலைவர்கள் பலர் ஜாஹிட்டை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். கட்சிக்காக டத்தோஸ்ரீ நஜீப்பை மீட்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உதவாததால் சில தரப்பினர் அதிருப்தி கொண்டுள்ளனர்.

அரசாங்கத்திலிருந்து விலகுவது அம்னோவிற்கு முதல் முறையல்ல. கடந்த 2021ஆம் ஆண்டு பிரதமராக இருந்த டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதை தடுப்பதில் தோல்விக் கண்டதால் அம்னோ அரசாங்கத்திலிருந்து விலகியது. தற்போது கட்சியிலுள்ள டத்தோஸ்ரீ நஜீப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நஜீப்பிற்கு முழு அரச மன்னிப்பு கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்த பட்சத்தில் தண்டனைக் காலம் மட்டும் குறைக்கப்பட்டதால் அவர்கள் அதிருப்தி அடைந்ததுடன் அரசாங்கத்தையும் வெறுக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் டத்தோஸ்ரீ நஜீப் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையில்தான் பக்காத்தான் ஹராப்பானுடன் அம்னோ இணைய ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு முழு அரசு மன்னிப்பு வழங்கப்படாமல் தண்டனைக் காலமும் அபராதமும் மட்டுமே குறைக்கப்பட்டது அம்னோவிற்கு வருத்தம் அளித்தாலும் அந்த முடிவை அம்னோ மதிப்பதாக கூறியது. மேலும் சட்ட ரீதியாக டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு நீதி கிடைக்க அக்கட்சி போராடும் என்றும் கூறப்பட்டது.

கோலாலம்பூர், பிப்.6-

இவ்வாண்டில் நாட்டிலுள்ள 63 தனியார் சீனப்பள்ளிகளுக்கு வெ.18.9 மில்லியன் அரசு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்துள்ளார்.

அதிகரித்த ஒதுக்கீட்டின் மூலம் 63 தனியார் சீன பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் வெள்ளி 3 லட்சம் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு அரசாங்கத்தின் சிறப்பு ஒதுக்கீடு வெள்ளி 15.75 மில்லியனாக இருந்தது. ஒவ்வொரு பள்ளியும் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் பெற்றன.  தனியார் சீனப்பள்ளிகள் எதிர்கொள்ளும் நிதி சவால்களை அரசாங்கம் புரிந்து கொள்வதற்கான அறிகுறியே இந்த சிறப்பு ஏற்பாடு என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தனியார் சீனப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக அரசு மானியம் எதிர்காலத்திலும் தொடர்ந்து வழங்கப்படும். யார் அரசாங்கத்தை அமைத்தாலும் சரி தனியார் சீனப்பள்ளிகளுக்கு அரசு மானியத்தை ஒதுக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் சொன்னார்.

இந்த மானியம் சீனப் பெருநாளுக்கு முன்பு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதனை கடந்த மாதம் 19ஆம் தேதி பிரதமருடன் நடந்த சந்திப்பில் தான் வலியுறுதியதாகவும் அவர் சொன்னார்.

ஒதுக்கீடு கொடுக்கும்போது அதை உண்மையாக செய்ய வேண்டும். குறிப்பாக சீன சமுதாயத்திற்காக, புத்தாண்டுக்கு முன் அதை அறிவிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் இது சீன சமூகத்தினருக்கான மரியாதையின் அடையாளம் என்றும் அவர் சொன்னார்.

இந்த மானியம் மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. மாறாக நிதியமைச்சின் கீழ் சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த மானியம் ஆண்டுதோறும் வழங்கப்படும் என அம்தோனி லோக் உறுதியளித்தார்.

ஷா ஆலம், பிப்.6-  

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கில புலமையை வளர்ப்பதற்காகவும் B40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் ஆங்கில மொழியாற்றலை வளர்க்கும் நோக்கத்துடனும் பேசிஸ் பே (BASIS BAY) நிறுவனத்தின் 'சரஸ்வதி ஆங்கில சவால்' எனும் பேச்சுப் போட்டி மீண்டும் மலர்கிறது.

இப்போட்டியில் கலந்து கொள்ள மலேசியாவில் உள்ள சுமார் 530 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ பிரபா தியாகராஜா.

ஆங்கில மொழி அரசியல், வணிகம், அறிவியல், தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு என்ற பலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வருவதால், அதில் புலமை பெறுவது வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு அத்தியாவசியமான ஒன்று என்பதை பிரபா தியாகராஜா ஆணித்தரமாகக் கூறினார்.

"பணியமர்வுக்கான அடிப்படை ஆங்கிலம். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ நமது பிள்ளைகளும் அதனை எதிர்கொள்வர். இது மலேசியாவில் மட்டுமல்ல, உலகில் எங்குச் சென்றாலும் இப்படிதான். நாடும் ஆங்கில முகியத்துவத்தை அங்கீகரிக்கிறது. எனவே, இந்த சிறுபான்மை பிரிவினர் ஆங்கிலத்தில் பேசும் திறனை கொண்டிருக்க வேண்டும்,'' என்றார் அவர். 

பேசிஸ் பே நிறுவனத்தின் சமூகக் கடப்பாடாக விளங்கும் இப்போட்டி இரண்டாவது முறையாக நடத்தப்படுவதாகவும் கடந்தாண்டைப் போலவே அமோக ஆதாரவை பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பிப்ரவரி ஏழாம் தேதியிலிருந்து மார்ச் ஏழாம் தேதிக்குள், அந்நிறுவனம் வழங்கும் தலைப்பையொட்டி ஒரு நிமிடத்திற்குப் பேசி அதனைக் காணொளியாகப் பதிவு செய்து 0173555738 என்ற எண்ணுக்கு whatsapp அனுப்ப வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.எஸ். முரளி விளக்கினார்.

அதேவேளையில், இப்போட்டியில் பங்குப் பெற ஊடகங்களிலும் இதன் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான www.saraswathyenglishchallenge.com -இல் உள்ள QR குறியீட்டின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் மேலும் விவரித்தார்.

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் பூர்வக்குடி மாணவர்களுக்கும் இவ்வாண்டு வாய்ப்பு வழங்கப்படும் இப்போட்டியில் முதல் நிலையில் வெற்றிப் பெறுபவருக்கு 20,000 ரிங்கிட், இரண்டாம் நிலைக்கு 10,000 ரிங்கிட் மற்றும் மூன்றாம் நிலைக்கு 5,000 ரிங்கிட் ரொக்கம் பரிசாக அளிக்கப்படும்.

கோலாலம்பூர், பிப்.6-

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி வழிநடத்தும் கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் கீழ் நாட்டின் நிதிச் சுமையை ஏற்படுத்தும் எந்த ஒரு நிறுவனத்தையும் அல்லது துணை நிறுவனத்தையும் (GLC) அரசாங்கம் மூடும் என்று எச்சரித்தார்.

அமைச்சின் கீழ் இதுவரை திவாலான 23 நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. வருமானத்தை ஈட்டித் தராத அரசு நிறுவனங்கள் உடனடியாக மூடப்படும் என அவர் அமைச்சகத்தின் கூட்டத்தில் தெரிவித்தார்.

செயல்படாத ஒரு நிறுவனத்தை அல்லது துணை நிறுவனத்தை மூடுவதற்கு முன் அமைச்சு மூன்று வெவ்வேறு முறைகளை ஆராயும். இந்த முறையில் மற்ற நிறுவனங்களுடனான இணைப்புகள், மேலாண்மை கொள்முதல் அல்லது கூட்டு முயற்சிகள் ஆகியவை அடங்கும் என்ற அவர் மீதமுள்ள 100 நிறுவனங்களை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் வரும் ஜூலை மாதம் வரை அவற்றின் மதிப்பை மறுமதிப்பீடு செய்யவுள்ளதாகவும் துணை பிரதமர் ஜாஹிட் அமிடி தெரிவித்தார்.

ஷா ஆலம், பிப்.5-  தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கில் புலமையை வளர்ப்பதற்காகவும் B40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் ஆங்கில மொழியாற்றலை வளர்க்கும் நோக்கத்துடனும் பேசிஸ் பே (BASIS BAY) நிறுவனத்தின் 'சரஸ்வதி ஆங்கில சவால்' எனும் பேச்சுப் போட்டி மீண்டும் மலர்கிறது.

இப்போட்டியில் கலந்து கொள்ள மலேசியாவில் உள்ள சுமார் 530 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ பிரபா தியாகராஜா.

ஆங்கில மொழி அரசியல், வணிகம், அறிவியல், தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு என்ற பலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வருவதால், அதில் புலமை பெறுவது வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு அத்தியாவசியமான ஒன்று என்பதை பிரபா தியாகராஜா ஆணித்தரமாகக் கூறினார்.

''பணியமர்வுக்கான அடிப்படை ஆங்கிலம். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ நமது பிள்ளைகளும் அதனை எதிர்கொள்வர். இது மலேசியாவில் மட்டுமல்ல, உலகில் எங்குச் சென்றாலும் இப்படிதான். நாடும் ஆங்கில முகியத்துவத்தை அங்கீகரிக்கிறது. எனவே, இந்த சிறுபான்மை பிரிவினர் ஆங்கிலத்தில் பேசும் திறனை கொண்டிருக்க வேண்டும்,'' என்றார் அவர்.

பேசிஸ் பே நிறுவனத்தின் சமூகக் கடப்பாடாக விளங்கும் இப்போட்டி இரண்டாவது முறையாக நடத்தப்படுவதாகவும் கடந்தாண்டைப் போலவே அமோக ஆதாரவை பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பிப்ரவரி ஏழாம் தேதியிலிருந்து மார்ச் ஏழாம் தேதிக்குள், அந்நிறுவனம் வழங்கும் தலைப்பையொட்டி ஒரு நிமிடத்திற்குப் பேசி அதனைக் காணொளியாகப் பதிவு செய்து 0173555738 என்ற எண்ணுக்கு whatsapp அனுப்ப வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.எஸ். முரளி விளக்கினார்.

அதேவேளையில், இப்போட்டியில் பங்குப் பெற ஊடகங்களிலும் இதன் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான www.saraswathyenglishchallenge.com -இல் உள்ள QR குறியீட்டின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் மேலும் விவரித்தார்.

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் பூர்வக்குடி மாணவர்களுக்கும் இவ்வாண்டு வாய்ப்பு வழங்கப்படும் இப்போட்டியில் முதல் நிலையில் வெற்றிப் பெறுபவருக்கு 20,000 ரிங்கிட், இரண்டாம் நிலைக்கு 10,000 ரிங்கிட் மற்றும் மூன்றாம் நிலைக்கு 5,000 ரிங்கிட் ரொக்கம் பரிசாக அளிக்கப்படும்.

பெட்டாலிங் ஜெயா, பிப்.5-

மதுபோதையில் காரை செலுத்தும் வாகனமோட்டிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளிடமிருந்தும் அவர்களின் காரிலிருந்து வெ.3,753 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் பெட்டாலிங் ஜெயா போலீஸ் படையின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன் உட்பட 10 அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் சாலை தடுப்புச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் அதிகாலை 2.30 மணியளவில் புக்கிட் அமான் உயர்நெறி கண்காணிப்பு பிரிவினர் அங்கு அதிரடியாக வந்திறங்கினர். அங்கிருந்த அதிகாரிகளை விசாரித்ததுடன் அதிகாரி ஒருவரிடமிருந்து வெ.3,313 ரொக்கத்தையும் போலீஸ் வாகனத்திலிருந்து வெ.440 ரொக்கத்தையும் சிறப்புப் படையினர் கைப்பற்றினர்.

இந்த பணம் கையூட்டாக பெறப்பட்டதா என்பதை கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ உசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிப்.5-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நாட்டிற்காக வழங்கிய பங்களிப்பின் அடிப்படையில் அவரின் தண்டனைக் காலத்தை பொது மன்னிப்பு வாரியம் குறைத்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பொது மன்னிப்பு வாரிய கூட்டத்தின் விவாதத்தில், மற்ற விரிவான முறைகள் உட்பட, இந்த விஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டதாக பிரதமர் கூறினார்.

முதலாவதாக, முறையீட்டின் அடிப்படை என்ன, அவரது பங்கு, அதற்கு முந்தைய அவரது வாழ்க்கைப் பயணம், அவரது குடும்பத்திற்கான அவரது பங்கு, சிறை வாழ்க்கை, அவரது தகுதிகள் மற்றும் சேவைகள் என அனைத்து அடிப்படையிலும் சிந்தித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

"எனவே நீதித்துறையின் செயல்முறை, வழக்கு என்ன, தண்டனை என்ன என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டில் ஒரு வழக்கு இருந்தால், ஒவ்வொரு (குழு உறுப்பினர்) தங்கள் கருத்தை தெரிவிப்பதற்கு முன்பு அனைத்தையும் விளக்கி இறுதியாக பேரரசர் ஒரு முடிவை எடுப்பது வழக்கம் என பிரதமர் துறையில் நடந்த சந்திப்பில் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டத்தோஸ்ரீ நஜீப்பின் தண்டனைக் காலத்தை பொது மன்னிப்பு வாரியம் குறைத்துள்ளதை பற்றி கருத்து தெரிவிப்பதை அனைத்து தரப்பு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாட்சிமைத் தங்கிய பேரரசரின் முடிவை நாம் மதிக்க வேண்டும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினர்.

மலாக்கா,பிப்.2-

ஜாலான் ஹாங் துவாவில் உள்ள  உணவகம் ஒன்று அசுத்தமான சூழலில் இயங்கியதற்காக இரண்டு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.

இந்த உணவகம் அசுத்தமான நிலையில் இயங்கி வருவதாக பொதுமக்கள் அதிகமான புகார்களை அளித்து வந்ததோடு கடையில் பணி செய்யும் ஒருவர் கடையின் பின்புறம் உள்ள ஓர் கால்வாயில் சிறுநீர் கழிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து அந்த உணவகத்தை நேற்று மாலை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக மலாக்கா மாநில சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் டோராதி டாயாங்  ஹென்றி சம் தெரிவித்தார்.

அந்த உணவகத்தின் சுற்றுச்சூழல் அசுத்தமான நிலையில் காணப்பட்டதால்  நேற்று மாலை தொடங்கி 14 நாட்களுக்கு மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என அவர் மேலும் கூறினார்.

மேலும் பல்வேறு குற்றத்திற்காக வெ.1,500 சம்மன்கள் வெளியிடப்பட்டதோடு இந்த உணவகத்தில் கழிவறை இல்லாத பட்சத்தில் அடுத்தடுத்து உள்ள கடைகளில் உள்ள கழிவறையை பணியாளர்கள் பயன்படுத்தி வந்தது மேலும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

கடந்த 2022 ஆண்டுகளில் கூட இந்த உணவகம் இரண்டு முறை அசுத்தத்தின் காரணத்தால் அதிகாரிகளால் மூடுவதற்கான உத்தரவு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பீடோர், பிப்.2-

நேற்று பீடோர் சுங்கத்துறையின் தடுப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்ற  131 கல்லக்குடியேரிகளை போலீசார் தேடி வருவதாக தாப்பா மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது நைம் அஸ்னாவி தெரிவித்தார்.

தப்பிச் சென்றவர்களில்  115 பேர் ரோஹிங்ணியா இனத்தவர்கள் என்றும், மற்ற 16 பேர் மியான்மர் நாட்டவர்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையே அனைத்து கைதிகளும் தடுப்பு முகாமிலிருந்து தப்பி விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பட்டதைத் தொடர்ந்து,  தப்பியோடிய கைதிகளில் ஒருவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் கிமீ 335 வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ஏற்ப்பட்ட சாலை விபத்து ஒன்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

அவ்வகையில் பேராக் பிடோர் மாவட்ட போலீசின் சிறப்பு அதிரடி குழு மற்றும் புக்கிட் அமான் போலீசின் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் உதவியுடன் இன்னும் தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாக அவர் கூறினார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 147 மற்றும் பிரிவு 223/224 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார். தகவல் தெரிந்தவர்கள் IPD Tapah செயல்பாட்டு அறையை 05-4015222 மூலம் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர்,பிப்.2-

போலீசார் மேற்கொண்ட ஓப்ஸ் தாப்பிஸ் காஸ்  3 நாள் சிறப்பு சோதனையில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றங்களுக்காக 3 மாணவர்கள் உட்பட மொத்தம் 5,791 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த அதிரடி சோதனையில் 2,200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேர்த்ததாகவும் சுமார் 128.3 கிலோ எடை கொண்ட போதைப்பொருளும் 16 ஆயிரம் லிட்டர் போதை பொருள் திரவியமும் இந்த சோதனையில்  பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின்  இயக்குநர் கமருடின் முகமட் டின் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு சுமார் வெ.610,071.39 என மதிப்பிடப்பட்டுள்ளதாக கமருடின் மேலும் கூறினார்.

மேலும் இந்த சோதனையில் 14 முதல் 80 வயதிற்குட்பட்டவர்கள் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட நிலையில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம் போதை பொருள் விற்பனையில் முக்கிய புள்ளிகளை அடையாளம் காணும் முயற்சி என அவர் பத்திரிக்கை அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

கோலாலம்பூர் பிப்ரவரி -2


இந்தியர்களின்  உருமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட மித்ரா அதில் ஒதுக்கப்படும் 100 மில்லியன், அதை வழிநடத்த  இப்போது பல தலைவர்கள் ஆசைப்படுகின்றனர். 

தேசிய முன்னணியைச் சார்ந்த ம.இ.காவிற்கு அமைச்சரவையில் உரிய மரியாதை கிடைக்காத வரை , எந்த ஒரு பொறுப்பும்  தங்களுக்கு வேண்டாம் என  ஒதுங்கி இருப்பதாக  தகவல் கசிந்த நிலையில் பக்காத்தான் ஹாராப்பனில் உள்ள  இந்திய தலைவர்கள் மித்ரா உனக்காக எனக்கா என்ற போட்டியில் மும்முரமாக உள்ளனர்.

ஜ.செ.கா-வில் ஓர் இந்தியத் தலைவர் பெயர் அடிப்பட்ட நிலையில் பி.கே.ஆர்  கட்சியில்  இப்போது 4  இந்தியத் தலைவர்கள் மித்ராவை வழிநடத்த முன்வந்த நிலை ஏற்பட்டுள்ளது .

 மித்ராவிற்குத் தலைமையேற்று  பொறுப்பு வகிப்பது யார்  என்ற தலைவர்களிடையிலான சண்டையால் மித்ரா ஒரு கேள்வி  குறியாக உள்ளது.

இந்திய தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாத பட்சத்தில் , மித்ராவை வழிநடத்தும் பொறுப்பு ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமிக்கு வழங்கப்பட்டால், கட்சியில் உள்ள இந்திய தலைவர்களிடையே பிளவு வெடிக்கும் நிலை , மித்ராவை  ஒருவர் வழி நடுத்தும் பட்சத்தில்  மற்ற தலைவர்கள் அந்த தலைவருக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்ற சூழலும் எழுந்துள்ளது. 

தற்போது மித்ரா தொடர்பாக கருத்து தெரிவித்த  கட்சி தலைவர்கள் , அரசு சாரா இயக்கங்கள் , பொது மக்கள்  இவர்கள் கொடுத்த கருத்தில்  தலைவர்கள் இப்படி உனக்கா எனக்கா என போட்டியிடும் சூழலில் மித்ரா பிரதமர் துறை  கீழ்  செயல்படுவதே சிறப்பு என கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் நேரடி பார்வையில்  ,மித்ரா செயல்படுவது மித்ராவிற்கு நல்லது என தெரிவித்துள்ளனர்.  காரணம் தலைவர்களின்  உனக்கா  எனக்கா போட்டியில் மித்ரா அதன் இலக்கை நோக்கி பயணிக்காது என்பதே.

ஆண்டின் 2 -வது மாதத்தில் அடி எடுத்து வைத்தும் இவர்களுக்குள் உள்ள போட்டியால் மித்ரா தண்டவாள பாதையின்  முச்சந்தியில் எந்த பக்கம் சிக்னல் விழும் என்று காத்திருக்கும் ரயில் போல் நிற்கிறது.

செய்தி : வெற்றி விக்டர்

பத்துகேவ்ஸ், பிப்.1-

நேர்த்திக் கடன் செலுத்துபவர்களின் சுமையைக் குறைத்து உன்னத  இறையாண்மை சேவையாற்றும் நோக்கத்தில் PERTUBUHAN PENGERAK SEBAYA SELANGOR பால் குடம் ஏந்திய பக்தர்களுக்கு 1 லிட்டர் பாலை வெ.1 ரிங்கெட்டிற்கு வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது.

பத்துகேவ்ஸ் அம்னோ கட்டிடத்திற்கு அருகே இந்த சேவைக்கான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.பால் குடம் ஏந்தி நேர்த்திக் கடன் செய்த பக்தர்கள் எங்களிடம் இருந்து 1 லிட்டர் பாலை வெறும் வெ.1  ரிங்கிட்டிற்கு பெற்று பயனடைந்ததாக விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

PERTUBUHAN PENGERAK SEBAYA SELANGOR மேற்கொண்ட இந்த முயற்ச்சிக்கு ஆதரவாக நிறைய நல் உள்ளங்கள் தங்களின் பேராதரவை வழங்கியதால் 1 லிட்டர் பாலை வெ.1  ரிங்கிட்டிற்கு வழங்கமுடிந்தது என அவர் கூறினார்.

இந்த புனித சேவைக்கு தங்களின் உதவி கரம் நீட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் PERTUBUHAN PENGERAK SEBAYA SELANGOR சார்பாக விக்னேஷ்வரன் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இந்த திட்டத்தின் மூலம் அதிகமானோர் நிச்சயம் பயனடைந்திருப்பார்கள் என்று தன் நம்புவதாக அவர் சொன்னார். மேலும் அடுத்த ஆண்டு இன்னும் நிறைய ஆதரவுகள் கிடைத்தால் வருங்காலங்களில் இந்த சேவையை தொடர்ந்து பெரிதளவில் செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிப்.1-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜீப் துன் ரசாக்கின் அரச மன்னிப்பு  விண்ணப்பம் குறித்து இந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியிடப்படலாம் என பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜாலேஹா முஸ்தபா கூறினார்.

இந்த விவகாரத்தில் அனைவரும் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். அரச மன்னிப்பு வாரியத்தின் அறிக்கைக்காக அனைவரும் காத்திருப்போம்.

எல்லாம் சரியாக அமைந்தால் அரச மன்னிப்பு வாரியத்தின் அறிவிப்பு இந்த வாரத்தில் வரலாம் என்று ஜாலேஹா கூறினார்.

இதனிடையே கடந்த திங்கட்கிழமை  இஸ்தானா நெகாராவில் மன்னிப்பு வாரியம் கூறியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து நஜிப்புக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாக வதந்திகள் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜொகூர் பாரு, ஜன.31-

ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் இன்று காலை ஜாலான் ஸ்குடாய் வழியாகச் புறப்பட்டு சென்றபோது, ​டவுலாத் துவாங்கு  என்ற முழக்கத்தை ஆயிரக்கணக்கான ஜொகூர் மக்கள் கோஷமிட்டனர்.

இன்று காலை 6.45 மணி முதல் ஜொகூர் சுல்தான் செல்லும் ஜாலான் ஸ்குடாய் பாதையில்  ஆயிரக்கணக்கான ஜொகூர் வாழ் மக்கள் திரண்டனர்.

சுல்தான் செல்லும் வழியில் பொது மக்கள் ஜொகூர் மாநில கொடியை ஏந்தியதோடு மட்டுமல்லாமல் 'உங்கள் அன்பை நிலைநிறுத்துங்கள்' என்ற பதாகையையும் ஏந்தியிருந்தனர்.

சுல்தான் இப்ராஹிம் டவுலாட் துவாங்கு என்று கோஷமிட்ட உற்சாகமான மக்களுக்கு அன்புடன் கை அசைத்தார்.

கோலாலம்பூர் ஜனவரி - 29

அல்ஹாஜ் அஹ்மத் அலி எனும் பழனி பாபா  நினைவேந்தல் நிகழ்ச்சியில சிறப்புரை ஆற்றிய  மஇகாவின்  தேசியத் துணைத்தலைவர்   டத்தோ ஸ்ரீ எம். சரவணன், 
 எனக்கும் தமிழ் முஸ்லிம் சகோதரர்களுக்குமான உறவு என்பது இன்று நேற்றல்ல, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து துவங்கியது என்றார்.


அதே போல் ,  நான் படிக்கிற காலத்தில் பழனி பாபாவின்  பேச்சுக்களை கேட்டு வளர்ந்தவன். அவர் பேசிய ஒரு கேசட் மட்டும் முதலில் எனக்கு கிடைத்தது.
அவரது இயல்பான தமிழும் அதிரடியான பேச்சும் என்னை கவர்ந்தது என டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

நான் சேகரித்த அவரது பேச்சு கேசட்டுகளைப் போல் மலேசியாவில் வேறு யாரும் சேகரித்திருக்க மாட்டார்கள். 

அவரது  கேசட்டுகளை நான் தேடித் தேடி கேட்க ஆரம்பித்தேன். சென்னைக்கு போனால் தி நகரில் ஒரு கேசட் கடையில் அவரது பேச்சுக்கள் அடங்கிய டிடிகே கேசட்டுக்களை கொண்டு வந்து கேட்பேன்.

 பழனி பாபா எம்ஜிஆர், கருணாநிதி, என்று அனைத்து தலைவர்களுடன் தொடர்பில் இருந்தவர். அவர் முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல அனைவருக்காகவும் குரல் கொடுத்தவர்.

 

அனைத்து இன மக்களுக்காக குரல் கொடுப்பவராகவும் போராடுபவராகவும் அவர் திகழ்ந்தார் என்பது அவர் சரித்திரத்தைப் பார்த்தால் தெரியும். அவர் இந்து முஸ்லீம் என்று பிரித்து பார்க்கவில்லை.

 அவர் கொலை செய்யப்படும்போது கூட அவர் ஒரு ஹிந்து நண்பரின் வீட்டில் இருந்து வெளியில் வந்தபோதுதான் கொல்லப்பட்டிருக்கிறார். 
தமிழுக்காகவும் , சமூகத்திற்காகவும்  இணங்கி வாழவேண்டும் என்று சொல்லி சென்றுள்ளார் பழனிபாபா என  டத்தோஸ்ரீ எம் சரவணன்  தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் , தமிழ்நாட்டை சேர்ந்த பழ கருப்பைய்யா, சொல்லமுது கம்பம் பீர் முஹம்மது பாகவி, மாப்பின் இயக்கத்தின் தலைவர் சேகு அஸ்மின் ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றனர்.

பெட்டாலிங்ஜெயா, ஜன.27-

பெட்டாலிங் எஸ்டேட் ஸ்ரீ மகா மாரியம்மன்  ஆலய மகா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர் என்று ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஹரிநாராயணன் கூறினார்.

100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க மற்றும் பழமையான பெட்டாலிங் எஸ்டேட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை எனது தலைமையிலான ஏழு பேர் அடங்கிய அறங்காவலர் குழு பராமரித்து வருகிறது.

இவ்வாலயத்தின் திருப்பணிகள் சுமூகமாக நடந்து முடிந்தது தொடர்ந்து கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றது.

தமிழ்நாடு மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவஸ்ரீ ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியார் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஆகம முறைப்படி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து ஆலயத்தில் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. ஆகவே பக்தர்கள் இப்பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

அதே வேளையில் ஆலய திருப்பணி, கும்பாபிஷேக விழா என அனைத்துக்கும் ஆதரவாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆலயம் சார்பில் நன்றி என்று டான்ஸ்ரீ ஹரி நாராயணன் கூறினார்.

கோலாலம்பூர் ஜன -25

கடந்த ஆண்டு தைப்பூச கொண்டாட்டத்தின் போது மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் வருகை இல்லை என இந்திய மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

அதே போல் இந்த ஆண்டும்  இன்று இரவு 9மணி  வரை பிரதமரின் தைப்பூச கொண்டாட்ட வருகை எங்கும் தென்படவில்லை.

ஆனால்  இந்த முறை இந்தியர்கள் அதற்காக வருத்தம் அடையவும் இல்லை  அதிருப்தி அடையவும் இல்லை மாறாக ஏக்கம் அடைந்தனர்.

இந்த தைப்பூசத்தில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இல்லையே என்று. அந்த அளவில் இந்தியர்கள் மத்தியில் ஒரு நீங்கா இடம் பெற்று விட்டார் டத்தோ ஸ்ரீ நஜீப். அவர் மட்டும் இருந்திருந்தால் வேட்டியை கட்டிக்கொண்டு இந்தியர்கள் கொண்டாட்டத்தில் கலந்திருப்பார் என  காலை முதல் டத்தோ ஸ்ரீ நஜீப் பற்றி தான் சமூக வலைத்தளத்தில் மக்கள் பேச்சு உலா வருகிறது.


செய்தி : வெற்றி விக்டர்

உலு சிலாங்கூர் ஜனவரி - 25

உலு  சிலாங்கூர்  கெர்லிங் ஸ்ரீ 
சுப்ரமணியம் ஆலயத்தில்  தைப்பூச கொண்டாட்டம்  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பல்லாயிரம் மக்கள் கலந்துக்கொண்ட 
இந்த திருவிழாவில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்ய பிரகாஷ்  தண்ணீர் பந்தல் நிறுவியிருந்ததோடு,
அந்த வட்டார மக்கள் வைத்திருந்த 
தண்ணீர் பந்தலுக்கு வருகை தந்து  
மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

நாடு தழுவிய அளவில்  தைப்பூசம் கொண்டாடப்பட்டாலும் சிலாங்கூர் மாநிலத்தில்  பத்து மலையைத் தவிர்த்து கெர்லீங் ,கோலா சிலாங்கூர் போன்ற பகுதிகளில்  தைப்பூசம் மிக 
விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பத்துமலை ஜன 25-

பத்துமலை திருத்தலத்தில் மேற்கொள்ளப்படும மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.


நாடு தழுவியல் நிலையில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக லட்சக்கணக்கான மக்கள் பத்துமலையில்  கூடி தைப்பூச விழாவை கொண்டாடி வருகின்றனர்.

நாட்டில் வாழும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் இந்திய சமுதாயத்திற்கு பெரும் பயனாக இருக்கும்.

பத்துமலையில்  மின் படிக்கட்டு , கலாச்சார மண்டபம் கட்டுவது தொடர்பாக பல கோரிக்கைகளை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா இன்று முன்வைத்தார்.

இந்த கோரிக்கைகளை பிரதமர் பார்வைக்கு கொண்டு செல்வேன். குறிப்பாக இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே பிரதமரிடம் கூறியுள்ளேன். இத்திட்டங்களுக்கு அரசு முழு ஆதரவு தரும் .

ஆகவே தேவஸ்தானத்தின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.

கோலாலம்பூர், ஜன.25-

அதிகமாக  மக்கள் வருகை தைப்பூச திருநாளில் இருக்கும் என்பதை உணர்ந்து  தங்களின் கைவரிசையை காட்ட ஒரு கூட்டம் காத்திருக்கிறது.

போலீஸ் இவர்களை பிடிக்கும் முயற்சியை தீவிர படுத்திய நிலையில் ஓர் அந்நிய நாட்டு பெண் பக்தர்போல் உடையணிந்து பத்துமலை திருத்தலத்தில்  நகையை திருடும் நேரத்தில்  பொது மக்களிடம் மாட்டிக் கொண்டார். பின்னர் அவரை போலீஸ் கைது செய்து மேல் விசாரணைக்காக  அழைத்துச் சென்றுள்ளனர்.

திருடர்கள் எந்த ரூபத்திலும் இருக்கலாம்.  நாம் கவனமாக இருப்பது அவசியம்.  கூட்ட நெருசலான இடத்திற்கு தங்க நகைகளை  அணிந்து செல்வதை தவிர்ப்பது சிறப்பு.

கோலாலம்பூர், ஜன்.25-

தைப்பூசத்தை முன்னிட்டு மனிதவள அமைச்சின்  மக்கள் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது!

பத்துமலையிலும்  பினாங்கு  தண்ணீர் மலையிலும் பந்தல் நிறுவி மக்கள ஓய்வு எடுத்து இழைப்பாற மனிதவள அமைச்சும் அதற்கு கீழ் இயக்கும் எச்.ஆர்.டி.கோர்ப் ,
பெர்கெசோ போன்ற அமைப்புகளும் இணைந்து  ஏற்பாடு செய்துள்ளது.

உணவு பொருட்களை வழங்குவது மட்டும் இல்லாமல், ஓய்வு எடுக்கும் இடம் , மருத்துவ பரிசோதனை, பெர்கேசோ விளக்கம், எச். ஆர் .கோர்ப்  பயிற்சி சார்ந்த விளக்கம்  என சுமார் 200 பேர் கொண்ட குழு இதற்காக அமர்த்தப்பட்டுள்ளது.

இன்று பத்துமலை திருத்தளத்திற்கு சிறப்பு வருகை புரிந்த  மனிதவள அமைச்சர்  ஸ்டீவன் சிம் சீ கியோங்கிற்கு  கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர்  டான்ஸ்ரீ ஆர்.நடராஜா  வரவேற்று சிறப்பு செய்தார்.

பத்துமலை தைப்பூசத்தை முன்னீட்டு ஆலயத்திற்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் சிறப்பு வருகை புரிந்தார்.

கோலாலம்பூர் ஜனவரி- 25 


தமிழ்நாட்டில்  மிகவும் பிரபலமான ஈரோடு அம்மன் மெஸ் தனது புதிய கிளையை  மலேசியா கோலாலம்பூர் பிரிக்ஃபில்ட் பகுதியில் நேற்று திறந்தது. இங்கு திறப்பு கண்ட  மலேசியா கிளை கடையின் உரிமையாளர் ஸ்ரீ பாண்டி உணவகத்தின் உரிமையாளர் டத்தோ அழகர் சாமி குமார் ஆவார்.  இந்த புதிய கிளையை ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர்  எம்.சரவணன் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

அதோடு அரச மலேசிய போலீஸ் படையின்  முன்னாள் தலைவர்  டான் ஸ்ரீ அக்ரீல் சானி அப்துல்லா, தமிழ் நாடு நம்ம வீட்டு வசந்த பவன் உரிமையாளர் ரவி மற்றும் பல பிரமுகர்கள்  கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் பேசுகையில் உழைத்தவர்  உயரத்தைத் தொடுவார் என்றார். அந்த வகையில் நீண்டகாலமாக உணவக  துறையில் ஈடுப்பட்டு வரும் டத்தோ அழகர் சாமி குமார் அவர்களின் புதிய பாதை தான் ஈரோடு அம்மன் மெஸ், தனித்துவம் என்றும் நிரந்தரம். அந்த வகையில் தனித்துவமான  ஈரோடு அம்மன் மெஸ் இங்கு அறிமுகம் ஆகுவது மகிழ்ச்சி. மலேசிய மக்கள் ஆதரவு கொடுத்து ஈரோடு அம்மன் மெஸ் உணவு ரூசியைச் சுவைக்க வருகை அளிக்க வேண்டும் என  அவர் கேட்டுக்கொண்டார்.

Recent News