loader

All News

கோலாலம்பூர், ஏப்.19-
நாட்டில் இந்திய சமுயல்தாயத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் முக்கிய பங்காற்றிய மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் வரலாறு எழுதப்பட வேண்டுமென மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

அன்றைய காலக்கட்டத்தில் நம் சமுயாத்தில் தமிழ் இளைஞர் மணிமன்றம், மஇகா, மலேசிய திராவிடர் கழகம் ஆகியவை முக்கிய பங்காற்றியவை. இளைஞர் மணிமன்றத்தில் இணைந்து சேவையாற்றிய மூத்த சேவையாளர்கள் கௌரவிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இன்று மஇகா நேதாஜி மண்டத்தில் கூட்டரசுப் பிரதேச முன்னாள் மலேசிய இளைஞர் மணிமன்ற பேரவையின் ஏற்பாட்டில் மன்றத்தின் மூத்த சேவையாளர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் இளைஞர் மணிமன்றத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கான உதவிநிதி வழங்கப்பட வேண்டும் என பேரவையின் தலைவரும் ஏற்பாட்டுக் குழு தலைவருமான கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, அந்த திட்டத்தை முன்னெடுக்குமாறு அதற்கு முதல் கட்டமாக வெ.50 ஆயிரத்தை வழங்குவதாகும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இன்று நடந்த இந்த விழாவில் மணிமன்றத்தின் மூத்த சேவையாளர்கள் 14 பேருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

கோலாலம்பூர்  ஏப்ரல் -19

சமீபகாலமாக ஜாதி அரசியல் ம.இ.காவில் ஊடுருவி வருவதாகவும் சிலர் ம.இ.கா உயர்மட்ட தலைவர்களிடையே சிண்டு முடித்து விடும் வேலையை செய்வதாக தகவல் வெளிவந்தது.

ம.இ.காவின்  கட்சி தேர்தல் நேரத்தில் தங்களது நாரதர் வேலையை தொடங்கி  டத்தோ டி. மோகன் துணை தலைவருக்கு போட்டி போட வேண்டும் என  ம.இ.காவின் வெளிவட்டார நபர்கள் பேசி கொண்டு வந்தனர்.

இந்த ஆருடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ம.இ.காவின் தேசிய உதவி தலைவர் டத்தோ டி.மோகன் இன்று பதில் அடி கொடுத்தார்.

ம.இ.கா-வில்  நான் நீண்டகாலமாக சேவை செய்து வருகிறேன். என்னை பொறுத்தவரை கட்சியின் ஒற்றுமைதான் முக்கியம். டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் ,டத்தோ ஸ்ரீ சரவணன் நான்,  எங்கள் மூவருக்கு இடையில் நீண்டகால நட்பு உள்ளது.

வெளியில் ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள், அது அவர்களின் கருத்து. அது என் கருத்தாகாது. என்னை பொறுத்தவரை பதவிக்காக  நான் கட்சியையும் உறவையும் இழக்க மாட்டேன் ,கட்சியைப் பிளவு படுத்தவும்  மாட்டேன்.

நான் இந்த முறையும் எனது உதவி தலைவர் பதவியைத் தற்காக்க போட்டி போடுவேன். மற்றவர்கள் சொல்வது போல் நான்  துணை தலைவர் பதவிக்கு  போட்டி போட ஆயத்தமாக இருப்பது எல்லாம் சுத்த பொய்  என  டத்தோ டி .மோகன் தெரிவித்தார்.


எங்கள் மூவருக்குள்  நல்ல புரிந்துணர்வு உண்டு. எப்போது தலைமைக்கு வரவேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் ,சிலர் சொல்வதை கேட்டு அவசரமான முடிவுகளை எடுக்கும் பழக்கம் எங்களுக்கிடையே இல்லை.

ம.இ.கா இப்போதுதான்   உட்கட்சி சண்டை இல்லாமல்  வலுவாக உள்ளது .  பதவிற்காகஎங்கள் மூவர் மத்தியில்  பிளவு ஒருபோதும் நிலவாது என டத்தோ டி. மோகன் வெளிப்படையாக தெரிவித்தார்.

செய்தி: வெற்றி விக்டர் / இ.எஸ் .காளிதாசன்

கோலாலம்பூர் ஏப்ரல்-19

மிண்டாஸ் என்ப்படும் மலேசிய இந்திய சிகை அலங்கார உரிமையாளர் சங்கம்  பார்க்காத அமைச்சர்கள் இல்லை, போகாத கூட்டம் இல்லை. ஆனால் எங்களுக்கு எந்த விடிவும்  இதுவரை இல்லை என அச்சங்கத்தின் செயலாளர் ராஜசேகரன் மிக ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

ராஜசேகரன் பேசுகையில் முன்பு அமைச்சரவையில்  தமிழ் பேசக்கூடிய அமைச்சர்கள் இருந்தார்கள். எங்கள் பிரச்ச்சினைகளை அவர்கள் அமைச்சரவையில் பேசுவார்கள் ஆனால் இன்றோ அமைச்சரவையில் ஒருவர் கூட இல்லை எங்களுக்காக பேச என்றார் !

முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் எங்களுக்கு  7500 அந்நியத் தொழிலாளர் அனுமதியை பெற்றுக் கொடுத்தார். ஆனால் நடைமுறையில் எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை.

இப்போது இருக்கும் துணை அமைச்சர்கள் எல்லாம் எங்களை  கண்டுகொள்வதே இல்லை. எதோ protocol வாயிலாக வாருங்கள் என்கிறார்கள் என ராஜசேகரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் எங்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமரிடம் பேச வேண்டும் . எங்கள் பிரச்சினைக்கு அறிவிப்பு மட்டும் தான் உண்டு, ஆனால் தீர்வு இல்லை என்றார்  ராஜசேகரன்.

செய்தி : வெற்றி விக்டர் / இ.எஸ் காளிதாசன்

கோலாலம்பூர் ஏப்ரல் 19

மலேசிய சிகை அலங்கார துறையினர் இன்னும் என்ன தான் முயற்சி எடுக்க வேண்டும் என  எங்களுகே தெரியவில்லை என மிண்டாஸ் எனப்படும் மலேசிய இந்திய சிகை அலங்கார  உரிமையாளர் சங்கத்தின் காப்பாளர் டத்தோ மகேந்திரன் தெரிவித்தார்.

அந்நிய தொழிலாளர் வழங்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்ட  எங்கள் துறையைத் திறந்து விடுகிறோம் என்றார்கள். எங்கள் துறை உட்பட 3 துறைக்கு 7500 அந்நிய தொழிலாளர்கள் கொடுப்பதாக அறிவித்தார்கள்.

அறிவிப்பு கொடுத்தார்கள் அவ்வளவுதான்  ! ஆனால் எங்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லை.   அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பதில் கடுமையான விதிமுறையை வைத்து  எங்களை இன்னும் அப்படியே தான் வைத்துள்ளனர் என்றார் மகேந்திரன்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமைக்கு வந்தால்  இந்தியர்களுக்கு விடிவு என்றார்கள். ஆனால் அன்வாரால் எங்களுக்கும் இந்த துறைக்கும் இன்னும் விடிவு இல்லை. எல்லாம்  அறிவிப்பாக மட்டும் உள்ளது. நடைமுறையில் நாங்கள் இன்னும் அவதி படுகிறோம் என மகேந்திரன் தெரிவித்தார்.

செய்தி : வெற்றி விக்டர் இ.எஸ்.காளிதாசன்

கோலாலம்பூர், ஏப்.18-

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் இம்முறை கடுமையான போட்டி  நிலவுகிறது.

தலைவர் பதவிக்கு நிவாஷ் ராகவன் மற்றும் விகேகே ராஜசேகரன் நேரடியாக போட்டியிடுவதாக  தேர்தல் குழு இன்று அறிவித்தது.

நிவாஸ் ராகவன் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு குமரகுரு போட்டியிடும் வேளையில், ராஜசேகரன் அணி சார்பில் பிரபாகரன் போட்டியிடுகிறார்.

உதவித் தலைவர் பதவிக்கு நிவாஸ் அணி சார்பில் டத்தோ சந்திரசேகரனும் ராஜசேகரன் அணி சார்பில் பன்னீர் செல்வமும் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு நிவாஸ் ராகவன் அணி சார்பில் டத்தின் மகேஸ்வரியும் ராஜசேகரன் அணி சார்பில் செல்வராஜும் போட்டியிடுகிறார்கள்.

சங்கத்தின் 14 உச்சமன்ற பதவிகளுக்கும் இரு அணிகள் சார்பில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிவாஸ் ராகவன் அணி சார்பில் ராம்குமார், குணராஜ், சண்முக செல்வி, மோகனா சின்னத்தம்பி, முகமட் ராபி, எம்.பி.இராமன், பிரபாகரன் கோவிந்தன்,செல்வராசு ஹரிகிருஷ்ணன், கவிவாணன் சுப்பிரமணியம், கவிமாறன், நாகராஜன், அமுதா முனியாண்டி, ராம்குமார், பெருமாள் இராமன், குளோரி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ராஜசேகரன் அணி சார்பில் டாக்டர் நவமணி, டாக்டர் சித்ரா, பால்மிரா பிபி, டத்தோ டாக்டர் சுகுமாறன், டாக்டர் ராஜசேகரன் மோகன், டத்தோ சி.எம். விக்னேஸ்வரன், டாக்டர் மரியா ரூபினா, பிரவின் தமிழ் செல்வம், குட்டி கிருஷ்ணன் ராயர்,  டோனி கிளிபெர்ட்,  மீனாட்சி கல்யாண சுந்தரம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

மேலும் ஜமுனா சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.

வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் ஆண்டு கூட்டம் நடத்தப்பட்டு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் குழு தலைவர்  ராஜசுந்தரம் மற்றும் மகேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

-காளிதாசன் இளங்கோவன் / தீபன் கிருஷ்ணன்

கோலாலம்பூர், ஏப்.16-

அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ள கோல குபு பாரு இடைத்தேர்தலில் மலாய்க்கார வாக்குகளை பற்றி பெரிக்காத்தான் நேஷனல் கவலைப்பட போவதில்லை என்றும் 70 முதல் 80 விழுக்காடு மலாய்க்கார வாக்குகளை அக்கூட்டணி வெல்லலாம் என்றும் அரசியல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

சிலாங்கூரிலுள்ள மலாய்க்காரர்களில் பெரும்பகுதியினர் பெரிக்காத்தான் நேஷனலை முழுமையாக ஆதரிக்கின்றனர். ஆகையால் கோல குபு பாரு இடைத்தேர்தலில் அக்கூட்டணி சீனரையோ அல்லது இந்தியரையோ வேட்பாளராக நிறுத்துவதால் எந்த பாதிப்பும் இல்லை என நுஸாந்தாரா அக்கடமியை சேர்ந்த அஸ்மி ஹசான் தெரிவித்தார்.

ஆகையால் இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக இருந்து வந்த முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவை மீட்பதே பெரிக்காத்தான் நேஷனலின் முதன்மை நடவடிக்கையாக இருக்க வேண்டும். 

இந்த இடைத்தேர்தல் அம்னோவிற்கு மற்றோரு பலப்பரீட்சையாக அமைந்துள்ளது. ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றிக்காக மலாய்க்காரர்களின் வாக்கை மீட்க அது கடுமையாக போராடியாக வேண்டும் என்றார் அவர்.

கோல குபு பாரு இடைத்தேர்தலில் மலாய்க்காரர்களின் வாக்குகள் பெரிக்காத்தானுக்கும் சீனர்களின் வாக்குகள் பக்காத்தானுக்கும் செல்லும் நிலையில், வெற்றியை நிலைநாட்ட போவது இந்தியர்களின் வாக்குகள் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோலாலம்பூர், ஏப்ரல்.16-

கூட்டரசுப் பிரதேச மஇகா நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் மாநில கட்சிக்கு வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டு வரும் என  தாம் நம்புவதாக மாநில தலைவர் டத்தோ ராஜா சைமன் கூறினார்.

கூட்டரசுப் பிரதேச மஇகா துணைத் தலைவராக பாலக்குமாரன் தனது பணியை தொடர்கிறார்.

மாநில மஇகாவின் புதிய தலைமை செயலாளராக ஆர்டி சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தித்திவங்சா தொகுதி தலைவரான அவர் இதற்கு முன் பொருளாளராக பதவி வகித்து வந்தார்.

மாநிலத்தின் துணை செயலாளராக கெம்போங் தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தனது பணியை  மீண்டும் தொடரவுள்ளார்.

செராஸ் தொகுதி தலைவர் நலேந்திரன் மாநிலத்தின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லெம்பா பந்தாய் தொகுதி துணைத் தலைவர் கணேசன் தகவல் பிரிவுக்கு பொறுப்பேற்றுள்ளார்.அவர் தனது பணியை மீண்டும் தொடர்கிறார்.

கூட்டரசுப் பிரதேச மஇகாவில் செய்யப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கூட்டரசுப் பிரதேச கிளைத் தலைவர்கள் அடுத்த கட்சித் தேர்தல் வரை இப்புதிய பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று டத்தோ ராஜா சைமன் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், ஏப்.16-

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை பிரதிநிதித்து கோல குபு பாருவில் ஜசெக போட்டியிடவுள்ளது. அங்கு மலாய் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதால் அந்த கட்சியை சேர்ந்த மலாய் வேட்பாளர் அங்கு நிறுத்தப்பட வேண்டுமென பக்காத்தான் ஹராப்பான் தலைவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் வாக்காளர்களை கருத்தில் கொண்டு இந்த கருத்தை முன்வைப்பதாக சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் துணைத் தலைவர் பொர்ஹான் அமான் ஷா தெரிவித்துள்ளார்.

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதியில் 40,226 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 46 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். அதனை தொடர்ந்து 30% சீனர்கள், 18% இந்தியர்கள், 5% இதர வாக்காளர்கள் உள்ளனர். ஆகையால் இந்த சூழலை அறிந்து அங்கு மலாய்க்கார வேட்பாளர் நிறுத்தப்படுவது அவசியமாகும்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் டுசூன் துவா தொகுதியில் ஜசெக மலாய் வேட்பாளரை (எட்ரி பைசால் ஹெடி யூசோப்) நிறுத்தி வெற்றிப்பெற்றது. 15ஆவது பொதுத் தேர்தலில் பெந்தோங் நாடாளுமன்ற தொகுயில் மலாய்க்காரைதான் அக்கட்சி வேட்பாளராக நிறுத்தியது. அந்த வகையில் இம்முறை மலாய்க்கார வேட்பாளரை ஜசெக நிறுத்த வேண்டும்.

இந்த இடைத் தேர்தல் நாட்டு மக்களின் முழு கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகையால் சிறந்த நிபுணத்துவ மிக்க வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் நம உள்ளோம். மேலும் இந்த தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் கடும் போட்டியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

சேலம் ஏப்ரல்-15

சேலம் மாவட்டத்தில்  புள்ளிபாளையம் ஸ்ரீ சண்முகா கல்வி நிறுவனத்தின் இணை கட்டடம்   மற்றும் ஆக்கம் 360-ன் innohub  என்கின்ற மென்பொருள் அலுவலக   திறப்பு விழா  மிக பிரமாண்டமாக  நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில்  14 தொழில் நிறுவனங்கள் கலந்து  கொண்டனர்.  ம.இ.காவின்  தேசிய துணைத் தலைவர்  டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் மற்றும் மணக்குல விநாயகா மருத்துவக்கல்லூரியின் தலைவரும் , தட்சசீலா  பல்கலைக்கழகத்தின்  வேந்தருமான எம் . தனசேகரன் அவர்கள்  கலந்து கொண்டு இணைக்கட்டடம் மற்றும்  ஆக்கம் 360இன் மென்பொருள் நிறுவன அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்.

கல்லூரி தலைவர்  சண்முகம் அவர்கள் ஏற்பாட்டில் நடந்த  இவ்விழாவில், தலைமை இயக்குனர்  திருமூர்த்தி ஆறுமுகம், இணைச் செயலாளர் கோகிலா ஆகியோரும்   கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கோலாலம்பூர், ஏப்ரல்.15-

நேற்று கே.எல்.ஐ.ஏ (KLIA) அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனை பிடிக்கும் முயற்ச்சியை போலீசார் எதிர்கொண்டபோது அங்கு இருந்த பொதுமக்களின் பாதுகாப்யையும் அவர்கள் உறுதி செய்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆடவர்  மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுக்கு போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி இருந்தால் அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கும் சேதாரங்கள் ஏற்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை 1.15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், ஹபிசுல் மராவி என்ற சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியால் தனது மனைவியை சுடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அச்சமயம் அந்த பெண்ணை பாதுகாத்த பாதுகாவலரான முகமட் நூர் ஹதித் ஜைனி, வயது 38 பலத்த காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேலும் இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வரும் ஆடவர் இன்னும் உள்நாட்டில்தான் இருக்க வேண்டும். அந்த ஆடவர் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

கோம்பாக், ஏப்ரல்.15-

உடற்பயிற்சியின் மூலம் இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்கை முறையை உணர்த்தும்   நோக்கத்தில் TSV'S எனும் சாகச நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று சித்திரை புத்தாண்டையொட்டி காலை 8 மணி முதல்  கோம்பாக் டெம்பிளர் பார்க் கஞ்சிங் நீரூற்று மலைப் பகுதியில் இந்த சாகச நடைப்பயணம் தொடங்கப்பட்டது. 

சிலாங்கூர் மாநில ம.இ.கா இளைஞர் பிரிவினர் மற்றும் PERTUBUHAN PENGERAK SEBAYA SELANGOR இயக்கம் இணைந்து நடத்திய இந்த சாகச நடைப்பயணத்தில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த சுமார்  100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த நடைப்பயணத்தில் பங்கேற்ற அனைவரும் சாகசத்தை தாண்டி பல்வேறு சவால்களை எதிர்நோக்கி பாதுகாப்பாக இப்பயணத்தை முழுமைப்படுத்தி திரும்பியதாக ஏற்பாட்டாளர் PERTUBUHAN PENGERAK SEBAYA SELANGOR தலைவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

மேலும் ம.இ.கா.வின் தேசிய விளையாட்டு குழு மற்றும் ம.இ.கா.வின் தேசிய இளைஞர் விளையாட்டு குழுவுடன் இணைந்து இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த தனது வாழ்த்துக்களையும் முழு ஆதரவையும் வழங்கி ஊக்குவித்த  மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவர்களுகளுக்கு ஏற்பாட்டுக்குழு சார்பாக அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்து எடுத்து நடத்திய தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட், அதன் செயளாலர் அரவிந்த் கிருஷ்ணன், சிலாங்கூர் மாநில ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் சுந்தர், கோம்பாக் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் கோபிராஜ் உட்பட அனைவருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இன்றைய தினம் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மலேசிய இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். 

புத்தாண்டு என்பது புதிய தொடக்கம் என்பது போல. அது சிறப்பாக அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவோம். அந்த வகையில் இந்த புத்தாண்டையும் மகிழ்ச்சியாக சிறந்ததொரு எதிர்காலத்தைக் குறிவைத்துக் கொண்டாடுவோம்.

இந்தியர்கள் நாம் பல்வேறு மொழிகளையும், பண்டிகைகளையும், பண்பாடுகளையும் கடைப்பிடித்து வந்தாலும், நமக்குள் நாம் இந்தியர் எனும் உணர்வு மேலோங்கி நிற்க வேண்டும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நாம் ஒற்றுமையாக இருப்பதே நமக்குப் பலம்.

நம்மிடையே சிந்தனை மாற்றங்கள் தேவை. நம்மைச் சுற்றி நல்ல எண்ணங்களும், செயல்பாடுகளும் இருத்தல் அவசியம். நம் வாழ்வை செழிப்பாக நாம் முயற்சி செய்து கொண்டே இருப்போம். 

“முயற்சி திருவினையாக்கும்” என்பது எந்நாளும் பொய்த்ததில்லை. வள்ளுவனின் கூற்றுப்படி,

    “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

   மெய்வருத்தக் கூலி தரும்”        - குறள் 619

ஒருவனின் முயற்சிக்குண்டான பலன் நிச்சயம் கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு இந்த புத்தாண்டில் காலடி வைப்பொம். 

மீண்டும் அனைத்து இந்தியர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இன்றைய பொழுது இனிய பொழுதாக மலரட்டும்.

அன்புடன்,

டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்

கோலாலம்பூர், ஏப்.14- 

இந்தியச் சமுதாயத்தில் உருமாற்றம் நிகழ வேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கின்ற நாம், அதனை மெய்ப்படுத்தும் வண்ணம் உருமாற்றத்தின் உந்துச் சக்தியாக வலிமை கொண்டு செயல்பட வேண்டும் என தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு தனி மனிதனின் மாற்றம், ஒரு தலைமுறையின் மாற்றம் என்பதை தலைமுறை தாண்டி கண்டுணர்ந்துள்ள நாம், மற்ற சமூகத்தினருக்கு ஈடாக நம் சமூகத்தினரும் பொருளாதார பலம் பொருந்தியவர்களாக உயர்வதற்கு, தற்கால இளைஞர்கள் உருமாற்றத்தின் பலம் பொருந்திய சக்தியாக உருவெடுக்க வேண்டும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கருத்துரைத்தார்.

மற்ற சமூகத்தினர் எப்படி உயர்ந்தார்கள் என்பதை ஆராய்ந்து, அவர்களின் முன்னேற்றப் பாதையை பின் தொடர்ந்து, நாமும் அனைத்து துறைகளிலும் பீடு நடை போடுவதற்கான நன்முயற்சியில் இறங்க வேண்டும். 

அம்முயற்சிக்குக் கூடுதல் ஆதரவு சேர்க்கும் வண்ணம் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சின் கீழ் உள்ள குறிப்பிட்ட சில ஏஜென்சிகள் மூலம் பல அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

அவ்வகையில், இந்திய தொழில்முனைவோருக்காக ஒதுக்கப்பட்டிருந்த 30 மில்லியன் ரிங்கிட் தெக்குன் ஸ்புமி வியாபாரக் கடனுதவியை 60 மில்லியன் ரிங்கிட்டாக இரட்டிப்பாக்கியது, இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) நிதியகத்தின் வழி இன்னொரு 50 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கீடு செய்ததானது நம் சமூகப் பொருளாதார உருமாற்றத்திற்கான சக்தி வாய்ந்த முன்னெடுப்புகள் என்று அவர் குறிப்பிட்டார்.

வரலாற்றில் முதல் முறையாக தெக்குன் மற்றும் ஏ.ஐ.எம். நிதியகங்களின் உள்நிதியைக் கொண்டு அதிகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒதுக்கீடுகளை பயன்படுத்தி, நம் இந்திய தொழில்முனைவோர்கள் தத்தம் வியாபாரங்களை அடுத்தக்கட்ட உயர் நிலைக்கு மேம்படுத்தி, பொருளாதார ரீதியில் மாபெரும் சக்தி படைத்தவர்களாக உயர்வு காண வேண்டும்.

இந்த எதிர்பார்ப்புகள் பெரிதாகத் தெரியலாம். பெரிதினும் பெரிது கேள் என பாரதி புதுமையை விரும்பினார். நமது எண்ணங்களை உயர்வாக வைத்திருக்கும் போது, அந்த பிரபஞ்சமும் நமக்கு வழி கொடுக்கும் என்பதில் முழு நம்பிக்கை வைத்து செயல்பட்டால், நம் சமூகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் விடியல் வெகுதூரமில்லை! 

பிறந்திருக்கும் குரோதி வருட சித்திரைப் புத்தாண்டு நம் எண்ணங்களுக்கு வலிமை சேர்த்து, உருமாற்றத்திற்கு வழிகோலட்டும் என குறிப்பிட்ட டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுகின்ற அனைத்து இந்து மக்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர் ஏப்ரல்- 13

10 ஆயிரம் பெண்  வியாபாரிகளை உருவாக்கும் நோக்கத்தில்  தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை அமைச்சின் கீழ் செயல்படும் அமானா இக்தியார் அமைப்பின் வாயிலாக ,  (PENN ) என்ற திட்டத்தின் வாயிலாக கூடுதல் நிதியாக 50 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டதாக , தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் இன்று அறிவித்தார்.

இதன் வாயிலாக இந்திய பெண் வியாபாரிகள் மேம்பாட்டிற்கு இந்த ஆண்டு,  71 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி மாதம், 21 மில்லியன் ஒதுக்கப்பட்டதாகவும் டத்தோ ரமணன் தெரிவித்தார்.

இந்த நிதியின் வாயிலாக ஏற்கனவே அமானா இக்தியாரில் சஹாபாட்டாக செயல் படும் 3,100 இந்திய பெண் வியாபாரிகள் பயன் அடைவதோடு, இந்த சிறப்பு நிதியால் புதிதாக 7100 புதிய இந்திய பெண் வியாபாரிகள் உருவாக்கப்படுவார்கள் என டத்தோ ரமணன் தெரிவித்தார்.  

இதன் வழி 10 ஆயிரம் பெண்  வியாபாரிகள் பயன் அடைவார்கள் என தெரிவித்த டத்தோ  ரமணன், இந்த சிறப்பு நிதி வாயிலாக 30 ஆயிரம் வெள்ளி வரை பெண் வியாபாரிகள் கடன் பெறலாம் என்றார் .

வரும் 15 ஏப்ரல் முதல் நாட்டில் உள்ள 124 அமானா இக்தியார் கிளைகளில் அவர்கள் விண்ணப்பம் செய்ய தொடங்கலாம் என டத்தோ ரமணன் தெரிவித்தார்.

செய்தி : வெற்றி விக்டர் - இ.எஸ்.காளிதாசன்

கோலாலம்பூர், ஏப்.10-

இந்நாட்டில் அனைத்து சமுதாய ஒற்றுமை என்றென்றும் நீடிக்க வேண்டும் என்று ம.இ.கா தேசிய தலைவர் 

டான்ஸ்ரீ  ச.விக்னேஸ்வரன் தமது நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

நம்மை ஒன்றிணைக்கும் தமிழ் மொழியும் எந்நாளும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற சிந்தனைகளுடன் மஇகாவின் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  தமது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

புனிதமான ரம்லான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து, பசியை உணர்ந்து, இறைசக்தியையும் பூரணமாக அனுபவித்து, ஹரிராயா நோன்புப் பெருநாளைக்  நமது முஸ்லீம் இன சகோதர-சகோதரியர்க கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த ஆண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு மஇகாவும் அங்கம் வகிக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். 

இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்ற முழக்கத்துடன், தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட எண்ணற்ற முஸ்லீம் அன்பர்களை நாம் கண்டிருக்கிறோம்.  அரசியலிலும் மஇகாவின் வழி, பல இந்திய முஸ்லீம் நண்பர்கள் நம்முடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொண்டு நமது இந்திய சமுதாய நலன்களுக்காக இணைந்து போராடியிருக்கிறார்கள்.

மலேசியாவில், இந்திய சமுதாயத்தில் நிலவும் இந்து, முஸ்லீம் ஒற்றுமை என்றென்றும் நீடிக்க வேண்டும், நம்மை ஒன்றிணைக்கும் தமிழ் மொழியும் எந்நாளும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற சிந்தனைகளுடன் மஇகாவின் சார்பிலும், தனது தனிப்பட்ட சார்பிலும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர் - ஏப்ரல் 8

கோலா குபு பாரு  என்ற  பகுதி அங்கே தான்   இவ்வளவு காலம் உள்ளது  அந்த பகுதி வாழ் மக்களும் அங்கே தான் உள்ளனர் இத்தனை நாளும் . ஆனால் இது நாள் வரை இவர்களைச் சென்று பார்க்க வேண்டும் என்று எந்த அரசியல் தலைவருக்கும் அமைச்சர்களுக்கும் அக்கறை  இருந்தது இல்லை. அங்குள்ள மக்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள் என யாரும் பேசியதும் இல்லை.

ஆனால் இப்போது ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அங்கு சுற்றுலா செல்கின்றனர். அதிலும் இந்தியர்கள் வாழும் பகுதிக்கு செல்கிறார்கள் . இது எதற்கு ?

மிக விரைவில் அங்கு ஒரு  சட்டமன்ற இடைத்தேர்தல் வருவதால் இந்த பாசம்.  இந்த நேரத்தில் தான் அரசியல்வாதிகள் நலம் விசாரிப்பார்கள் ,  கை கொடுப்பார்கள் படம் எடுப்பார்கள் ஏன் அங்குள்ள பிரச்சினை பற்றி மைக் பிடித்து பேசுவார்கள். ஏன்  மந்திரி பெசார்  கூட ஓர்  இந்தியர்  வீட்டிற்கு வந்து பாட்டியை நலம்  கூட விசாரிப்பார்.

அதுக்கும் ஒரு படி மேலே சென்று பிரதமர் கூட உங்க வீட்டிற்கு வந்து  எனக்கு தோசை மிகவும் பிடிக்கும் என சொல்லும் வாய்ப்பும் உள்ளது.

அதனால் மக்களே! பலர் வருவார்கள், செல்வார்கள், இனிப்பாக பேசுவார்கள். காரணம் இந்த 18 விழுக்காடு இந்தியர்களின் வாக்கு அவர்களின் வெற்றிக்கு ரொம்ப முக்கியம்.

அதனால்  கே.கே.பி மக்களே இது உங்களுக்கான நேரம் 
சிந்தித்து அமைதியாக அனைத்து கூத்துகளைப் பார்த்து ரசித்து, வேட்பாளர் யார் என்பதை பார்த்து, அவர் பின்னனியை ஆய்வு செய்யுங்கள்.

இந்த அரசும்  இந்த தலைமையும்  இந்திய சமுதாயமத்தைத் திரும்பி பார்க்க வைக்கும்   பதிலாக  உங்கள்  வாக்கு  இந்த தேர்தலில் இருக்க வேண்டும்.

இது தான் சரியான நேரம். தொடங்கட்டும் ஜனநாயகத்தின் மக்களின்  ஒரு விரல் புரட்சி.


செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர் ஏப்ரல் - 8

சுகம் அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைப்பெற்ற தமிழிசைச் சாரல் இசை நிகழ்ச்சி மிகவும் 3 மணி நேரம் அனைவரையும் கட்டிப்போட்டது என
மஇகாவின் தேசிய துணைத் தலைவர்  டத்தோஶ்ரீ  சரவணன்  தெரிவித்தார்.

மாபெரும் இசை படைப்பை கண்டு பிரமித்தேன். 3 மணி நேரம் இசையோடு பயணித்தேன் என டத்தோ ஸ்ரீ சரவண்ன கலைஞர்களை பாராட்டினார்.

108 கலைஞர்களின் படைப்பு  நம் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக, தமிழ் மொழியின் அமுதமாக மிகச் சிறப்பாக நடத்தபட்ட  நிலையில் டாக்டர் தேவி அவர்களின் பயிற்சியில் மாணவர்களின் இந்தத் திறமை இசைத்தமிழுக்கு ஒரு பரசு .

சுகம் தொடர்ந்து இப்படி பட்ட படைப்பாளிகளை உருவாக்க  வேண்டும் என டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில்  மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என் ரெட்டி உட்பட பல பிரமுகர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

கோலாலம்பூர்  ஏப்ரல் -6

ம.இ.காவின் தலைமையில் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் டத்தோ ஸ்ரீ சரவணன்  எப்படி ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் இருக்கிறார்களோ.

அதே போல் ம.இ.கா இளைஞர் பிரிவும் இருக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசை. இது ஒரு குடும்பம். நமது ஒற்றுமையே நம் பலம் என்பதே தலைமை எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் !

அந்த வகையில்  நீண்டகாலமாக ம.இ.கா இளைஞர் பிரிவில் சேவையாற்றி வரும் நானும் , அண்ணன்  கேசவன் கந்தசாமியும்  இந்த முறை தலைமை பொறுப்புக்கு வர நினைத்த போது இருவரும் அவர் அவர் விருப்பத்தைக் கலந்து பேசியபோது, அண்ணன் கேசவன் கந்தசாமி எனக்காக ம.இ.கா தேசியத் இளைஞர்  பிரிவு தலைவர் பதவிக்குப் போட்டி போடுவதை விட்டு கொடுத்தார். இருவரும் இணைந்தே பயணிப்போம் என்று கூறியதாக அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார். அந்த வகையில் நான் இம்முறை நடக்கும் ம.இ.கா தேசியத் இளைஞர் பிரிவு தேர்தலில் மாநில இளைஞர் பிரிவின் ஆசியுடன் போட்டியிடுவதாக அர்விந்த் கிருஷ்ணன் இன்று அறிவித்தார்.

அதே மேடையில் பேசிய கேசவன் கந்தசாமி நானும் அர்விந்த் கிருஷ்ணனும் நீண்ட காலமாக பயணிக்கிறோம். பல இளைஞர் பிரிவு தலைவர்களுடன் பயணித்த அனுபவம் எங்களுக்கு உண்டு. 

 ம.இ.கா தலைமை போல் இளைஞர் பிரிவும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தம்பி நீ முன்னே போ எப்போதும் போல்  நான் உன்னோடு இருக்கிறேன் என  கூறிய கேசவன் கந்தசாமி தான் இம்முறை ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் துணைத் தலைவருக்கு போட்டியிட போவதாக அறிவித்தார்.

 இந்த இருவர் தவிர வேறு யாராவது போட்டி போட உள்ளார்களா ? என அர்விந்த் கிருஷ்ணனிடம் கேட்ட போது   இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்குப்  போட்டியிட இருந்த கேசவன் இளைஞர் பிரிவின் ஒற்றுமைக்காக  விட்டு கொடுத்துவிட்டார். வேறு யாராவது போட்டி போடுவார்களா என்பது எங்களுக்கு தெரியவில்லை . தேர்தல் நேரத்தில் தான் தெரியும். எங்கள் இருவரின் விருப்பத்தை  நாங்கள் இன்று மாநில  இளைஞர் பிரிவை அழைத்து தெரிவித்து விட்டோம் என்றார் அர்விந்த்.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர் ஏப்ரல்-5

நாட்டில் இப்போது ஜோதிடர் ஒருவர் புதிதாக உதயமாகி உள்ளார். நடப்பது நடக்க போவது அனைத்தையும் சொல்பவராக அவர் இப்போது தன்னை அடையாளப்படுத்தி உள்ளார்.

குறிப்பாக அரசியல் சார்ந்த விஷயங்களில் துல்லியமாக அவர் ஜோதிடம் சொல்வாராம்.

யார் அடுத்த பிரதமர் , யார் அடுத்த மந்திரி ,யார் அடுத்த தலைவர் என துல்லியமாக கணிக்கும் வல்லமை கொண்டவர்.

ஆனால் திருமணம்,  குழந்தை ஜாதகம், பெயர் சூட்டும் வகையில் இன்னும் அவர் விளம்பரம் செய்யவில்லை.

இப்போதைக்கு அரசியல் ரீதியில் ஜோதிடம் செய்யும் அவரை காண விரும்புபவர்கள்.  தற்போது அவர் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து வருகிறார் அதன் வாயிலாக அவரை அணுகினால். நன்றாக ஜோதிடம் பார்ப்பார்.

இப்போது ஒரு தொழில் முனைவரின்  வழக்கு ஒன்று  ஓடிக்கொண்டிருக்கும்  இந்த நேரத்தில் அதன்  முடிவு எப்படி வரும் என்பதை கணித்து சொல்வாரா தெரியவில்லை.

அல்லது  வரும் கே.கே.பி இடைத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெரும் என்பதை கணித்து சொல்வாரா என்பதும் தெரியவில்லை. ஆனால் நான் சொன்னால் நடக்கும் என்கிறார் அந்த புதிய ஜோதிடர்.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர் ஏப்ரல் -5

பாக்காத்தான் கூட்டணியில் உள்ள இந்திய தலைவர்களிடையே  ஒற்றுமை இல்லாத நிலையில்
கடந்த 6 மாதங்களாக இவர்களிடம் இருந்தும்  இன்னும் வெளியில் சிலராலும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாருக்குப் புகார் மேல் புகார் கிடைத்த வண்ணமாகவே இருந்தது. பிரதமரிடம் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகார் சொல்லி வந்துள்ளனர்.

 அதன் உச்சகட்டம் தான் மித்ரா  இங்கும் அங்கும்  பந்தாடப்பட்டது. இப்போது  அது மீண்டும் பிரதமர் துறைக்கு  வந்தது. இந்நிலையில் இந்த பொறுப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பிரபாகரனுக்கு கிடைக்க கூடாது என ஒரு கூட்டம் தீவிரமாக செயல்படுவதாகவும். 

இன்னொரு கூட்டம் , துணை அமைச்சர்  ஒருவரை பதவி விலக அழுத்தம் கொடுத்து வருவதாக  தகவல் கசிந்துள்ளது.

இவை அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கும் பிரதமர்  டத்தோ ஸ்ரீ அன்வார்,  தனது கூட்டணி கட்சிக்கு வெளியில் ஓர் இந்திய  அமைச்சரை, அமைச்சரவையில்  தேர்வு செய்துள்ளதாகவும் விரைவில் அமைச்சரவையில் சிறிய மாற்றம் எற்படும் எனவும் சொல்லப்படுகிறது.

இதற்கு முன் அமைச்சராக இருந்த ஓர் இந்தியத் தலைவர், அன்வாரின் அமைச்சரவையில் இடம் பெறவிருப்பதாகவும் அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது  எனவும் கே.கே.பி தேர்தலுக்குப் பின் பிரதமர் ஒரு முடிவை எடுப்பார் எனவும் கடந்த சில தினங்களாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அமைச்சரவையின் உள்ளே வரப்போவது யார் வெளியே போகப்போவது யார் என்பது விரைவில் தெரியவரும்  என  இப்போதே அரசியல் வட்டாரத்தில் பேசத் தொடங்கிவிட்டனர்.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர்,ஏப்.3-

கடந்த காலங்களில் ம.இ.காவை பிளவு படுத்த ஓர் கூட்டம் இருந்தது. அது ஜாதி என்ற போர்வையில் இருந்தது. அதனால்தான் ம.இ.காவிற்குள் அடித்துக் கொண்டார்கள் என்பது வரலாறு.

இதனால் ஜாதி அரசியல் செய்யும் நபர்களை ஒரு படி எப்போதும் தமிழ் லென்ஸ் தள்ளியே வைக்கும். குறிப்பாக   ஜாதி துதி பாடும்   நபர்கள் சமுதாயத்தின் நோய் .

இந்த நோய் கொஞ்ச காலமாக ம.இ.கா அரசியலில் ஊடுருவாமல் இருந்தது. இப்போது ஊடுருவ தொடங்கி விட்டது என்பதே தமிழ் லென்ஸ் சமுதாயத்திற்கும் ம.இ.காவிற்கும் கொடுக்கும் எச்சரிக்கை செய்திதான் அது .

அந்த வகையில்  அன்வார் துதி பாடி , பத்திரிக்கை நடத்தும் ஓம்ஸ் தியாகராஜன், தமிழ் லென்ஸ் யாரையோ துதி பாடி செய்தி எழுதி உள்ளதாக சொன்னது  வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் சொல்ல சொல்ல செய்தி எழுதும் கூட்டத்தை தானே நீங்கள் பார்த்து பழகியுள்ளீர்கள்.. அதனால் அப்படி தான் யோசிக்க தோனும்.  என் கையை பிடித்து எழுத எவராலும் முடியாது. அதனால்  தாம் இந்த துதி கூட்டத்தில் வேலை செய்யாமல் சொந்த ஊடகம் நடத்தி வருகிறேன் என்பதை ஓம்ஸ் தியாகராஜன் அவர்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

மற்றொரு விஷயம் என்னவென்றால்,  கருங்காலி, பாவாடை இதுபோன்ற சொல்லை கொண்டு எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. என் அடையாளம் என் மொழி. பிறகு ஜாதி அரசியல் செய்பவர்களை எனக்கு பார்க்கவும் பிடிக்காது அவர்களுடன் பழகவும் பிடிக்காது.

ம.இ.கா-வை மட்டம் தட்டி  ஒவ்வொரு நாளும் அறிக்கை விடும் ஓம்ஸ் தியாகராஜன், மஇகாவினர் செய்த நல்லதை என்றாவது எழுதியது உண்டா? 

இங்கு ம.இ.கா தலைவராக டத்தோ டி. மோகன் வருவதில் யாருக்கும் சிக்கல் இல்லை. ஆனால் அதை நீங்கள் சொல்வதில்தான் சந்தேகமே வருகிறது.  வட்டார மொழியில் ஒன்று சொல்வார்களே ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம் அந்த கதை போல் நீங்கள் ம.இ.கா மீது அக்கறையாக பேசுவது தான்  சந்தேகத்தையும் , சிக்கலை உண்டாகுகிறது.

நீங்களோ பி.கே.ஆர் தலைவர் அன்வாரின் ஆதரவாளர். மஇகாவை பற்றி நல்லதே பேசாத உங்களுக்கு ம.இ.கா மீது திடீர் அக்கறை வந்ததுதான் வேடிக்கையாக உள்ளது.

கடந்த காலங்களில் உங்களை பார்க்க வந்தவர், உங்களிடம் கைகட்டி நின்றவர்கள் அது எல்லாம் எங்களுக்கு தேவை இல்லாத கதை. என்னோடு இருக்கும் செய்தி குழு யாரிடமும் கைகட்டி நிற்காது.

எங்களை பொருத்தவரை ம.இ.கா ஒரு பழைமை வாய்ந்த கட்சி. சில நாரதர்கள் பேச்சை கேட்டு உள்ளுக்குள்ளே  ஜாதியால் பிளவு பட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்தாமல்   தெருவில் அடித்து கொள்ள கூடாது என்பதை  உணர்த்தி அவர்களை எச்சரிக்க வேண்டிய கடமையும் எங்களுக்கு உண்டு. 

அதைச் சொல்வதால்  தமிழ் லென்ஸ் யாருக்கும் துதி பாடும் செய்தி ஊடகமாக ஆகாது.  எங்களுக்கு ம.இ.காவையும் கேள்வி கேட்க தெரியும். பக்காத்தனையும் கேள்வி கேட்க தெரியும். ஏன் பெரிக்காத்தனையும் கேள்வி கேட்க தெரியும். காரணம் தமிழ் லென்ஸ் பத்திரிக்கை காரர்கள் நடத்தும் ஊடகம்.

செய்தி: வெற்றி விக்டர்

தைப்பே, ஏப்.3-

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.

நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கிழக்கு நகரான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் குலுங்கின. சில சரிந்து விழுந்தன. தைப்பேவில் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது. ரயிலில் பயணம் செய்தபோத ரயில் குலுங்கியபடி சென்ற வீடியோ காட்சிகள் வெளிவந்து உள்ளன.

காலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கம் எதிரொலியாக மக்கள் அலறியடித்து, பாதுகாப்பான இடங்களை தேடி தஞ்சம் அடைந்தனர். சாலைகளில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றில் செல்லும்போது நிலநடுக்கம் உணரப்பட்டது. பாலங்களும் அதிர்வால் குலுங்கின. தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கோத்தா கினபாலு, ஏப்.3-

விரைவில் சபாவில் நடைபெறவுள்ள 17ஆவது சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் அம்னோ புதிய முகங்களை களமிறக்கவுள்ளராக சபா மாநில அம்னோ தலைவர் போங் மொக்தார் ராடின் தெரிவித்தார்.

அந்த புதிய முகங்களில் அதிகமான இளைஞர்கள் உள்ளனர். வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் இறுதி முடிவு செய்யப்படாததால் அதனை வெளியிட முடியாது என அவர் சொன்னார்.

ஆற்றல் கொண்ட புதிய வேட்பாளர்கள் தங்களின் தொகுதிகளில் மக்களை சந்தித்து நல்ல தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வேட்பாளர்களை உறுதி செய்வது அரசியல் ரீதியாக கூடுதல் காலம் எடுக்கும். கட்சியை வலுப்படுத்த ஆற்றல் கொண்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். என்னை பொருத்தவரை மக்களால் கவரப்பட்டு கண்டிப்பாக வெற்றிப் பெரும் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் சொன்னார்.

நான் லாமாக்  தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். என் தொகுதியில் என்னைவிட ஆற்றல் கொண்ட புதிய முகம் இருந்தால் கட்சியின் நன்மைக்காக என் தொகுதியை விட்டுக் கொடுக்கவும் தயார். ஆனால் நான் இங்கு தளபதியாக இருப்பதால் பின்வாங்க முடியாது சூழ்நிலையில் உள்ளதாகவும் அவர் சொன்னார்.

உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டால் அம்னோவை வலுப்படுத்த பிற கட்சிகளுடன் இணைந்து செயல்படவுன் தான் தயாராக உள்ளதாக போங் மொக்தார் தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஏப். 2-

கேகே மார்ட் கிளைகளில் நடத்தப்பட்டு வரும் குண்டு வீச்சு தாக்குதலை தொடர்ந்து உடனடியாக தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் அதிரடி கூட்டத்தை பிரதமர் நடத்த வேண்டுமென பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

இந்த தாக்குதல்களுக்கு முன்றுப் புள்ளி வைக்கும் வகையிலும் நாட்டின் பாதுகாப்பு மட்டும் அமைதி நிலை நிறுத்த  இக்கூட்டம் நடத்தப்பட்ட வேண்டுமென அவர் சொன்னார்.

கேகே மார்ட் விவகாரத்தில் அரசாங்கத்தில் இருந்து கொண்டே அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே நடத்திய பிரச்சாரத்தினால்தான் நிலைமை மோசமாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருந்தபோதும் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும்.

காலுறை விவகாரத்தினால் இதுவரை நாட்டில் உள்ள மூன்று கேகே மார்ட் கிளைகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க உடனடியாக தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் அதிரடி கூட்டம் நடத்தப்பட வேண்டுமென மசீச தலைவருமான அவர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், ஏப்.2-

நாட்டில் கேகே மார்ட் கிளைகளில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தற்போது மூன்றாக பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கூச்சிங்கில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ள வேளையில் பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுமென துணைப் பிரதமர் பஃட்டிலா யூசோப் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். இந்த விவகாரத்திற்கு உடண்டி தீர்வு காணப்பட வேண்டுமென பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

கேகே மார்ட்டில் அல்லா எழுத்து அச்சிடப்பட்ட காலுறை விற்கப்பட்டதை தொடர்ந்து மூன்று தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. முதல் சம்பவம் பீடோ பேராவிலும் இரண்டாவது சம்பவம் குவாந்தான் பகாங்கிலும் தற்போது ஜாலான் சாத்தோக் கூச்சிங்கிலும் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என அவர் சொன்னார்.

இந்த விவகாரம் தொடர்பில் கேகே மார்ட் உரிமையாளர் பொது மன்னிப்பு கேட்டதுடன் அவர் மீதும் சம்பந்தப்பட்ட காலுறைகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் மீது வழங்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஏப்.1-

வரி பாக்கியுள்ள 182,666 தனிநபர்கள் வெளிநாடு செல்வதற்கு கடந்த பிப்ரவரி 29 ஆம் திகதி முதல் LHDN தடை விதித்துள்ளது. 

வருமான வரி பாக்கி உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை  171,571 மற்றும் சொத்து லாப வரி பாக்கி உள்ள தனிநபர்களின்  எண்ணிக்கை 11,095 பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி துறை துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

ஐஆர்பி பிரிவு 104, வருமான வரிச் சட்டம் 1967 மற்றும் பிரிவு 22, ரியல் எஸ்டேட் ஆதாய வரிச் சட்டம் 1976 ஆகியவற்றின் கீழ் சட்ட  விதிகளின்படி முறையாக வருமான வரி செலுத்தாத நபர்களுக்கு வெளிநாட்டு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

அவ்வகையில் வருமான வரி பாக்கிகள் அல்லது ரியல் எஸ்டேட் லாப வரியை இன்னும் செலுத்தாத எந்தவொரு தனிநபருக்கும் வெளிநாட்டு பயணத்திற்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய குடிநுலைவுத் துறையின் ஒத்துழைப்போடு இந்த பயணக் கட்டுபாடு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன், வரி செலுத்துவோருக்கு, கடிதங்கள் மின்னஞ்சல்கள் மற்றும்  தொலைபேசி அழைப்புகள் மூலம் வரி பாக்கிகள் குறித்த முன் அறிவிப்புகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.

மேலும் வரி செலுத்துவோர் MyTax போர்ட்டல் மூலம் தங்களின் வரி பாக்கி நிலையை சரிபார்க்கலாம், அதோடு  மலேசிய குடிநுலைவுத்  துறையின் இணையதளத்தில் பயணக் கட்டுப்பாடுகளைச் சரிபார்க்கலாம் என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர், ஏப்ரல்.1-

எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை  நாங்கள் பின்பற்றி வருகிறோம்.பிற மதத்தை இழிவு படுத்துவோர் யாராக இருந்தாலும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என மை பிபிபி கட்சியின் சார்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டது என அதன் தலைவர் டத்தோ லோகபாலா தெரிவித்தார்.

ஒருவர் மற்றொருவரின் மதத்தை இழிவு படுத்துவதை நாம் ஒருபோதும் விடக்கூடாது. யாராக இருந்தாலும் அவர் நிச்சயம் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக மை பிபிபி கட்சியின் சார்பில் விலாயா மாநில தலைவர் சத்தியா சுதாகரன் செந்தூல் காவல் நிலையத்தில் போலீஸ் புகார் செய்துள்ளார்.

தற்பொழுது இந்து மதக் கடவுளை ஷம்ரி வினோத் என்பவர் இழிவு படுத்தி பேசிய விவகாரம் நாட்டில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்பாக மலேசிய இந்திய சமூகத்தினர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் போலீஸ் புகார்களை செய்து வருகின்றனர். இதற்கு மை பிபிபி கட்சியின் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல் ஓர் இந்து என்ற அடிப்படையில் நான் என்னுடைய ஆதங்கத்தையும் தெரிவிக்கின்றேன்.

நாங்கள் பல்லின கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் இவ்விவகாரத்தில் நாங்கள் தலையிடக்கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை. எங்களின் கட்சியில் அனைத்து மதத்தை சார்ந்த உறுப்பினர்களும் உள்ளனர். ஆகவே தனி ஒரு மதத்தை இழிவுப் படுத்தி பேசும் நபர்களை நிச்சயம் நாங்கள் தட்டிக் கேட்போம். 

நாளை இச்சூழ்நிலை எந்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் ஏற்படலாம். அப்போதும் நாங்கள் இது போன்ற செயல்களுக்கு எதிர்பாக இருப்போம். ஏன் என்றால் மை பிபிபி கட்சி எம் மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின் பற்றி செயல்படுகிறது என்பதை டத்தோ லோகபாலா ஆணித்தரமாக தெரிவித்தார்.

நேற்று செந்தூலில்  நடைபெற்ற 2024 விலாயா மாநில மைபிபிபி ஆண்டு பேராளர் மாநாட்டின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்று இவ்விவகாரம் தொடர்பில் இந்து மதத்தை இழிவு படுத்திய நபர்கள் மீது 3 ஆர் சட்டத்தின் கீழ் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக  மை பிபிபி கட்சியின் சார்பில் விலாயா மாநில தலைவர் சத்தியா சுதாகரன் செந்தூல் காவல் நிலையத்தில் போலீஸ் புகார் செய்துள்ளார்.

சுங்கை பூலோ, மார்ச்.30-

சுங்கை பூலோ பாயா ஜெராஸில் நடந்த மடானி விற்பனை சந்தையில் அனைத்து பொருட்களும் முதல் முறையாக 50 விழுக்காடு கழிவில் விற்கப்பட்டது என தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.

அரசாங்கத்தின் மடானி விற்பனை சந்தை நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று  இந்த விற்பனை சந்தை  இங்கு நடைபெற்றது என்றார்.

வழக்கமாக இந்த விற்பனை சந்தையில் விற்கப்படும் பொருட்கள் 20 விழுக்காடு கழிவுடன் விற்கப்படும்.மலேசிய கூட்டுறவு ஆணையம் 20% கழிவுக்கான செலவை ஏற்றுக் கொண்ட நிலையில் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சு 10 சதவீத கழிவை வழங்கியது.

மலேசியாவில் முதல் முறையாக சுங்கை பூலோவில்  நாடாளுமன்றத்தில் தான்  50% கழிவுடன் இந்த மடானி விற்பனை சந்தை நடைபெறுகிறது என்று கூறுவதில் நான் பெருமை அடைகிறேன்.

நோன்பு பெருநாள் காலங்களில் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் தான் இந்த கழிவு வழங்கப்பட்டுள்ளது.

மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த விற்பனை சந்தையில் பொதுமக்கள் திரளாக  வந்து குறைந்த விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்றனர் என  சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன்  தெரிவித்தார்.

கோலாலம்பூர் மார்ச்- 30

நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாக  சர்ச்சையான கருத்துகளை வெளிப்படுத்தி வரும் சம்ரி வினோத் மற்றும்  சந்திரா என்ற இருவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி ம.இ.கா  தேசிய இளைஞர் பிரிவின்    செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன் தலைமையில்  போலீஸ் புகார் ஒன்று , இன்று  செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் செய்யப்பட்டது.

நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் தரும் தரப்பினர் அது யாராக இருந்ததாலும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட படி  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அர்விந்த்  தெரிவித்தார்.

3R சட்ட பிரிவின் கீழ் இவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்த அர்விந்த்,  போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர் மார்ச் - 31

அமைச்சரவையில் இந்தியர்கள் சார்ந்த ஒரு தமிழ் பேசும் அமைச்சர் இல்லை என சமுதாயதம் அதிருப்தி  தெரிவித்த போது, அது எல்லாம் தேவை இல்லை எனச்  சொல்லி ,
துணை அமைச்சர் பதவி கிடைத்ததும் ,  பிரதமரின்  முடிவுக்கு முட்டு கொடுத்த தலைவர்கள்  இன்று அவர்களுக்குள்  ஒருவரை ஒருவர் சாடி அடித்து கொள்ளும் அவல நிலை தற்போது அரங்கேறி வருகிறது.

இங்கு இந்தியர்களின் கல்வி , சமூக பிரச்சினை,  மருத்துவம், வாழ்வாதாரம் , என அமைச்சரவையில் பேச  ஓர் ஆளுமை மிக்க இந்திய தலைவர் இப்போது இல்லை.

மித்ரா விவகாரத்தில் இந்திய தலைவர்களை,  அது சார்ந்த  அமைச்சர்கள்  மதிக்கவில்லை  என இந்திய  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  கூச்சலிடுக்கின்றனர்.

ஓர் இந்திய அமைச்சர் தேவையில்லை என சொன்ன துணை அமைச்சர்களும் இப்போது ஒருவருக்கு ஒருவர் கருத்து மோதலில் குறைச் சொல்கின்றனர்.

இதில் வேடிக்கை , சொந்த கட்சி , சொந்த கூட்டணியில் உள்ளவர்களே இங்கு  அடித்து கொள்வதுதான்.

இதற்கு காரணம் இந்த கூட்டணியில் ஆளுமை மிக்க  இந்திய தலைவர்  இல்லை என்பது இவர்களின் பலவீனம்.

60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ம.இ.காவில்  ஒரு ஆளுமை  இருந்தது. அந்த ஆளுமை தலைவர்களின்  செயல்பாடு, முடிவுக்கு  கட்சி கட்டுப்பட்டு, ஒரு மனதாக  மக்கள் பிரச்சினைகள்  அமைச்சரவையில் பேசப்படும்.

ஆனால் இப்போது, ஒரு மித்ரா விவகாரத்திலேயே  இவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை, ஒரு மித்த முடிவு இல்லை , பதவி சண்டை , யார் பெரியவர், அரசாங்கத்தில் இந்தியர் குரலாக யார் இருக்க வேண்டும் என சண்டை.

இவர்களின்  சண்டை ஒரு புறம் இருக்க, நீங்க ஏதோ ஒன்று செய்யுங்க பா...  என ம.இ.கா ஒரு தனி பாணியில், கட்சி வேலை,  கட்சி மேம்பாடு , கட்டட வேலை, அவர்களை தேடி வரும் மக்களுக்கு உதவி என  அரசாங்கத்தில் நடத்தும் கூத்தை கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறது. 

மக்கள் அழைக்காத வரை நாங்கள் அமைதியாக  ,அரசரின் ஆலோசனை படி இந்த ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு  கொடுத்து ஒரு பார்வையாளர்களாக நாங்கள் இருப்போம் என   ம.இ.கா ஒதுங்கி நிற்கிறது.

இந்தியச் சமுதாயமோ ஆளுமை மிக்க ஒரு தலைமை , தலைவர் இல்லாமல் நாதியற்று கிடக்கிறது !


செய்தி :  வெற்றி விக்டர்

சுபாங் ஜெயா,மார்ச் 30-

கடந்த இரண்டு ஆண்டுகளில் கிள்ளான்  பள்ளத்தாக்கைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

நேற்று  இரவு 11.30 மணியளவில் இங்குள்ள புத்ரா ஹைட்ஸ்  பெர்சியாரன் ஹார்மோனி பகுதியில்  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பெரோடுவா அக்சியா ரக வாகனத்தில் பயணித்த ஐவரின் செயல் சந்தேகம் எழும் வகையில் இருந்ததால் போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயற்சித்தனர்.

வாகனத்தை நிறுத்தும்படி போலீசார் பலமுறை  எச்சரித்தும் அந்த வாகனம் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளது. 

அப்போது போலீசார் அந்த வாகனத்தைச் சுற்றி வளைத்து நிறுத்தியபோது அந்த சந்தேக நபர்கள் போலீசாரை நோக்கி பலமுறை துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள  போலீசார் அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில் உள் நாட்டைச் சேர்ந்த 25 முதல் 30 வயதிற்குட்பட்ட ஐவர் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தது.

அந்த ஐவரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை போலீசார் உறுதி செய்ததோடு அந்த கும்பல் பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

பத்து ஆராங், மார்ச் 29-

பள்ளி அளவிலான குறுக்கோட்ட போட்டி இன்று தேசிய வகை பத்து ஆராங்  தமிழ் பள்ளியில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

சுமார் 120 மாணவர்கள் பங்கேற்ற இந்த குறுக்கோட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதலும் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் முன்னிலையில் வெற்றி பெற்ற 10 மாணவர்கள் அடுத்த கட்ட அளவிலான நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர் என பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். முனியம்மா தெரிவித்தார்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதைப் போல் விளையாட்டு துறையிலும் அதிகம் நாட்டம் செலுத்தி விளையாட்டு துறையிலும் சாதனை படைக்க வேண்டும் என  பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வி. சண்முகநாதன் கேட்டுக் கொண்டார்.

இந்த குறுக்கோட்ட போட்டி சிறப்பாக நடைபெற பக்கபலமாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், பள்ளி உதவியாளர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோருக்கு இவ்வேளையில் தாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வி. சண்முகநாதன் தெரிவித்தார்.

-தீபன் கிருஷ்ணன்

கோலாலம்பூர்,மார்ச் 29-

கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலை கிலோமீட்டர் 51.4 இல்  16 பயணிகளை ஏற்றிச்சென்ற விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானது.

காலை 7.50 மணியளவில் புக்கிட் திங்கியிலிருந்து லென்டாங் நோக்கிச் செல்லும் வழியில் உள்ள ஓய்வெடுக்கும் இடத்திற்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததால் கிழக்கை நோக்கி செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பெந்தோங் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் கமாண்டர் பாட்ருல் இஷாம் சாரி தெரிவித்தார்.

விரைவு பேருந்து விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும்  சுமார் 19 தீயணைப்பு வீரர்கள்  கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் பயணிகளை மீட்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு விபத்தில் கடும் காயம் அடைந்த மூவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் இந்த விபத்தினால் சுமார் 4.7 கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், அதனை குறைப்பதற்கு விறைவாக அப்புறப்படுத்தும்  பணி மேற்கொண்டு வருவதாக  மலேசிய நெடுஞ்சாலை இலாகா தனது முகநூலின் வழி தெரிவித்தது.

கோலாலம்பூர், மார்ச் 27-


ம.இ.காவையும் , அந்த கட்சியை சார்ந்த தலைவர்களை குறைச் சொல்லியே அரசியல் நடத்திய  ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இப்போது  தனது சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை குறை சொல்ல தொடங்கிவிட்டார். 

அதன் விளைவு இப்போது ஒட்டுமொத்த இந்திய  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  செனட்டர்களின் அம்பு அவர் மீது பாய்ந்துள்ளது.

அண்மையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் அனைவரும் ஒற்றுமை துறை அமைச்சர் அரோன் அகோ மற்றும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியுடன் ஒரு  சந்திப்பை நடத்தினர்.

இந்த சந்திப்பில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்  பி.பிரபாகரனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு மித்ராவை அவர் கவனிக்க  வாய்ப்பு கொடுங்கள்.. அதன் கீழ் ஆலோசனை குழு அமைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வையுங்கள் என கேட்டதற்கு , ஒற்றுமை துறை அமைச்சர் அப்படி எல்லாம் செய்ய முடியாது. அது என் பொறுப்பில் தான் இருக்கும் , உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் பிரதமரை சென்று சந்தியுங்கள் என வெளிநடப்பு செய்தார்.

அதன் பின் நம்ம துணை அமைச்சர்  கடந்த காலத்தில்...... என வரலாறு வகுப்பு எடுக்க தொடங்கி  பிரதமர் துறையில்  ரமணன்  தலைமையில்  மித்ரா சரியாக செய்யவில்லை என சொல்ல கலந்துரையாடல் வாய் வாக்குவாதமானது.

பக்காத்தான் தலைவர்கள் வெளிநடப்பு செய்து. இப்போது பிரதமரை சந்திக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலை ஒரே கட்சியில் இருக்கும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி  மற்றும் துணை அமைச்சர் டத்தோ  ரமணனுக்கு இடையில் இப்போது கருத்து மோதல் தொடங்கி விட்டது.

ரமணன் வெளிப்படையாக சரஸ்வதி கந்தசாமிக்கு குறை மட்டும் தான் சொல்ல தெரியும், அவரிடம் செயலாக்கம் இல்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மித்ரா இவர்களின் பிடிவாதத்தால்  ஒரு செயல்பாடும் இல்லாமல் கிடப்பில் கிடக்கிறது. அனைவரும் எனக்கு அழைத்து விசாரிக்கிறார்கள். இதில் பாலர் பள்ளி ஆசிரியர்களும் அடங்குவர் என டத்தோ ரமணன் தெரிவித்தார்.

இதனிடையே  ஒட்டு மொத்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து யாரிடமும் ஒத்து போகாத சரஸ்வதி கந்தசாமி பதவி விலகும் படி கூறவுள்ளதாகவும் அதோடு மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் சென்று ஆலோசனை குழு உருவாக்கபட வேண்டும் என பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்  வெளியாகி உள்ளது.

இதன் வாயிலாக பாக்காத்தான் இந்திய தலைவர்களின் அம்பு சரஸ்வதி கந்தசாமி மீது பாய்ந்துள்ளது.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் 27-

தேசிய முன்னணியை முன் உதாரணமாக வைத்துக்கொண்டு  நடப்பு அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு 2,200 மெட்ரிகுலேசன் சீட்டை ஒதுக்க வேண்டும் என முன்னாள் செடிக் இயக்குநர் டத்தோ  என்.எஸ் ராஜேந்திரன் ஓர் ஆங்கில இணைய தளத்திற்கு கொடுத்த பேட்டியை தொடர்ந்து,

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்  அவர்களின் அதிகாரபூர்வ facebook பக்கத்தில் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது.

அந்த பதிவில் டத்தோ என்.எஸ். ராஜேந்திரன் கருத்தை பதிவு செய்ததோடு ஆண்டுக்கு  2,200 சீட் தானே அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே  என  பதிவிடப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு அது வழங்கப்பட வேண்டிய ஒரு நியாமான விஷயம், அதோடு கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில், அதிகமான இந்தியர்கள் தேசிய முன்னணியை புறக்கணித்தற்கு காரணம் சிலரின் பொய்யான பிரச்சாரம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர்,மார்ச் 27-

காலுறை விவகாரம் தொடர்புடைய கேகே மார்ட் விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏன் அமைதியாக இருக்கிறார் என முன்னாள் அமைச்சரான கைரி ஜமாலுடின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பிரிவினைவாத சர்ச்சைக்கு மத்தியில் மலேசியர்களை ஒன்றிணைக்கும் பொருப்பை அவர் முறையாக செய்ய வேண்டும்.

பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் பிரிவினை சர்ச்சைகள் எழுந்தால் அதனை முறையாக கையாழ தெரிந்த தலைவராக இருப்பது அவசியம். இதனை கையாழ்வது கடினம் என்பதை நான் உணர்கிறேன். ஆனால் சரியான முடிவை எடுக்கும் தருணத்தில் பிரதமர் உள்ளார். அதனை அவர் செய்வார் என்று நம்புகிறேன்.

இதுவரை கேகே மார்ட் விவகாரத்தில் பிரதமர் இருமுறை மட்டும்தான் வாயை திறந்துள்ளார். கடந்த 20ஆம் தேதி பேசிய அவர், விசாரணை தொடர வேண்டும் என்றும் தகுந்த தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதன் பின்னர் நேற்று முன்தினம் மதம்  சார்ந்த விவகாரத்தில் அதிலும் இஸ்லாத்தை இழிப்படுத்தினால் விட்டு கொடுக்கும் போக்கு இருக்காது என பிரதமர் கூறியிருந்தார்.

கேகே மார்ட் விவகாரத்தில் நாம் குரல் எழுப்பிவிட்டோம். விசாரணைக்கு பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது. இனியும் இந்த விவகாரத்தை பெரிது படுத்தி தேவையற்ற அசம்பாவிதங்களை ஏற்படுத்த வேண்டாம் என கைரி தெரிவித்தார்.

கோலாலம்பூர் மார்ச்- 26

நாளை  ம.இ.காவின் தேசியத் தலைவர் பதவிற்கான வேட்புமனு தாக்கல் நடைப்பெறும் நிலையில் நடப்பு தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையை  தான் ம.இ.கா இளைஞர் பிரிவு விரும்புவதாக  ம.இ.கா  தேசிய இளைஞர் பிரிவு உச்சமன்ற உறுப்பினர்  லெட்சு மாறன் தெரிவித்தார்.

டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் - டத்தோ ஸ்ரீ சரவணன் ஆகியோர் தலைமைக்கு வந்த பிறகு  குழுக்களாக பிரிந்து கிடந்த  விவகாரம் ஒழித்து கட்டப்பட்டது. இருவரும் இணைந்து ம.இ.காவிற்கு  புதிய தோற்றம் கொடுத்து, உரிமைகளை கேட்க தொடங்கினர்.

அதோடு மட்டுமல்ல ம.இ.காவின் புதிய கட்டடத்தை கட்டும் இவர்களின் முயற்சி காலத்திற்கும் பேசப்படும் என லெட்சு தெரிவித்தார்.

இப்போது தலைவர் பதவிக்கான வேட்பு மனு  தாக்கல் நடைப்பெறவுள்ளது. அதே போல் துணை தலைவர் பதவிக்கான தேர்தலும் விரைவில் நடைப்பெறும்  நிலையில் தலைவருக்கு பக்கபலமாக  இருக்கவேண்டிய அந்த பொறுப்புக்கு டத்தோ ஸ்ரீ சரவணன்  சரியானவர்.

கடந்த காலங்களில் இந்த இரு முக்கிய பதவிகளினால் ம.இ.கா பிளவு படுத்தியது. அதை சரி செய்தவர்கள் இந்த இருவர்களே.

எங்களை போன்ற இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட தலைவர்கள் மட்டுமே வழிகாட்ட முடியும் என லெட்சு தெரிவித்தார்.

பீடோர், மார்ச் 26-

பேராக், பீடோரிலுள்ள KK Mart-இல் அதிகாலை 5 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாலான் மோஸியிலுள்ள அந்த கடையின் முன் அந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் அது வெடிக்கவில்லை என்றும் China Press ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதன் தொடர்பில் அந்த கடையின் பணியாளர் போலீசில் புகார் செய்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

KK Mart-இல் அல்லா சொல் பதிக்கப்பட்ட காலுறை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விவகாரத்தை தொடர்ந்து இச்சம்பவம் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

கோலாலம்பூர், மார்ச் 26-

இம்மாதம் இறுதிக்குள் PADU-வில் மக்கள் தங்களின் விவரங்களை பதிந்து கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்தி வந்தாலும் இதுவரை 35 விழுக்காட்டினர் அதாவது சுமார் 7.36 மில்லியன் மக்கள் மட்டுமே அதில் பதிவு செய்துள்ளனர்.

PADU செயல்பாடு குறித்த தெளிவான விளக்கத்தை மக்களுக்கு வழங்குவதில் அரசு தோல்விக் கண்டு விட்டது. முழுமையான  விளக்கம் மக்களை சென்றடையாத பட்சத்தில் தங்களின் சொந்த விவரங்களை வழங்குவதில் மக்கள் தயக்கம் கொண்டுள்ளனர்.

மேலும் PADUவில் பதிவு செய்வதற்கான வழிமுறைகளும் கடினமாகவும் அதிகமான தனி விவரங்களை கேட்பதனாலும் மக்கள் அதில் தங்களை பதிந்துகொள்ள தயங்குகின்றனர்.

இதுநாள் வரை அரசாங்கத்திடம் எங்களை பற்றிய விவரங்கள் இல்லையா? ஏன் மீண்டும் எங்களின் சுயவிவரங்களை கேட்கின்றனர்? நாங்கள் கொடுக்கும் விவரங்கள் பாதுகாப்பாக இருக்குமா? என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக ஹில்ஹாம் செண்டர் தலைமை இயக்குநர் ஹிசோமுடின் பகார் தெரிவித்துள்ளார்.

மக்கள் தனி விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் எந்தவொரு தனியார் நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை என்றும் பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி கூறியிருந்தபோதிலும் மக்களுக்கு அதில் முழு நம்பிக்கை இல்லை என்பது இதுவரை PADU-வில் பதிவி செய்தவர்களின் எண்ணிக்கை காட்டுகிறது.

PADU பதிவில் மக்களின் கடன், சொத்து, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் என பல கேள்விகள் கேட்கப்படுவதால் மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஆரம்பத்திலேயே இந்த தயக்கத்தை போக்க தெளிவான விளக்கத்தை அரசு மக்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி மக்களின் தனி விவரங்கள் பாதுகாக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியிருக்க வேண்டுமென முவமாலாட் வங்கியின் பொருளாதார பிரிவு தலைவர் முகமட் அவ்ஜானிஜாம் கூறியுள்ளார்.

இந்த காலக் கட்டத்தில் மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான தொடர்பு வீக்கமாக உள்ளது. உதவித் தொகையின் பற்றிய தெளிவின்மை, இணைய பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய வதந்திகள் மக்களை குழப்பமடைய செய்துள்ளது. இந்த பிரச்சினையை அரசு முறையாக கையாழவில்லை எனவும் அவர் சொன்னார்.

மக்களின் மத்தியில் PADU பற்றி கேட்டதில், அதிகமானோர் அதில் அக்கரை இல்லை என்பது தெரிவருகிறது. சிலர் தங்களின் முதலாளிகளின் வற்புறுத்தலின் காரணமாகதான் PADU-வில் பதிந்துள்ளனர். மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறுவேற்றுவதில் அரசு தோல்வி கண்டு விட்டது. விலை வாசி அதிகரித்து விட்டது. எங்களால் தாக்குபிடிக்க முடியவில்லை. இனியுன் அரசு சொல்வதை நம்ப முடியாது என மக்களில் சிலர் கூறுகின்றனர்.

கோலாலம்பூர்,மார்ச் 26-

முஸ்லிம் அல்லாத மதங்களை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சில மத பேச்சாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நாட்டில் இந்தியர்கள் அதாவது இந்து மதத்தை அவமதித்து பேசிய சம்ரி வினோத்தும் இதில் அடங்குவார் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் கூறினார்.

அண்மையில் புதிய மக்களவை அமர்வின்போது 3R எனப்படும் சமயம், இனம், அரசர் பற்றி பேசும் நடவடிக்கைகள் கூடாது என்றும் பேரரசர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் சம்ரி வினோத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்களவையிலுள்ள இந்திய பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

அண்மையில் வெளியான டிக் டோக் காணொயில் மத பேச்சாளர் சம்ரி வினோத் இந்துகளின் செய்வமான சிவபெருமானை பற்றி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் அவர் மீது உள்துறை அமைச்சும் ஒற்றுமைத் துறை அமைச்சும் நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் வரை கொண்டு செல்ல வேண்டுமென ராயார் சொன்னார்.

இன்று மக்களவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராயாருடன் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், செகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், செனட்டர் லிங்கேஸ்வரன், செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர் மார்ச்- 25

சமயத்தைக் காக்கின்றோம் இந்துக்கள் மனம் புண்ணாகிவிட்டது என தமிழர்கள், தமிழ் நாட்டு அரசியல் இதில் மட்டும் கவனம் செலுத்தும் ஹிந்து தர்ம மாமன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழர்கள் என்று வந்தால் மட்டும் தாண்டி குதிக்கிறார். 
சொந்த நாட்டில்  மற்ற இனத்தால்  இந்துகள் அவமானப்படுத்தப்பட்டால்  பூனை போல்  இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் என சமூக ஆர்வலர் ஆறுமுகம் கேள்வி எழுப்பினார். இவர் உண்மையில பூனையா ?  இல்லை  பூ(னை) பத்திரிக்கையில் இருந்து  இவருக்கு சிக்னல் இன்னும் வரவில்லையா?  , அந்த சிக்னல் கிடைத்தால் உடனே அறிக்கை விட்டு விடுவார் போல என ஆறுமுகம் தெரிவித்தார்.

அண்மையில் கவிப்பேரரசு  வைரமுத்துவின் மகா கவிதை புத்தகத்திற்கு மலேசியத்  தமிழர்கள் விருது கொடுக்க ஏற்பாடு செய்த போது,  அழைக்காத விருந்தாளி வீட்டில் இலை போடு என சொன்னது போல்,  தாண்டி குதித்து  வைரமுத்து மலேசியாவிற்கு வரக்கூடாது, இந்துகள் எதிர்க்க வேண்டும், நாடு தழுவிய நிலையில் புகார் செய்ய வேண்டும், உள் துறை அமைச்சரிடம் புகார் செய்யவேண்டும் என  பத்திரிக்கை அறிக்கை விட்டு வானத்திற்கும் பூமிக்கும் குதித்த ராதாகிருஷ்ணன் இப்போது சம்ரி வினோத் விவகாரத்தில் பூனை போல் பதுங்கி இருப்பது ஏன் எதனால் என ஆறுமுகம் கேள்வி எழுப்பினார்.

உங்கள் வாய் சவடால், வீரம் எல்லாம் தமிழ் கவிஞர் வைரமுத்துவிடம் தான் வரும், இந்த நாட்டில் இந்துகளை தொடர்ச்சியாக அவமானம் செய்யும்  நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் உள்துறை அமைச்சரை  நாடவில்லை, ஏன் பிரதமரை  நாடவில்லை ? சம்ரி வினோத்தை பார்த்து ராதாகிருஷ்ணன் பயப்படுகிறாரா ?  இல்லை  அவர் பின்னாள் இருக்கும் கூட்டத்தை பார்த்து பயப்படுகிறாரா ? 

தமிழர்கள் மத்தியில் வந்த வீரம் சம்ரி வீனோத்திடம்  ஏன் இல்லை என ஆறுமுகம் கேள்வி எழுப்பியதோடு போங்க பா.... போய் புகார் , வீதி போராட்டம், உள்துறை அமைச்சரிடம் புகார் கொடுங்க என்றார்.

ஒரு தமிழ் வாழ்த்து பாடலுக்கு  மரியாதை செய்ய தெரியாத இந்து தர்ம மாமன்ற ரிஷி குமார் , இன்று சந்தேஸ் பாடிய பாடலை பாராட்டுகிறார். அவருக்கு உள்ள தைரியம் கூட ரிஷிக்கு இல்லை. என்பதுதான் வேடிக்கை !

தமிழ் வாழ்த்தில் திமிர் தனம் காட்டிய ரிஷிக்கு சம்ரி வினோத்தை எதிர்த்து பேச வாய் இல்லை.
இவர்களின் திமிர்தனம் தமிழர், தமிழர் சார்ந்த நிகழ்ச்சியில் மட்டும் தான் வெளிப்படும்.  மற்ற இடத்தில் இவர்கள் பூனை என ஆறுமுகம் சாடினார்.

ஷா ஆலாம்,மார்ச் 26-

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் மேஜிக் மஷ்ரூம் வகை மின்னியல் சிகரெட் காரணமாக 10 சிறுவர்கள் இறந்தது குறித்து காவல்துறைக்கு எந்த புகாரும் வரவில்லை என காவல்துறை தெரிவித்தது.

கடந்த சனிக்கிழமை டிக் டாக் வலைத்தளத்தில் மின்னியல் சிகரெட் காரணமாக 10 சிறார்கள் உயிரிழந்ததாக தகவல் பகிரப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இம்மாதிரியான போலி தகவலை பரப்பி பொது மக்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என கோல சிலாங்கூர்  மாவட்ட போலிஸ்  தலைவர் சூப்பரிண்டண்டெண் ராம்லி காசா கேட்டுக்கொண்டார்.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சமூகதலவாசிகள் அதன் கோட்பாடுகளையும் விதிமுறைகளையும் பின்பற்றி பயன்படுத்த வேண்டும். போலி தகவலையும் முறையற்ற செயல்களையும் பகிரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராம்லி காசா எச்சரித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 26-

அல்லா என்ற சொல் பதிக்கப்பட்ட காலுறை விவகாரத்தில் இந்த தவற்றை புரிந்த தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இந்த விவகாரத்தில் சொந்த முடிவை எடுக்கும் தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் சைப்பூடின் நசுத்தியோன் கூறினார்.

இந்த நாட்டில் சட்டம் உண்டு. அதனை பின்பற்ற வேண்டும். சொந்த முடிவை எடுப்பவர்களை போலீஸ் சும்மா விடாது என அவர் சொன்னார்.

அப்படியே தனி நபரை முடிவு எடுக்க விட்டால் நாட்டின் அமைதி சீர்குழைந்துவிடும் என்றார் அவர்.

இந்த விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம். நாட்டு மக்களின் நலன், பொருளாதாரம், உதவித் தொகை போன்றவற்றை பற்றி பேச வேண்டிய காலக்கட்டம் இது என அவர் சொன்னார்.

அலோர்ஸ்டார், மார்ச் 25-

கடந்த ஜனவரி மாதம் தனது பேத்தியின் குடியுரிமை விண்ணப்பத்திற்கு உள்துறை அமைச்சு ஒப்புதல் அளித்த பிறகும், பள்ளிப்படிப்புக்கு வெளிநாட்டு மாணவர் கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழல் இருப்பதாக அவரின் தாத்தா சதநாதன் (வயது 73) வருத்தப்பட்டார்.

 தனது பேத்தி மதுமிதா  தீவாகரன் (வயது 15), கெடா அலோர்ஸ்டாரில் உள்ள துங்கு சோபியா தேசிய இடைநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவியாக பயின்று வருகிறார்.

அவரது தாய் ஓர் இந்தோனேசிய பிரஜை மற்றும் அவரது தந்தை ஒரு மலேசிய குடிமகன். 

இதனால் எனது இரு பேரப்பிள்ளைகளுக்கும் குடியுரிமை கிடைக்கவில்லை மற்றும் இந்தோனேசிய பாஸ்போர்ட் மட்டுமே இருந்தது. இத்தனை காலம் இருவரும் தலா RM240 செலுத்தி மாணவர் அனுமதிச்சீட்டைப் பயன்படுத்தி பள்ளியில் படித்தனர்.

இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி அன்று, என் பேத்தியின் குடியுரிமை விண்ணப்பத்தை உள்துறை அமைச்சு அங்கீகரித்துள்ளது. பிறகு நாங்கள் அலோர்ஸ்டார் மாநில பதிவுத் துறைக்கு பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கச் சென்றோம். 

நாங்கள் ஏழு முதல் எட்டு மாதங்களுக்குள் பிறப்புச் சான்றிதழைப் பெற காத்திருக்க வேண்டும் என்று அங்குள்ள ஜேபிஎன் அதிகாரி கூறியதாக சதநாதன் கூறினார்.

இருப்பினும், தனது பேரப்பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பள்ளி தங்களுக்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். 

குடியுரிமைக்கான விண்ணப்ப ஒப்புதல் கடிதம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் கட்டணம் செலுத்திய சீட்டை அவர்கள் ஏற்கவில்லை. பள்ளியின் முடிவால் நாங்கள் ஏமாற்றமும் வருத்தமும் அடைந்துள்ளோம் என்று அவர் கூறினார்.

மேலும் அவர் அலோர் ஸ்டாரில் உள்ள ஓர் உணவகத்தில் உதவியாளராகப் பணிபுரிவதாகவும் அங்கு பெறும் சம்பளத்தைக்கொண்டு

தற்போதைய குடும்ப சூழ்நிலையில் பள்ளி கட்டணத்தை ஈடுகட்ட முடியாது எனவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

எனது தினசரி சம்பளம் 40 ரிங்கிட் மட்டுமே. எனது இரண்டு பேரக்குழந்தைகளையும் குறைந்த சம்பளத்தில்தான் நான் வளர்க்க வேண்டும். இன்னும் குடியுரிமை பெறாத மதுமிதாவின் தம்பிக்கு இன்னும் வெளிநாட்டு மாணவர் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் எங்களது அன்றாட வாழ்க்கையில் நடத்தி வருகிறோம்.நாங்கள் எதிர்நோக்கும் இப்பிரச்சனைக்கு கல்வி அமைச்சு உதவும் என்று நம்புகிறோம்.

இதற்கிடையில் மலேசியா ஒற்றுமை சமூக நல இயக்கத்தின் தலைவர் பி. மணிவாணன் இந்த விஷயத்தை கல்வி அமைச்சிற்கும் மற்றும் உள்துறை அமைச்சிற்கும் கொண்டு சென்று உதவியதாக கூறினார்.

கல்வி அமைச்சு உடனடியாக மாநில கல்வி இலாகாவுக்கு உத்தரவிட வேண்டும், மதுமிதாவை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர் மார்ச் -25

தமிழ் அமுது 1, 2024 ஓர் இலக்கிய விழா, ஒரு விருது விழா.  பழன் அறவாரியத்தின் ஆதரவில், டத்தோ ஸ்ரீ தெய்வீகன் அவர்கள் ஏற்பாட்டுக் குழுவிற்குத் தலைமையேற்று இந்த இலக்கிய விழாவின்  ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இலக்கியம் பேசுவோரும் சரி, இலக்கிய உரைகளைக் கேட்போரும் சரி, இலக்கியத்தை ரசிப்போரும் சரி அனைவருக்குமே இது ஒரு மிகச்சிறந்த இலக்கிய விருந்தாக அமையும். 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்கின்ற பொய்யாமொழிப் புலவரின்  குறளுக்கு ஏற்ப சிறந்த இலக்கிய உரைகளைக் கேட்டு மகிழலாம். தமிழ்நாட்டுத் தன்முனைப்புப் பேச்சாளர் ஐ.பி.எஸ் கலியமூர்த்தி அவர்களின் சிறப்புரை; நம் நாட்டில் புகழ் பெற்ற பேச்சாளர் திரு.பாண்டித்துரை அவர்களின் உரை; முன்னாள் காவல்துறை ஆணையர் டத்தோ ஸ்ரீ தெய்வீகன் அவர்களின் இலக்கிய உரை; என செவிக்கினிய உரைகளைக் கேட்டு மகிழலாம்.

சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், பழன் அறவாரியத்தின் ஆலோசகருமான டான் ஸ்ரீ பழன் அவர்கள் நிகழ்ச்சியின் துவக்கத்தில் தலைமை   உரையாற்றி நிகழ்ச்சியை  தொடக்கி வைப்பார்.


அதே நேரத்தில் இலக்கியவாதியாகவும், அரசியல்வாதியாகவும் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்கள் நிறைவு விழாவில் சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைக்கவிருக்கிறார்.

இலக்கிய நிகழ்ச்சி என்பதால் வெறும் உரை மட்டுமல்ல பாடல் ஆடல் என நம் கலைகளோடு இணைந்த நிகழ்ச்சியாக இது அமையும். இந்த நிகழ்ச்சி இலவசமாகப் பொதுமக்களுக்காக, இலக்கிய ஆர்வலர்களுக்காக படைக்கப்படுகிறது. வருகின்ற அனைவருக்கும் காலை சிற்றுண்டியும் மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும். பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கைச் சூழலில் இளைப்பாற இது போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் அவசியம் தேவை. 

ஆக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் நாள், சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு, சிலாங்கூரில் உள்ள சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தில் இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுகொண்ட நிலையில் ,நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன் பதிவு செய்வது உங்கள் வருகையை உறுதி செய்யவேண்டும்.

நீங்கள் அழைக்க வேண்டிய எண் 
0163197329, 0176719258.

கோலாலம்பூர், மார்ச் 24-

இந்திய தொழில்முனைவோர் உயர்வுக்கு வழிவகுக்கும் புதிய கட்டமைப்புகளை உருவாக்கும் படலத்தில் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் தீவிரம் காட்டி வருகிறார்.

தமது அமைச்சின் கண்காணிப்பில் உள்ள அரசு சார்புடைய (ஜி.எல்.சி) நிதி நிறுவனங்கள்  வழி, இந்திய தொழில்முனைவோர்களின் மேம்பாட்டுக்குத் தேவையான நிதி வளங்களை இரட்டிப்பாக்கும் சாத்தியங்களை அவர் ஆராய்ந்து வருகிறார்.

தற்போது தெக்குன் நிதி நிறுவனத்தின் கீழ், இந்திய வணிகர்களுக்கு உதவுவதற்காக வெ.30 மில்லியன் கடனுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ‘ஸ்புமி (SPUMI) எனும் தனிப்பிரிவின் வழி, இந்திய  வணிகர்களுக்கு இந்த கடனுதவி பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இதன் வழி கிட்டத்தட்ட 1,600 இந்திய வணிகர்கள் பயன் அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு அரசு பட்ஜெட்டில், வெ.30 மில்லியன்  மட்டுமே ‘ஸ்புமி’-க்கு ஒதுக்கப்பட்ட போதிலும், தெக்குன் வெ.11.6 மில்லியன் உள்நிதியைப் பயன்படுத்தவுள்ளதால், இந்திய வணிகர்களுக்காக இப்போது இருக்கின்ற மொத்த ‘ஸ்புமி’ நிதி, வெ.41.6 மில்லியன் ஆகும் என அண்மையில் டத்தோ ரமணன் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஸ்புமி’ பிரிவின் வழி, இதுவரை 28,000க்கும் மேற்பட்ட இந்திய வணிகர்களுக்கு வெ.442.6 மில்லியன் கடனுதவி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள தகவலையும் அவர் மக்களவையில் தெரிவித்திருந்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நீரோடையிலிருந்து இந்தியர்கள் பின்தள்ளபபட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்ற டத்தோ ரமணன்,தாம் பொறுப்பு வகிக்கும் காலத்தில் இன்னும் அதிகமான இந்திய தொழில்முனைவர்களை கைதூக்கி விட வேண்டும் என கங்கணம் கட்டி வருகிறார்; அதற்கான உள்கட்டமைப்பு வேலைகளில் மும்முறம் காட்டி வருகிறார்.

தெக்குன் மட்டுமல்லாது, தமது அமைச்சின் கண்காணிப்பிலுள்ள பேங்க் ராக்யாட், எஸ்.எம்.இ. கார்ப்பரேஷன், எஸ்.எம்.இ. பேங்க், அமனா இக்தியார் மலேசியா, கூட்டுறவு ஆணையம் போன்ற நிதி நிறுவனங்கள் வழி, இன்னும் அதிகமான இந்திய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், இன்னும் அதிகமான கடனுதவிகளை ஒதுக்கீடு செய்யவும் டத்தோ ரமணன் முயன்று வருகிறார்.

இதற்கிடையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் அறிமுகப்படுத்திய மடானி பொருளாதார கட்டமைப்பும், குறு - சிறு - நடுத்தர தொழில் துறையின் தரத்தை உயர்த்த தமது அமைச்சு கொண்டுள்ள இலக்கை எட்டுவதற்கு நிச்சயமாகக் கைகொடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘மடானி தொழில்முனைவோர், பொருளாதாரத்தை இயக்குதல்’ என்ற கருப்பொருளுடன் ‘KUSKOP 2024’  எனும் வியூக திட்டமிடல் ஆவணத்தை தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துறை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த வியூக திட்டமிடலைச் செயல்படுத்துவதன் வழி, மலேசியாவை 30ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உருமாற்றும் இலக்கை அடைய முடியும் என டத்தோ ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

5 வியூகங்களை உள்ளடக்கி, 22 உத்திகள், 205 திட்டங்களை கோடிட்டுக் காட்டும் இந்த ‘KUSKOP 2024’ திட்டமிடல் ஆவணத்தின் மூலம், கிட்டத்தட்ட 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டத்தோ ரமணனின் தீவிர முயற்சியினால், அணை திரண்டு வருகின்ற வாய்ப்புகளை எட்டிப் பிடித்து, வெற்றிப் படிகள் ஏறி இலக்கை அடைய இந்திய மக்கள் தயாராக வேண்டும்.

இலங்கை, மார்ச் 23-

 ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் , இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனை இன்று சந்தித்தார்.  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று அலரிமாளிகையில் இந்த சந்திப்பு நடைப்பெற்றது. 

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். 

டத்தோ ஸ்ரீ  சரவணன் மனிதவள அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையர் மலேசியாவில் பணிப்புறிவதற்காக  10 ஆயிரம் வேலைவாய்ப்பு வீசாவிற்கான ஒதுக்கீட்டுக்கு   அனுமதியை வழங்கியுள்ளார்.  அந்த முயற்சிக்காக 
இலங்கை பிரதமர்,   டத்தோ ஸ்ரீ சரவணனக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், இந்த நடவடிக்கைக்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களை தெரிவித்தார். 

தற்போது இந்த  ஒதுகீட்டினை இலங்கையை சேர்ந்த 1,853 இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

டத்தோ ஸ்ரீ சரவணன் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியில் இருந்து இலங்கையை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் சிறந்த நிர்வாகத்தின் வாயிலாக மிக விரைவாக இலங்கையை  அவர்கள் மீட்டெடுத்தனர். 

ஏனைய  நாடுகள் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் மீண்டெழ கையாண்ட அனுகுமுறைக்கு பாராட்டுக்களையும்  தெரிவித்தனர். 

அத்துடன் இலங்கைக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்க  மலேசிய அரசாங்கம் காத்திருப்பதாகவும் 
டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இலங்கை, மார்ச் 22-

இன்று மாலை இலங்கையில்  மட்டக்களப்பு  மாவட்ட , இஸ்லாமியர் அதிகமாக வாழும் காத்தன் குடி   பகுதியில்  5,000 இஸ்லாமியருடன் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் , சிறப்பு விருந்தினராக  தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா-வின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார்.

இலங்கை கிழக்கு மாகாணம் ஆளுநர்  செந்தில் தொண்டமான்  அழைப்பை ஏற்று டத்தோ ஸ்ரீ சரவணன் இன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இலங்கை வெளியுறவு  அமைச்சர் எம்.யு.எம்.  அலி சப்ரி கலந்து கொண்டு  சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ சரவணனுக்குச் சிறப்பு செய்தார்.

5,000 இஸ்லாமியர் மத்தியில்  உரையாற்றிய டத்தோ ஸ்ரீ சரவணன், அவர்களுடன் அமர்ந்து நோன்பு துறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தாப்பா, மார்ச் 20-

ஆரம்பப்பள்ளிக்கு செல்லும் மாணவர்களை தயார் படுத்துவதற்கு பாலர்பள்ளியில் இணைவது மிகவும் முக்கியம் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

அந்த வகையில் தாப்பா தமிழ்ப்பள்ளி மற்றும் கீர் ஜொஹாரி தமழ்ப்பள்ளிகளிலுள்ள பாலர்பள்ளி மாணவர்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாடத் திட்ட கையேடுகளை மஇகாவின் தேசிய துணைத் தலைவருமான அவர் எடுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி இன்று மாலை தாப்பா, மஇகா தொகுதி அலுவலகத்திலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பாலர்ப்பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர் உட்பட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.சரவணன், பாலர்பள்ளி கல்வியின் முக்கியதுவத்தை பற்றி பேசினார். கல்வி அமைச்சின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த பாடத் திட்ட கையேடுகள் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மார்ச் 18-

மித்ரா எனப்படும் இந்திய உருமாற்ற பிரிவில் மீண்டும் ஆய்வை மேற்கொள்வதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறினார்.

செடிக் என உருவாகிய இந்த பிரிவு தற்போது மித்ரா என பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்திய சமுதாயத்தின் உருமாற்றம் குறித்த ஆய்வு அப்பொழுதே செய்யப்பட்டு விட்டது. மேலும் இந்திய மேம்பாட்டு திட்ட வரைவை அமலுக்கு கொண்டு வந்தாளே போதும், இந்திய சமுதாயம் சார்ந்த எந்த ஆய்வினையும் செய்யத் தேவையில்லை என அவர் சொன்னார்.

கடந்த காலத்தில் மித்ராவின் மூலம் இந்திய சமுதாய குழந்தைகளுக்கு கல்வி,  அரசு சாரா இந்திய அமைப்புகளுக்கு மானியம் வழங்குதல், இளைஞர்களை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், பி40 மக்களுக்கான உதவிகள் என பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. தற்போது அவை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் தவனை முடிவடையும் நிலையில் இன்னுமும் மித்ராவில் ஆய்வை மேற்கொண்டிருந்தால் மக்களுக்கான உதவிகள் எப்பொழுதுதான் வழங்கப்படும் என அவர் கேள்வி எழுப்பினார்.

தற்போது நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. வரிச் சுமை, நாணய வீழ்ச்சி என பலவற்றால்,  குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தினர் பல இன்னல்களுக்குள்ளாகி உள்ளனர். 

இந்நிலையில் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட மானியம் வழங்குவது இழுப்பறியாக இருந்தால் அது மக்களுக்கு இன்னும் கூடுதல் இன்னலை விளைவிக்கும் என அவர் சொன்னார்.

ஆகையால் மித்ராவில் ஆய்வை மேற்கொள்வதை நிறுத்தி விட்டு செயல் திட்டத்தில் இறங்குங்கள். பிரதமர் துறையின் கீழ் மித்ரா இருந்தபோது அதன் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இந்த பிரிவு ஆரம்பமானதே பிரதமர் துறையில்தான். 

ஆகையால் மித்ரா பிரதமர் துறையின் கீழ் மீண்டும் செயல்பட வேண்டும். மித்ரா பிரதமரின் நேரடி பார்வையில் செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு சேர வேண்டியவை முறையாக வந்து சேரும் என டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

படம்: காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர்,மார்ச் 18-

பிள்ளைகளுக்கு தேர்வு இல்லை என்றால்  இடைநிலைப் பள்ளிகளில் புகுமுக வகுப்பு ஏன் உள்ளது.

தேர்வு உள்ளதா இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்து பெற்றோர் விடுபட வேண்டும் என ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா கூறினார்.

ஶ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கியது முதல் 6ஆம் ஆண்டு மாணவர்கள்தான் இங்கு அதிகம் வந்து கல்வி பயில்கின்றனர்.

ஆனால், இம்முறை 6ஆம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது.

இதற்கு காரணம் யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதாதது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. புகுமுக வகுப்பை தாண்டி மாணவர்கள் எப்படி நேரடியாக படிவம் 1க்கு செல்கிறார்கள் என்பதை பெற்றோர் சிந்திக்க வேண்டும்.

அதற்கு பிள்ளைகளை தயார் செய்வது குறித்தும் பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமென அவர் சொன்னார்.

அதற்கு தேர்வு உள்ளதா இல்லையா என்பது குறித்து சிந்திகாமல் பிள்ளைகளை எப்படி அனைத்து சவால்களை எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய சமூகம் எந்த வகையில் பிரிந்து இருந்தாலும் கல்வி என்று வந்தால் அனைவரும் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும்.

இது தான் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இலக்கு என்று சுரேந்திரன் கூறினார்.

கோலாலம்பூர்,மார்ச் 18-

கேகே மார்ட் கடையில் அல்லாஹ் என்று எழுத்தப்பட்ட காலுறைகள் வைக்கப்பட்ட விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேவை மசீச வலியுறுத்தியுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து கேகே மார்ட் கடைகளையும் புறக்கணிக்க வேண்டும் என அக்மால் கூறுவதில் நியாயமில்லை என மசீச பொதுச் செயலாளர் சோங் சின் ஹுன் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

சர்ச்சையான காலுறை விவகாரத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்டுவிட்டது. ஆனால் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளையும் புறக்கணிக்கச் சொல்வது வேடிக்கையாக உள்ளது.  இதனால் நம் நாட்டிற்குதான் பாதிப்பு என்பதை அக்மால் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர்,மார்ச் 18-

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர்களால் ஏற்பட்ட மொத்த இழப்பு வெ.1 பில்லியனுக்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) பேரழிவின் விளைவாக ஏற்பட்ட சேதத்தின் மதிப்பை அளவிட்டு வருகிறது. பொதுப்பணித் துறையால் சீரமைக்கப்படும் மத்திய சாலைகள் மற்றும் KKDW ஆல் கிராமப்புற சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளவை இதில் அடங்கும்.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட வீடுகளை சரிசெய்வதற்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கும் NADMA ஆல் மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள உதவித் தொகையும் இதில் அடங்கும் என அவர் சொன்னார்.

இருந்தபோதும், கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது சில மாநிலங்களில் உதவிகள் சீராகவும் சமமாகவும் வழங்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசியல் காரணமாக உதவி பெற வேண்டிய நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படாது வேதனை அளிப்பதாகவும் இதனை நாம் தவிர்க்க வேண்டும் என அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மார்ச் 18-

இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் நிலைமை அறிந்து பேசக் கூடியவர்கள் யார் என்றால், நாங்கள் வாக்களித்து இன்று எம்பிகளாக உள்ள இந்திய தலைவர்கள்தான்.  அவர்களுக்கு புரியாதது ஆலோசனை நிறுவனத்திற்கு புரிந்துவிடுமா?

மித்ராவை அரசாங்கத்திலுள்ள இந்திய தலைவர் குழு அமைத்து அதனை வழிநடத்த வேண்டும். அதை விடுத்து ஆலோசனை நிறுவனம் அல்ல என இன்று நாடாளுமன்றத்தின் வெளியே கூடிய அரசு சாரா இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மித்ரா எனப்படும் இந்திய உருமாற்ற பிரிவு ஒரு துறையிலிருந்து மற்றொரு பிரிவுக்கு பந்தாடப்படுவது வழக்கமாகிவிட்டது. தற்போது மித்ரா ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் உள்ளது. அதன் செயல்பாடுகள் குறித்து அந்த துறையின் அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் கேட்டபோது அதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும் அதன் செயல்பாடுகள் என்னவென்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமரால் ஒற்றுமைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நபர் இப்படி கூறுவதில் நியாயமில்லை. இந்தியர்கள் உறுமாற்றத்தில் அக்கரை இல்லாத அவரின் அமைச்சின் கீழ் மித்ரா செயல்படக் கூடாது. மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்பட வேண்டும் என அரசு சாரா இயக்கத்தின் பிரதிநிதி தயாளன் தெரிவித்தார்.

ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் இருந்து மித்ரா வெளியாக்கப்பட்டு பிரதமர் துறையின் கீழ் செயல்பட வேண்டுமென அரசு சாரா இந்திய அமைப்புகள் கோரி மகஜர் ஒன்றை பிரதமரின் அதிகாரி சண்முகத்திடம் வழங்கினர்.

சம்பந்தப்பட்ட ஆலோசனை நிறுவனம் இதற்கு முன்னர் இந்தியர்களுக்காக மை ஹெட்டோம், மை துக்கார் ஆகிய இரு திட்டங்களை முன்னெடுத்து தோல்விக் கண்டது. மீண்டும் அதே ஆலோசனை நிறுவனம் எதற்கு இந்தியர் உறுமாற்ற பிரிவின் ஆலோசனை நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என தயாளன் தெரிவித்தார்.

மேலும் மித்ரா நடவடிக்கை குழுவின் தலைவராக பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனை பிரதமர் நியமித்தார். ஆனால் ஒற்றுமை துறை அமைச்சில் அந்த நியமனம் இன்னுமும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதாக தயாளன் தெரிவித்தார்.

மித்ரா தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. மித்ராவின் செயல்பாட்டை பற்றி  விளக்கம் கேட்டதற்கு இந்திய எம்பிகள் எங்களின் ஆலோசனை நிறுவனத்துடனான சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒற்றுமைத் துறை அமைச்சர் கூறியது ஒட்டுமொத்த இந்திய சமுயாத்தையும் பாதித்துள்ளது என டிரா மலேசியா அமைப்பின் தலைவர் சரவணன் தெரிவித்தார்.

இப்படி இந்தியர்களின் தேவைகளை புரிந்து கொள்ளாத அமைச்சரின் கீழ் மித்ரா செயல்பட்டால் அதனால் எந்த நன்மையும் நடக்க போவதில்லை. ஆகையால் மித்ரா பிரதமர் துறையின் கீழ் கொண்டுச் செல்லப்பட வேண்டுமென நாடாளுமன்ற வெளியில் கூடியிருந்தவர்கள் ஒருமித்த குரலுடன் தெரிவித்தனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

படம்: காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர் -மார்ச் 17 

மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தை பொறுத்தவரை, ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ எம் சரவணன்  அமைச்சரவையில் இருந்த காலம் ஒரு பொன்னான காலம் என இன்று  பி.ஜே, சிவிக் செண்டரில்    எம்.எம்.ஒய்.சி  ஏற்பாட்டில் நடைப்பெற்ற புனித நோன்பு  துறப்பு  நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் ஆலோசகர்  முகமாட் அஷ்ரீன்  இவ்வாறு தெரித்தார்.

டத்தோ ஸ்ரீ சரவணன் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சமுதாயத்தைச் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டன.
அதனால் தான் ,  டத்தோ ஸ்ரீ சரவணன் அமைச்சராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ,  அவர் மீது மதிப்பும் பாசமும் வைத்து அவரைத்  இன்று தலைமை தாங்க அழைத்தோம் என அஷ்ரீன்  தெரிவித்தார்.

அவர் எங்கள் அமைப்புக்குக் கொடுத்த நிதியை கொண்டு கடந்த  2 ஆண்டுகள் சமுதாயத்திற்கு பல நல்ல காரியங்களைச் செய்தோம்.
எங்களைப் பொறுத்தவரை டத்தோ ஸ்ரீ சரவணன்  மீண்டும் அமைச்சரவையில் இருக்கவேண்டும். அவரின் தலைமை சமுதாயத்திற்கு தேவை என எம்.எம்.ஒய்.சி வலியுறுத்துவதாக அஷ்ரின் தனது உரையில் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் தெரிவித்தார்.


ஜொகூர் பாரு, மார்ச் 17-
விவசாயத் துறையில் அதிலும் குறிப்பாக காய்கறி பயிரிடுதல் மற்றும் விற்பனை துறையில் அதிகமான வெளிநாட்டவர்கள் ஈடுபட்டு வருவதால் சுமார் 2,000 உள்நாட்டு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

காய்கறி பயிரிடுவது முதல் அதனை சந்தைப்படுத்துவது, விற்பனை செய்வது வரை அனைத்து பிரிவுகளிலும் அந்நிய நாட்டவர்கள் ஈடுபட தொடங்கி விட்டனர். சட்டத்திற்கு புறம்பான தோட்டங்களில் அவர்கள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். சுமார் 1,000 ஹேக்கரில் அவர்கள் விவசாயத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சுமார் 5 ஆண்டுகளாக காய்கறி விவசாயத் துறையில் அந்நிய நாட்டவர்கள் அதிகமாக ஈடுபட தொடங்கினர். நாடு முழுவதிலுள்ள தங்களின் உறுப்பினர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இந்த தகவலை திரட்டியதாக மலேசிய காய்கறி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் லிம் செர் குவி தெரிவித்தார்.

இந்தோனேசியர்கள், வங்காளதேசிகள், ரொஹிங்யா பிரஜைகள் ஆகியோர் இந்த காய்கறி உற்பத்தி முதல் விற்பனை வரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் நாட்டிலுள்ள பெரிய காய்கறி விற்பனை சந்தைகளிலும் அவர்கள் காய்கறிகளை சுயமாக விற்பனை செய்ய தொடங்கி விட்டனர்.

அதிகமாக காய்கறிகளை இவர்கள் பயிரிடுவதால் உள்நாட்டு விவசாயிகள் அதிகமாக பதிக்கப்படுகின்றனர். காய்கறிகளை பயிரிடுவதில் தொடங்கி தற்போது அதனை சந்தைப்படுத்துதல், காய்கறிகளை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து சேவை, நாடு முழுவதிலுள்ள பாசார் போரோங், சந்தைகளுக்கு காய்கறிகளை அனுப்பும் அனைத்து பிரிவுகளிலும் அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கம் கூடிவிட்டது.

அந்நிய நாட்டவர்கள் தீபகற்ப மலேசியாவில் அதிகமாக காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிலாங்கூர், ஜொகூர், மலாக்கா, பினாங்கு, பகாங், அதிலும் கேமரன் மலையில் அவர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது.

இவர்களின் தோட்டங்கள் அதிகமாக உட்புற பகுதிகளில் உள்ளன. சாதாரண மக்கள் உட்பட விவசாயத்துறை அதிகாரிகளும் கண்டுபிடிக்க அளவிற்கு உட்புற பகுதியில் உள்ளன. ஆகையால் இவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென லிம் செர் குவி வலியுறுத்தினார்.

 

கோலாலம்பூர், மார்ச் 17-
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 5.02 மில்லியன் மலேசியர்கள் PADU-வில் பதிவு செய்துள்ளனர். மார்ச் 31 காலக்கெடுவை முன்னிட்டு சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் கூடுதலாக கவுன்டர்கள் திறக்கப்படுகின்றன.

"மார்ச் 15, இரவு 11.59 மணிக்கு, தங்கள் பதிவுகளை புதுப்பித்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 5.02 மில்லியன்" என்று PADUவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதாவது 16.7% மலேசியர்கள் மற்றும் PR வைத்திருப்பவர்கள் PADU-வில் தங்கள் தகவல்களைப் பதிவு செய்து புதுப்பித்துள்ளனர்.

30.08 மில்லியனில் குழந்தைகள் உட்பட அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் தகவலைப் புதுப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் பதிவு செய்ய வேண்டிய இளைஞர்களின் மொத்த எண்ணிக்கை 21.97 மில்லியன் ஆகும்.

சிலாங்கூர் 760,000 பதிவுகளுடன் அதிக எண்ணிக்கையிலான தனிநபர்களைப் பதிவுசெய்துள்ளது, அதைத் தொடர்ந்து சரவாக் (630,000) மற்றும் ஜொகூர் (500,000) உள்ளன.


பாசிர் கூடாங், மார்ச் 17-
தன் ஒன்றரை வயது குழந்தையை கத்தியால் அருத்து கொலை செய்து விட்டு அந்த காட்சியை புகைப்படமாக எடுத்து தன் கணவரின் கைப்பேசிக்கு அனுப்பியுள்ள மாதின் கொடூரச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட 32 வயது மாதை போலீசார் கைது செய்ததுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஜொகூர் மாநில போலீஸ் படைத் தலைவர் ஆணையர் எம்.குமார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், மார்ச் 16-

நாட்டிலுள்ள அனைத்து படைப்பாளர்களும் சக படைப்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும். படைப்பாளர்கள் மத்தியில் ஆதரவு வழங்கிக்கொண்டால் மட்டுமே அந்த படைப்புகள் வாழும் என மஇகாவின் தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சர்வணன் தெரிவித்தார்.

இன்று தலைநகரில் மஇகா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் வாழ்த்து காணொளி அறிமுக விழா மற்றும் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவை தலைமையேற்று பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து நாட்டில் பல உள்ளூர் படைப்புகள் வெளியாகி வருகிறது. அது எழுத்துபூர்வமாகவும்  திரைப்படமாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அந்த முயற்ச்சிக்கு சக கலைஞர்கள் முதலில் ஆதரவை வழங்க முன் வர வேண்டும். குறிப்பாக ஒரு எழுத்தாளன் தனது கடின முயற்ச்சியில் ஒரு புத்தகத்தை   வெளியிடும்போது அதற்கு அனைத்து எழுத்தாளர்களும் ஆதரவு வழங்கி அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இதை நாம் கட்டாயமாக பின் பற்றினால் மட்டுமே படைப்பாளிகளையும் அவர்கள் வெளியிடும் படைப்புகளையும் நாம் காப்பாற்ற முடியும். அதே போல்தான் நம் நாட்டில் வெளியிடப்படும் திரைப்படங்களும், அதற்கும் சக கலைஞர்கள் அத்திரைப்படங்களை திரையரங்குகளில் கண்டு அவர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் தற்பொழுது நமது மொழி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு வழங்குவோர் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அவ்வகையில் மஇகா மற்றும் தேசிய நில நிதி கூட்டுறவு கழகம் இது போன்ற மொழி சார்ந்த நிகழ்வுகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. 

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் ஏற்பாட்டாளர் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஞான சைமன், மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் அயலக தலைவர் பெ.இராஜெந்திரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

ஹம்பேர்க், மார்ச் 16-

நவீன ரோபோட்டிக் நிறுவனம் ஒன்று MH370 விமானத்தை தேடும் பணியை தொடரவுள்ளதாக ஜெர்மன் ஊடகம் ஒன்றும் வெளியிட்ட செய்திக்கு, விமானத்தை தேடுதல் நடவடிக்கை குறித்து அதிக நம்பிக்கை வைத்துவிட வேண்டாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி 239 பயணிகளை கோலாலம்பூரிலிருந்து பெர்ஜிங்கிற்கு ஏற்றிச் சென்ற MH370 விமானம் செல்லும் வழியில் காணாமல்போனது. இந்த விமானத்தில் சுமார் 150 சீன பிரஜைகளும் 50 மலேசியர்களும் பயணித்தனர். இந்த விமானம் காணாமல் போன சம்பவம் உலகத்தையே உலுக்கியது.

இச்சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆகிய நிலையில் புதிய நிறுவனம் ஒன்று அந்த விமானத்தை தேடும் பணியை தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேடும் நடவடிக்கைக்கான முடிவு இன்னும் இரு வாரங்களில் எடுக்கப்படும். ஆகையால் விமானத்துடன் காணமல்போனவரிகளின் குடும்பத்தினர் இந்த தேடல் நடவடிக்கை மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம் என அவர் சொன்னார்.

மக்களிடம் பொய்யான் வாக்குறுதியை நான் அளிக்க விருமபவில்லை. இரும்தபோதும் காணாமல் போனவர்களை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் என்ற முயற்சியை அரசு கைவிடவில்லை என்பது மட்டும் உறுதி என ஜெர்மனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் அங்குள்ள ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தேடல் நடவடிக்கைக்கு அதிகமான பணம் செலுத்தப்பட்டாலும் கூட  தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், மார்ச் 16-

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள ஆறுகளில் இப்போது டோம்போட் எனும் பண்டாராயா மீன்களின் ஆதிக்கம் அதிகரிப்பது ஒரு முக்கியமான அச்சுறுத்தலாகக் கருதப்பட வேண்டும், ஏனெனில் இது உள்ளூர் மீன்களின் அழிவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் வடிகால் சுற்றுச்சூழல் அமைப்பையும் சேதப்படுத்துகிறது.

பெரும்பாலான ஆறுகள் புலம்பெயர்ந்த மீன் இனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மீன்களைக் கண்டுபிடிப்பது கடினமாகி வருகிறது. இதனால் உள்ளூர் மீன்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என நகர மீன்பிடி சமூகத்தினர் புகார் செய்துள்ளனர்.

குறிப்பாக தலைநகரில் உள்ள பல ஆறுகளில் இந்த Pterygoplichthys எனப்படும் மீன் இனம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மீன்கள் மற்ற உள்ளூர் இன மீன்களின் முட்டைகளை சாப்பிடுவதன் விளைவால் மற்ற மீன்களின் இனவிருத்தி பாதிக்கப்படுகிறது என நகர மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்த முகமட்  ஹஜிக் என்பவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தனது தரப்பு வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டதில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரைச் சுற்றியுள்ள ஆறுகளில் இருந்து 3,200 க்கும் மேற்பட்ட நகர மீன்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன என அவர் சொன்னார்.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில், நிலைமை மிகவும் சிக்கலாகதாக உள்ளது, இதற்கும் இங்கு குடியிருக்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம். 

தலைநகரில் வசிப்பவர்கள், பலருக்கு அலகு மீன்களைப் பாதுகாப்பதில் ஒரு பொழுதுபோக்கு உள்ளது, குறிப்பாக மீன் தொட்டிகளை சுத்தமாக பாதுகாப்பதில் புலம்பெயர்ந்த மீன்களில் ஒன்று இந்த பண்டாராயா மீன் ஆகும். 

 ஏனெனில் அது மீன் வளர்ப்பு தொட்டிகளில்  இருக்கும் கழிவுகள் மற்றும் மீன் உணவின் எச்சங்களைச் சாப்பிட்டு தொட்டிகளை சுத்தம் செய்துவிடும். ஆகவே அதிகமானோர் மீன் தொட்டிகளில் இந்த மீனை வளர்த்து வருகின்றனர். மீன் பெரிதாக ஆகியதும் அதனை ஆற்றில் அவர்கள் விடுவதால்தான் இந்த மீன் தலைநகரில் உள்ள ஆற்றில் பெறுகி வருவதாக அவர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

செத்தியு, மார்ச் 16-

நேற்று இரவு கோல திரெங்கானு கம்போங் ராஜா வழியாக போர்ஷே காரில் சென்றுக்கொண்டிருந்த நிருவன உரிமையாளர் ஒருவர் அங்கு சாலையை கடக்க முயன்ற யானையை மோதி விபத்தில் சிக்கினார்.

இச்சம்பவம் இரவு 10 மணி அளவில் ஜாலான் ரூ-வில் இருந்து லெம்பா பீடோங் செல்லும் சாலையில் நிகழ்ந்துள்ளது. யானையை மோதியதில் போர்ஷே ரக கார் சேதமடைந்தது, ஆனால் அந்த காரை ஓட்டிய நபர் அதிர்ஷ்டவசமாக எவ்வித கடுமையான காயங்களும் ஏற்படாமல் உயிர் தப்பியதாக  செத்தியு மாவட்ட போலீஸ் தலைவர் அப்பண்டி உசேன் தெரிவித்தார்.

இரவு நேரத்தில் சாலையில் அந்த 42 வயதுடைய ஆடவர் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது சாலையில் யானை இருப்பதை கண்டு அதிர்ச்சியில் காரின் கட்டுப்பாட்டை இழந்து யானையை மோதியதாக அவர் கூறினார்.

இந்த விபத்தில் காயமடைந்த யானை சில மணி நேரங்களுக்கு பிறகு சாலையில் இருந்து அருகில் உள்ள காட்டிற்குள் ஓடியதாக போலீசார் தெரிவித்தனர்.

கோலாலம்பூர், மார்ச் 14-

மலேசியத் திரைப்படங்கள் தற்போது கதை, திரைக்கதை, வசனம், தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டு வருவதாக மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

அதேபோல் வசூல் ரீதியாகவும் மலேசியத் திரைப்படத்தின் சாதனை வரவேண்டும். அந்த வகையில்  ஒரு கதை சொல்லுங்க சார் ,  திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சி என அவர் சொன்னார்.

நல்ல நல்ல திரைப்படங்களை மலேசிய கலைஞர்கள் கொடுக்க வேண்டும். அவர்களின் படைப்புக்கு மலேசிய மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,மார்ச் 14-

கோழியின் விலை 30 சென் அதிகரித்தாலும் அதன் உச்சவரம்பு விலையான 11.40 வெள்ளியைத் தாண்டவில்லை என  விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமாட்  சாபு தெரிவித்தார். 

நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் கோழியின் விலை உயர்வால் மக்கள் சிரமத்தை எதிர்கொள்ளாமல்  இருக்க  சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன்  தனது  தரப்பு தொடர்ந்து கண்காணிக்கும் என்றார் அவர்.

கோழியின் விலை, முன்பு நிர்ணயித்த விலையுடன் ஒப்பிடும்போது  நிலையாக உள்ளது. 

மைடின் பேரங்காடியில் கோழி 9 வெள்ளிக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறது. சில சமயங்களில் 7.90, 8.00 வெள்ளிகளில் கோழி விற்பனை செய்யப்படுகிறது என மட் சாபு தெரிவித்தார்.

கடந்தகாலங்களை விட  அரசு நிர்ணயம் செய்த விலையை விட  இது அதிகமாக இல்லை என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ரவூப், மார்ச் 14-

சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கல்வி ஆண்டில்  பினாங்கு, காராக் ஆகிய பகுதிகளிலிருந்து 9 மாணவ்ரகள் மாற்றலாகி வந்திருப்பதன் வழி, இப்பள்ளியின் மாணவர் பதிவில் முன்னேற்றம் காணப்படுகிறது.

30 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் பன்மை வகுப்புகள் உருவாகும் சூழல் இருந்து வருகின்ற நிலையில், கணிசமான மாணவர் சேர்க்கை அதிகரிப்பினால் சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி அந்த அபாயக் கட்டத்தைக் கடந்துள்ளது.

பினாங்கு மாநிலத்திலிருந்து நிறுவன மேலாளராக பதவி உயர்வு பெற்று ரவூப் மாவட்டத்திற்கு மாற்றலாகி வந்திருக்கும் காளிதாஸ், தனது 4 பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்திருக்கிறார். 

முன்னதாக, தனது இரு பிள்ளைகளை தேசியப் பள்ளியில் சேர்க்கலாம் என முடிவு செய்திருந்த அவர், பள்ளியின் தலைமையாசிரியர் இல.கருணாநிதி வழங்கிய மிகத் தெளிவான ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, பின்னர் இரு பிள்ளைகளையும் தனது மற்ற இரு பிள்ளைகளோடு சேர்த்து இப்பள்ளியில் பதிவு செய்து விட்டார்.

அவரைத் தொடர்ந்து, சமூகச் சேவையாளரும் தொழில்முனைவருமான ஐ.சண்முகநாதன், தனது 4 பிள்ளைகளை காராக் தமிழ்ப்பள்ளியிலிருந்து மாற்றி, தான் கல்வி பயின்ற அதே சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பதிவு செய்திருக்கிறார். 

தமிழ்ப்பள்ளி மீது, அதிலும், குறிப்பாக தனக்கு கல்வி அறிவு புகட்டிய அதே தோட்டத் தமிழ்ப்பள்ளியில் என் பிள்ளைக்ளையும் சேர்த்ததில் மன நிறைவு அடைவதாக ஐ.சண்முகநாதன் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ரவூப் பட்டணத்திலுள்ள சீனப் பள்ளியிலிருந்தும் ஒரு மாணவர் மாற்றலாகி சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்திருக்கிறார். பாலர்பள்ளியிலும் கூடுதலாக ஒரு மாணவர் இணைந்திருக்கிறார்.

மாணவர்களின் நலன் மீது அதீத அக்கறை கொண்டுள்ள ஆசிரியர் பெருந்தகையினரின் பெருமுயற்சியால், இப்பள்ளி மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குகின்றனர்; பல போட்டிகளிலும் பங்கேற்று முதன்மை பரிசுகளை வென்றுள்ளனர். மேலும், மிகச் சிறந்த தணிக்கைக்குமான விருதுகளையும் இப்பள்ளி பல முறை வென்றுள்ளது.

கல்வி புறப்பாட நடவடிக்கைகளுக்கு அப்பாற்றப்பட்டு, மனிதநேய ஒருமைப்பாட்டுரிமையை மாணவர்களிடத்தில் வளர்க்கும் பொருட்டு, திருஅருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளின் வாழ்வியல் நெறிமுறைகளும் இப்பள்ளியில் வாரந்தோறும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 

பள்ளி வளர்ச்சிக்கும் மாணவர் மேன்மைக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், சுற்றுவட்டார ஆலயங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு சாரா அமைப்பின் தலைவர்கள், சமூகச் சேவையாளர்கள், வணிகர்கள் என பல நல்லுள்ளங்கள் இப்பள்ளி மீது அக்கறை கொண்டிருப்பதால் தங்களால் இன்னும் உற்சாக பணியாற்ற முடிகிறது என தலைமையாசிரியர் இல.கருணாநிதி தெரிவித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 14-

டிரா மலேசியா தொடர்ந்து கூறி வருவதை போலவே குடியுரிமை சமூக அமைப்புகள், வழக்கறிஞர் மன்றம், மலேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியுரிமை சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் அமலாக்ககூடாது என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். 

ஆயினும், எதையும் கருத்தில் கொள்ளாமல் இம்மாதமே இச்சட்டத் திருத்தத்தை நாடாளுமன்ற பரிந்துரைக்கு அனுப்புவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல்தான் என்கிறார் டிரா மலேசியாவின் தேசிய தலைவர் சரவணன் சின்னப்பன்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சட்ட மாற்றங்களில் மலேசிய பெண் வெளிநாட்டில் வசிக்கும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு தாயின் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். அது தவிர மற்ற சட்ட மாற்றங்களை தள்ளி வைக்க வேண்டும். 

ஏற்கனவே பல தலைமுறைகளாக வேரோடியிருக்கும் குடியுரிமை பிரச்சனைகளுக்கு எந்த தீர்வுமில்லை. இந்த புதிய சட்ட திருத்தம் இந்நிலையை மேல் மோசமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

மேலும், அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு, பொது மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கிறது. 

கடந்த மார்ச் 7-ஆம் தேதி உள்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் 5,187 15(A) விண்ணப்பங்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். அவரே 15 மார்ச் அன்று வெளியிட்ட அறிக்கையில் 35,000 15(A) விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் அதில் 98% ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியுரிமை வழங்கப்பட்டதாவும் கூறியுள்ளார். 

இதில் எந்த புள்ளி விவரம் உண்மை என்ற குழப்பம் ஒருபுறமிருக்க. டிரா மலேசியா மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணபங்களின் முடிவுகளை பதிவு இலாவின் இணையதளத்தில் மூலமும், பதிவு இலாகா அலுவலகங்களில் பரிசிதித்து பார்க்கும் போது; அவ்விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. 

ஏன் இந்த விவரங்கள் பதிவு இலாகா தளத்திலும் அலுவலகங்களிலும் இன்னும் சீரமைக்கப்படவில்லை என சரவணன் கேள்வி எழுப்பினார். 

15(A) என்பது மலேசிய ஆணுக்கு வெளிநாட்டு பெண்களுடன் திருமணமாகாமல் பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை இல்லாமல் மலேசியர்களால் தத்தெடுக்கப்படும் குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் சட்டபிரிவு. இப்பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 21 வயதிற்கும் குறைந்தவர்களே.

உள்துறையமைச்சரின் கூற்றுப்படி நிராகரிக்கப்பட்ட 2 % விண்ணப்பதாரர்கள் மேற்கொண்டு எந்த சட்டபிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம்; அவர்களுடைய எதிர்கால நிலை என்ன என்பதையும் உள்துறை அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் சரவணன்.

இந்த குடியுரிமை சட்ட மாற்ற நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வினையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஏனெனில் இது ஒட்டு மொத்த மலேசிய சமுதாயத்தையும் பாதிக்க கூடிய மாற்றம் என்றார் அவர்.

கோலாலம்பூர்,மார்ச் 14-

தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபார் சாடிக்குடன் தன்னை தொடர்புபடுத்தி  தனது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திய தரப்பினருக்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மாலிக் ஸ்டீரிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அப்துல் மாலிக்  தேசிகர் தெரிவித்தார்.

ஜாஃபார் சாடிக்கிற்குத் தான்  முதலாளியாக இருந்ததாகவும் மலேசியாவில் போதைப் பொருள் கடத்தல்  நடவடிக்கைகளுக்குப்  பின்னணியில்   இருந்ததாகவும் தமிழ்நாட்டு ஊடகம்  ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவற்றில் உண்மை இல்லை. இத்தகவல்கள்  தனது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகமாலிக் காணொளி ஒன்றின் வழி   ஊடகங்களுக்கு  விளக்கம் அளித்தார்.

“எனக்கும் ஜாஃபார் சாடிக்கிற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. நான் அவரைச் சந்தித்ததோ அல்லது அவருடன் பேசியதோ கிடையாது. நான் ஒரு வர்த்தகர். குறிப்பாக திரைப்பட துறை சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறேன். எனது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதற்காக சில தரப்பினர்  மேற்கொண்ட நடவடிக்கையே இது ” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பில் தலைநகர் , டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு தான் புகார் செய்திருப்பதாகவும்  இப்புகார் அறிக்கையை இந்திய தூதரகத்திடம் சமர்ப்பித்திருப்பதாகவும் மாலிக் குறிப்பிட்டார்.

இந்தப் புகாரை போலீசார்  கடுமையாகக் கருதுவதோடு  இதன் மீது விரைவில் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இவர்  கேட்டுக் கொண்டார்.

தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்ட இந்தியா மற்றும் மலேசிய  ஊடகங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி   இந்தியா மற்றும் இங்குள்ள  தனது வழக்கறிஞர்களைத் தான் பணித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

அதே வேளையில், மலேசியாவில் கொள்ளை மற்றும் போதைப் பொருள் கும்பலின் செயல்  பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்துவதாக   காணொளி  வழி ஒருவர் வெளியிட்ட தகவல்  மீது தான் அதிருப்தி கொள்வதாகவும்  இது நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும்  இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  மாலிக் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், மார்ச்.14-

பங்குனி உத்திர விழாவிற்கு பிரசித்திப்பெற்ற மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் 93 ஆவது பங்குனி உத்திர விழா இவ்வாண்டு மிக கோலாகலமாக நடைபெறும் என ஆலய தலைவர் டத்தோ க. தமிழ்செல்வம் கூறினார்.

இவ்வாண்டு பங்குனி உத்திர விழாவில் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. 

நாட்டில் புகழ்பெற்ற ஆலயங்களில் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விழா பெரிய அளவில் நடத்தப்படவில்லை.

குறிப்பாக கடந்தாண்டு ஆலயத்தில் திருப்பணிகள் நடந்தது. ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

தற்போது 93ஆவது பங்குனி உத்திர விழா  ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. அவ்வகையில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

இதன் உச்சக்கட்டமாக வரும் மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை பங்குனி உத்திர விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பால்குடம் ஏந்தியும் காவடிகள் ஏந்தியும் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு கருதி ஆலய நிர்வாகம் பல முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளுக்காக அமர்த்தப்படுவார்கள்.

இதைத் தவிர்த்து இந்த விழாவை முன்னிட்டு ஆலய சுற்றுவட்டாரத்தில் தற்காலிக கடைகளும் அமைக்கப்படவுள்ளது.

இவ்வாண்டு 12 குழுக்களாக 1,500 பேர் பத்துமலையில் இருந்து பாத யாத்திரையாக மாரானுக்கு வரவுள்ளனர். அப்படி வருபவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் மார்ச் 24ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஸ்ரீ கங்கை இசைக் குழுவின் குமார் தலைமையில் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இதைத் தவிர்த்து இந்த விழாவில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங், சபாய் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆகவே பக்தர்கள் திரளாக வந்து இந்த விழாவில் கலந்து மாரான் மரத்தாண்டவரின் அருளை பெற்று செல்லுமாறு டத்தோ தமிழ்ச்செல்வம் கேட்டு கொண்டார்.

பங்குனி உத்திர விழா குறித்து மேல் தகவல் பெறுவதற்கு பக்தர்கள் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத்தை தொடர்புக்கொண்டோ அல்லது அதன் முகநூல் வாயிலாக விவரம் பெறலாம்.

கோலாலம்பூர் மார்ச்- 14

நாட்டில் வயது முதிர்ந்த மக்களை  பாதுகாக்க அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன அதற்காக அரசாங்கம் ஆய்வு  செய்ய வேண்டும் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம். சரவணன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

வரும் 2030 ஆண்டில் நாட்டில் அதிகமான வயது முதிர்ந்த மக்கள் வாழும் நாடாக மலேசியா விளங்கும். அந்த நேரத்தில் இவரை பாதுகாக்க அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளதா ? அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு  ஆழமான ஆய்வு தேவை என டத்தோ ஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டர்.

தற்போது தொழிலாளர்களாக இருக்கும் அவர்கள் வயது முதிர்ந்த பின் அவர்களுக்கென ஒரு  பாதுகாக்கப்பட வேண்டும்.

இதை இப்போதே ஆய்வு செய்வது வயதி முதியவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் என டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 13-

பெரிக்காத்தான் நேஷனலுள்ள (PN) உயரிய அந்தஸ்து கொண்ட இன்னும் சில தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகி பிகேஆரில் வந்து இணைவார்கள் என பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் சைப்புடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

நாட்டு அரசியலில் பெயர் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பிகேஆரில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். 

பிகேஆரில் யாரையும் வற்புறுத்தி அல்லது அச்சுறுத்தி உறுப்பினர்களாக இணைப்பது போன்ற எந்த கூறுகளையும் பயன்படுத்துவதில்லை. மாறாக, கட்சி உறுப்பினர் என்பது ஒருவரின் சொந்த விருப்பமாக இருந்தால் மிகவும் மதிப்புமிக்கது என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர், மார்ச் 13-

நோன்பு மாதத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கழிப்பறையில் உணவு உண்ட சம்பவத்தை பாஸ் மறந்துவிடக் கூடாது என ஜசெகவின் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிட்ஸான் ஜோஹன் நினைவுறுத்தியுள்ளார்.

நோன்பு மாதத்தில் பள்ளிகளில் சிற்றுண்டிச்சாலைகள் திறந்திருக்க வேண்டுமென கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் அறிவித்ததை தொடர்ந்து பாஸ் கட்சியை சேர்ந்த அகமட் யாஹயா அதனை குறைக்கூறியுள்ளார்.

நோன்பு இல்லாத மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி பணியாளர்களும் உணவு உண்பதை பற்றி அவருக்கு அக்கரை இல்லை என்பது போல் அவரின் கருத்து உள்ளது. கல்வி அமைச்சு ஓர் அறிவிப்பை செய்வதற்கு முன்பு பல கோணங்களில் ஆய்வு செய்துதான் அதனை வெளியிடும்.

கடந்த காலத்தை போல முஸ்லிம் அல்லாத மாணவர்கள் தகாத இடங்களில் உணவு உண்ணும் சம்பவம் நிகழ்ந்து விடக் கூடாது என்ற எண்ணத்திலும் இந்த முடிவை கல்வி அமைச்சு எடுத்திருக்கலாம் என அவர் சொன்னார்.

பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்து சமுதாயத்திற்கு  ஆதரவாகவும் நன்மையாகவும் இருத்தல் வேண்டும். பாஸும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும்  அந்த எண்ணம் இல்லை என்பது இதில் தெளிவாக தெரிகிறது. 

பள்ளி விவகாரங்களில் அரசியல் நடத்துவதை பாஸும் பெரிக்காத்தான் நேஷனலும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஷாரிட்ஸான் ஜோஹன் அறைகூவல் விடுத்தார்.

செராஸ், மார்ச் 13-

அடையாளம் தெரியாத இரு ஆடவர்களால் ரொஹிங்யா மாது ஒருவரும் அவரின் 2 வயது குழந்தையும் எரியூட்டப்பட்ட சம்பவம் செராஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை செராஸிலுள்ள விளையாட்டு பூங்காவில் இரவு 10.30 மணியளவில் நிகழ்ந்ததாக பாதிக்கப்பட்ட மாதின் கணவர் ஷாபிர் சுல்தான் அகமட் கூறினார்.

சம்பவம் நிகழ்வதற்கு முன்னர், பாதிக்கப்பட்ட அஸுமா என்ற மாது சமய வகுப்பிற்கு சென்ற தன் பிள்ளைகளை அழைத்து வரச் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் குழந்தைகள் இதர பிள்ளைகளுடன் அங்குள்ள விளையாட்டு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

தன் குழந்தைகளுக்காக அவர் அந்த பூங்காவில் தன் இரண்டு வயது குழந்தையை தூக்கியவாறு காத்து கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் அஸுமா மீது எண்ணெய்யை ஊற்றியதுடன் அவரையும் அவரின் குழந்தையையும் எரியூட்டிச் சென்றுள்ளனர்.

அங்கிருந்த மக்கள் அஸுமாவையும் அவரின் குழந்தையையும் காப்பாற்றி அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அஸுமா மருத்துவமனையில் சுயநினைவு திரும்பாத நிலையில் இருக்கும் வேளையில் அவரின் குழந்தை சீராக உள்ளதாக செராஸ் போலீஸ் படைத் தலைவர் ஜாம் அலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

இந்த கொடூரச் செயலை புரிந்த அந்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரம் செக்‌ஷன் 326 குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மார்ச் 13-

இஸ்ரயேல் - பாலஸ்தீன போரில் ஹாமாஸ் அமைப்பிற்கு மலேசிய ஆதரவு தெரிவிப்பதாக ஜெர்மனுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  கூறியுள்ளார்.

ஹமாஸ் அரசியலுக்கு மலேசியா ஆதரவு வழங்குகிறது. ஆனால் அதன் ராணுவ பிரிவுடன் எந்த தொடர்பும் இல்லை என பிரதமர் கூறியதாக பெர்லின் உள்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த போர் தற்போது தொடங்கியது அல்ல. காலம் காலமாக தொடர்கிறது. ஹமாஸ் நிர்வாகத்திற்கு மலேசியா ஆதரவு தெரிவிப்பது தொடர்பில்  ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவிலுள்ள சகாக்களிடம் விளக்கியதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறியுள்ளார். மேலும் ஹமாஸ் அரசியலுடன் மலேசியா தொடர்பு வைத்திருப்பதை தொடர்ந்து தான் யாரிடமும் மன்னிப்பு கேட்க போவதில்லை எனவும் அவர் கூறியாதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குவாந்தான்,மார்ச் 12-

கொள்ளச் சம்பவங்களில்  ஈடுபட்டு வந்த சென்ட்ரோ கும்பலைச் சேர்ந்த மூன்று அந்நிய நாட்டவர்களை போலீசார் சுட்டுக் கொண்றனர்.

கிலோமீட்டர் 17, ஜாலான் பெக்கான் பகுதியில் இரவு 11.30 மணி அளவில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயற்சித்த போது, அந்த வாகனம் போலீசார் வாகனத்தை மோதி தள்ளி அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயற்சித்த போது வாகனத்திலிருந்து அந்த சந்தேக நபர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதால் தங்களின் பாதுகாப்பிற்காக போலீசார் மீண்டும் அந்த கும்பலை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில்  மூவர் கொல்லப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யாயா ஒத்மான் தெரிவித்தார்.

இந்த கும்பல் பல பகுதிகளில் வீடு மற்றும்  நகைக்கடையில் கொள்ளையிடுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

கொல்லப்பட்டவர்களில் இருவர் வியட்நாமியர், ஒருவர்  வங்காளதேசியர் என உறுதிப்படுத்தப்பட்டதாக யாயா ஒத்மான் பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சிக்,மார்ச் 12-

திடீரென ஏற்பட்ட காட்டு தீயை அணைக்க சுமார் மூன்று மணி நேரம் போராடியதாக தீயணைப்பு மீட்பு துறை தெரிவித்தது.

இங்குள்ள செபார் பெசார் பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட காட்டில் ஏற்பட்ட தீச் சம்பவம் தொடர்பில் காலை 9 மணி அளவில்  அவசர அழைப்பு  பெற்ற பின் சம்பவ இடத்திற்கு 12 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சிக் மாவட்ட தீயணைப்புத் துறையின் உதவி தலைவர் சுல்கைரி மாட் தஞ்சில் தெரிவித்தார்.

10 ஹெக்டரில் எரிந்த தீயை அணைக்க 500 மீட்டர் உயரமுள்ள மலையில் தீயணைப்பு வீரர்கள் ஏறியதாகவும் அதிகமான வெப்பமும் காற்றின் அழுத்தத்தாலும் தீயை அணைக்க பல போராட்டங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 266.50 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த காட்டுப் பகுதியில் தீ பெருமளவில் பரவாமல் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சுல்கைரி பத்திரிக்கை அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

கோலாலம்பூர்,மார்ச்.12-

தமிழ்ப்பள்ளிக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் என்ன தொடர்பு என்று மஇகா கல்வி குழுத் தலைவர் டத்தோ நெல்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே தாய் மொழிப் பள்ளிகளுக்கு எதிராக பேசியுள்ளார்.

குறிப்பாக தாய் மொழிப் பள்ளிகள் தேசிய ஒருமைபாட்டுக்கு சிக்கலாக உள்ளது. இது தொடர்பில் சிறப்பு கலந்துரையாடலை நடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

என்னை பொருத்த வரையில் அக்மால் சாலே போன்றவர்கள் தான் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள்.

தாய் மொழிப் பள்ளிகளில் படிப்பதால் எந்த வகையில் ஒருமைப்பாடு சீர்குலைகிறது.இதை அக்மால் விளக்க முடியுமா என்று டத்தோ நெல்சன் கேள்வி எழுப்பினார்.

அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தான் தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுகின்றன.

குறிப்பாக தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்குகளில் கூட அனைத்து நீதிமன்ற நீதிபதிகளும் தீர்க்கமான தீர்ப்பை வழங்கியுள்ளன.

இருந்தாலும் அக்மால் போன்ற நபர்கள் தொடர்ந்து தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக பேசுவதை மஇகா வண்மையாக கண்டிக்கிறது. அதுலும் தாய்மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மலாய் ஆளுமை இல்லை என்பதற்கு சரியான ஆய்வு உண்டா எத்தனை விழுக்காடு ? ஆய்வு பூர்வமான ஆதாரம் உண்டா என நெல்சன் கேள்வி எழுப்பினார்.

அதே வேளையில் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறியுள்ளார். இவ்வேளையில் அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தாய் மொழிப் பள்ளிகளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று டத்தோ நெல்சன் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், மார்ச் 12-

நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டிச்சாலைகள் திறந்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் அறிவித்தது அதிகபிரசிங்கித் தனமாக உள்ளதாக பாஸ் கூறுகிறது.

அவரின் இந்த அறிவிப்பு, அவர் நோன்பு மாதத்தை மதிக்காததை காட்டுவதாக பாஸ் கட்சியை சேர்ந்த அகமட் யாஹயா தெரிவித்தார்.

முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பள்ளிக்கு வீட்டிலிருந்து உணவை எடுத்து வந்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அதனை உண்ணலாம். இதுவே போதுமானதாகும். சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

இது முஸ்லிம் மாணவர்கள் முறையான நோன்பை கடைபிடிக்க உதவும் என்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் நோன்பு எடுக்கும் மாணவர்களை மதித்து நடக்கவும் வழிவகுக்கும் என அவர் கூறியுள்ளார்.

சிப்பாங்,மார்ச் 11-

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு மேற்கொண்ட அதிரடி சோதனையில் டீசல் எண்ணெய் கடத்தல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

கடந்த மார்ச்  8 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் இங்குள்ள கம்போங் பத்து 1, டிங்கிலில்  உள்ள ஓர் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட இடத்தில் டீசல் எண்ணெய் பதுக்கி வைப்பதற்காகவும் விற்பனை செய்வதற்காகவும்  பயன்படுத்தப்பட்டுவந்தது கண்டறியப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பே அந்த பகுதியை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் சட்டவிரோத செயல்கள் அங்கு நடப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் தெரிவித்தது.

இந்த கும்பல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எண்ணெய் நிலையங்களில் மானிய விலையில் உள்ள எண்ணெய்களை நிரப்பிக் கொண்டு ஒரு பகுதியில் சேமித்து வைத்து, பின்னர் கூடுதல் விலைக்கு விற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இந்த அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 12 ஆயிரம் லிட்டர் டீசல் எண்ணெய்,லோரி, டீசல் சேமித்து வைக்கும் பிளாஸ்டிக் தொட்டிகள் மற்றும் கருவிகள் ஆகியவை அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதோடு அதன் மதிப்பு வெ.49,100.00 என தெரிவித்தது.

 

சிரம்பான்,மார்ச் 11-

சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் வெ.13.4 மில்லியன் மதிப்புள்ள சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 26 மற்றும் மார்ச் 1 ஆம்  தேதிகளில்  கிள்ளான் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளில் இந்த பறிமுதல் செய்யப்பட்டதோடு ஐவர் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில சுங்கத் துறை இயக்குநர் முகமது ஹபீஸ் இஷாக் கூறினார்.

இந்த சோதனையின் முதல் கட்டமாக நெகிரி செம்பிலான்  அமலாக்கப் பிரிவின் உறுப்பினர்கள் மூன்று கொள்கலன்களை மார்ச் 26ஆம் தேதி நண்பகல் 12 மணி அளவில்  கிள்ளான் துறைமுகத்தில் தடுத்து வைத்ததோடு சந்தேக நபர்களையும் கைது செய்ததாக அதன் இயக்குநர் தெரிவித்தார்.

மேலும் அந்த கொள்கலன்களை சோதனை செய்ததில் பல்வேறு வகையான மதுபானங்களும் சிகரெட்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

சீனா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி  செய்யப்பட்டிருந்த இந்த கொள்கலன் நம் நாட்டில் இருந்து அண்டை நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டதாக ஹபீஸ் இஷாக்  பத்திரிக்கை அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

அலோர் காஜா, மார்ச் 11-

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் 220.4ஆவது கிலோ மீட்டரில் விரைவு பேருந்து டிரெய்லரின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் பலியான வேளையில் பேருந்தில் பயணித்த 7 பயணிகள் காயங்களுக்குள்ளாகினர்.

அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உடல் நசுங்கி மாண்டார் என அலோர் காஜா மாவட்ட போலீஸ் படைத் தலைவர் அர்ஷாட் அபு தெரிவித்தார்.

விபத்தில் காயமுற்ற 20 முதல் 50 வயதிற்குட்பட்ட பேருந்து பயணிகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட பேருந்து ஜொகூர் லாக்கின் பேருந்து நிலையத்திலிருந்து 30 பயணிகளுடன் தலைநகரிலுள்ள திபிஎஸ் பேருந்து நிலையத்திற்கு பயணித்து கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மார்ச் 11-

நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் சிற்றுண்டிச்சாலைகள் சாதாரண நாட்களை போல் திறந்திருக்கும் என்றும் நோன்பு காலத்தில் அவை மூடப்படாது என்றும் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.

இருந்தபோதும் நோன்பின் புணிதத்தை அறிந்து இஸ்லாம் அல்லாத மாணவர்கள் நோன்பு இருக்கும் இஸ்லாம் மாணவர்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.

நோன்பு காலத்தில் இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்கு பள்ளிகளில் முறையாக உணவு விநியோகம் செய்யப்படுவதற்காக சிற்றுண்டிச் சாலைகள் திறக்கப்படுகின்றன.

இரு தரப்பினர்களும் புரிதலுடன் செயல்பட வேண்டும். ஆகையால் அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள் இதனை முறையாக கண்காணிப்பர் என்றார் அவர்.

2024-2025 பள்ளி தவணைக்கான முதல் நாள் பள்ளி இன்று திறக்கப்பட்டத்தை முன்னிட்டு பூச்சோங்கிலுள்ள ஒரு பள்ளிக்கு சிறப்பு வருகையளித்த அவர் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

ஈப்போ மார்ச் - 9

அண்மையில் பேராக்கில் உள்ள ஈப்போ கே.டி.எம்  ரயில் நிலைய சுற்றுலா பதாகையில்  மலாய் ,ஆங்கிலம் , சீன , தாய்லாந்து  மொழிகளில் வருகை பதாகை இருந்த  நிலையில் , தமிழ் மொழி புறக்கணிக்க பட்டது தொடர்பாக பல விதமான சர்ச்சைகள் எழுந்தன.

இது இந்திய மக்களிடையே மிக பெரிய அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இன்று  மலேசிய வீர தமிழர் இயக்கம் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மலேசிய சுற்றுலா துறை அமைச்சு, மாநில சுற்றுலா துறைக்கு  மகஜர் அனுப்பியதோடு ஈப்போ ரயில் நிலைய   அதிகாரி சாஃபுவானை நேரடியாக சந்தித்து மகஜர் அவர்கள் வழங்கினர்.

எல்லா எதிர்ப்பையும் வாட்சாப்பில் தெரிவிக்காமல் தமிழர்கள் முன் வந்து மகஜர் வழங்க வேண்டும் என தெரிவித்த மலேசிய  வீர தமிழர் இயக்கத் தலைவர் பார்த்திபன் சரவணன், இயக்கங்கள் முன் வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க  நேரடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர் மார்ச் -  8

இன்று புத்ரா உலக வாணிக மண்டபத்தில் ஒரு மாபெரும்  தமிழ் படைப்பை 12 ஆய்வாளர்கள் ஆய்வு செய்து  மகா கவிதை என்ற  புத்தகத்தை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு "பெருந்தமிழ்" விருது விழா இனிதே அரங்கம் நிறைந்து நடைபெற்று வருகிறது.

தமிழுக்காக நடக்கும் விழாவிற்கு தமிழர் கூட்டம்  நிறைந்து வந்து அதை  நடத்தி காட்டினர்.

ஒரு சில குழுவினர் இந்த விழா நடக்குமா ? எப்படி நடக்கும் என கொக்கரித்த நிலையில்  , தமிழுக்காக நடக்கும் விழாவை நடத்தி காட்டினார்  ம.இ.காவின் துணை தலைவர் சொல் வேந்தர்  டத்தோ ஸ்ரீ எம். சரவணன்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் -6

ரஸியாவில் 4ஆம் ஆண்டு மருத்துவம் பயிலும் ஓர் இந்திய மாணவியின் தாய் , தனது மகளின் கல்வி செமஸ்டர் நிதியான 35 ஆயிரம் வெள்ளிக்கு பாக்கி 15 ஆயிரம் வெள்ளி உதவி  கேட்டு  ஓர்  இந்திய துணை அமைச்சரை அணுகிய போது,  அவரின் அதிகாரி கடிதத்தை பெற்றுக்கொண்டு , பிறகு அழைக்கிறேன் என அனுப்பி விட்டார்.

அதன் பின் மேல் விவரம் கேட்க தொடர்பு கொண்ட தாயிடம் அந்த அதிகாரி,  துணை அமைச்சரிடம் மானியம் இல்லை என அதிகாரி சொல்ல , முடிந்த அளவிற்கு உதவி செய்யுங்கள் என தாய் கேட்க , அந்த அதிகாரி உங்களை விட கஷ்ட படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். பணம் இல்லை என்றால் ஏன் பிள்ளையை அங்கு படிக்க அனுப்பீர்கள் என ஏளனமாக பேசியுள்ளார்.

இந்த கேவளமான பேச்சை கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் அந்த தாய்.

அந்த துணை அமைச்சர், கவனத்திற்கு  இன்று நீங்கள் வகிக்கும் பதவி இந்த பாமர மக்களால் கொடுக்கப்பட்டது. மறந்துவிடாதீர்கள் . உங்களின் உதவியாளராக இருக்கும் அதிகாரிகளுக்கு  கிடைத்த வேலையும் வாய்ப்பும் இந்த மக்கள் கொடுத்தது.

உங்களிடம் உதவி கேட்டு வரும் மக்களிடம் உதவி இல்லை என்பதை கூட நாகரீகமாக சொல்ல முடியவில்லையா உங்களுக்கு.

 ஆனால் கல்விக்கு முக்கியதுவம் கொடுக்கிறோம் என அறிக்கை மட்டும் பெரிய அளவில் விடுவீர்கள்.

காசு இல்லாதவர் பிள்ளைகள் படிக்க கூடாதா? இல்லை காசு இல்லாதவன் படிக்கவே கூடாதா? 
படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு தான் அந்த வலி தெரியும். அந்த துணை அமைச்சர் யார் அவர் அதிகாரி யார் என்ற எல்லா பதிவும் தமிழ் லென்ஸ்சிடம் உள்ளது.

அந்த தாய் ஒரு நடுதர குடும்பத்தை சேர்ந்தவர். எனக்கு அரசியல் வாதிகளின்  பகை வேண்டாம் தம்பி , என் பிள்ளையின் படிப்புக்கு உதவி வேண்டும் என அவர் கேட்டு கொண்டதால் நாங்கள்  பெயரை சொல்லாமல் வைத்துள்ளோம்.

இனி இப்படி ஒரு சம்பவம் மற்றவர்களுக்கு நடந்தால் அல்லது  மீண்டும் அவர்களுக்கு அழைத்து  இது தொடர்பாக திட்டுவது என ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்தால் பெயர் படம் எல்லாம் வெளியில் அம்பலம் மாகும்.

மக்கள் கொடுத்த வாய்ப்பில் பதவியை அனுபவிக்கும் தரப்பினருக்கு நாவடக்கம் தேவை. உங்களை நம்பி மக்கள் இல்லை மக்களை நம்பி தான் நீங்கள் உள்ளீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இவர்கள் பேசிய இழிவான பேச்சால் அந்த தாய் பொதுவில் வந்து பொது மக்களிடம் உதவி கேட்கவே அச்சம் கொண்டுள்ளார்.

ஆகையால் , பொது மக்களுக்கு தமிழ் லென்ஸ் வைக்கும் வேண்டுகோள்.  இந்த தாயின் மகளின் கல்விக்கு உதவ நினைக்கும் பொது மக்கள் தமிழ் லென்ஸ் ஊடகத்தை நாடினால் நாங்கள் அந்த தாயின் தொலைபேசி எண் விவரத்தை உங்களுக்கு கொடுப்போம்.

ஒரு மாணவியின் கல்விக்கு உதவுங்கள் மக்களே !

செய்தி : வெற்றி விக்டர்

அந்த தாயின் மேல் விவரம் பெற  தமிழ் லென்ஸ் ஊடகத்தை  அணுகவும்.

014-3237321
0102262290

கோலாலம்பூர், மார்ச் 6-

கட்சிகள் பார்க்காமல் அனைத்து எம்பிகளுக்கும் மானியத்தை அரசு வழங்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தேர்தலின் வழி எம்பிகள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். அப்படி இருக்கையில் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள் அவர்களின் சேவையை தொடர மானியம் முறையாக வழங்கப்பட வேண்டும் என பெரிக்காத்தான் நேஷனல் மாராங் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ அப்துல் அடி அவாங் தெரிவித்தார்.

அரசு மானியம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டும். இதில் யார் ஆட்சியை பிடிக்கிறார்கள் யார் எதிர்க்கட்சியாக உள்ளார்கள் என்ற பாகுபாடு கூடாது. 

வரி வசூலிக்கும்போது நாட்டு மக்கள் அனைவரிடம்தான் வசூலிக்கப்படுகிறது..யார் ஆட்சியை பிடித்த கட்சியை ஆதரிக்கிறார்களோ அவர்களிடமிருந்து மட்டும் வசூலிக்கப்படுவதில்லை. வரி வசூலுக்கு மட்டும் இந்த நிலை இருக்கும்போது மானியம் ஒதுக்கீட்டிலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேற்கு கடற்கரை மாநிலங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக சுதந்திரம் பெற்றிருந்தாலும் கூட கிழக்கு மலேசியா இன்னும் பின்தங்கியே உள்ளது. திரெங்கானு மற்றும் கிளந்தானுக்கு ராயல்டி இல்லை, மற்ற மாநிலங்களில் ராயல்டி பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படாததை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்தார். அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மானியம் நேரடியாக வழங்கப்படாமல் நேரடியாக மக்களிடம் வழங்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

ஈப்போ, மார்ச் 6-
அதிகமான இந்தியர்கள் வாழும் பேராக் மாநிலத்தில் பல பழமை வாய்ந்த இடங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது வரலாறு.

ஆனால், சமீபத்தில் தெலுக் இந்தான்  சந்தையின்  நுழைவு வாசலில் தமிழ் இல்லை என்ற சர்ச்சை கிளம்பியது. பல எதிர்ப்புகள் வந்தவுடன் தமிழ் எழுத்து அங்கு மீண்டும் வைக்கப்பட்டது. இந்த செய்தியை தமிழ் லென்ஸ் வெளியிட்டது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

இப்போது ஈப்போ கே.டி.எம் ரயில்  நிலைய பதாகையில் பேராக்கிற்கு வருகை தாருங்கள் என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த பதாகையில் மலாய், சீன, ஜாவி, மற்றும் தாய்லாந்து மொழியும் இடம்பெற்றுள்ளன. ஆனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாட்டு தைலாந்து மொழிக்கு கொடுக்கும் மரியாதையை அந்த மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்குக் கொடுக்க தவறியது யார் குற்றம்?

பேராக் மாநில ஆட்சி குழு உறுப்பினர் சிவநேசனுக்கு இதை கவனிக்க நேரம் இல்லையா என  சமூக வலைத்தளத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

எது எதுக்கோ அவசரக் கூட்டம் போடும் சிவநேசன், தான் ஆட்சி குழு உறுப்பினராக இருக்கும் பேராக் மாநிலத்தில் ஒரு பொது போக்குவரத்து இடத்தில்  தமிழ் மொழி புறக்கனிக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுக்க திரானி உண்டா ?  இதற்கு அவசரக் கூட்டம் போடுவாரா?

தமிழ் மொழியை வாழவைப்போம் என அறிக்கை விடுவது மட்டும் தமிழ் உணர்வு  அல்ல. மாறாக தமிழ் மொழி பெருமையை நிலை நிறுத்தும் வகையில் குரல் கொடுத்து நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.


செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் 6-

கடந்த செப்டம்பர் மாதம் வரை, மலேசியா முழுவதிலும் உள்ள 20 குடி நுழைவுத் தடுப்பு மையங்களில் மொத்தம் 1,467 அந்நிய நாட்டு குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வாட்ச் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்ட குழந்தைகள் அங்கு தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டு வருவதை நேரில் கண்ட அலி என்ற ஆடவர் அதனை தட்டிக்கேட்க முயன்றபோது அவரும் அங்கு சித்திரவதை செய்யப்படதாக அவர் கூறியுள்ளார்.

44 வயதான அலி, இரவு முழுவதும் தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேற முயன்ற போது அவர் கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஒன்பது வயது சிறுவன் அதிக ரொட்டி கேட்டதற்காக எப்படி அடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டான் என்ற  கொடூரமான காட்சியை நேரில் கண்ட  அவர் அந்த அனுபவத்தை சர்வதேச மனித உரிமை ஆணையத்திடம் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

பொதுவாக டேப்போக்கள் என்று அழைக்கப்படும் தடுப்பு மையங்களில் உள்ள குழந்தைகள், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள மூத்தவர்கள் எதிர்கொள்ளும் அதே துஷ்பிரயோகங்களை அடிக்கடி எதிர்கொள்கின்றனர். மருத்துவ உதவி மறுப்பு, போதிய உணவு மற்றும் தவறான சிகிச்சை உட்பட பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி தடுப்பு காவலில் இருக்கும் மொத்த குழந்தைகளில் மூன்றில் இரண்டு பகுதியினர் துணையின்றி அல்லது அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிந்து, சில சமயங்களில் தனியாக (அவர்கள் பிறந்த நாட்டிற்கு) திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்குப் பின்பு அவர்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கப்படாமல் அவுதிபடுவதாக கூறப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு தேவையான பால் மாவு மற்றும் பெம்பஸ் போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் பெண்கள் டெப்போவில் பிரசவித்து, புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

மலேசிய அரசாங்கம் குழந்தைகளை குடியேற்றக் காவலில் வைத்திருப்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், 

கைது செய்யப்படும் சிறார்கள் மற்றும் குடும்பத்தினர்களின் பாதிகாப்பு கறுதி தடுப்பு காவல் சட்டத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என வாட்ச் மனித உரிமை ஆணையம் புத்ரா ஜெயாவை வலியுறுத்தியது.

கோலாலம்பூர், மார்ச் 6-

ஊடகவியலாளர்கள் தங்களின் கடமையை செய்வதற்கான லைசென்சாக ஊடக அட்டை வழங்கப்படவில்லை. மாறாக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொள்வதற்கான சிறப்பு அட்டையாகவே தகவல் துறை அதனை வெளியிட்டுள்ளதாக தொடர் துறை அமைச்சர் ஃபாமி பட்ஸில் தெரிவித்தார்.

மருத்துவ துறைக்கு தேவைப்படும் லைசன்ஸ் போல் இது இல்லை. அதேபோல் வழக்கறிஞர்கள், கட்டட வடிவமைப்பாளர் போன்றவர்கள் அத்துறைகளில் கடமையாற்றுவதற்கு தேவைப்படும் லைசென்ஸ் போன்ற இது இல்லை என்றார் அவர்.

ஊடக அட்டைக்கான 2 ஆண்டு செல்லுபடி காலம் மற்றும் விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது அல்ல. ஊடக அட்டை என்பது ஊடகவியலாளர்களுக்கு தேவையான உரிமம் அல்ல, (அது இல்லாதது) செய்தியாளர்கள் செய்திகளை வெளியிடுவதைத் தடை செய்யாது, எனவே அது ஊடக சுதந்திரத்தைத் தடுக்காது என்றார் அவர்.

கோலாலம்பூர், மார்ச் 6-

கூட்டரசு நில மேம்பாட்டு இலாகாவான பெல்டாவிற்கு வெ.1.005  பில்லியன் இழப்பை எதிர்நோக்குவதாக ஆடிட்டர் ஜெனரல் வான் சுராயா வான் முகமட் ரட்ஸி தெரிவித்தார்.

வான் சுரயாவின் கூற்றுப்படி, டிசம்பர் 31, 2022 இல் முடிவில் பெல்டா வெ.0.808 பில்லியன் இழப்பை கொண்டிருந்தது. பெல்டா குறைந்த ரொக்கம் மற்றும் பணத்திற்கு சமமான நிலையைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

2022 இல் பெல்டா பெற்ற அரசாங்க மானியம் வெ.0.214 பில்லியன் (2021: வெ.0.342 பில்லியன்) ஆகும். பெல்டா இயக்க செலவுகள் மற்றும் பொறுப்புகளை ஈடுகட்ட மத்திய அரசின் நிதி உதவியை நம்பியுள்ளது.

ஃபெல்டா நிதி நிறுவனங்களிடமிருந்து வெ.7.973 பில்லியன் மற்றும் மத்திய அரசிடம் வெ.0.686 பில்லியன் கடன்களைப் பெற்றுள்ளது" என்று அவர் கூறினார்.

இன்று மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான கூட்டரசு ஏஜென்சிகளின் நிதிநிலை அறிக்கைகள் குறித்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் இந்த விஷயம் கூறப்பட்டுள்ளது.

ஷா அலாம், மார்ச் 5-

சிலாங்கூர் மாநிலத்தில் பி40 வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளில் பயிலும்  மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில் இலவச பேருந்து கட்டணம் வழங்கப்படுவதாக ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு  இன்று தெரிவித்தார்.

இந்த   300 வெள்ளி இலவச பேருந்து கட்டணம் வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி  மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

கடந்த 2013 இல் வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம் வழங்கும் திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகப்படுத்தியது.

2013 முதல் தொடர்ந்து இந்த இலவச பேருந்து கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 3,594 மாணவர்களுக்கு 11 லட்சத்து 78 ஆயிரம்  வெள்ளி வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப இலவச பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

இதைத் தவிர்த்து பி40 இந்திய மாணவர்களுக்கான உயர் கல்வி திட்டங்களுக்கும் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இளங்கலை பட்டப்படிப்புக்கு 5 ஆயிரம் ரிங்கிட்டும் டிப்ளோமா படிப்புக்கு 3 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படவுள்ளது.

இவ்விரு திட்டங்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி பிற்பகல் 12.00 மணிக்குள் முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இத்திட்டம் நிச்சயம் வசதிக் குறைந்த மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று பாப்பாராயுடு கூறினார்.

இத்திட்டம் குறித்த மேல்விவரங்களுக்கு 03-55447307 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

-செய்தி: காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், மார்ச் 5-

உள்நாட்டு அரிசி விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் அரிசித் தட்டுப்பாடு பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் மொகிதீன் யாசின் இன்று நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

நான் விவசாயம் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் அரிசி தொடர்பான பிரச்சினைகளை நான் சமாளித்து வந்தேன், சந்தையில் அரிசி இல்லை என்ற பிரச்சினையோ அல்லது அரிசியின் விலை அதிகரிப்பையோ நாங்கள் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விட உள்ளூர் அரிசி தற்பொழுது சந்தையில் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. உள்நாட்டு அரிசி விற்பணை சந்தையில் குறைவாக உள்ளது. உள்ளூர் அரிசி எல்லாம் எங்கே போகிறது? இன்று வரை அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மடானி அரசாங்கத்தில் உணவு விலை மற்றும் பொருளாதாரம் கட்டுப்பாடு இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் தற்பொழுது சூழ்நிலையில் அரிசி மற்றும் விலையேற்றம் தொடர்பாக தமக்கு புகார்கள் கிடைத்து வருவதாக அவர் சொன்னார்.

இதற்கிடையில், வாழ்க்கைச் செலவு மற்றும் சவாலான பொருளாதாரம் ஆகியவை இந்த நேரத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என மொகிதீன் மேற்கோள் காட்டினார்.

மேலும் ரிங்கிட்டின் மதிப்பு  குறைந்துக்கொண்டே போகிறது. அதாவது மலேசியர்களுக்கே ரிங்கிட்டின் மீது நம்பிக்கை இல்லை.

அவர்கள் ரிங்கிட்டை சேமிக்க விரும்பவில்லை. ஏனென்றால் மதிப்பு தொடர்ந்து குறையும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். எனவே அவர்கள் வெளிநாட்டு நாணயத்தை சேமிக்க எண்ணம் கொள்கிறார்கள்.

ஆகவே மடானி அரசாங்கம் உடனடியாக இப்பிரச்சனை தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், மார்ச்.4-

மக்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும் முயற்ச்சியில் ஒற்றுமை அரசாங்கம் செயல்பட்டால் நிச்சயம் மைபிபிபி கட்சி ஆதரவாக இருக்கும் என அதன் தலைவர் டத்தோ லோகபாலா தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கோவிட்-19 தொற்று பாதிப்பை அடுத்து இன்னும் தொடர்ந்து மக்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

அதில் குறிப்பாக தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள பொருட்கள் விலைவாசி ஏற்றத்தாழ் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை செலவீனங்களை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவ்வகையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மை பிபிபி கட்சி சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன் வைத்தது. முக்கியமாக உணவு மற்றும் பொருட்கள் விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கட்டட வாடகையை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை கட்சி முன் வைத்துள்ளது. 

கட்டட வாடகை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகமாக வசூலிக்கப்படுவதால் வியாபாரிகள் உணவு மற்றும் பொருட்களின் விளையை ஏற்றம் செய்கின்றனர். கட்ட வாடகை விலையை கட்டுப்படுத்துவதால் உணவு மற்றும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

நேற்று மை பிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற உட்சமன்ற கூட்டத்தில் கட்சியின் நலன் கருதி பல புதிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவற்றில் கட்சியின் சட்ட திட்டங்களில் புதிய மாற்றம் செய்யப்பட்டதோடு மை பிபிபி கட்சியின் சின்னத்தை மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என டத்தோ லோக பாலா தெரிவித்தார்.

தொடர்ந்து இனி புதிய பொலிவுடன் மை பிபிபி கட்சி மக்களின் நலனுக்காக செயல்படும் என அவர் உறுதியளித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 3-

ஒரு தமிழ் படைப்புக்கு  மலேசியாவில் விருது கொடுக்க 12 தமிழ் கல்வி ஆய்வாளர்களின் முயற்சிக்குக் கைக்கொடுக்கும் வகையில் ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் முன்னெடுத்த முயற்சி தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

எந்த புல்லுருவிகள் பல நாடகம் போட்டலும் ... ஜாதி அடிப்படையில் உள்ள சில சில்லறைகள் தமிழ் மொழியை விட சுய அரசியலுக்காக நடத்தும் நாடகம் அனைத்தும் , இந்த நாட்டில் தமிழ் மொழி-சமயம் இரண்டும் என் கண்கள்  என கூறும் டத்தோஸ்ரீ சரவணனிடம் பலிக்காது... 

இந்த கூட்டம்  தான் டத்தோஸ்ரீ சரவணன் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உரையாற்ற கூடாது என பல முயற்சி எடுத்தும்.. அனைத்தையும் தவிடுபொடி ஆக்கி ஒரு தமிழ் தலைவர் 5 நிமிட வாய்ப்பில்  தனது உரையில் அரங்கத்தை அதிர வைத்தார் என்பது நடப்பு நிலவரம். அது அவர்களுக்கும் தெரியும்...

இன்று தமிழுக்காக ஒரு படைப்பாளி கொடுத்த மகா கவிதை படைப்புக்கு  பெருந்தமிழ் விருதை  வழங்க செந்தமிழ் சுடர் டத்தோ ஸ்ரீ சரவணன் ஏற்பாட்டில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில்  இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை.. எந்த நாச வாதிகள் திசை திருப்பினாலும்...  நிகழ்ச்சி நடைப்பெறும் காரணம் நிகழ்ச்சியை நடத்துவது தமிழ் சமுதாயத்தின் சமயம் மற்றும் மொழியின் காவலர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்.

 தமிழ் மொழி சார்ந்த விசியங்களில்....எந்த ஜாதி அரசியல் வந்தாலும் தமிழே முதன்மை.

செய்தி : வெற்றி விக்டர்

சுங்கைபூலோ,மார்ச்.2-

தெக்குனில் கடனுதவிப் பெற்ற137,520 தொழில்முனைவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் அதனை திருப்பி செலுத்தாத நிலையில் அதன் மதிப்பு 1.1 பில்லியன் ரிங்கிட் இருப்பதாக தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் தெரிவித்தார்.

குறிப்பாக இதில் சிலாங்கூரில் ஆக அதிகமாக 22,662  பேரும் சபா 16,945 மற்றும் கெடாவில் 14,823 பேரும் இந்தக் கடனை திரும்ப செலுத்தவில்லை என இன்று  சிலாங்கூர் மாநில மடானி தெக்குன் பெருவிழாவை தொடக்கி வைத்து பேசியபோது இவ்விவரங்களை தெரிவித்தார்.

இந்தக் கடனுதவியைப் பெற்ற தொழில்முனைவோர் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் அந்தத் தொகையை மீண்டும் செலுத்திவிட வேண்டும்.

காரணம் இதன் மூலம்தான் வியாபாரம் செய்வதற்கான முதலீடு தேவைப்படும் மற்ற தொழில்முனைவோருக்கும் உதவ முடியும் என்று கூறினார்.

மேலும் சிலாங்கூர் மாநில தொழில் முனைவோரின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு இவ்வாண்டு தெக்குன் 65 மில்லியன் ரிங்கிட் நிதியை வழங்க முனைந்துள்ளது.  

இந்த நிதியானது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 4 ஆயிரம் அதிகாரப்பூர்வமற்ற, மைக்ரோ தொழில்முனைவோருக்குக் கடனுதவியாக வழங்கப்படவுள்ளது.

அதே சமயம் இவ்வாண்டு ஜனவரி மாதம் மட்டும்  சிலாங்கூர் மாநிலத்தைச்  சேர்ந்த 225 தெக்குன் தொழில்முனைவோருக்கு 7.35 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.2-

பெட்டாலிங் ஜெயாவில் வீற்றிருக்கும் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் தவ திரு பால யோகி சுவாமிகளின் ஆசியோடு உலக வரலாற்று பதிப்பக தமிழில் அமைந்த இந்து கலைக்களஞ்சிய நூல்கள் இன்று தமிழ் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

இந்து கலைக்களஞ்சிய நூல்கள் 4,200 பக்கத்தில் 12 பிரதிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

இன்று பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் இந்த நூல்கள் இலவசமாக தமிழ் பள்ளிகளுக்கும் திரு கோவில்களுக்கும் வழங்கப்பட்டதாக  இருப்பிடத்தின் செயலாளர் கண்ணா தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு முன்னிலையில் தமிழ்ப் பள்ளி பொறுப்பாளர்களிடம் இந்த நூல்கள் ஒப்படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய அவர், நம் சமுதாயத்தின் அடுத்த தலைமுறை ஒழுக்கமாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்றால் இளைஞர்களுக்கு முறையான  சமயக்கல்வி கற்றுத்தரப்பட வேண்டும். ஒவ்வொறு பெற்றோர்களும் இதனை கருத்தில்கொண்டு தனது குழந்தைகளுக்குக் கட்டாயமாக சமயக்கல்வியை கற்றுக்கொள்வதற்கு வழி வகுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சிலாங்கூர்  பிப்ரவரி-29

அண்மையில் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கணினி வகுப்புக்குத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த தகவலை சொன்னது சிலாங்கூர் மாநில  கல்வி இலாகா என சொல்லப்பட்டாதாக   தகவல் பரவியாதாகவும் ,
அந்த தகவல் தொடர்ச்சியாக  சிலாங்கூரில் உள்ள் அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பரவியதாக  சிலாங்கூர் தமிழ் சங்கத்  தலைவர் எல். சேகரன் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இதற்கான விளக்கம் கேட்டு சிம்பாங் லீமா   தமிழ்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களால் ஒரு நடவடிக்கை குழு  மணிவண்ணன் தலைமையில் உருவாக்கப்பட்டு கடிதம் ஒன்றை  தயார் செய்து விளக்கம் கேட்டு சிலாங்கூர்  கல்வி இலாகா, சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, கல்வி அமைச்சு , கல்வி அமைச்சர் , துணை கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை கடந்த பிப்ரவரி 7 முதல் 9 வரை அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்திற்கு எந்த ஒரு பதிலும் இல்லாத பட்சத்தில் இந்த நிலவரம் உண்மையா ? என சிலாங்கூர் கல்வி இலாகா மற்றும் கல்வி அமைச்சு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என  அவர்கள் செய்தியாளர் சந்திப்பை இன்று நடத்தினர்.

இந்த செய்தியாளர் சந்திப்பிற்கு வருகை அளித்த மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார்,
மாணவர்கள் விவகாரத்தில்  குழப்பம் இருக்க கூடாது; அமைச்சு உடனடி விளக்கம் கொடுக்க வேண்டும்; கணிணி வகுப்பு தடை இல்லாமல் நடக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதே வேளையில் சிலாங்கூர் தமிழ் சங்கத் தலைவர் எல். சேகரன் பேசுகையில் அமைச்சு மௌனமாக இருக்காமல்  உடனடியாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்றார்.


செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், பிப்.28-

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு சமூக ஊடகத் தள வழங்குநர்கள் தங்களின் சுய மதிப்பீட்டை பயன்படுத்துகின்றனர். இதில், சம்பந்தப்பட உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு அரசாங்கத்திடமிருந்து எந்த அறிவுறுத்தல்களையும் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

நடப்பில், சமூக ஊடகங்களில் இருக்கும் உள்ளடக்கம் தொடர்பான அறிக்கைகளை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) Facebook, Tiktok மற்றும் X போன்ற சமூகத் ஊடகத் தள வழங்குநர்களிடம் அதன் கோரிக்கையை சமர்ப்பிக்கிறது.

இருப்பினும், குறிப்பிட்ட அந்த கோரிக்கையைக் கொண்ட உள்ளடக்கத்தை அகற்றும் நடவடிக்கையை எடுக்கும் முடிவு சமூக ஊடகத் தள வழங்குநர்களின் சுய வழிகாட்டுதலைப் பொறுத்தது.

அவர்கள் (சமூக ஊடகத் தள வழங்குநர்கள்) எம்.சி.எம்.சி மற்றும் அரசாங்கத்தின் கருத்துக்களுடன் உடன்படுகிறார்களா அல்லது இல்லையா என்பது அவர்களின் சொந்த முடிவாகும்."

சமூக வலைத்தளங்களில் இருக்கும் குறிப்பிட்ட பதிவு அகற்றப்பட்டால், அது அரசாங்கத்தின் மதிப்பீடு, முடிவு மற்றும் கோரிக்கையுடன் உடன்படுகிறது என்று அர்த்தம். சில சமயம், அரசாங்கத்தின் சில கோரிக்கைகளும் அவர்களால் நிராகரிக்கப்படுகின்றன," என்று மக்களவையில் முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையது சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ இவ்வாறு பதிலளித்தார்.

முன்னதாக, மக்களின் விமர்சனத்திற்கு பயந்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படும் உள்ளடக்கங்களை அரசாங்கம் அகற்றுவதாகக் கூறி அக்குற்றச்சாட்டை சையத் சாதிக் முன்வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

Recent News